ஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்

lon

எப்போதுமே வந்துகொண்டிருக்கும் கடிதங்களில் இரண்டு. சிக்கலான உளநிலையினூடாக ஓடும் இந்தச் சொற்களில் உண்மையான சமகாலப்பிரச்சினை ஒன்று உள்ளது என நினைக்கிறேன். இதை குறைத்துச் சொல்லவோ, எளிமைப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ஆனால் எப்போதுமே வெளியேறும் வழி ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறேன். நிபுணராக அல்ல, நானும் இந்த உளநிலைகளினூடாகச் சென்றவன் என்ற வகையில்

 

ஜெ

 

 

ஜெயமோகன் சார்,

 

 

நான் உங்கள் அறம் புத்தகத்தில் முதல் Chapter ஆகிய அறம் பகுதியை வாசித்து முடித்திருக்கிறேன். உங்களை தவிர எந்த எழுத்தாளரையும் நான் படிக்க முயற்ச்சி செய்து கொண்டுதான் இருக்கேன். ஆனால் முடியவில்லை. என் கடிதம் கீழே போக போக அலுப்பு ஏற்படுத்துவதற்கு மண்ணிக்கவும். காலையில் தூங்கி பல்கூட துலக்காமல் எழுதி கொண்டு இருக்கிறேன். அவ்வளவு ஆர்வம் உங்கள் எழுத்தின் மேல்..

 

 

எனக்கு இப்போது 30 வயதாகிறது. எனக்கு தமிழ் உங்கள் அளவு வராது சார். ஆனால் உங்களின் ஒரு காணொலியை பார்த்த பின்பே இவரை நாம் விட்டு விட கூடாது என்று “வாழ்விலே ஒரு முறை” படிக்க ஆரம்பித்தேன். அதில் நீங்கள் கட்டட வேலை செய்யும் தொழிலாளிகளின் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு சென்று அதை விவரித்த விதம் நெஞ்சை பிளிந்து விட்டது. நான் Cellphone addict ஆதலால், உங்கள் எழுத்தை உங்கள் Websiteலயே பார்த்து விடுகிறேன். இப்போது Leo tolstoy chokkalingam போரும் வாழ்வும் வாசித்து வரேன்.

 

 

நான் வேலையை விட்டுவிட்டதால் வீட்டுல அந்த புத்தகம் வாங்க காசு தர பயப்டுராங்க. இதலால் Anna centenary library ல படிக்றேன்.முதலில் தமிழில் படித்துவிட்டு அப்புறம் English கத்துக்க Maud translatlation படிக்க போரேன். இங்லீஷ் கத்துக்க.முக்கியமாக நான் கூற வந்த நோக்கம்:::

ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு B.E முடித்துவிட்டு தெருவில் அலைந்து கொண்டிருந்த என்னை மிகுந்த வெறுமையில் இருந்த என்னை சின்ன வயதில் என்னை மிகவும் பாதித்த சினிமா

துறையை தேடி அலைந்தேன்.அப்போது தான் என் மாமா Internetல சமணர் குகை பற்றி ஆராய சொன்னார். Osho என்ற அந்த நான் வெறுத்த mysticஆம் அவரையும் படிக்க சொன்னார்.

 

 

என்னுடைய பிரச்சனையே அது தான்.அந்த Osho மேல் வெறுப்பு 7 வருடஙங்கள் கழித்து தீரா வெறுப்பு உண்டாகியுள்ளது. ஆயினும் அவரை ம க்க உங்கள் ஓஷோ உடைத்து “நொருக்கப்படவேண்டிய பிம்பம்”அந்த கட்டுரைக்கு உங்களை கைகூப்பி வணங்க வேண்டும் என்றே தோனுது.

 

 

இப்போது Anna centeneray library தான் என் வாழ்க்கை. ஒருபக்கம் சினிமா மேல் இருக்கும் காதல் பயமுறுத்துகிறது. யாரும் நம்மை சினிமாவில் ஏமாற்றி விடுவார்களா என்று. நடிக்கவும்  ஆசை. காசே இல்லாமல் கூட என்று சொல்ல தோணுது

 

 

இன்னொரு பக்கம் ” நான் எழுதலாமா” உங்க கட்டுரை ரசிக்க வைத்தது போல் இன்னும் என்னை எழுத தூண்ட வில்லை.

