<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எழுத்தாளர் ஜெயமோகன்</title>
	<atom:link href="http://www.jeyamohan.in/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.jeyamohan.in</link>
	<description>Writer Jeyamohan</description>
	<lastBuildDate>Sat, 18 May 2013 18:32:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=36619</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=36619#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 18:32:43 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=36619</guid>
		<description><![CDATA[அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பெற்றோரும் கல்வியும் கேள்வி-பதிலை படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றி பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவை படுகிறது; அதற்காக தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. என்னை பொறுத்த மட்டில் கல்வியை தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=36619">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்</p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=36512">பெற்றோரும் கல்வியும்</a> கேள்வி-பதிலை படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றி பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவை படுகிறது; அதற்காக தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை.</p>
<p>என்னை பொறுத்த மட்டில் கல்வியை தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். தன்னிறைவுக்கான கல்வி வேலையையும் பணத்தை கொடுத்து அதன் மூலம் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய உதவுகிறது. காலம் காலமாக தன்னிறைவு அடையாமல் போராடி வந்த நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்த கல்வி வாய்ப்புகளால் 1st generation கல்வி கற்றோர் வளர்ந்துள்ளனர். இவர்குளுடைய பார்வையில் கல்வி பணம் சம்பாதிக்க உதவும் ஒரு அந்தஸ்தை தரும் கருவி மட்டுமே. சமூக பார்வை, மனிதம், கலை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை ( அவர்களின் வாழ்வியல் போராட்டம் அவர்களை ஒரு survival machine ஆகா மாற்றி உள்ளது). இந்த survival உணர்வுகள் ஒரு வகையில் அவர்களின் மரபணுக்களில் ஊறி விட்டதுபோல் தம் பிள்ளைகளையும் பணத்தை குறிக்கோளாய் கொள்ளும்  பொருளாதார அடிமைகளாக மாற்றுகின்றனர். இதனால் வாழ்கையின் பயன் பணம் மட்டுமே என்ற தவறான புரிதல் வந்துவிடாதா?</p>
<p>லட்சத்தில் பெரும்பாலோர் உழைக்க பிறந்தவர்கள் மட்டுமே என்பது ஏற்புடையதல்ல. ஒரு முறை ஒரு அதிகாரியை காண அவர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்; அறையில் அவர் இல்லை; அவரின் 6 வயது மகன் தாளில் வரைந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வந்த அதிகாரி &#8216;என் இப்படி தேவையில்லாமல் paper ல கிறுக்கிட்டு இருக்க&#8230; அதுக்கு பதில் 2 maths problem போடலாம்ல&#8217; என்று கண்டித்தார். இதுவே நிதர்சன உண்மை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்பம்சமும் திறமையும் உண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் அதை கண்டறிய முயல்வதில்லை. சிறு வயதிலிருந்தே பொருளாதரத்துவ கல்வி முறைகளை  திணித்து வருவதின் விளைவே இன்றைய இளைஞர்களின் தட்டையான சமூக புரிதல். தவறு கல்வி முறையில் இல்லை; அவை தன்னிறைவை அடைய விரும்பும் 1st generationகு ஏற்றதே. ஆனால் ஒரு பரம்பரை அடுத்த நிலைக்கு வளர ஒரு முழுமையான மனிதர்களாக ஒவ்வொருவரும் மலர பெற்றோர்களின் கல்வியின் மீதான பார்வை மாற வேண்டும். குறைந்தது தன்னிறைவை அடைந்த பெற்றோர்களாவது இதை செய்யவேண்டும்.</p>
<p>அன்புடன்<br />
அருண்</p>
<p>அன்புள்ள அருண்</p>
<p>முந்தைய பதில்களிலும் உரைகளிலும் நான் உண்மையான கல்வியைப்பற்றி நீங்கள் இக்கடிதத்தில் சொல்லியிருப்பனவற்றை இன்னும் விரிவாக பேசியிருப்பதை நேரம் இருந்தால் வாசிக்கலாம். குறைந்தது முப்பது கட்டுரைகள் இந்தத் தளத்தில் உள்ளன. சென்ற கட்டுரையிலேயே இணைப்புகள் இருந்தன.</p>
<p>ஆளுமை உருவாக்கக் கல்வியே உண்மையான கல்வி என்பதிலும் அதுவே ஒரு தேசத்தை அறிவார்ந்த அடித்தளம் கொண்டதாக ஆக்குமென்பதிலும் எந்தவிதமான ஐயமும் இல்லை.</p>
<p>ஆனால் சிக்கல் அந்த உண்மையான கல்வியை ஆர்வமில்லாதவர்களுக்கு எவரும் மேலிருந்து செலுத்தமுடியாதென்பதே. அந்தக்கல்விக்கான நாட்டமும் அதற்கான மனநிலையும் சமூகத்தில் இருக்கவேண்டும். அது இல்லாதநிலையில் கல்விமுறைச்சீர்திருத்தத்தால் எந்த பயனும் இல்லை. அதுதான் இந்தியாவில் திரும்பத்திரும்ப நிரூபணமாகிறது.</p>
<p>இந்தியாவில் பல கல்விநிறுவனங்கள் உண்மையான ஆர்வமும் திறமையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விதவிதமான தேர்வு முறைகளை முன்வைக்கின்றன. அந்தக் கல்விநிறுவனங்கள் அளிக்கும் கல்விக்கு வணிக மதிப்பு உருவாகுமென்றால் உடனே அந்தத் தேர்வுமுறையை உக்கிரமான மனப்பாடப் பயிற்சிமூலம் வென்று கைப்பற்றுகிறார்கள். அதற்குள் சென்றமர்ந்து மனப்பாடம் செய்து 99.9 சத மதிப்பெண் வென்று மண்ணாந்தைகளாக வெளியேறுகிறார்கள். </p>
<p>இந்தியாபோன்ற பிரம்மாண்டமான மக்கள்தொகை கொண்ட தேசத்தில், தனிப்பட்ட நேர்மை மிகமிகக் குறைவாக இருக்கும் தேசத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர்களின் தனிப்பட்ட முடிவுக்கு விட முடியாது. இங்கே நேர்மையற்றவர் என்ற பெயரை எவரும் ஓர் அவமதிப்பாக நினைப்பதில்லை. குறிப்பாகப் பேராசிரியர்கள். ஆகவே புறவயமான தேர்வுமுறைகளை, அதற்கான அமைப்புகளை உருவாகவேண்டியிருக்கிறது. அந்த முறைகள் இம்மாதிரி ‘பயிற்சி’ பெற்றவர்களால் கைப்பற்றப்பட்டு அவற்றின் நோக்கம் அழிகிறது.</p>
<p>இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே உண்மையான பண்பாட்டு மாற்றம் ஏற்படாமல் கல்விச்சீர்திருத்தமெல்லாம் நடக்கக்கூடிய விஷயமே அல்ல. அதாவது கல்விமுறை மாற்றம் மூலம் பண்பாட்டுமாற்றம் வராது, பண்பாட்டுமாற்றம் மூலம் மட்டுமே கல்விமுறை மாற்றம் வரமுடியும்.  </p>
<p>அந்தப்பண்பாட்டுமாற்றம் எப்படி வரும்? நாம் பொருளியல்தன்னிறைவை ஓரளவேனும் அடையும்போது பொருளியல்தகுதி பெறுவதற்காக மட்டுமே கற்கும் மனநிலைமீது சலிப்பு உருவாகலாம். அதற்கும் அப்பால் தேடிச்செல்லும் ஒரு சிறு குழுவினர் உருவாகலாம். அவர்களின் வெற்றி முன்னுதாரணமாக அமையும்போது படிப்படியாக அந்த திசை நோக்கிச்செல்பவர்கள் அதிகரிக்கலாம்.</p>
<p>அதுவரை இன்றுபோல சோற்றுக்கல்விதான் இயல்பான பொதுவழியாக இருக்கமுடியும். அதுதான் நடைமுறைச்சாத்தியம்</p>
<p>ஜெ</p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=26080"> வயதடைதல் </a><br />
<a href="http://www.jeyamohan.in/?p=491"><br />
கொட்டடிகள் வேதபாடசாலைகள் </a></p>
<p><a href="http://www.jeyamohan.in/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF">கல்வி குறித்த கட்டுரைகள் இணைப்பு </a><br />
<a href="http://www.jeyamohan.in/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF"><br />
