தமிழும் ராஜ் கௌதமனும்

raa

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

ஜெமோ,

ஐரோப்பிய கோடை தரிசனம் பெரும் புத்துணர்ச்சியை வளங்கியிருக்குப்பதை “மெதுவாகத்தான் இம்மண்ணில் இனி கால் பதிக்கவேண்டும்…” என்ற ஒற்றை வரியில் உணர்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
ராஜ்கௌதமன் அவர்களின் ‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம்’  என்ற கட்டுரை தொகுப்பிலுள்ள ‘சுத்த தமிழ் நேயம்’. என்ற கட்டுரையைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பிராமண சமூகங்களின் மேட்டிமைவாத போக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் கையிலெடுத்ததும் தமிழைத்தான். இவர்கள் தங்கள் மரபுகளை மீட்டெடுப்பதை விட அதன் பழம்பெருமைகளில் தஞ்சம் புகுவதையே நாடியிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை பழங்கால தமிழ் சமூகத்திலேயே அனைத்து சாதனைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என நிறை கொண்டு இறந்தொழிந்த காலங்களில் மட்டுமே வாழ்பவர்களாக இருந்தார்கள்.
முந்தைய கட்டுரைகூப்பிடுதூரத்து தெய்வங்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்