சீ முத்துசாமி பற்றி பாலமுருகன்

bala

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்பின் ஜெயமோகன் அண்ணனுக்கு,

2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. விமான டிக்கேட்டுகளும் பதிவாகியிருந்தது. தற்சமயம் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று கொண்டிருப்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வர முடியாமல் போனதால் ஏற்பட்ட வருத்தம் விழா குறித்த நண்பர்களின் பதிவுகளை வாசித்தபோது. மேலும் அதிகரித்துப் போனது.

விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் வல்லினம் ஆசிரியர் நவீன் ஆற்றிய உரையை, சிங்கப்பூர் பாண்டித்துரை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவ்வுரையில் ‘சீ.முத்துசாமி என்கிற ஆளுமையிடமிருந்து வந்தவர்தான் பாலமுருகன்’ என அவர் குறிப்பிட்டபோது, எழுத துவங்கிய காலங்களில் இரண்டாண்டுகள் சீ.முத்துசாமியுடனே அலைந்து திரிந்த பொழுதுகள் மனத்தின் ஆழத்தில் நெளிந்தன. அவரிடமிருந்து அக்காலக்கட்டத்தில் பெற்றவை அனைத்தையும் ஒருமுறை தொகுத்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது. ஒருவேளை விழாவிற்கு வந்திருந்தால், எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால், பேச வேண்டியவைகளையே இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.

***

http://balamurugan.org/2018/01/05/சீ-முத்துசாமி-மலேசிய-நவீ/

***

முந்தைய கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைவிடுபட்ட ஆளுமைகள்