நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள் நூலில் உள்ள கதைகள் சிலவற்றை மொழியாக்கம்செய்திருந்தாள். ஒரு மூன்றாம்வகுப்பு மாணவியின் மொழி அல்ல அது. சரளமான ஆங்கிலம். அதேசமயம் ஒருவகை இந்திய ஆங்கிலமும் கூட எஸ்.ராமகிருஷ்ணனிடம் கதைகளைக் காட்டலாம் என்று நான் சொன்னேன். அவளுடைய பள்ளியிலும் காட்டலாம் என்றேன். பள்ளியில் உடனே அவற்றை …
Tag Archive: எஸ்.ராமகிருஷ்ணன்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34870
வசைகளின் நடுவே…
வணக்கம் சார், தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன். நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31835
இரு காந்திகள்
நம் சமூகத்தில் எப்போதும் காந்தி மீதான ஒரு விமர்சனமும் கசப்பும் இருந்துகொண்டிருக்கிறது. முதன்மையாக அது அரசியல்காரணங்களுக்காக உருவாக்கப்படுகிறது. காந்தியை அறிந்துகொள்ள முயலாமல் நிராகரிப்பது அவ்வரசியலின் அடிப்படைத்தேவைகளில் ஒன்று. இடதுசாரிகள் வலதுசாரிகள் பிரிவினைவாதிகள் சாதியவாதிகள் என அவர்கள் பலதரப்பினர். காந்தி இந்திய அரசமைப்பின் அடையாளமாக, பாடநூல்களில் சம்பிரதாயமாக அறிமுகமாகிறவராக இருப்பதனால் இளையதலைமுறை அவரை நிராகரிப்பதை ஒருவகை அமைப்புமீறலாக எடுத்துக்கொள்கிறது. ஒரு முதிரா வயதில் காந்தியை எதிர்த்துப்பேசுவது சிகரெட் பிடிப்பது, தண்ணியடிப்பது போல ஒரு இளமையின் மீறலாக எண்ணப்படுகிறது. ஆனால் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31664
கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கியவிருதுகள் சென்ற ஜூன் 16 அன்று வழங்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றார். இலக்கியத்தோட்டம் விருதுகளும் அன்று வழங்கப்பட்டன விருதுகள் 1. இயல் விருது – எஸ்.ராமகிருஷ்ணன் 2. புனைவு – யுவன் சந்திரசேகர் – நாவல் – ’பயணக் கதை’ 3. அபுனைவு – பெருமாள்முருகன் – ‘கெட்டவார்த்தை பேசுவோம்’ 4. கவிதை – தேவதச்சன் – ’இரண்டு சூரியன்’ 5. கவிதை -அனார் – …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28277
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=24052
ஒரு புது முயற்சி
சென்ற டிசம்பரில் எஸ் ராமகிருஷ்ணன் சென்னையில் ஆற்றிய உலக இலக்கிய அறிமுகப்பேருரைகளை மிக விரும்பி தொடர்ந்து நண்பர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழிலக்கியத்தில் முக்கியமான ஒரு தொடக்கம் இது என்றார்கள் அந்த உரைகள் டிவிடி களாக வெளியிடப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருக்கிறது. முக்கியமான முன்னோடி முயற்சி தொடர்புடைய பதிவுகள்சைதன்யா என்னும் எழுத்தாளர்வசைகளின் நடுவே…இரு காந்திகள்கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருதுபாரதி விவாதம் 2 – மகாகவிஇருவகை எழுத்துஎஸ்ராவுக்கு கண்ணதாசன் விருதுஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருதுநாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்கோலத்தில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23790
பாரதி விவாதம் 2 – மகாகவி
ஜெ, பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன. காலமா வனத்தில் அண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்ற பெயர் கொண்டு என்ற கவிதையில் உள்ள உருவகம் ஓர் உதாரணம். “பல்வகை மாண்பினிடையே -கொஞ்சம் பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு” என்று ’கண்ணன் என் தந்தை’யில் பாடும்போது தந்தை-மகன் உறவினிலான உளவியல் சிக்கலை அழகாகப் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21493
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=20571
எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது
கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்படுகிறது. ரூ 50000மும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது. 26.06.2011 ஞாயிறு அன்று விழா கோவையில் நிகழ்கிறது. ஏற்கனவே நாஞ்சில்நாடன் இவ்விருதைப் பெற்றிருக்கிறார் எஸ்.ராவுக்கு வாழ்த்துக்கள் கண்ணதாசன் விருதுகள் 2010 தொடர்புடைய பதிவுகள்எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருதுநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருதுஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருதுசைதன்யா என்னும் எழுத்தாளர்வசைகளின் நடுவே…இரு காந்திகள்கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருதுஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருதுஒரு புது முயற்சிபாரதி விவாதம் 2 – மகாகவிஇருவகை எழுத்துஎன் கவிதைகள்யானைடாக்டர்-படங்கள்யானைடாக்டர் நினைவுகூரல் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16861
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது
தமிழின் முக்கியமான படைப்பிலக்கியவாதியான எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு கல்கத்தாவில் இருந்து அளிக்கப்படும் தாகூர் இலக்கியவிருது வழங்கப்பட்டுள்ளது. கொரிய நிறுவனமான சாம்சங் சாகித்ய அக்காதமியுடன் இணைந்து இந்த விருதை 2009ல் உருவாக்கியுள்ளது. ஒருவருடம் இந்தியாவின் இருபத்துநான்கு மொழிகளில் எட்டுமொழிகளின் எட்டு முக்கியமான படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக தமிழுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது 91 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டுப்பத்திரமும் தாகூர் உருவச்சிலையும் அடங்கியது இந்த விருது.எஸ். ராமகிருஷ்ணன் விருது பெறுவது தமிழ் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16708