சமச்சீர்க்கல்வி-கட்டுரைகள் இணைப்பு </a></p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=4898">கல்வி புராணம் </a></p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=488">தேர்வு<br />
</a><br />
<a href="http://www.jeyamohan.in/?p=13982">தேர்வுசெய்யப்பட்ட சிலர் </a><br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய பதிவுகள் இல்லை</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=36619</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடிதங்கள்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=35641</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=35641#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 18:30:44 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினைகள்]]></category>
		<category><![CDATA[கம்பன் நிகழாத களங்கள்]]></category>
		<category><![CDATA[வாசிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=35641</guid>
		<description><![CDATA[ஜெ, வணக்கம். நான் என்ன வாசித்தாலும் எல்லாம் மறந்து விடுகிறது. உண்மையிலேயே மறந்து விடுகிறதா இல்லை மறந்து விடுவது போல தோணுகிறதா என்று தெரியவில்லை. அதுபோல சில வரிகளை வாசித்தவுடன் மீண்டும் திரும்ப திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. இது கவனக் குறைவினாலா இல்லை வாசிப்பதில் அனுபவம் இல்லாமையைக் காட்டுகிறதா? இது போன்று நீங்கள் யாரிடமாவது கண்டு இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாசகர் யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லை ஒருவேளை இது எனக்கு மட்டும் உள்ள குறைபாடா? &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=35641">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>ஜெ,<br />
வணக்கம். நான் என்ன வாசித்தாலும் எல்லாம் மறந்து விடுகிறது. உண்மையிலேயே மறந்து விடுகிறதா இல்லை மறந்து விடுவது போல தோணுகிறதா என்று தெரியவில்லை. அதுபோல சில வரிகளை வாசித்தவுடன் மீண்டும் திரும்ப திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. இது கவனக் குறைவினாலா இல்லை வாசிப்பதில் அனுபவம் இல்லாமையைக் காட்டுகிறதா? இது போன்று நீங்கள் யாரிடமாவது கண்டு இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாசகர் யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லை ஒருவேளை இது எனக்கு மட்டும் உள்ள குறைபாடா? எனது பத்து வயது மகன் தினமும் 30 நிமிடங்கள் தவறாது தடங்கலின்றி வாசிக்கிறான் பொறாமையாக உள்ளது. ஒருபக்கம் வெட்காமாகவும் உள்ளது. ஆம் ஒத்துக்கொள்கிறேன்&#8230;இது ஒன்றாம் வகுப்பு கேள்விதான்&#8230;.</p>
<p>அன்புடன்<br />
அருள்</p>
<p>அன்புள்ள அருள்</p>
<p>சின்னவினாவாக இருக்கலாம். ஆனால் இதை என்னிடம் பலர் கேட்கிறார்கள். இதற்கான பதிலையும் நான் திருப்பித்திருப்பிச் சொல்கிறேன்.</p>
<p>தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாசித்த விஷயங்களைப்பற்றி யோசிக்காமலும் விவாதிக்காமலும் இருந்தால் அவை விரைவிலேயே மறந்துபோகும். நமக்குள் இன்னொருவரின் சொற்களும் சிந்தனைகளும் ஒருபோதும் எஞ்சாது. சாப்பிட்ட உணவு உடலில் தங்காதது போலத்தான். அவை நமது சொந்தச்சிந்தனைகளாக மாறினால் மட்டுமே நம்மிடம் அவை தங்கும். நேரடியான வரிகளாக எஞ்சக்கூடியவைகூட நமது சொந்த வார்த்தைகளாக மாறிவிட்டிருக்கும். உண்மையிலேயே சிந்திக்கக்கூடிய ஒருவர் ஒரு மேற்கோளைச் சொல்லும்போது அதில் அவருக்கான நுட்பமான மாறுதல் ஒன்று நிகழ்ந்திருப்பதைக் காணலாம்</p>
<p>வாசித்தவற்றைப்பற்றி யோசியுங்கள். யோசிப்பதற்கு பலவகையான பாவனைகள் உள்ளன. ஒரு மேடையில் அவற்றைப் பேசுவதுபோல, ஒரு எதிர்த் தரப்பிடம் விவாதிப்பது போல, ஒரு நண்பனுக்கு விளக்குவதுபோலக் கற்பனைசெய்துகொண்டு யோசிக்கலாம். வாசித்தவற்றை விவாதிக்கமுடிந்தால் மிக நல்லது. சொந்தச்சொற்களில் எழுதிவைக்கமுடிந்தால் மிகமிக நல்லது</p>
<p>ஜெ</p>
<p>ஆசிரியருக்கு ,<br />
என்ன ஆயிற்று உங்களுக்கு ,<br />
<a href="http://www.jeyamohan.in/?p=35003">கம்பன் நிகழாத களங்கள்</a><br />
&#8220;ஒரு பூவின் பொறியியல்கட்டுமானத்தை எந்த மகத்தான கட்டிடத்திலும் பார்க்கமுடியாது என்பார் லாரிபேக்கர்..&#8221;<br />
&#8220;அது உள்ளே நிகழும் ஒரு குறியீட்டுச்சரடு. மொழியைப் பிரக்ஞையில் இருந்து மேலும் ஆழத்துக்குக் கொண்டுசென்று கனவுக்குள் நிலைநிறுத்துவதன் விளைவே இலக்கியம்&#8221;<br />
&#8220;ஒரு காலகட்டத்தின் திறப்புத்துளை என்று சொல்லலாம். அப்படியென்றால் அவன் வழியாக நிகழ்வது அவனைவிடப்பெரிய ஒன்றுதான். அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்.&#8221;<br />
கனி<br />
&#8220;பேரழகும் பாவமும். தாய்மையும் பாவமும். களங்கமற்ற குழந்தைமையும் பாவமும். கைமாறப்படும் பாவம். அழியாமல் தலைமுறைகளில் நீடிக்கும் பேரழகு கொண்ட புனிதபாவம்&#8221;</p>
<p>போன்ற வரிகள் உண்மையில் அதிரச் செய்கின்றன , ஏதோ பேயின் பிடியில் இருக்கிறீர்கள் அல்லது கடவுளின். புனைவுக்கும் அபுனைவுக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது எல்லைக் கோட்டை உங்கள் தொடர்ச்சியான எழுத்துகளின்மூலம் இல்லாமல் செய்து விட்டீர்கள். கட்டுரைகளிலேயே கவித்துவமும் புனைவும் உங்கள் பிற புனைவுகளுக்கு ஈடாகப் பிறக்கிறது . இவ்வாளவு எழுதியும் , இவ்வளவு படிமங்களைக் கொட்டியும் , உவமைகளையும் குறியீடுகளையும் அள்ளி இறைத்தும் அவை அவ்வளவையும் படித்தும் ஏனோ சொற்றொடராக ஏதும் நினைவில் மிஞ்சுவதில்லை. நமது ஆலப் புழை சந்திப்பிற்குப் பின் திரும்பும் பொழுது அந்நகரின் அழகிய கடற்கரைக்குச் சென்றிருந்தோம் , அலைகளின் விளிம்பில் நினைத்தேன் எவ்வளவு நதிகள் , குளங்கள் , கடல்கள் எனப் பார்த்திருப்போம் எந்த அலையும் நினைவில் இல்லை. அலைகள் நம்மை நோக்கிக் கடலை வாரிக் கொட்டிக் கொண்டே இருக்கிறது , ஒரு அலை வந்து பதித்த தடத்தை மறு அலை வந்து அழிக்கிறது , நமது நினைவில் இருந்தும். அல்லது நாம் பயணிக்க பயணிக்க ,நிகழ்வுகள் நடக்க நடக்க , புது அனுபவங்கள் நமதாகிறது அது பழைய அனுபவங்களை அணைத்துத் தனதாகிக் கொள்கிறது. இதுதான் உங்கள் எழுத்தைத் தொடர்ந்து படிக்கும் எனக்கும் நிகழ்கிறது .</p>
<p>ஒன்றை உணர்கிறேன், இது போன்ற வாக்கியங்களால் நீங்கள் சற்று அன்னியமாகிறீர்கள், நமக்கிடையே சற்று இடைவெளி விழுகிறது .</p>
