Tag Archive: தீபம்

குருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருதி கதை வரை உங்கள் சமீபத்திய கதைகளைப் படித்து விட்டேன். இந்த கதைகளை நான் இன்னொருவரிடம் சொல்வதென்றால் இருவரிகளில் சொல்லி விடலாம். இந்தக் கதைகள் நுண்நோக்கி வழியாகக் காண்பது போன்று இருந்தது. மிக மெதுவாக அதே சமயம் மிக இயல்பாக. உங்கள் பழைய கதைகளைத் திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன், இன்னும் பல கதைகள் எனக்கு அந்தரத்தில்தான் நிற்கின்றன, ஆனால் இந்தக் கதைகள் அப்படி அல்ல. நிலம் கதையும் குருதியும் மண்ணில் தன்னை நிறுத்திக் கொள்ளும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34805

தீபமும் கிடாவும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, தீபம் மிக அற்புதமான கதை. வார்த்தைகளுக்கு அகப்படாத அக எழுச்சியைத் தந்தது. லட்சுமி ஏற்றிய தீபம் முருகேசன் மனத்தில் மட்டுமல்லாமல், என் இதயத்திலும் சுடர் விட்டு எரிந்து ஒளி வீசுகிறது, அன்புடன், சந்திரசேகரன் அன்புள்ள சந்திரசேகரன் சிலசமயம் கதைகளில் ஒன்றுமே இல்லாமல் எல்லாம் அமைந்துவிடுகிறது ஜெ அன்புள்ள ஜெ , கிடா…. கண்களை மூடிக் கொண்டே யாரையாவது வாசிக்க சொல்லிக் கேட்டால்… ஒரு மிக நல்ல மண்வாசனை நிறைந்த குறும்படம் பார்ப்பது போல இருந்தது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34722

தீபம் [புதிய சிறுகதை]

மாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது அசைவைக்கண்டு திரும்பிப்பார்த்து கூழாங்கல்போன்ற கண்களை மூடித்திறந்து ம்ம்பே என்றது. வாசலில் கிடக்கும் கருப்பனைக் காணவில்லை. மாமா காட்டுக்குத்தான் போயிருக்கவேண்டும். அத்தை இருக்கிறாளா என்று தெரியவில்லை. வீடே அமைதியாக இருந்தது முருகேசன் வீட்டுமுற்றத்தில் தயங்கி நின்றான். அவன் பிறந்ததே அந்த வீட்டில்தான். அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடிவந்துவிடுவான். கறிசமைத்தாலோ எள்ளுருண்டையோ வெல்லமாவோ உருட்டினாலோ அத்தையே அவனை வரச்சொல்லித் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34352

Switch to our mobile site