பீத்தோவன் இசை அறிமுகம்

மேலையிசையில் பீத்தோவன் ஒரு திருப்புமுனை. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிற்பிகளில் ஒருவர். மேலைச்சிந்தனை மரபுடன் இணைத்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய கலைஞர். அஜிதன் பீத்தோவனயும் அவரது இசையையும் அறிமுகம் செய்யும் பொருட்டு நடத்திய...

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா வரும் ஜூன் 10 அன்று சென்னையில் நிகழ்கிறது. வழக்கம்போல காலைமுதலே நிகழ்ச்சிகள் உண்டு . இளம் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பற்றிய அரங்குகள். மாலையில் விழா. நண்பர்கள் வருகைக்கான முன்பதிவுகள்...

பொன்னிற வெளிச்சம்

பொன்னிறப்பாதை வாங்க  பொன்னிறப்பாதை வாங்க பொன்னிறப்பாதையில் இருக்கும் கட்டுரைகள் எல்லாமே வெவ்வேறு தருணங்களில் என் வாசகர்களுடனான உரையாடல் வழியாக உருவானவை.  இத்தகைய வாய்ப்பு சென்ற தலைமுறையில் எழுத்தாளர்களுக்கு அமைந்ததில்லை. இதை இயல்வதாக்கியது இணையம். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் பெறுகிறேன். பதில் எழுதுகிறேன். என் எழுத்துலகை இந்த உரையாடல் வலுவாக்கியது. சமகாலத்தன்மையையும் நடைமுறைத்தன்மையையும் அளித்தது. நான் எழுதுபவை செவ்வியல் படைப்புகள். பெருங்கனவுகள். இந்த உரையாடல் அவற்றை மண்ணில் வேரூன்றி நிலைகொள்ளச் செய்தது. இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் என்பவை அறிந்தவிந்த ஒருவன் அறியாதோருக்குச் சொல்பவை. இவை அனுபவப்பகிர்வுகள் மட்டுமே.நான் கடந்துவந்த வாழ்க்கையையும், அதில் நான் அறிந்தவற்றையும் இதில் பகிர்ந்துகொள்கிறேன்.  அது இந்த வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வதற்கு நிகரான எதிர்வினை மட்டுமே. நான் கடுந்துயரின், தனிமையின் ,அவநம்பிக்கையின் இருளில் இருந்து ஒளியை என்னுள் இருந்து கண்டுகொண்டேன், என்னை உருவாக்கிக் கொண்டேன். நான் கண்டடைந்த ஒளியைப்பற்றியே இந்நூலில் பேசுகிறேன். நானடைந்த துயரை, தனிமையை, அவநம்பிக்கையை தாங்களும் அடைந்தவர்களுக்காக. அவர்களுக்கு அது உதவியது என்று அறிந்திருக்கிறேன். ஓரு புனைவெடுத்தாளன் இப்படி சிந்தனைகளை, அனுபவங்களை நேரடியாக எழுதலாமா என்னும் கேல்வி எழலாம்.இலக்கியவாதிகள் சிலர் ஓர் கதையாசிரியன் கதையினூடாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வதுண்டு. என் எண்ணம் அது அல்ல. நான் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரடியாக, முடிந்தவரை வெளிப்படையாக, முடிந்தவரை எளிதாகப் பேசவே விரும்புகிறேன். இடைவிடாமல் அதற்கு முயல்கிறேன். அவ்வண்ணம் சொல்லிவிட முடியாதவை, சொல்லிச் சொல்லி எஞ்சுபவை மட்டுமே உயர்ந்த புனைவாக வெளிப்பட இயலும் என நினைக்கிறேன். என் படைப்புகளின் மர்மங்கள், முடிவிலி வரை செல்லும் ஆழ்தளங்கள் எல்லாமே இந்த வகையில் என்னால் தெளிவாகச் சொல்லிவிட முடியாதவற்றால் ஆனவையே. பொன்னிறமான பாதை என ஒன்று உண்டா? அவ்வண்ணம் இயற்கை நிகழ்கிறதா? இல்லாமலிருக்கலாம். ஆனால் நம்மால் பொன்னிறமான பாதையை நம் அகத்தின் ஒளியால் உருவாக்கிக் கொள்ள முடியும். நம்மை மீறி இருள் வருமென்றால் அது நம்மை மீறியது என்னும் நிம்மதியேனும் நமக்கு எஞ்சும். இக்கட்டுரைகள் காட்டும் தெளிவு அன்றாடத்தின் பல்வேறு கருத்துச்சிடுக்குகளில்  சிக்கி உளச்சோர்வடைந்த இளம் நண்பர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. அவ்வகையில் நான் நிறைவடைகிறேன் ஜெ

மு.தங்கராசன்

சிங்கப்பூர் பிரித்தானிய, ஜப்பானிய ஆதிக்கங்களின் கீழ் இருந்த காலத்திலும் மலாயாவுடன் இணைந்து, பின்பு தனி நாடாகப் பிரிந்தபோதும் அங்கு வாழ்ந்தவர் மு. தங்கராசன். இந்த அரசியல் மாற்றங்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களுடைய வாழ்வில்...

