சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

SR

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு

முந்தைய கட்டுரைவிடுபட்டவர்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29