பகுத்தறிவு ஒரு கடிதம்

ஆசிரியருக்கு, வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன். இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35549

கல்வியும் பெற்றோரும்

அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு, நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை – வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36512

கவிஞர்களின் முன் விமர்சனம்

அன்புள்ள ஜெயமோகன், சமீபத்தில் தேவதேவன் மற்றும் யுவன் கவிதையரங்கை நடத்தினீர்கள். எனக்கு இது தொடர்பாக நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டுமென்று ஒரு சந்தேகம். ஒரு படைப்பை எழுதிய எழுத்தாளனையோ கவிஞனையோ வைத்துக்கொண்டு அவரது படைப்பைப் பற்றிப் பேசலாமா. பொதுவாக ஒரு உண்மையான படைப்பாளியிடம் படைப்புக்கான கரு அல்லது தரிசனம் கிடைத்தவுடம் தன சமநிலை இழந்து Sub-Conscious Mind or may be Elevated Mindக்கு சென்று செயலாற்றுகிறான். இதை நீங்களே ஒரு முறை எழுதியிருந்தீர்கள். அந்தப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35627

இதிகாசங்கள் இன்னொரு பார்வை

மகாபாரதம் மற்றும் ராமாயணம் அதனில் உள்ள கதாபாத்திரங்கள் பற்றியும் வேறு ஒரு வித்தியாசமான இன்றைய வியாபார தளங்களுக்கேற்ப ஒரு பார்வை… http://devdutt.com/category/business-sutra-cnbc இந்த உரையாடலின் எழுத்து வடிவத்தை இந்தச் சுட்டியில் காணலாம் http://www.moneycontrol.com/news/show_transcripts.php?category=62 இப்படியெல்லாம் நம் இதிகாசங்களைப் பார்த்து வியாக்யானம் செய்ய முடியும் போல. எந்தக் காலகட்டத்திலும் நம் இதிகாசங்களின் செய்தி பயனளிக்கிறது என்பது இதுதானோ…. இதுவும் ஒரு சுவாரசியமான விளக்கம் தான். விஜயகிருஷ்ணன் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35543

பகத்சிங் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று என் நண்பர் ஒருவர், உங்களது தளத்தில் 2009 மே27 காந்தியின் துரோகம் என்ற கேள்விக்கான பதிலில் நீங்கள் பகத்சிங்கைப் பற்றி “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதைப் பாருங்கள் என்றும் சொன்னார். அதன்பேரில் அக்கட்டுரையை இன்று வாசிக்க நேர்ந்ததால் இத்தனை கால தாமதமாக இந்தக் கேள்வி. அக்கட்டுரையில் முரண்படுவதற்கு அநேகம் இருந்தாலும் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையிலும் நீங்கள் ஒரு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35586

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634

கலையில் அதிவன்முறை

மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் எழுகிறது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35624

காந்தியும் கம்யூனிசமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை . (என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35611

இணைவைத்தல்- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் எழுதிய ‘இணைவைத்தல்’ படித்தேன். இப்படியும் இருந்திருக்க முடியுமா என்ற ஆச்சரியம் தோன்றியது. பொதுவாய் உங்கள் எழுத்துகளை, முக்கியமாய் அசாதாரணத்தன்மை நிறைந்த கதைகளை விரும்பிப் படித்துவருகிறேன். மிக்க நன்றி -ஹேமா அன்புள்ள ஹேமா ஒரு விஷயம் கவனியுங்கள். பெரும்பாலான ஆழமான விஷயங்கள் ‘இப்படியும் இருக்குமா’ என்ற எண்ணத்தை உருவாக்கும்விதமாகவே உள்ளன. ஏனென்றால் நம் வாழ்க்கை பெரும்பாலும் மேலோட்டமான தளத்திலேயே நடந்துகொண்டிருக்கிறது ஜெ வணக்கம் ஜெயமோகன் அவர்களே…! “இணைவைத்தல்“ கட்டுரையை இன்று அதிகாலையில் வாசித்தேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35124

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும் ஒரு பாடலை எவ்வாறு புரிந்து கொள்வது என உங்கள் பேச்சு, என்னை கட்டிப் போட்டு விட்டது. பாடலின் உண்மைப் பொருளை உணராமல், செய்யுளை ஒரு சடங்கு போல நடத்திப்போகும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் இந்தப் பேச்சைக் கேட்க வேண்டும். மலர்களைப் பார்க்காமலே பொருள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35590

Older posts «

» Newer posts

Switch to our mobile site