அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி

அன்பின் ஜெ,

வணக்கம். நலம்தானே? சென்ற ஆண்டு நடத்திய விமர்சனப் போட்டி இவ்வாண்டும் தொடர்கிறது. 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அறிமுகமான எழுத்தாளர்களின் படைப்பை முன்வைத்து கட்டுரையைக் கோருகிறோம். இம்முறை மூன்று பரிசுகள். எழுத்தாளர்கள் பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் க.மோகனரங்கன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட இசைந்துள்ளனர். இரண்டாயிரத்துக்குப் பின் எழுதவந்தவர்களின் முழுப் படைப்புகளைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சென்ற முறை, 24 கட்டுரைகளே வந்தன என்பதை நினைத்துப்பார்த்து, முழுப் படைப்புகளுக்குப் பதிலாக ஏதேனும் ஒரு படைப்பு என்று மாற்ற வேண்டியிருந்தது. தங்கள் தளத்தில் இப்போட்டியை அறிமுகம் செய்து வாசக நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

போட்டி அறிவிப்பு இங்கே,

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019

https://azhisi.blogspot.com/2019/09/2019.html

நன்றியுடன்,

வே. ஸ்ரீநிவாச கோபாலன்.

***

முந்தைய கட்டுரைஃபாசிஸத்தின் காலம்
அடுத்த கட்டுரைஇலக்கியம்- இரு கடிதங்கள்