குறிச்சொற்கள் அசலை

குறிச்சொல்: அசலை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19

பகுதி மூன்று : பலிநீர் - 6 கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56

ஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3

வெள்ளி எழுந்துவிட்ட முதற்காலைப் பொழுதில் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலுக்கு வெளியே காவலர் தலைவனாகிய நிகும்பன் மூன்று வீரர்களுடன் காத்து நின்றிருந்தான். கோட்டை மேல் எரிந்த மீன்நெய் விளக்குகளின் மங்கிய செவ்வெளிச்சம் கீழே விழுந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50

புஷ்பகோஷ்டத்தின் மூன்றாவது மாடத்தில் சற்று வெளியே நீட்டியிருந்த சிறிய மரஉப்பரிகையில் பானுமதி அசலையுடன் அமர்ந்திருந்தாள். வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு உள்ளிருப்பவர்கள் தெரியாதபடி மென்மரத்தாலான மான்கண் சாளரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெடுநேரம் அமர்ந்திருப்பது கடினம்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49

பானுமதி முதற்காலையில் காந்தார அரசியரை சந்திக்கும்பொருட்டு அணியாடை புனைந்துகொண்டிருக்கையில் அமைச்சர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அப்போதுதான் அவள் அனுப்பியாகவேண்டிய ஓலைகளின் நினைவை அவள் அடைந்தாள். அமைச்சரை சிறுகூடத்தில் காத்திருக்கும்படி பணித்துவிட்டுச் சென்று...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47

விதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46

விதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45

பானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44

பானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72

பகுதி பத்து : பெருங்கொடை - 11 முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும்,...