பேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு

a
b
பேரா.சுந்தரனார் விருது எங்கள் பல்கலைக்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 2014. அவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்படுபவருக்குப் பல்கலைக்கழகம் ரூபாய் லட்சம் வழங்குகிறது. விருதுக்குரிய தகுதி தமிழ் இலக்கியம், மொழி, பண்பாட்டுத்தளங்களில் விரிவான பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் அதற்கான தெரிவுக் குழுவினரின் முடிவு. துணைவேந்தர் தான் அந்தக் குழுவின் தலைமை என்றாலும் இதுவரை எந்தத் துணைவேந்தரும் அவர்களது விருப்பத்தைத் திணித்ததில்லை. இதனை விருதுபெற்றுள்ள அறிஞர்கள், படைப்பாளர்கள் பட்டியல் வழி அறியலாம்.

பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன், பேராசிரியர், கவிஞர் எல் இளையபெருமாள், பேராசிரியர், இலக்கிய வரலாற்றாளர் ச.வே.சுப்பிரமணியம், எழுத்தாளர், வட்டார வழக்குச்சொல்லகராதி, நாட்டார் கதைகளின் தொகுப்பாளர் என அறியப் பெற்ற கி.ராஜநாராயணன் ஆகியோர் இதுவரை விருதுபெற்றுள்ளனர்.இப்போது கவிஞர் கலாப்ரியா விருதுபெற உள்ளார். அவர் முதன்மையாகக் கவிஞர். தனித்த உரைநடைக்காரர், இப்போது புனைகதைக்காரராகவும் இயங்கத் தொடங்கியிருக்கிறார். அவரால் நடத்தப் பெற்ற பதிவுகள் அமைப்பின் தாக்கம் தமிழ் நவீனப்பரப்பில் குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் 12- 10-2018 காலை 11 மணிக்கு  நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வருக

அ.ராமசாமி

கலாப்ரியாவுக்கு என் சார்பிலும் விஷ்ணுபுரம் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்
முந்தைய கட்டுரைகட்டண உரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசம்பத்தின் இடைவெளி பற்றி