தமிழில் எழுத்து பிழை இலக்கணம் இதிலெல்லாம் நான் ரொம்ப POOR.(கிரியா அகராதி பற்றி கூட உங்கள் Websiteல தான் பார்த்தேன். அத வாங்கிருவேன்)

 

நன்றி

இப்படிக்கு

 

ஆர்

 

 

அன்புள்ள என் இனிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்களின் வலைதலத்தில் இருக்கும் கட்டுரைகளை ஆர்வமாக சில நேரம் ரசனை முத்தி போய் கூட படித்திருக்கிறேன்.சமீபத்தில் படேல் சிலையின் கீழ் தமிழ் சரியாக உச்சரிக்கபடவில்லை என Social mediaல மிகவும் கேளிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

என்னுடைய சந்தேகம் மற்றும் கேள்வி என்னவென்றால் இந்த தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுபவர்களை சுத்த தமிழ் பேசுபவர்கள் எதற்காக ஒரு அருவருப்பு கலந்த பார்வையிலேயே பார்க்கிறார்கள். ஹோட்டல் சினிமா பீச் பொது இடங்களில் கூட கடை பலகைகளில் இப்படி தானே மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். செந்தமிழில் பேசினால் தான் தமிழ் வளருமா? எனக்கு சில நேரம் நம் இலக்கியத்தை படிக்கவில்லை என்றால் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. நான் டால்ஸ்டாய் போரும் வாழ்வும் T.chokkalingam படிக்கும்போது, எனது நண்பர்கள் சோழ வரலாறை படிக்கிறார்கள் என்றால் நான் தெரிந்திருக்கவேண்டுமோ என்ற அச்சம் வருகிறது. இது சம்பந்தமாக நான் ஷாலினி மனநல மருத்துவரை அணுகினேன். அப்போது தான் அவர் “என்னுடைய பிரச்னை அதிகமாக இன்டர்நெட்ல தேங்கி யூடூப்பில தேங்கி கிடக்கிற சினிமா ஆபாசங்களை பார்த்து தான் இந்த குழப்பம் ஏற்படுத்திருக்கிறது என்று சொன்னார். இருந்தாலும் என்னை ஈர்த்த எழுத்தாளர் நீங்கள் என்பதால் கேட்க்கிறேன். புத்தகம் வாசிப்பதற்கு என்று ஒரு மனநிலை அவசியமோ?

 

புத்தகம் படிக்கும் பழக்கம் கடல் படத்தில் உங்கள் வசனத்தால் ஈர்த்து அப்பறம் உங்கள் பேச்சை கேட்டு உங்கள் வலைத்தளத்தில் தான் படித்து கொண்டிருக்கிறேன். என் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். என் சித்தப்பாவை தவிர மாமாவை தவிர யாரும் பள்ளி மற்றும் கல்லூரி புத்தகத்தை தவிர எதையும் தொட மாட்டார்கள். என் சித்தப்பா என்னை முதலில் நான் அண்ணா நூலகம் சென்று படிப்பதை பாராட்டினார். அனால் நான் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் நான் நூலகம் போய் படிப்பதை அவர் நிறுத்தி விடு என்கிறார். எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஆபாச படங்கள் முடங்கி கிடக்கிறது நம் யூடியூபில. எல்லாம் நம் So-called indian masala cinemaவின் தான். வேறென்ன?

 

ஒரு சமகால எழுத்தாளராக உங்களது அறிவுரையும் தேவைபடுகிறது. தயவுசெய்து கூறுங்கள். நான் உங்களுக்கு அடிக்கடி கடிதம் அளவுக்கு பெரிய வாசகன் அல்ல. இந்த பாலியல் வேட்க்கை தான் என்னை புத்தகம் படிக்கவிடாமல் என்னை துன்புறுத்துகிறது. நான் இப்போது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முன்னூறு பக்கம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாசிக்க வேண்டியதாக இருந்தது என்று உங்களுக்கு சொன்னால் புரியாது. பிடித்தும் படிக்க முடியவில்லை. அருமையான நாவல் அது. அதில் வரும் தேவராஜன் கதாபாத்திரம் என்னை ஈர்த்தது. வாசிக்கும் பொது இடையில் கன்னாபின்னாவாக ஆயிரம் எண்ணங்கள் கற்பனைகள் வந்து பயமுறுத்துகிறது. நல்ல வாசகனாக இருபதற்க்கு என்று ஏதேனும் அடையாளம் இருுக்கிறதோ? வாசிப்பதை விட சினிமாவே கூட மேல ஆர்வம் வருகிறது. ஒருவேலை நான் தவறான இடத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் தோன்றுகிறது.என்வாழ்க்கையில் கீழ்கண்ட எது என்னை ஆட்டிவிக்க போது என்று நினைக்கவே பயமாகஇருக்கு. நான்கே Choice தான்.

