வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’

index

 

வெண்முரசின் பதினைந்தாவது நாவல் எழுதழல். வழக்கமாக ஒரு நீண்ட இடைவேளையும் சலிப்பும் பின்னர் ஒருபயணமும் அதன் விளைவாக ஓர் எழுச்சியும் என்றுதான் முறையே அடுத்தநாவல் நிகழும். இம்முறை நீர்க்கோலம் முடிந்த மறுநாளே எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதிக்கொண்டிருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு ஓர் இடைவேளை வேண்டுமே என்பதற்காக வரும் செப்டெம்பர் 15 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன்.

இது பாண்டவர்களின் உரிமைக்காக கிருஷ்ணன் நிகழ்த்தும் தூதையும் அதன் தோல்வியில் போர் எழுவதையும் சொல்லும் நாவல். முதற்கனல் இப்போது தழலாக எழுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமுடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)
அடுத்த கட்டுரைமதுரையில்…