அன்புள்ள ஜெயமோகன் அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு புரட்சி இருக்கத்தான் செய்கிறது. காந்தியைப் புரிந்து கொள்வதற்குக் கோரா மிகவும் பயன்படுகிறான். நீங்கள் குறிப்பிட்டது போக, மேலும் ஓர் ஒற்றுமை – இருவரும் பழைமையை ஆதரித்துப்பேசிய போதும் அதை முழுக்கப்பின்பற்றவில்லை. கோரா தீண்டாமையைக் கேள்விகேட்காமல் நியாயப்படுத்துகிற வேளையிலேயே, ஏழைகளை …
Tag Archive: தாகூர்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31502
காந்தியும் சனாதனமும்-1
கோராவின் வாதங்களை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதே ஆழமான அதிர்ச்சியை காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று சொன்னதை வாசித்தபோதும் அடைந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார். சனாதன என்ற சொல்லை அவர் கையாண்டதன் காரணம் என்ன? வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அதைச் சொன்னாரா? இல்லை அதற்கு அப்பால் செல்லும் ஆழமான சிந்தனை ஏதும் அவரிடமிருந்ததா? காந்தி டுடே இதழில் நான் எழுத ஆரம்பித்திருக்கும் நீள்கட்டுரை: காந்தியும் சனாதனமும் – காந்தி டுடே தொடர்புடைய …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25923
பாரதி மகாகவியே
என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான். சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22092
மகாகவி விவாதம்
இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22089
பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
ஜெ, ’பாரதியின் இறையணுக்கம் மிக முக்கியமான கூறு.வெறும் தோத்திரம் செய்யுள் என்று புறந்தள்ள முடியாத தீவிரத்தன்மை கொண்டவை அவரது ஆன்மீகப் பாடல்கள்’என்னும் முத்தையாவின் கருத்தை நானும் உடன்படுகிறேன்.விநாயகர் நான்மணிமாலை அதற்கு ஏற்றதொரு உதாரணம்.இலக்கிய,தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி. இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் பாரதியின் உரைநடையும் கூடக் கவித்துவம் பெற்றுவிடுவதைக் காண முடிகிறது.சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21550
பாரதி விவாதம் 4 – தாகூர்
ஜெ, குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை. இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது; பிறகு ஆங்கிலத்தில் இருந்து அவை மற்ற மொழிகளுக்குச் சென்றன. தாகூரின் ஆன்மிகப் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒருவித நெகிழ்ச்சி அம்சம் தூக்கலாக இருக்கிறது – அது வைணவ பக்தி இலக்கிய இயல்பு. ஆனால் பாரதிஅடிப்படையில் சாக்தன், எனவே அவனது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21515
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதியின் இலக்கிய இடம் ஜெ. சொல்லியிருக்கும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.அவற்றை நான் மறுக்கிறேன்.இத்துடன், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் பாரதியை “வழிச்சிந்தனையாளர்” என்று குறிப்பிட்டது, அவருடன் ஈவேராவையும் இன்னொரு வழிச்சிந்தனையாளர் என்று இணை வைத்தது – இரண்டையும் மறுக்கிறேன். இந்தத் திரியில் பேசுபவர்களில் எத்தனை பேர் பாரதியார் கவிதைள் புத்தகத்தையும், சில உதிரிக் கட்டுரைகளையும் தாண்டி, சீனி.விசுவநாதன் பதிப்பித்த “காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள்” தொகுதிகளைப்பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. (ஜெ, நீங்கள் 1995ல் அந்தமதிப்புரை எழுதும் போது இந்தத் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21489


