Tag Archive: பிரம்மம்

விலாங்கு

”ஐயா வணக்கம்” ”நமஸ்காரம்.க்ஷேமமா இருங்கோ…” ”இல்லீங்க…இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க…அப்டித்தான் இருக்க முடியும்…” ”அதான் சொல்றேன்…நன்னா க்ஷேமமா இருங்கோ” ”அப்டிச் சொல்றீங்களா? சரிங்க… கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம் இதம் ஏவம் வ பிரம்ம வதிஷ்யாமின்னு சொல்லியிருக்கே” ”யாருங்க?” ”பெரியவா…” ”பெரியவான்னாக்க?” ”ரிஷிகள்…” ”அப்டீங்களா? அய்யா இப்ப நீங்க சொன்னதை திரும்ப ஒருவாட்டி சொன்னீங்கன்னாக்க நல்லாருக்கும்..வேகமா சொல்லிட்டீங்க காதிலே உழுவல்லை” ”ஆபத்ஸ்தம்பஸூத்ரத்திலே உள்ளதுடா அது.ரொம்ப ஸூக்ஷ்மமான அர்த்தம்லாம் அதுக்கு உண்டு… அதைப்பத்தி பேச …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=1324

நான் இந்துவா?

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21656

ஆன்மீகம்,கடவுள், மதம்

திரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21294

மாசு

நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள் மட்டும். அந்தி இருண்டு மரங்கள் வானப்பின்னனியில் சிவப்பாக ஆவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே தேவதேவன் எந்த வார்த்தைகளில் இந்தக் காட்சியைச் சொல்வார் என்ற எண்ணம் ஏற்பட்டது. சந்தேகமே இல்லை தூய்மை. தூய்மை தேவதேவனுக்குப் பிடித்த சொற்களில் ஒன்று. வேறெந்த நல்ல கவிஞரையும்போல அச்சொல்லுக்க்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21424

Switch to our mobile site