யாக்கை

நவீன்
நவீன்

சாரமுணர்ந்து எழுதப்படும் வலுவான விமர்சனங்களின் வழியாக எழுத்தாளன் ஆற்றலுடன் எழமுடியும் என்பதற்கான சான்று இந்தக்கதை. நவீன் எழுதிய சிறந்த கதை எனச் சொல்வேன். அவர் கதைகளில் முன்னர் இருந்த பெரும்பாலான சரிவுகள் நீங்கி உருவிய வாள்போல் வடிவம் கொண்டிருக்கிறது. இரு யதார்த்தங்கள் ஒன்றையொன்று முட்டி விலகிச்செல்லும் புள்ளி நுட்பமாகத் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. சென்ற முறை போயாக் மீதான விமர்சனங்களின்போது அடுத்தகதையை எழுதிவிட்டேன் என்று நவீன் சொன்னதன் பொருள் இப்படைப்பில் உள்ளது

ஜெ

அவர் தலைமுடியைப் பற்றி கியாட்டும் கெப்பாலாவும்  தூக்கியபோதுதான் மயக்கம் அடைய மூளைக்குச் சம்மதம் கொடுத்தார். ஒரு சூட மீன் விடாமல் கடித்துக்கொண்டே துடித்து கப்பலுக்குள் உடல் செல்லும்முன் கடலுக்குள் சிறு தோல் துண்டுடன் தாவியது. இரண்டுவார தீவிர சிகிச்சையும் இரு மாத கோமாவுக்கும் பின் நினைவு திரும்பினார். மருத்துவர்களின் பேச்சொலி கடல் அலைகளின் இரைச்சல்போல வதைத்தது. அவற்றில் துள்ளலுக்கு ஏற்ப உடல் அலைவதாகத் தோன்றியது. கண்களைத் திறக்க பயந்து கட்டிலைத் தொட்டு  திரவ நிலையில் இல்லை என உறுதியானபின் நிம்மதி அடைந்தார்.

யாக்கை ம நவீன்

(வல்லினம் தளம்  இயங்காமல் பிழைச்செய்தி காட்டினால் ரெஃரெஷ் செய்யவும் – தள நிர்வாகி)

முந்தைய கட்டுரைகஞ்சி கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைதிருத்தர்