<p>கிருஷ்ணன்.<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.jeyamohan.in/?p=36064' title='வாசிப்பின் வாசலில்'>வாசிப்பின் வாசலில்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=1081' title='சதுரங்க ஆட்டத்தில்'>சதுரங்க ஆட்டத்தில்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=733' title='ஓர் அமரகாதல்'>ஓர் அமரகாதல்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=27548' title='எழுத்து வாசிப்பு எழுத்தாளன்'>எழுத்து வாசிப்பு எழுத்தாளன்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=26896' title='கனவும் வாசிப்பும்'>கனவும் வாசிப்பும்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=26371' title='வாசலில்&#8230;'>வாசலில்&#8230;</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=25670' title='அடுத்தகட்ட வாசிப்பு'>அடுத்தகட்ட வாசிப்பு</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=25477' title='வாசிப்பும் சமநிலையும்'>வாசிப்பும் சமநிலையும்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=22358' title='காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்'>காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=22348' title='விவாதத்தின் நெறிமுறைகள்'>விவாதத்தின் நெறிமுறைகள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=21370' title='எப்படி வாசிப்பது?'>எப்படி வாசிப்பது?</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=19545' title='உங்கள் கதைகள்-கடிதம்'>உங்கள் கதைகள்-கடிதம்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=19368' title='ஒரு கவிதைச்சாதனை'>ஒரு கவிதைச்சாதனை</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=17755' title='புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?'>புனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=17087' title='பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்'>பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=16865' title='சுஜாதா'>சுஜாதா</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=16837' title='இரு கடிதங்கள்'>இரு கடிதங்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=16821' title='காடு, களம்-கடிதங்கள்'>காடு, களம்-கடிதங்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=16796' title='டியூலிப் மலர்கள்'>டியூலிப் மலர்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=16737' title='கதைகள், கடிதங்கள்'>கதைகள், கடிதங்கள்</a></li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=35641</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாழ்க்கைமரம்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=36636</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=36636#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 18:30:44 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=36636</guid>
		<description><![CDATA[இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப்பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப்பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதை குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களை கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார் டெரன்ஸ் மாலிக் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=36636">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>இரண்டுவாரங்களுக்கு முன்பு அஜிதன் என்னிடம் நான் ஒரு படத்தைப்பார்த்தாகவேண்டுமென்று சொன்னான். அவனுடைய நோக்கில் அவன் பார்த்த படங்களில் அதுவே தலைசிறந்தது. நான் அவனை நான் இதுவரை சந்தித்த மிக நுண்ணுணர்வுள்ள மனிதர்களில் ஒருவனாக நினைப்பவன். ஆகவே அந்தப்படத்தைப்பார்க்க முடிவுசெய்தேன். அஜிதன் அதை குறுந்தகடாக பெங்களூரில் இருந்து கொண்டுவந்திருந்தான். ‘அப்பா, நான் படத்தைப்பத்தி ஒண்ணுமே பேசலை. சிலசமயம் மட்டும்தான் ஒரு கலை அதோட சரியான சாத்தியங்களை கண்டுபிடிக்கும்னு நினைக்கிறேன். இது அந்தமாதிரி ஒரு படைப்பு’ என்றார்</p>
<p>டெரன்ஸ் மாலிக்  [Terrence Malick] எடுத்த வாழ்க்கைமரம் [The Tree of Life ] தொலைக்காட்சித்திரையில் ஓட ஆரம்பித்தது. சிலநிமிடங்களில் நான் அதுவரை கொண்டிருந்த திரை]ப்படரசனைப்பயிற்சி அதைப்பார்ப்பதற்கு போதுமானதல்ல என்ற உணர்வு உருவாகியது. திரைமொழியின் வழக்கமான இலக்கணம் எதுவும் செல்லுபடியாகாத ஒரு கதைசொல்லல். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சினிமா என்பது இன்றுவரை காட்சிகளின் [சீன்] தொடர்தான். இந்தப்படம் காட்சித்துளிகளின் [ஷாட்] தொடர்.</p>
<p><img src="http://www.movieposterdb.com/posters/11_03/2011/478304/l_478304_4ee028bd.jpg" alt="" /></p>
<p>மேலும் சிலநிமிடங்களில் அந்தப்படத்தைப்பார்ப்பதற்கான பயிற்சியை அந்தப்படமே அளித்தது. என்னை ஆழ உள்ளிழுத்துக்கொண்டது. நான் பெரும்பாலும் எந்த சினிமாவையும் அணுகிரசிப்பவனல்ல. சினிமா என்பது ஒரு கலைவடிவம் என்ற வகையிலேயே மகத்தானவற்றைச் சொல்ல சாத்தியமற்றது, முழுமையை அடைய முடியாதது என்ற எண்ணம் என்னிடம் இருபதாண்டுக்காலமாக இருந்துகொண்டிருக்கிறது. அது கண்முன் காட்டியாகவேண்டுமென்ற கட்டாயமே அதன் எல்லைகளைத் தீர்மானித்துவிடுகிறது. மிகச்சில திரைப்படங்களே அந்த எண்ணத்தை ஊடுருவி என்னை வந்து தொட்டிருக்கின்றன. பர்க்மானின் ஏழாவடு முத்திரை [ Seventh seal ],தர்கோவ்ஸ்கியின் பலி [sacrifice] போல. இது அந்த வரிசையில் அமைந்த படம். என் வரையில் அப்படங்களின் தொடர்ச்சியும்கூட.</p>
<p><iframe src="http://www.dailymotion.com/embed/video/xiw2xt" width="765" height="430" frameborder="0"></iframe></p>
<p>ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படம் என்னை வெளியே தள்ள ஆரம்பித்தது. ஆச்சரியமாக இருந்தது. என்னால் அந்த விலகலை புரிந்துகொள்ளவே முடியவில்லை.காட்சிகள் எனக்கு பொருள்தரவில்லை. ஒருகட்டத்தில் நான் வெளியே வேறெங்கோ இருந்தேன். என் மகள் கண்கள் மின்ன அதில் மூழ்கியிருந்தாள். அஜிதன் பத்தாவது முறையாக அதற்குள் இருந்தான். நான் அசைந்து ‘நான் மேலே செல்கிறேன்’ என்றேன். அஜிதன் ஏமாற்றமடைந்தான். கண்களில் அடிபட்ட பாவனை</p>
<p>நான் ஒருமணி நேரம் கழித்து கீழே வந்தேன். ‘அஜி இவ்வளவுநேரம் உன்னை திட்டினான். நீ அவனுக்குப்பிடிச்ச படத்தை வேணும்னே நிராகரிக்கிறதா சொல்றான்’ என்றாள் அருண்மொழி. நான் அஜிதனிடம் ‘நான் நிராகரிக்கலை அஜி. படம் என்னை வெளியே தள்ளிச்சு. ஏன்னு தெரியலை&#8230;.மேலே போனபிறகுதான் தெரிஞ்சுது. அது ஆழமா விசாலாட்சியம்மாவை ஞாபகப்படுத்துது&#8230;.ஐம்பது வயசுக்குமேலே, இவ்வளவுதான்ன்னு தெரிஞ்ச வயசிலே இந்தப்படம் தர்ர உணர்ச்சிகளே வேற’ என்றேன். அவன் புரிந்துகொண்டான்.</p>
<p>பின்னர் நான் மலையாளப்பட வேலைகளுக்காக மும்பை சென்றேன். மும்பையில் இந்தப்படத்தை திரும்ப பார்க்க நேர்ந்தது. அந்த நட்சத்திரவிடுதியில் பாதி அறைச்சுவரை நிறைக்கும் மிகப்பெரிய தொலைக்காட்சி. மிகச்சிறந்த ஓசையமைப்பு. நான் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் அந்தப்படத்தை போட்டேன். அப்போது யானை துதிக்கையால் அள்ளி இழுத்து எடுத்துக்கொள்வதைப்போல அந்தப்படம் என்னை ஆட்கொண்டது. பின்னிரவில் படத்தை முடித்தேன். பால்கனியில் நின்றுகொண்டு பால்வழிபோல ஒளிரும் மாநகரை பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் வந்து அந்தப்படத்தை இன்னொரு முறை பார்த்தேன். ஆழ்ந்த பெருமூச்சுடன் விடியலில் சிவந்த வானத்தை வெளியே சென்று பார்த்தேன். ஆம், இதோ இங்கிருக்கிறேன். இங்கே. எதுவும் இல்லாமலாவதில்லை, இடம்மாறுகின்றன, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன்.</p>