 

1) எழுத்தாளர்

2) நடிப்பு

3) சினிமா இயக்குனர்

4) Swiggy or zomato driver.

 

இப்படிக்கு

ஆர்

 

 

அன்புள்ள ஆர்,

 

உங்களுக்கு நான் அறிவுரை சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையை, அதையொட்டி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை புறவயமாகச் சற்றே கூர்ந்துபாருங்கள் என்று கோருகிறேன். புறவயமாகப் பார்க்கையில் உங்களுக்கே தெரியும் பல சிக்கல்கள் உங்கள் கடிதங்களில் தெரிகின்றன

 

முதல் விஷயம் உங்கள் இலக்கின்மை. இலக்கு ஒன்றை வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதில்லை. ஆனால் தனக்கு வேண்டியதென்ன என்றாவது ஒருவருக்குத் தெளிவு இருக்கவேண்டும். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அப்படி இல்லாமலிருக்கும்.ஆனால் விரைவில் அங்கே சென்றாகவேண்டும்

 

 

நீங்கள் உங்களால் எளிதில் செய்யக்கூடியவற்றைச் செய்கிறீர்கள். அதன்பொருட்டு கடினமானவற்றைத் தவிர்க்கிறீர்கள். உலக வாழ்க்கையில் கடினமானவையும் எளிதானவையும் இரண்டறக் கலந்தே உள்ளன. நமக்கு எளிதானவற்றை மட்டும் செய்வதாக நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது. அதன்பொருட்டு நாம் பிறரைச் சுரண்டத் தொடங்கிவிடுவோம்

 

நீங்கள் நூல்களை இன்றைய உளநிலையில் வாசிக்கலாகாது. நூல்கள் தெளிந்த உளநிலையில் வாசிக்கப்படவேண்டியவை. குழப்பமான உளநிலையில் பலசமயம் அவை மேலும் குழப்பங்களையே உண்டுபண்ணும். ஆகவே இப்போது குறைந்த அளவுக்கு, அன்றாடத்துடன் தொடர்புள்ளவற்றை மட்டுமே வாசிக்கவும். நீங்கள் நிறைய வாசிக்கவேண்டிய காலம் வரும்போது வாசிக்கலாம்

 

நாம் செய்யும் வேலை புற உலகம் சார்ந்தது. ஆனால் அதுதான் நம்மை ஓர் ஒழுங்குக்குள் கட்டுப்படுத்துகிறது. நம் அகத்தையும் கட்டமைக்கிறது. ஆகவே வேலை, அது எதுவானாலும் , செய்யத் தொடங்குங்கள். அதற்கு அப்போது உங்களை முற்றளியுங்கள். அதன்பின் எஞ்சிய பொழுதுகளை முறையாகத் திட்டமிடலாம்

 

தேவையென்றால் இதற்கு உளவியலாளரின் உதவியை நாடலாம்

 

ஜெ

 

பிகு

 

சினிமா என்பது நீங்கள் எண்ணுவதுபோல பிற அனைத்துத் துறைகளிலும் சிக்கலுடன் வெளியேறுபவர்கள் வந்தமையவேண்டிய இடம் அல்ல. அது இன்றைய சூழலில் மிகமிகக் கடுமையான போட்டி நிலவும் இடம். மிகத்திறன்கொண்டவர்கள் மட்டுமே வெற்றிபெறமுடியும். சினிமாக்கலையில் மட்டுமல்ல மக்கள்தொடர்பிலும் ஒருங்கிணைப்பிலும் ஆற்றல்கொண்டவர்களுக்குரியது அது. ஆகவே அதைப்பற்றிய கனவுகளை முற்றாகவே கைவிடுங்கள்

முந்தைய கட்டுரைதமிழகப்பொருளியல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60