வெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை

SOLVALAR_KAADU_EPI_31

அன்புள்ள நண்பர்களுக்கு

வணக்கம்,

பிப்ரவரி மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

கடந்த மூன்று மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அவ்வுரையாடல்கள்  மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தன. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் இம்மூன்று அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை நிறுத்திக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஜா.ராஜகோபலன்  இந்த வாரமும் உரையாற்றுவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (24/02/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59
அடுத்த கட்டுரைசைவம் – கடிதம்