கேணி சந்திப்பு

ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் இந்தமாதம் நான் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவதாக இருக்கிறேன். வரும் பிப்ரவரி 14 [இரண்டாவது ஞாயிறு] அன்று நிகழ்ச்சி. நேரம் மதியம் 3.30

“14 ஞாயிறு மதியம் சரியாக 3.30க்குநிகழ்ச்சியைத்தொடங்கி 6.30க்கு முடிப்போம். முதலில் உங்கள் பேச்சு, பின்னர் கலந்துரையாடல். பொதுவாக சர்ச்சைகள், அக்கப்போர்கள் முதலியவற்றை அனுமதிப்பதில்லை. இலக்கியம், சமூகம் சார்ந்து பேசவே பார்வையாளரை ஊக்குவிக்கிறோம்.  எந்தத்துறை பற்றியும் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் அவை தரம் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதை இதுவரை வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம்”

என்று அறிவிக்கிறார் ஞாநி.  வாசகர்களை வருக என வரவேற்கிறேன்

விலாசம்: 39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை

முந்தைய கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி – 5
அடுத்த கட்டுரைஅக்ரஹாரத்தில் கழுதை