அன்புள்ள ஜெ, கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், “கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்” இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் ‘wit’ ஐ தேடிக்கொண்டிருக்கிறேன். அவரது ‘நிம்மதி’யை வாசித்த போது, படைப்பில் உள்ள ‘wit’ ஐ ரசித்துக் கொண்டிருக்கும்போதே காலடியில் உலகம் நழுவி நம் நிம்மதியை தொலைக்கும் கணங்களே கவிதைக் கணங்கள் என்று கண்டுகொண்டேன். என்ன மாதிரியான ஒரு கவிதை!! புன்னகைக்க வைத்து சாகடிக்கும் ஒரு கவிஞன் !! – ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், கல்பற்றா நாராயணனின் …
Tag Archive: நிம்மதி
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34937
நிம்மதி
அம்மா இறந்தபோது ஆசுவாசமாயிற்று இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும் எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள் இனி என்னால் காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும் முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம் ஓடிவரும் ஒரு அலறல் என்னை திடுக்கிடச்செய்யாது இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம் நேற்றோடு இல்லாமலாயிற்று இனி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34831