<p>வாழ்க்கைமரம் ஒரு கதை அல்ல. அது ஒரு சில தன்னுணர்வுகளை ஊடுபாவாக பின்னி உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப்பரப்பு. அதை ஒரு கதையாகச் சுருக்கிச் சொல்வதோ , தருணங்களை விவரிப்பதோ அதை சிதைப்பதற்குச் சமம்.  அன்னை ஒருத்திக்கு மகனின் இறப்புச்செய்தி வருமிடத்தில் ஆரம்பிக்கிறது படம். மிக இயல்பான தொடக்கம். படம் எழுப்பும் எல்லா வினாக்களும் அப்படிப்பட்ட மரணத்தின் தருணங்களிலிருந்தே முளைக்க முடியும். அறுபதுகளில் நிகழ்கிறது அது. அந்நிகழ்ச்சியை இன்று நினைவுகூரும் மூத்தவனின் நினைவுகள் அல்லது தன்னுரைக்கோவை வழியாக படம் முன்னகர்கிறது.</p>
<p>பின்னிப்பின்னிச்செல்லும் இந்தப்படத்தின் சரடுகள் மூன்று. ஒன்று பிரபஞ்சவியல். இந்தப்பிரபஞ்சம் இதிலுள்ள விண்மீன்கள் கோள்கள் உயிர்கள் புழுப்பூச்சிகள் பிறந்திறந்து சாகும் முடிவிலா நிகழ்வின் பின்னணியில் அனைத்தும் முன்வைக்கப்படுகிறன. காலம் என்று நாம் உண்மையில் எதைச்சொல்கிறோம் என்ற துணுக்குறலை உருவாக்குகிறது டெரென்ஸ் மாலிக் அந்த நிகழ்வுப் பெருக்கெடுப்ப்பை காட்சிக்கோவைகளாகக் காட்டும் விதம். காலத்தின் மடியில் நிகழ்கின்றன அனைத்தும்.</p>
<p>இன்னொரு சரடு உயிர்த்தொடர்ச்சி. அன்னையும் தந்தையுமாக வேடமிட்டு நின்று இப்பிரபஞ்சம் கொள்ளும் லீலை. அதனூடாக உருவாக்கப்படும் மானுடவாழ்க்கையின் நாடகம். அன்னையை கருணை [grace)] என்றும் தந்தையை இயற்கை [Nature] என்றும் மூத்தமகன் உணர்கிறான். என் வரையில் நான் இன்னொரு உருவகத்தையே இளமையில் அடைந்திருக்கிறேன். இயற்கை என்பது அன்னை. இச்சை என்பது ஆண்மை. சக்தியும் சிவமும். இயற்கை கருணையுடன் உணவூட்டுவது. இச்சை அதன்மேல் படைப்பாகச் செயல்படுகிறது. இந்த திரைப்படைப்பின் தரிசனம் எனக்கு இன்னொரு திறப்பாகவே இருந்தது.  இயற்கை மாற்றமில்லா விதிகள் கொண்ட கறாரான பேணும் சக்தி. அதன் மீது பரவியுள்ள கருணையே வாழ்க்கையை உருவாக்கும் விசை என்கிறது இப்படம்.</p>
<p>மூன்றாவது சரடு காமம். காமம் என்பது ஓர் உயிர் தன்னை இங்கே உணரும் விதம். தன்னை இங்கே நிறுத்திக்கொள்ளும் விழைவு. தன்னை எஞ்சச்செய்துவிட்டு போகும் முனைப்பு. அது தன்னுணர்வாக  அகங்காரமாக தன்னை பெருக்கிக்கொள்கிறது. சொல்லிச்செல்லும் ஜாக் காமம் மூலம் உணரும் தன்னுணர்வும் அதை தன் தந்தைக்கும் தாய்க்குமிடையேயான ஊசலாட்டமாக அவன் அறியும் அலைக்கழிப்பும் இந்த படத்தின் முக்கியமான பகுதி.</p>
<p>காலத்தின் முடிவிலா வெளியில் உயிர்க்குலங்கள் இதை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. இயற்கையும் கருணையும் ,. இருத்தலும் மரணமும் என ஒரு இருமையைக் கட்டமைத்து ஆடிமுடித்து மீண்டும் ஆட வெளியே சென்று காத்திருக்கின்றன. படத்தின் இறுதியில் ஜாக் அவனுடைய இளமையைப்பின் தொடர்ந்து செல்லும் பயணம். அங்கே அவ்ன் தம்பியையும் அன்னையையும் சந்திக்கும் புள்ளி. திரைப்படம் கனவுக்கு மட்டுமே உரிய மகத்தான தர்க்கத்தை அடையும் இடம் அது.     </p>
<p>கடலில் ஒரு சிறு குமிழிக்கொப்பளிப்பாக எழும் வாழ்க்கை கடலாக மாறி முடியும் சித்திரத்தை அளிக்கும் அந்த முடிவு பெரும் கலைபப்டைப்புகள் உருவாக்கும் செயலின்மையை நம்முள் நிறைக்கக்கூடியது. பூமியை உண்ணுகிறது காலம். பிறப்பிறப்பின் பெருவெளி. அழிவதும் ஆவதும் ஒன்றேயாக நம் முன் விரியும் காட்சிகளின் கருஞ்சுழி. </p>
<p> ‘நத்தை உண்ணும் இலைபோல<br />
நெரிகிறது பிரபஞ்சம்.<br />
மௌனத்தில் இருப்பேன்,<br />
காலத்தைக் கேட்டவாறு’  </p>
<p>என்ற வரி என் நினைவில் எழுந்தது. இருபத்தேழாண்டுகளுக்கு முன் நான் எழுதியது. என் அம்மாவின் தற்கொலையை நான் சுமர்ந்தலைந்த நாட்களில். காலச்சுவடில் பல ஆண்டுகளுக்குப்பின் அது அச்சானது. அந்த வரியை நான் கண்முன் திரைப்படமாக கண்டுகொண்டிருந்தேன்.</p>
<p>வாழ்க்கை மரம் அனைவருக்குமான படம் அல்ல. படம் முழுக்க பின்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும் அது காட்சிகளைக் கோர்ப்பதில்லை. காட்சிகள் நாம் கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் ஒழுங்கால்தான் தொகுக்கப்பட்டாகவேண்டும். பெரும்பாலான திரைப்படங்கள் நம் முன் நிகழ்ந்துகொண்டிருக்கும், நாம் சாட்சிகளே ஒழிய பங்கேற்பாளர்கள் அல்ல. இது அப்படியல்ல. இது நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டிய படம். ஆகவே தமிழில் இப்படம் இன்றுவரை பேசப்படாததிலும் வியப்பில்லை. சினிமாவிலிருந்து சினிமாவால் தொடப்பட முடியாத ஒன்றை நோக்கிச் செல்லும் ஒரு பறந்தெழலுக்கான ஆற்றல் கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தான படம் இது. </p>
<p>படம் பார்த்து ஒரு வாரம் தாண்டியிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியை நான் நினைவுகூர்ந்தேன். ஒரு பெரிய கட்டிடம் தழல்விட்டு எரிந்து எழுகிறது. தீ அந்தக்கட்டிடத்தை தன் ஆயிரம் நாக்குகளால் நக்கி நசுக்கி உண்ணும் ஒலி மட்டும் நிறைந்திருக்கிறது. பின் துணுக்குறலுடன் அறிந்தேன், அது இந்தப்படத்தின் காட்சி அல்ல. தர்கோவ்ஸ்கியின் படத்திலுள்ள காட்சி. அது என் அகத்தில்  எங்கே இணைந்துகொண்டது? அதன் மூலம் நான் இந்தப்படத்துக்கு அளிக்கும் அர்த்தம் என்ன?</p>
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய பதிவுகள் இல்லை</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=36636</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடிதங்கள்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=35536</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=35536#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 18:30:21 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினைகள்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[காந்தி]]></category>
		<category><![CDATA[இளையராஜா]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[சத்தியசோதனை]]></category>
		<category><![CDATA[வெல்லண்ட் கால்வாய்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=35536</guid>
		<description><![CDATA[அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய &#8220;வெல்லண்ட் கால்வாய்&#8221; பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=35536">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஜெ,<br />
இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம்<br />
எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு<br />
சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு<br />
சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன்<br />
நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும்<br />
பயம்.</p>
<p>ஜெமோ,</p>
