வெண்முரசு புதுவை கூடுகை-31

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலாக ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .

வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான நீலம் நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கான தனியுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முழு நூலுக்குமான தனியொரு சிறப்புரை என்பது கனவாகவே இருந்து வந்தது. கனவு மெய்ப்படும் காலம் வாய்த்துள்ளது.

அதன் முதல் நிகழ்வாக மழைப்பாடல் மீதான தனது உரையை அன்பு நண்பர் தாமரைக்கண்ணன் வரும் அக்டோபர் 19ம் தேதி ( 19-10-2019 )சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நிகழ்த்தவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் சிறப்பு அழைப்பாளராக அன்பு நண்பர் லாஓசி பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பிக்க இருக்கிறார்.அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும், புதுவை வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:-

9943951908 ;9843010306

 

முந்தைய கட்டுரைகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்
அடுத்த கட்டுரைகல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்