காஷ்மீரின் குளிர்

 

https://youtu.be/nspiSdUFoNg

 

அறுபது எழுபதுகளின் இந்தி சினிமாக்களில், வண்ணம் வந்து, ஈஸ்ட்மென் படச்சுருள் அறிமுகமாகி, நவீன ஒளிப்பதிவுக்கலை பரவலாகத் தொடங்கியபின் காஷ்மீர் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீர் ஒரு பொதுக்கனவாக வெகுஜன மோகமாகவே அன்று இருந்திருக்கவேண்டும். டெல்லியில் இருந்து மிக அணுக்கமான இடங்களாக ஸ்ரீநகரும் குலுமணாலியும் இன்று தோன்றுகின்றன. எழுபதுகளில் அது ஒரு வாழ்நாள்கனவாக இருந்திருக்கும். திரும்பத்திரும்ப பார்த்திருக்கிறார்கள்

அழகான ஒளிப்பதிவில் டால் ஏரியும் ,குல்மொஹர்கள்பூத்த பூங்காக்களும் பனிமலைகளும் விழிகளை நிறைக்கின்றன. இந்த காஷ்மீரை ஒருவேளை இன்று நாம் காணவே முடியாது என்று படுகிறது,

மகேந்திர கபூரின் இனிய குரல். ரஃபியைப்போலவே பாடலுக்குள் உண்மையான உணர்ச்சிகளைச் செலுத்த முடிந்த கலைஞர். இப்பாடல்களை இன்றும் பார்க்கமுடிவதற்கு இன்னொரு காரணம் அன்றைய பரவலான வழக்கம்போல இல்லாமல் இந்தி நடிகர்கள் குறைவாக நடித்திருக்கிறார்கள். நடனங்கள் ஆடியோ, ‘ஸ்டைல்’ காட்டியோ துன்புறுத்தவில்லை.

பாடல் மகேந்திர கபூர்

இசை ஓ.பி.நய்யார்

***

முந்தைய கட்டுரைசுகிசிவமும் சுப்ரமணியனும்
அடுத்த கட்டுரைஊட்டி கடிதங்கள்