<p>உங்களுடைய &#8220;வெல்லண்ட் கால்வாய்&#8221; பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது அமெரிக்க சிறுவனுடன் விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் செவ்விந்தியர்களைப் பற்றி எங்களுடைய பேச்சு திரும்பியது. நான் செவ்விந்தியர்களுக்குக் குதிரையை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியர்கள்தான் என்று சொன்னேன், ஆனால் அவனோ குதிரைகளைக் கொண்டுவந்தது ஸ்பானியர்கள்தான் ஐரோப்பியர் அல்ல என்று சொன்னான், நான் ஸ்பெயின் ஐரோப்பாவில் உள்ளதை சுட்டிக் காட்டினேன், அவனோ &#8220;வெள்ளை ஐரோப்பியர்கள்&#8221; என்றால் அது இங்கிலாந்தை சார்ந்த ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டும்தான் மற்றவர்கள் அல்ல என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தான். இத்தனைக்கும் அவனுடைய குடும்பப் பெயர் ஜெர்மனியைச் சார்ந்தது. வெள்ளையர்களுக்குள் வேறுபாடு உள்ளது தெரியும், ஆனால் இவ்வளவு தூரம் வேறுபாடு இருப்பது அவனுடன் உரையாடும்போதுதான் தெரிந்தது.</p>
<p>நன்றி<br />
சு செல்வபாரதி</p>
<p>அன்புள்ள செல்வபாரதி</p>
<p>நம்முடைய சுயம் எப்படி நம்மைச்சூழ்ந்துள்ள அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இது. என்னுடைய அமெரிக்கத்தமிழ்நண்பர் சொன்னார். அவர் மகன் அவரிடம் சொன்னான், நீ ஒரு இந்தியன் நான் அமெரிக்கன் என்று. அவர் தன்னை அமெரிக்கன் என்று நம்பிக்கொண்டிருப்பவர்</p>
<p>ஜெ</p>
<p>அன்புள்ள ஜெ,</p>
<p>தற்போது வரும் திரை இசைப்பாடல்களில் முழுவதுமாகக் கர்நாடக இசை மறக்கடிக்கப்படுவதையும், அதன் சாயல் கூட இல்லாத வெறும் கூச்சல் மட்டுமே பாடல்கள் ஆனதைக் கவனித்தீர்களா ?! எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், என்.சி. வசந்தகோகிலம் போன்ற கடந்த தலைமுறைப் பாடகிகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். இவர்களைப் போன்றவர்கள் வரும் தலைமுறையில் தோன்றமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. &#8216;கொலைவெறி&#8217; போன்ற பாடல்களே இதற்கு சாட்சிதானே!</p>
<p>முஹம்மது ஹாரூன்</p>
<p>அன்புள்ள ஹாரூன்</p>
<p>எல்லாக்காலத்திலும் நம்முடைய இசைரசனை மூன்று போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது. ஒன்று நாட்டுப்புற இசை. இன்னொன்று செவ்வியல் இசை. மூன்று மேற்கத்திய இசை. நாற்பதுகளில் வந்த படங்களிலேயே இந்த எல்லா வகைக்குள்ளும் பாடல்கள் அமைந்திருக்கும். அதற்கு முன்னர் கல்யாணக்கச்சேரிகளிலேயே இங்கிலீஷ் நோட்டு பாடப்பட்டுவந்தது</p>
<p>ஆனால் நீங்கள் சொல்வதுபோல சமீபமாக கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் அருகி வருகின்றன என்ற எண்ணம்தான் எனக்கும். குறிப்பாக ‘மெலடி’ அதிகமாக வருவதில்லை. இளையராஜாவின் பொற்காலத்தை நினைத்து ஏங்கிக்கொள்ளவேண்டியதுதான்</p>
<p>ஜெ<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.jeyamohan.in/?p=32153' title='இரு சந்திப்புகள்'>இரு சந்திப்புகள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=31292' title='ராஜா-ஒருகடிதம்'>ராஜா-ஒருகடிதம்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=31098' title='மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?'>மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=30923' title='காந்தியின் கண்கள்'>காந்தியின் கண்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=26814' title='எழுத்தாளரைச் சந்திப்பது&#8230;'>எழுத்தாளரைச் சந்திப்பது&#8230;</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=25332' title='அழியாச்சித்திரங்கள்'>அழியாச்சித்திரங்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=12458' title='ஐந்தாவது கொலை !!!!!'>ஐந்தாவது கொலை !!!!!</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=11914' title='படித்துறை'>படித்துறை</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=11095' title='தமிழிசையும் ராமும்'>தமிழிசையும் ராமும்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=9575' title='நந்தலாலா,இளையராஜா, ஷாஜி'>நந்தலாலா,இளையராஜா, ஷாஜி</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6497' title='ஷாஜியின் விளக்கம்'>ஷாஜியின் விளக்கம்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6493' title='இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்'>இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6480' title='கலைஞர்களை வழிபடலாமா?'>கலைஞர்களை வழிபடலாமா?</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6473' title='இளையராஜா மீதான விமர்சனங்கள்..'>இளையராஜா மீதான விமர்சனங்கள்..</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6376' title='இளையராஜா, இ.பா,  ஏ.ஆர்.ரஹ்மான்'>இளையராஜா, இ.பா,  ஏ.ஆர்.ரஹ்மான்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=6313' title='சென்னை, மூன்று சந்திப்புகள்'>சென்னை, மூன்று சந்திப்புகள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=5164' title='இளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்'>இளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=5025' title='இளையராஜாவின் இசை,கடிதம்'>இளையராஜாவின் இசை,கடிதம்</a></li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=35536</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அசோகமித்திரனுக்கு விருது</title>
		<link>http://www.jeyamohan.in/?p=36617</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=36617#comments</comments>
		<pubDate>Fri, 17 May 2013 18:30:02 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=36617</guid>
		<description><![CDATA[கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் 2013க்கான இலக்கிய விருது எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. கண்ணதாசனின் ரசிகரான கிருஷ்ணகுமார் என்பவரின் அமைப்பு இது. இலக்கியத்திற்கும் கலைக்கும் இது அளிக்கப்படுகிறது. கலைக்கு பாடலாசிரியர் முத்துலிங்கம் விருது பெறுகிறார் இதற்கு முன்னர் இவ்விருதினை திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,திரு. வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி,டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் திரு.இராம.முத்தையா,திரு.பி.ஆர்.சங்கரன் ஆகியோர் பெற்றுள்ளனர். அசோகமித்திரனுக்கு வாழ்த்தும் வணக்கமும் தொடர்புடைய பதிவுகள் தொடர்புடைய பதிவுகள் இல்லை]]></description>
				<content:encoded><![CDATA[<p>கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் 2013க்கான இலக்கிய விருது எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. கண்ணதாசனின் ரசிகரான கிருஷ்ணகுமார் என்பவரின் அமைப்பு இது. இலக்கியத்திற்கும் கலைக்கும் இது அளிக்கப்படுகிறது. கலைக்கு பாடலாசிரியர் முத்துலிங்கம் விருது பெறுகிறார்</p>
<p>இதற்கு முன்னர் இவ்விருதினை திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,திரு. வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி,டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்<br />
திரு.இராம.முத்தையா,திரு.பி.ஆர்.சங்கரன் ஆகியோர் பெற்றுள்ளனர்.</p>
