அன்புள்ள ஜெ
கல்கியின் சமணம் பற்றிய என் கட்டுரை உங்கள் கவனத்துக்காக
அன்புடன்
நமதன்
அன்புள்ள நமதன்,
உங்கள் கட்டுரை வாசித்தேன்
சமணம் மற்றும் பௌத்தம் பற்றி மரபான ஒரு சைவ நோக்கு உள்ளது. அது சைவ பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டு மடங்கள் வழியாக நிலைநாட்டப்பட்டது. சைவமதம் சமண பௌத்த மதங்களுடன் விவாதித்துப் போட்டியிட்டு உருவானதாகையால் அந்த மனவிலக்கமும், எதிர்மறை நோக்கும் அதனிடம் இருந்தது.
சிவகாமியின் சபதத்தில் பௌத்த பிட்சு நாகநந்தி காமகுரோதமோகங்களின் குவியலாகவே வருகிறார் இல்லையா? கல்கி முன்வைப்பது சீனிவாச சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் தங்கள் நூலில் முன்வைத்த நோக்கையே. அது அன்று பிரபலமாக இருந்தது.
ஜெ


