கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபி இணையதளம்

 

2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.

 

அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா.  மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். லா.ச.ரா படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர். ரூமி, கலீல் கிப்ரானின் கவிதைகளிலிருந்து தன் அழகியலைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மேலும் செறிவானதும் பூடகமானதுமான கவிதைகளுக்குள் சென்றார்

 

அபி எழுதிய

 

1. மெளனத்தின் நாவுகள். (1974)

2. அந்தர நடை (1978)

3. என்ற ஒன்று (1987)

4 அபி கவிதைகள் 20013

 

என்னும் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அபியின் கவிதைகளைப் பற்றி நான் 2000 த்தில் மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் நூலில் அக்கட்டுரை உள்ளது

 

அபி அவர்களுக்கு விருது வழங்கும் விழா டிசம்பர் 29 அன்று கோவையில் நிகழும். நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்

அபி கவிதைகள் வாங்க…

 

கவிஞர் அபி நேர்காணல் 1

கவிஞர் அபி நேர்காணல் 2

கவிஞர் அபி நேர்காணல் 3

மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்

 

முந்தைய கட்டுரைகற்காலத்து மழை-3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29