<p>அசோகமித்திரனுக்கு வாழ்த்தும் வணக்கமும்<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய பதிவுகள் இல்லை</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=36617</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?</title>
		<link>http://www.jeyamohan.in/?p=35632</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=35632#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 18:31:40 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[கேள்வி பதில்]]></category>
		<category><![CDATA[சடங்குகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=35632</guid>
		<description><![CDATA[அன்புள்ள ஜெ. சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி: உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது &#8211; இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு கடுப்பைக் கிளப்புகிறது. &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=35632">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஜெ.</p>
<p>சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி:</p>
<p>உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது &#8211; இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு<br />
கடுப்பைக் கிளப்புகிறது.</p>
<p>மொத்த வாழ்க்கையுமே தேடலுக்கு என்று அர்ப்பணிக்காமல் ஒரு சாமானியப் பொருளியல் தளத்தில் நின்றுகொண்டு, தர்க்கம் வாசிப்பு போன்றவற்றின் மூலம் இன்று இந்தச் சடங்குகளின் ஆழங்களை அறிந்து கொண்டுவிட முடியுமா ?</p>
<p>நன்றி<br />
மது</p>
<p>அன்புள்ள மது,</p>
<p>ஒரு இந்து எந்தச்சடங்கையும் செய்தாகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சடங்குகளைச் செய்ய மறுப்பதற்கான எல்லா உரிமையும் இந்துவுக்கு உள்ளது. ஆகவே வேண்டாவெறுப்பாக எதையுமே செய்யவேண்டியதில்லை என்று சொல்லலாம்</p>
<p>எவற்றைத் தவிர்ப்பது?</p>
<p>1. ஒருசடங்கு அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதாக இருக்குமென்று தோன்றினால் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. பல சடங்குகள் நமது சென்றகாலப் பழங்குடி வாழ்க்கையின் எச்சங்கள். அன்றைய சாதியமைப்பு குலஅமைப்பு சார்ந்தவை. இன்று அவை சகமனிதர்களை அவமதிப்பவையாக ஆகிவிட்டிருக்கலாம்.</p>
<p>உதாரணமாக இறந்த வீடுகளில் சலவைக்காரர், நாவிதர் போன்றவர்களை சிலவற்றைச் செய்யச் சொல்லி நிகழ்த்தப்படும் சடங்குகளைச் சொல்லலாம். எந்த விரிவான வாசிப்பும் இல்லாத என் அண்ணா என் அப்பா அம்மா இறந்த தருணங்களில் சலவைக்காரர், நாவிதர் போன்றவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் தானே செய்தார். ‘அவர்கள் என் நண்பர்கள், நாளை அவர்கள் முகத்தை நான் பார்க்கவேண்டும், ஜே.ஹேமச்சந்திரனுக்கு அவர்களிடம் ஓட்டு கேட்கவேண்டும்’ என்று அவர் சொன்னதை நான் நினைவுகூர்கிறேன்</p>
<p>2. ஒருசடங்கு சுகாதாரக்குறைவானதாக , நாகரீகமற்றதாக இருக்குமென்றால் அதைச்செய்யலாகாது. நான் பொதுவாகக் கோயில்களில் மொட்டை போடுவதையும் மண்சோறு சாப்பிடுவதையும், எச்சில் இலையில் உருள்வதையும் எல்லாம் அசுத்தமான நாகரீகமற்ற சடங்குகளாகவே நினைக்கிறேன்.</p>
<p>அதேபோல பல மரணச்சடங்குகள் அபத்தமானவை, நாகரீகமற்றவை. உதாரணம் செத்துப்போனவரைப் படுக்கச்செய்து வாய்க்கரிசி போடுவது, அவருடன் சேர்த்து கோழியைப் புதைப்பது, எலும்பை எடுத்துப் பால்விட்டுக் கழுவி சேமிப்பது போன்றவை. என் பெற்றோருக்கு இவை எதையுமே செய்யவில்லை. அப்பாவைப்  படுக்கவைத்து வாயில் அரிசியைப்போடும் காட்சியை நினைக்கவே முடியவில்லை.</p>
<p>பெண்ணை விதவையாக்கும் சடங்குகள், பெண் வயசுக்குவந்தால் செய்யப்படும் சடங்குகள் போன்றவை சென்ற நிலப்பிரபுத்துவ காலத்தையவை. அச்சமூகத்தில் ஏதேனும் தேவை அவற்றுக்கு இருந்திருக்கலாம். இன்று அவை பொருத்தமற்றவை. பெண்களை இழிவுபடுத்துபவை</p>
<p>3. ஆலயத்தில் உள்ள சடங்குகளில் ஒன்று சுகாதாரமற்றது நடைமுறைச்சிக்கல்கள் கொண்டது என்று தெரியவந்தால் அவற்றைத் தவிர்த்துவிடலாம். உதாரணமாக, கோயில்களில் சிற்பங்களுக்கு வெண்ணை சாத்துவது. மிகக்குறைவாக எப்போதாவது வெண்ணை சாத்தும் வழக்கம் முன்பிருந்தது. கிலோக்கணக்காக வெண்ணை சாத்தப்படுகையில் அது அழுகி நாறுகிறது.</p>
<p>அதேபோல கற்பூரம் கொளுத்துதல். பக்தி மரபில் இறைவனுக்கு பதினாறு உபச்சாரங்கள் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. அதில் ஒன்று நறுமண தூபம். அக்காலத்தில் பச்சைக்கற்பூரம் என்ற இயற்கைப்பொருள் அதற்கு பயன்படுத்தப்பட்டது . இன்று கிடைப்பது ஒரு ரசாயனப்பொருள். அதைப் பெரிய அளவில் ஆலயங்களில் எரியவிடுவதனால் சூழல் சீர்கேடே மிஞ்சுகிறது</p>
<p>எவற்றைச் செய்யலாம்?</p>
<p>1. ஒரு சடங்கு உண்மையிலேயே மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதைச்செய்யலாம். உதாரணமாக குழந்தைக்கு சோறுகொடுப்பது போன்றவை.</p>
<p>2. சிலசடங்குகள் குறியீட்டு ரீதியாக மனதின் சில உணர்வுகளை வெளிக்காட்டவும் சிலவற்றை அழித்துக்கொள்ளவும் உதவக்கூடியவை. இறந்த பெற்றோருக்குச் செய்யும் பலிச்சடங்குகள், ஆலயத்தில் அவர்களுக்காக ஏற்றப்படும் மோட்சதீபம் போன்றவை உதாரணம்.</p>
<p>3.ஒருசடங்கு நம்மிடம் சொல்லப்படும்போது அதன் ஊற்றுமுகம் என்ன, அர்த்தம் என்ன என்று கேட்டுத்தெரிந்துகொள்ளவெண்டும். அது நமக்கு உவப்பானதாக இருந்தால் அதைச்செய்யலாம்.</p>
<p>சித்திரை பிறக்கும்போது நெற்கதிராலும் கொன்றைமலராலும் ஆன செண்டுகளை வீட்டுக்குள் தொங்கவிடும் ஒரு சடங்கு குமரிமாவட்டத்தில் உண்டு. சங்ககாலம் முதலே உள்ள சடங்கு இது. இயற்கையுடன் நேரடியாகவே தொடர்புள்ளது. அழகானது.</p>
<p>அவ்வாறு செய்தால் வீட்டுக்குள் லட்சுமி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. லட்சுமியாவது பார்வதியாவது என்று பகுத்தறிவு பேசினால் நாம் நம் நீண்டமரபுடனான உறவை இழக்கிறோம். அதன்பின் வாழ்க்கையில் எஞ்சுவதுவெறும் நுகர்வின் இன்பம் மட்டுமே</p>
<p>ஜெ<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.jeyamohan.in/?p=35336' title='சடங்குகள் ஒரு கடிதம்'>சடங்குகள் ஒரு கடிதம்</a></li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=35632</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுட்ட பழம்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=36497</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=36497#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 18:30:45 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[படங்கள் காணொளிகள்]]></category>
		<category><![CDATA[சுட்ட பழம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=36497</guid>
		<description><![CDATA[முருகா..தமிழ்க் கவிஞர் ஔவையாருடன் சுட்ட &#8216;பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?&#8217; என்று விளையாடியதற்கு எத்தனை ஆண்டுகள் கழிந்தபின் ஒரு தமிழ்ப் பாடகி உன்னைப் பழிவாங்குகிறாள் பார்.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று இளங்கோ கூறியது உன்விடயத்தில் சரியாகிவிட்டதே! http://www.youtube.com/watch?v=Brkys-g6oLY சிவேந்திரன் தொடர்புடைய பதிவுகள் தொடர்புடைய பதிவுகள் இல்லை]]></description>
