சர்க்கார்- ஒரு கடிதம்

sar

 

ஜெ

 

கே.பாக்யராஜ் அவர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். திட்டவட்டமாகச் சிலவற்றைச் சொல்கிறார்.

 

1.சர்க்கார் படத்தின் கதைக்கும் வருண் ராஜேந்திரனின் கதைக்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. இரண்டும் வேறுவேறு கதை, வேறு டிரீட்மெண்ட். கரு மட்டும்தான் ஒன்று.

 

2 ஏ.ஆர்.முருகதாஸ் வருண் ராஜேந்திரன் கதையை முன்னரே அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி அவர்[ கே.பாக்யராஜ் ]சொல்லவேஇல்லை. சர்க்கார் படத்தின் கதை முருகதாஸின் குழு உருவாக்கிய கதைதான்.

 

3 சர்க்கார் கதை திருடப்பட்டது என அவர்[ கே.பாக்யராஜ்] எங்கேயும் சொல்லவில்லை. அது மீடியா செய்த பிரச்சாரம்

 

உண்மையிலேயே கேட்கிறேன் அப்படியென்றால் என்னதான் பிரச்சினை? நீங்கள் சொன்னதும் இதையேதானே? இதைவைத்துக்கொண்டு ஏன் சென்ற ஐந்தாறுநாளாக உங்களை இணையத்தில் தூற்றினார்கள்? போகிறபோக்கில் நீங்கள் எழுதும் எல்லா கதையுமே திருட்டு என்றுகூட சொல்லிவிட்டார்கள்.

 

எவ்வளவு வன்மம். எத்தனை காழ்ப்பு. உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. நான் ஒன்றும் உங்கள்மேல் விமர்சனம் இல்லாதவன் அல்ல. ஆனால் இந்தக்காழ்ப்பு என்னை பயமுறுத்துகிறது. சில இணைய ஊடகங்களும் திமுக புள்ளிகளும் குறிப்பாக சில இஸ்லாமிய இணையவாதிகளும் இணைந்து உருவாக்கிய காழ்ப்பு இது.

 

இதிலிருந்து வெளிவந்துவிடுவீர்கள் என நினைக்கிறேன்

 

எம்.ராஜேந்திரன்

 

முந்தைய கட்டுரைசர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்
அடுத்த கட்டுரைசர்க்கார், அவதூறுகளின் ஊற்று