குறிச்சொற்கள் மாயை

குறிச்சொல்: மாயை

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34

பீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12

பணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11

கருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8

பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் - 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79

எட்டு : குருதிவிதை - 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88

மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86

சகுனி கைநீட்ட  ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85

கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!”...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81

பகுதி 16 : தொலைமுரசு - 6 மலர்களும் தாலங்களும் பட்டாடைகளும் குவிந்துகிடந்த இரு சிறிய அறைகளுக்கு அப்பால் பெரிய கூடத்திற்குள் திறக்கும் வாயில் திறந்திருந்தது. அதற்குள் ஆடைகளின் வண்ணங்கள் ததும்பின. "அன்னை காலைமுதல்...