குறிச்சொற்கள் யாக்ஞவல்கியர்

குறிச்சொல்: யாக்ஞவல்கியர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34

இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33

பாலென நுரைபொங்கும் தூத்மதியே மிதிலையை அணைத்து ஓடிய முதன்மை ஆறு. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் அதில் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி வந்து இணைந்துகொண்டன. அங்கு எப்போதும் இளஞ்சேற்றின் நுரைமணம் இருந்தது. வடமேற்கே...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32

பிருஹதாரண்யகத்தில் மைத்ரேயி இளைய அறத்துணைவியாகவும் காத்யாயனியின் ஏவல்பெண்டாகவும் வாழத்தொடங்கினாள். இருபதாண்டுகளாக பிருஹதாரண்யகக் கல்விநிலை வளர்ந்து பேருருக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் பறவைச்செய்திகள் வழியாகவே தொடர்புகள் நிகழ்ந்தன. வரும்செல்வத்திற்கு கணக்குகள் வைத்துக்கொள்வதும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவற்றை...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31

அங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30

பிருஹதாரண்யகத்தை நோக்கிச் சென்ற பாதை மரப்பட்டைகளும் கற்பாளங்களும் பதிக்கப்பட்ட வண்டித்தடமாக இருந்தது. “ஒரு வேதக்காட்டுக்கு வண்டித்தடம் இருப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்று தருமன் சொன்னார். “ஆம், இக்காடு மட்டுமே அவ்வாறு அரசர்களால் முற்றிலும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29

ஆறாம் காடு:  பிருஹதாரண்யகம் வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது. நெடுங்காலம் அதற்குப் பெயரே இல்லாமலிருந்தது, ஏனென்றால் அதை மானுடர் பார்த்ததே இல்லை. அங்கே முதன்முதலாகச் சென்று குடியேறியவர் கௌஷீதக மரபிலிருந்து விலகிச்சென்ற சூரியர் என்னும்...

மாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்

மாட்டிறைச்சித்தடை மற்றும் தாத்ரி படுகொலை பற்றி என்னிடம் வினவி பல கடிதங்கள் வந்தன. ஒட்டுமொத்தமாக பதில் இது. உடனடிநிகழ்வுகளில் எதிர்வினையாற்றுவதிலுள்ள இடர்களை எண்ணி நான் தயங்குவது வழக்கம். இதிலுள்ள சில கேள்விகள் தனிப்பட்ட...