கங்கைப்போர் முடிவு

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
நீர் நெருப்பு – ஒரு பயணம்
நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

உயிர்வாழ்வதைவிட ஒரு உயரிய அறத்தைக் கடைபிடித்துச் சாவது சிறந்தது என மாறாத உளநேர்மையோடு பசித்தவம் புரிகிற, சாது ஆத்ம்போனந்த் அவர்களின் மன்றாடுதலுக்கு ஒரு சிறிய நல்விளைவு நிகழ்ந்திருக்கிறது. எளியவனின் குரலுக்கு அதிகாரம் செவிமடுத்திருக்கிறது.

கங்கையைக் காப்பாற்றக்கோரி, 194 நாட்களாகத் தொடர் உண்ணாநோன்பிருந்த ஆத்ம்போனந்த், தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். தூய்மை கங்கைத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா அளித்த எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டின் அடிப்படையில் தன் நோன்பினைத் துறந்திருக்கிறார் அவர்.

மாத்ரிசதன் ஆசிரமத்தின் குருவான சிவானந்த்-க்கு எழுதிய கடிதத்தில், கங்கைக்கரையில் புதிதாக தொடங்கப்படவிருந்த நீர்மின்சார அணைக்கட்டுத் திட்டத்திற்கும், ஏற்கெனவே இயங்கிவரும் அனுமதிபெறாத சில சுரங்கப்பணிகளுக்கும் தடைவிதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் அதிகாரிகள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து தனது தளத்தில் இந்த அறப்போர் குறித்து பதிவுசெய்ததும், அதன்வழி உரையாடப்பெற்ற வாசக கடிதங்களும், அது உருவாக்கிய நீர்சார் உரையாடல்களும் இந்நகர்வுக்கான உறுதுணையாக இருந்துள்ளன. வெவ்வேறு அதிகார மட்டங்களில் நீர்குறித்து உரையாடுவதற்கான சாத்தியத்தை அது இன்னும் பரவலாக்கியுள்ளது.

மேலும் எழுத்தாளர்கள் கடலூர் சீனு, அழகிய பெரியவன், சூழலியலாளர் ராகவன் சிவராமன் மற்றும் நிறைய மனிதர்களின் இடைவிடாத நெஞ்செண்ணமே… இச்சிறு நேர்மறை நகர்வை நிகழ்த்தியுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

தன்னைச்சிதைத்து தண்ணீரை மீட்க எண்ணும் ஆத்ம்போனந்த் போன்ற சாமானியர்களின் செயல்தவம், இறுகிப்போன அதிகார இருதயத்தை நிச்சயம் ஒருநாள் துடிக்கவைத்தே தீரும். நல்லவைகள் ஓங்கி, அல்லவைகள் நீங்கி, எல்லோருக்காகவும் ஆகும் பூமி.

குக்கூ மற்றும் தன்னறம் நண்பர்கள்
=========================================================================================================
கங்கைக்கான போர் -கடிதம்
கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…
கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்
கங்கைப்போர்- கடிதங்கள்
கங்கைக்கான போர் -கடிதங்கள்
கங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்
அபிராமானந்தரின் கங்கை
வாழ்நீர் – கடலூர் சீனு
முந்தைய கட்டுரைவானிலைப் புனைவு
அடுத்த கட்டுரைஜப்பான் பயணம்