தினசரி தொகுப்புகள்: February 6, 2017
மாமங்கலையின் மலை – 6
ஷிமோகாவிலிருந்து அதிகாலையிலேயே கிளம்ப வேண்டுமென்பது திட்டம். ஆனால் யானா குகையிலிருந்து வந்து சேர்வதற்கே பதினொரு மணி கடந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஒரு கும்பல் அமர்ந்து இந்தியாவை உய்விப்பதைப்பற்றிய ஆழமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது எனக்கு...
அரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்
இந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
6. ஐம்பொருட் சாறு
வெயில் மூத்துக்கொண்டிருந்த பின்காலையில் அர்ஜுனனும் சகதேவனும் தோட்டத்தில் மலர் நோக்கிக்கொண்டிருந்தனர். அப்பால் நகுலன் மண்வெட்டியால் பாத்தி வெட்டிக்கொண்டிருந்தான். “இங்கு மலர்கள் மட்டும்தானா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கே காட்டில் காய்கனிகளுக்கு...