2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.
இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புக்களைப்பற்றிய விவாதங்கள் நிகழும்.அவர்கள் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்கள். கவிஞர் அபி குறித்த நூல் வெளியிடப்படுகிறது. அவரைப்பற்றிய ஆவணப்படத்தை கே.பி.வினோத் எடுக்கிறார். அதை ராஜா சந்திரசேகர் தயாரிக்கிறார்
நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை வழங்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன .இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது
நிதியளிக்கவேண்டிய முகவரி
Bank Name & Branch: | ICICI Bank, Ramnagar Branch, Coimbatore |
Account Name: | VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI |
Current Account No: | 615205041358 |
IFSC Code: | ICIC0006152 |
வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் அளிக்க விரும்பும் நன்கொடை நண்பர்கள் கணக்கில் பெற்றுக்கொள்ளப்படும். செலுத்த விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளவும்.
நன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஜெ