குறிச்சொற்கள் தேவகி

குறிச்சொல்: தேவகி

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76

எட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75

எட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74

எட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 8 மதுராவின் ஒவ்வொரு செடியையும் சுபத்திரை அறிந்திருந்தாள். ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. அரண்மனையில் தன் மாளிகையில் அவள் இருக்கும் நேரமென்பது இரவில் துயிலும்போது மட்டுமே என்றனர்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 82

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 7 கம்சனின் சிறையிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் வசுதேவர் ரோகிணியை ஒருமுறையேனும் சந்திக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த வெண்ணிற மைந்தன் இளமையிலேயே பெருந்தோள் கொண்டு வளர்வதை சிறையிலிருந்து கேட்டு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் - 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் - 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36

பகுதி பன்னிரண்டு: 1. முடி இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6

பகுதி இரண்டு: 3. அனலெழுதல் வண்ணத்தலைப்பாகை வரிந்து சுற்றிய தலையும் கம்பிளிமேலாடையும் கையில் வலம்புரிக்குறிக்கோலும் தோளில் வழிச்செலவுமூட்டையுமாக பரிநிமித்திகன் பர்சானபுரிக்குள் வந்தான். அவன் விறலி தோளில் தொங்கிய தூளியில் விரலுண்ணும் விழிவிரிந்த கைம்மகவை வைத்திருந்தாள். அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5

பகுதி இரண்டு: 2. பொருளவிழ்தல் யமுனைக்கரையில் சரிவில் வேரிறக்கி, விழுதுகளால் நீர்வருடி, தன் முகத்தை தான்நோக்கி நின்றிருந்த ஆலமரத்தடியில் ஆயர்குடிப்பெண்கள் கூடி நீராடிக்கொண்டிருக்க வேர்ப்புடைப்பில் அமர்ந்து அவர்கள் தந்த நறுஞ்சுண்ண வெற்றிலையைச் சுருட்டி வாயிலிட்டு...