வெண்முரசு இந்திரநீலம்

இந்திரநீலம்

இந்திரநீலம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு

வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது நாவல் இந்திரநீலம், கெட்டி அட்டை , அதிக GSM கொண்ட தாள் , சிறப்பான பைண்டிங் கொண்ட நூல்கட்டு . (இந்த நாவலில் ஓவியங்கள் இல்லை) முன்பதிவில் வாங்குபவர்களுக்கு ஜெயமோகனின்...

திருசூழ் பெருநிலை

வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் ராதை தன் நிகரற்ற அர்ப்பணிப்பால் கிருஷ்ணனை உருவாக்கி எடுப்பதைக் காட்டியது. இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை,பத்ரை ,காளிந்தி என்னும்...

இந்திரநீலம் நிறைவு

இந்திரநீலம் எழுதத் தொடங்கும்போது இருந்த திட்டத்தை வழக்கம்போல மீறி அதற்குரிய வடிவை தானாகவே அடைந்து முடிந்தது. என்னைப்பொறுத்தவரை இப்படி தன்னிச்சையாக எழுந்து முடிகையிலேயே கச்சிதமான வடிவம் அமைகிறது. எண்ணிக்கோத்து எழுதும்போது எப்போதுமே ஏராளமான...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 3 கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 2 கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 1 சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத் தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும் போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 12 இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 11 மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள்....