ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி

scfi

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி

 

அரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒர் அறிவியல்புனைகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது

இதன்படி இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படம் சிறந்த மூன்று கதைகளுக்கு தலா ரூ. 10000[பத்தாயிரம்] பரிசு. அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதையும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளும் வெளியாகும்.

 

போட்டியின் விதிமுறைகள்

1. அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்

2. அந்தப்பேட்டியில் ஜெயமோகன் பல அறிவியல் கதைக்கருக்களைக் குறிப்பிடுகிறார். அந்தக்கதைக்கருக்களையே சுதந்திரமாக விரிவாக்கி கதைகளை எழுதலாம். அதைப்போன்ற புதிய கருக்களையும் கையாளலாம்

3 கதைக்கருக்களின் விரிவாக்கம் அறிவியலின் பொதுவான ஊகநெறிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும்.

4. வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பதும் அவசியம்.

5. போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

6. மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

7. ஒரே எழுத்தாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அனுப்பலாம்.

8  எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைப்பேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும் போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.

9. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியாகும். இந்தப் போட்டி தொடர்பான எவ்வித கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

10 . “வரும் கதைகளில் சிறந்தது” என்று இல்லாமல், “உண்மையானஅறிபுனைவு” கதைகளே தேர்ந்தெடுக்கப்படும்

11. பரிசுக்குத் தெரிவாகும் சிறுகதைகளை தொடர்பு சாதனங்களில்வெளியிடும் உரிமை, அரூ இதழுக்கு உரியது.

12 . மார்ச் 10 ஆம் தேதிக்குள்

[email protected]

என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

சிறந்த கதை எவ்வாறு தேர்வு செய்யப்படும்?

சிறந்த கதை தேர்விற்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுபவை

அந்தப் பேட்டியில் சொல்லப்பட்டிருப்பவையே அளவுகோல்கள்.

அ. வியப்பு, பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்படும் வெறும் கதைகளாக இருக்கக்கூடாது

ஆ. தீவிரமான இலக்கியப்புனைவுபோலவே ஆழமான வாழ்க்கைக்கேள்விகளை நோக்கி செல்பவையாக கதைகள் இருக்கவேண்டும். மனித இருப்பு, பிரபஞ்சத்துடனான உறவு, காலம், வெளி  என அடிப்படைக் கேள்விகளை நோக்கிச் செல்லவேண்டும்

இ. விளையாட்டுத்தனமான செயற்கைநடை இருக்கலாகாது

ஈ.  கதைக்கருக்களின் விரிவாக்கம் அறிவியலின் பொதுவான ஊகநெறிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்கவேண்டும்

உ. இலக்கியக் கதைக்குரிய கதைமயக்கம், மொழிப்பின்னல் ஆகியவை இருக்கலாம்.

 

 மேலும் புரிதலுக்கு…

“அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மனிதர்களின்எதிர்வினைகளை சொல்லும் இலக்கியத்தின் ஒரு கிளையே அறிவியல்புனைவு.” – Isaac Asimov

“அறிவியல் நிதர்சனத்துக்கும் தீர்க்கமான பார்வைக்குமான வனப்பானகாதல் உறவே அறிவியல் புனைவு.” – Hugo Gernsback

“ஓர் இலட்சிய அறிவியல் சிறுகதையானது புனைவு வழியாகமுன்வைக்கப்பட்ட ஓர் அறிவியல் ஊகம்.” – ஜெயமோகன்

“அறிவியல் புனைவு பேரண்டத்தில் மனிதனின் நிலையைப் பற்றி பேசுவது.அறிவியலைப் பற்றியோ, தொழில்நுட்பத்தைப் பற்றியோ அல்ல. நம்கலாச்சாரத்தையும் அறிவியலையும் இணைக்கும் பாலமே அறிவியல்புனைவு.” – Victor R Ocampo

அரூ இணைய இதழ்

முந்தைய கட்டுரைஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்
அடுத்த கட்டுரைகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி