பொன்னீலன் 80- விழா

வணக்கம்
நான் ராம் தங்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, பொன்னீலன் அண்ணாச்சிக்கு இந்த ஆண்டு 80 ஆவது பிறந்தநாள். அவர் எழுத வந்து 55 ஆண்டுகள் ஆகிறது என்கிற தகவலை அவரிடம் சொன்னேன். உடனே நாஞ்சில்நாடன் இதனை ஒரு பெரிய விழாவாக ஒரு நாள் நிகழ்வாக எடுக்க வேண்டும். நாகர்கோவிலில் தான் எடுக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து முக்கியமான ஆளுமைகளை அழைத்து இந்த விழாவை எடுக்கவேண்டும். இப்போது ஜெயமோகன் வெளிநாட்டில் இருக்கிறார்,நானும் இரண்டு மாதங்கள் பயணத்தில் தான் இருக்கிறேன். அதனால் வருகிற நவம்பரில் வைத்துவிடலாம் என்று சொன்னார்கள்.
அவருடைய ஆலோசனையின்படி அதற்கான ஏற்பாடுகளை நான்தான் செய்து வருகிறேன். இதை எந்த அமைப்பு சார்ந்தும் செய்யவில்லை. நவம்பரில் 16-ம்  தேதி சனிக்கிழமை  முழுநாள் நிகழ்வை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.நவம்பர் மாதம் நீங்கள் இந்தியா வந்து விடுவீர்கள் என்று நாஞ்சில்நாடன் சார் சொன்னார்கள். நீங்கள் கட்டாயம் விழாவில் இருந்து நடத்திக் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விழாவின்போது பொன்னீலன் அண்ணாச்சி குறித்து ஒரு புத்தகம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்
ராம் தங்கம்
நாகர்கோவில்
முந்தைய கட்டுரைதினமணியும் நானும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2