				<content:encoded><![CDATA[<p>முருகா..தமிழ்க் கவிஞர் ஔவையாருடன் சுட்ட &#8216;பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?&#8217; என்று விளையாடியதற்கு எத்தனை ஆண்டுகள் கழிந்தபின் ஒரு தமிழ்ப் பாடகி உன்னைப் பழிவாங்குகிறாள் பார்.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று இளங்கோ கூறியது உன்விடயத்தில் சரியாகிவிட்டதே!</p>
<p><a href="http://www.youtube.com/watch?v=Brkys-g6oLY">http://www.youtube.com/watch?v=Brkys-g6oLY</a></p>
<p>சிவேந்திரன்<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய பதிவுகள் இல்லை</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=36497</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கலைக்களஞ்சியம்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=35630</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=35630#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 18:30:16 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கலைக்களஞ்சியம்]]></category>
		<category><![CDATA[பெரியசாமித்தூரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=35630</guid>
		<description><![CDATA[அன்புள்ள திரு.ஜெயமோகன், பெரியசாமித்தூரனைப் பற்றிய தங்களது கட்டுரையில் அவரது கலைக்களஞ்சியம் மறுபதிப்பு செய்யாமலே உள்ளார்கள் என்று கூறியிருந்தீர்கள். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் படிக்கலாம். http://tamilvu.org/library/libindex.htm இப்படிக்கு பா.மாரியப்பன் தொடர்புடைய பதிவுகள் வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்]]></description>
				<content:encoded><![CDATA[<p>அன்புள்ள திரு.ஜெயமோகன்,</p>
<p>பெரியசாமித்தூரனைப் பற்றிய தங்களது கட்டுரையில் அவரது கலைக்களஞ்சியம் மறுபதிப்பு செய்யாமலே உள்ளார்கள் என்று கூறியிருந்தீர்கள். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் படிக்கலாம்.</p>
<p><a href="http://tamilvu.org/library/libindex.htm">http://tamilvu.org/library/libindex.htm</a></p>
<p>இப்படிக்கு<br />
பா.மாரியப்பன்<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.jeyamohan.in/?p=7286' title='வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்'>வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்</a></li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=35630</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பகுத்தறிவு ஒரு கடிதம்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=35549</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=35549#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 18:30:44 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[எதிர்வினைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பகுத்தறிவு]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=35549</guid>
		<description><![CDATA[ஆசிரியருக்கு, வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன். இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=35549">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>ஆசிரியருக்கு,</p>
<p>வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன்.</p>
<p>இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக உதவுகின்றது. தருக்கம் ஒரு கருவியே. தருக்கம் விளக்க முடியா இடங்கள் உண்டு. அந்த இடைவெளிகளுக்கான தருக்கங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவ்வகை தருக்கங்கள் சாத்தியப்படும் என அந்த தருக்கங்களை அமைக்கும் முறையைப் பகுத்தறிவு தேடுகின்றது. அறிவின் முடிவின்மை எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு அந்த முடிவின்மையைத் தேடும் தருக்கங்கள் அமைக்க செல்லும் பயணங்களும் உண்மை. நிரூபணவாத அறிவியலும் ,தொழில்நுட்பமும் அந்த தருக்க அடிப்படைக்கருவிகளே. இந்தக் கருவிகள் தொடர் மேம்பாட்டின், சுய உடைப்பின் மீதே அடுத்த தளத்துக்கு செல்கின்றன. தருக்கம் தீர்ந்து போவதால் பகுத்தறிவு தீர்ந்து போவதில்லை, புதிய தருக்கங்களை உருவாக்குவதில்தான் பகுத்தறிவின் வளர்ச்சி உள்ளது.</p>
<p>நம்பிக்கை அடிப்படையிலான மதம் தங்களது கருத்துகளை சக மனிதனது உரிமையையும் , உணர்வினையும் ஒடுக்கப் பயன்படுத்தும் தருணங்களிலே மோதல் வருகின்றது. ஒரு உயர்ந்த குடிமை சமுகமே<br />
பகுத்தறிவின் வழியாய் இருக்க முடியும். அந்த வழிகள் புனிதமானவை அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. உடைக்க உடையாதவை அல்ல. அதன் பயன்பாட்டாளர்கள் நுண்ணறிவு கொண்ட ஞானிகள் அல்ல. அது இருக்கப்பட வேண்டிய இடம் ஆலயங்கள் அல்ல.</p>
<p>பகுத்தறிவு அனைவருக்கும் பொது. எனவே அது ஆவணப்படுத்துதல்,அளவீடு செய்தல், அனைவர்க்கும் பொதுவான கல்வி அமைப்பினைப்பரவலாக்குதல் போன்ற செயல்முறைகளைத் தனது நெடிய பயணத்தில் துணையாய்க் கொள்கின்றது. இதில் செயல் முறைகளில் குறைபாடுகள் உண்டு , ஓர வஞ்சனை உண்டு , ஏன் என்றால் பகுத்தறிவு சகல மானுடரின் பங்கையும் கோருகின்றது. அனைவரும் ஒரே செயல் திறம், சிந்தனை கொண்டிருப்பதில்லை. தனி மனிதக் குறைபாடு பகுத்தறிவின் குறைபாடாய்த் தெரியலாம், ஆனால் இந்தக் குறைபாடுகளை ஒத்துக் கொள்ளவவும் பகுத்தறிவு அமைப்பு மறுப்பதில்லை.</p>
<p>நன்றி<br />
-நிர்மல்<br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.jeyamohan.in/?p=27513' title='வாசிப்பும் பகுத்தறிவும்'>வாசிப்பும் பகுத்தறிவும்</a></li>
<li><a href='http://www.jeyamohan.in/?p=8503' title='கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2'>கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2</a></li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=35549</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்வியும் பெற்றோரும்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=36512</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=36512#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 18:30:23 +0000</pubDate>
		<dc:creator>jeyamohan</dc:creator>
				<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[கேள்வி பதில்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[கல்வியும் பெற்றோரும்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=36512</guid>
		<description><![CDATA[அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு, நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை &#8211; வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.jeyamohan.in/?p=36512">மேலும் படிக்க »</a>]]></description>