கற்றல், கடிதம்

கற்றலை அளிப்பது திரு ஜெயமோகன் குழுவினருக்கு, இவண் மரகதவல்லி. பெங்களூரில் வசிக்கிறேன். ஜெ-வின் இந்தக் கட்டுரையை https://www.jeyamohan.in/182655/, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். இதில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொண்டு நிறுவன அமைப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் படிக்க...

ஆலயக்கலை- கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன், National treasure, The Mummy போன்ற மேற்கத்திய படங்களை பார்த்திருப்பீர்கள், புராதானமான கட்டிடங்களை தேடி அதிலுள்ள புதிர்களை கட்டவிழ்த்து சரியான பொத்தானையோ, லிவரையோ அழுத்திய மறு நிமிடம் பிரம்மாண்டமான சுவற்றின்...

கவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்

இனிய ஜெயம் மற்றும் ஒரு இனிமை நிறைந்த காவிய முகாம். மூன்று நாட்கள் இரவு பகல் முழுக்க உரையாடல்கள். முகங்களின் பெருக்கின் ஊடே மனம் வழக்கமாக வரும் ஆனால் இம்முறை வர இயலாமல் போன...

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே...

வீ.செல்வராஜ்

மலேசிய அச்சு இதழ்களில் இருந்து படைப்புகளைத் தேர்வு செய்தாலும் வீ. செல்வராஜ் தனது ரசனைக்கு ஏற்றதையும் தரமான படைப்பு என தான் நம்பும் படைப்புகளையும் மட்டுமே நூலாக்கியுள்ளார். அதன் பொருட்டு பத்து ஆண்டுகள்,...

நான்காவது கொலை வாசிப்பு

நான்காவது கொலை மின்னூல் வாங்க நான்காவது கொலை வாங்க இனிய ஜெயம் மாயப்புன்னகை முடித்து அப்படியே கைவாட்டத்தில் அடுத்த புத்தகமாக இருந்த நான்காவது கொலை நாவலை வாசித்தேன். முன்னர் வாசித்தது. இப்போது வாசிக்கையிலும் பக்கங்கள் தோறும் புன்னகை...

ராஜா – கடிதம்

அன்புள்ள ஜெ இளையராஜா பற்றிய உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. அவரை பற்றிய சர்ச்சை வரும்போதெல்லாம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அந்த பதிவுகளில் உலவுவது மிகவும் உதவும். குறிப்பாக, 'விண்ணளக்கும்போதே அது பறவை!' என்ற...

இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, யோக முகாமில் நான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. வீட்டில் த்தரயக் தடாசனம் செய்து முடித்துவிட்டு உடம்பை கவனிக்கும் போது,  "உங்கள் கைகள் இரண்டும் தளர்வாக இரு பக்கமும்...

பாரதத்திற்கான பாதை

பத்மவியூகம் வாங்க பத்மவியூகம் மின்னூல் வாங்க 1987 என நினைவு, பி.கே.பாலகிருஷ்ணனை அவர் வழக்கமாக அமரும் உதாரசிரோமணி சாலையில் அமைந்த மதுக்கடையில் சந்தித்தபோது இனி நான் உறங்கலாமா பற்றிய விவாதம் எழுந்தது. அந்நாவல் அளித்த புகழின்...

உத்தமசோழன்

தஞ்சை, திருத்துறைபூண்டி மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் முன் வைப்பவர் உத்தமசோழன். தஞ்சை மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும், கீழ்த் தஞ்சை மண்ணின் வட்டார வழக்குப்...

ஆலயக்கலை- கடிதம்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, நானும் என் நண்பர் பா.கா.முருகேசனும் காலை 6 மணிக்குக் கோவையிலிருந்து காரில் கிளம்பினோம். ஈரோட்டில் உள்ள...

மதுமஞ்சரி- கடிதம்

நீரின் நிறைவு அன்பு ஜெ. மதுமஞ்சரி முகநூலில் பகிர்ந்திருந்த குறிப்பு. உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது. * சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு அருகில் உள்ள அவல் பூந்துறை எனும் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ள ஒரு தலித் காலனியில்...