				<content:encoded><![CDATA[<p>அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,</p>
<p>நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை &#8211; வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் சுற்ற, நல்ல உணவை ரசிக்க) பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, அவற்றைப் (வேலை, பணம்) பெறுவதற்காக ஆன்மாவை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்தச் சில்லறை உண்மையைப் புரிந்து கொள்வது யாருக்கும் அவ்வளவு எளிதானதாய் இல்லை.</p>
<p>இந்தியாவில் ஒட்டுமொத்த முட்டாள்களில் அறுபது சதவீதம் பேர் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். (சற்றே கடுமையான வசைதான் – ஆனால் உண்மையும் கூட. பத்து வருட தொழில்நுட்ப வாழ்வில் வெவ்வேறு பொருளாதார, கல்வி, பண்பாட்டுப் பின்புலம் கொண்ட சகாக்களுடன் வேலை செய்ததில் அடிப்படை அறிவும், மனிதனாய் இருத்தலுக்கான முயற்சியும் கொண்ட பத்து நபர்களை என்னால் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான்.) இது புலம்பலோ அடுத்தவரைக் குறை சொல்லவோ நினைக்கும் ஒரு விஷயம் அல்ல. இவர்களைப் பற்றிய விமர்சனங்கள் அவர்களைச் சென்றடையவே செய்யாது. நான் கவலைப்படுவது இவர்களின் குழந்தைகளைப் பற்றி. நான் சந்தித்த யாரும் குழந்தை என்பது தன்னுணர்வு கொண்ட ஒரு சக உயிர் என்பதை உணர்ந்தவர்கள் இல்லை. சகமனிதர்களின் இந்தத் தாக்குதல் ஒரு விதப் பதட்டத்தை உருவாக்குகிறது.</p>
<p>உலகப்புகழ்பெற்ற பாரிசின் லூவர் மியூசியத்தில், ஒரு 5 வயதான பெண் குழந்தை தரையில் அமர்ந்து ஒரு ஓவியத்தை நகல் எடுத்துக் கொண்டு இருந்தது. நான் மிகுந்த ஆச்சர்யத்துடன் அது வரைய முயல்வதைப் படம் எடுத்தபடி அருகே போனேன். நான் அந்தப் பெண்ணிடம் பேச முயன்ற அடுத்தநொடி ஒரு நபர் என்னைக் கவனித்தபடி அருகே வந்தார். அது அவரின் பெண். கடந்த வருடம் வழக்கமான வார விடுமுறைக்கு அவளை அழைத்து வந்து விட்டு வீடு சென்றிருக்கிறார், மறுநாள் காலை அவர் எழும்போது, அவரிடம் அவள் கொடுத்தது, ஒரு பென்சிலால் வரையப்பட்ட அரைகுறை ஓவியத்தை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிறும் லூவருக்கு இருவரும் வந்துவிடுவார்கள். ம்யூசியம் மூடும் வரை ஏதேனும் ஒரு ஓவியத்தை அவள் வரைவாள். பின் வார நாட்களில் அவரவர் வேலையைத் தொடர்ந்தபடி அடுத்த வாரத்திற்காகக் காத்திருப்பார்கள்.</p>
<p>என்னுடன் வந்த நண்பர் அவரிடம் படிப்பு கெட்டுவிடாதா? என்று கேட்டார். அந்தக் கேள்வி அந்த நபரைக் குழப்பிவிட்டது. அவர் என் பெண்ணிற்கு எழுத, படிக்கத் தெரிந்தால் போதும், அதை அவள் செய்வாள் என்று நம்புகிறேன் என்றார். இல்லை அவளை MBA/MS படிக்க வைக்க வேண்டாமா என்று கேட்க, அவளுக்கு ஓவியம் பிடிக்கிறது, இன்னொருநாள் அதை எறிந்துவிட்டு வேறேதேனும் படித்தால் அது அவள் விருப்பம், நான் ஏன் அவள் படிப்பை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டார். மகளுக்காக ஒருநாள் முழுவதும் காத்திருக்கும், அவள் வாழ்வை வாழவிடும் ஒரு தகப்பனை – மேய்ப்பனைக் கண்ட திருப்தியுடன் நான் கிளம்பினேன்.மீண்டும் சில மாதம் கழித்து, லூவர் செல்லும் போதும் நான் அந்தத் தந்தையையும் மகளையும் சந்தித்தேன். என் பார்வையில் இது ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகமனநிலை. அங்கே இருக்கும் நம் மக்கள் இங்கே செய்யும் கொடுமைகளை மாற்றமே இல்லாமல் அங்கேயும் பிள்ளைகளுக்குச் செய்கிறார்கள்.</p>
<p>இங்கே, ஒரு வயதுக் குழந்தைக்குப் பாடம் சொல்லும் குறுவட்டு, 2 வயதில் ஆரம்பிக்கும் கல்வி, 3 வயதில் முறைப்படுத்தப் படாத கல்வி, 4 வயதில் ஆரம்பிக்கும் முறைசார் கல்வி, நான்காம் வகுப்பில் இருந்து I IT நுழைவுத் தேர்வுப் பயிற்சி, நடனம், ஓவியம், பாட்டு, கம்ப்யூட்டர் – இதில் எங்கேயும் வாசிப்போ, அரசியல், இயற்கை சார்ந்த விசயங்களோ இருக்கவே செய்யாது. இவை அற்ற எந்த விசயமும் கல்வி என்று சொல்லத்தகுதி அற்றவை.</p>
<p>சென்னையில், என்னுடன் வேலை செய்யும் ஒருவரிடம், எதற்காக உங்கள் குழந்தையை இவ்வளவு செலவு செய்து (ஒரே பையன் &#8211; இரண்டாம் வகுப்பு &#8211; மாதம் 15000 ரூபாய், இது தவிர வருடம் 3 லக்ஷம் ரூபாய் கட்டணம்) கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். என் மகனுக்கு சொத்து எதுவும் சேர்த்து வைக்க முடியாது, சிறப்பான கல்வியை மட்டுமே கொடுக்க முடியும் என்று சொன்னார். அவரின் மாத வருமானம் இருபது லட்சத்திற்கும் மேல். இவ்வளவு பணம் கொண்ட இவர்கள் தங்கள் குழந்தைகளையாவது சுதந்திரமாக வளர்க்கலாம் இல்லையா? இது ஒரு விதமான நிழலுடனான யுத்தம் போல் இருக்கிறது.இவர்கள் யாரும் தன் குழந்தையை ஒரு இலக்கிய/கலை நிகழ்விற்கோ, சிற்பக் கூடத்திற்கோ, அரும்பொருள் கூடத்திற்கோ அழைத்துச் செல்பவர்கள் இல்லை.</p>
<p>இவர்களிடம் கேட்டால் பின் வரும் காரணங்களில் ஒன்றைத்தான் சொல்வார்கள்:</p>
<p>· ஐன்ஸ்டீனை உருவாக்குதல். (பேரறிவைத் தொடர் பயிற்சியால் உருவாக்குதல் – எல்லோரும் ஐன்ஸ்டீன்கள் ஆவது எப்படி? போன்ற பயிற்சிகளைப் பெறுவதன் மூலம்.) :)<br />
· பில்கேட்ஸ், அம்பானிகளை உருவாக்குதல் (தொழில் அதிபனாக அல்ல – பணக்காரனாக மட்டும் வர- I IT இல் சேர்ந்து நல்ல சம்பளத்தைப் பெற்றுப் பெரும் பணத்தைக் குவித்தல் J, ஒரு போதும் ஒரு புதுப்பொருளை/சிந்தனையைக் கண்டுபிடித்தலோ, நிறுவனத்தை ஆரம்பித்தாலோ இவர்கள் நோக்கமாக இருக்காது)<br />
· தன் சக ஊழியருக்குப் போட்டியாக – கௌரவம் நிலை நாட்டுதல் (இருப்பதிலேயே நல்லவர்கள் இவர்கள்தான்)</p>
<p>மேல்கண்ட நோக்கங்களால்தான் குழந்தைகளை இந்தத் திருட்டுப்பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.</p>
<p>இந்தப் பள்ளிகளில் நுண்ணுணர்வு, கலை, அறம் குறித்து யோசிக்கும்/போதிக்கும் ஆசிரியர்கள் யாரும் கிடையாது. மதிப்பெண் வாங்கி, நல்ல (?) கல்லூரிகளில் சேர்ந்து, நல்ல (?) நிறுவனத்தில் பெரும் சம்பளத்தில் சேர்ந்து, வெளிநாடு போய், சம்பாரித்து, இரண்டு படுக்கை வீடு வாங்கி, எங்கும் வெளியே செல்லாமல் குடித்து, இதே வட்டத்தில் மற்றொரு தலைமுறையை – மனித சக்கையை – உருவாக்கிச்சாகிறார்கள்.</p>
<p>ஒரு கண்டுபிடிப்பாளனாகவோ, தொழிலதிபனாகவோ, எழுத்தாளனாகவோ, தனித்த வெற்றியாளனாகவோ, ஏன் ஒரு முழு மனிதானாக ஆவதற்குக் கூட மேல்கண்ட முறைகள் உதவாது. அது இப்போது பிரச்சனையாகத் தெரியாது. இன்னும் பத்து வருடத்தில், சாரமற்ற ஒரு சமூகம் உருவாகி வரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?</p>
<p>இவற்றை ஒப்புநோக்கும்போது, அரசுக் கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்வதில்லை. அங்கிருந்துதான் சவால்களைச் சந்திக்கும் மனிதர்கள் உருவாகிறார்கள். அதே சமயம், மசனாபூ ஃபுகொஹா சொல்லிய இந்த விஷயம் குழந்தைகளை வளர்ப்பதில் உதவும் என்று தோன்றுகிறது. ஆரஞ்சு மரத்தை வெட்டாமல் அப்படியே விடுவதல்ல இயற்கை விவசாயம். கிளைகளை சீரமைக்க வேண்டும். ஆனால் இயற்கையின் ஒரு பங்காகச் செய்யவேண்டும். ஆனால் இப்போது பெற்றோர் உருவாக்குவது போன்சாய் மரங்களையே. ஒரு நல்ல வழிகாட்டியாக, பெற்றோராக நீங்கள் &#8211; ஒரு சரியான &#8220;மனிதனாகத்&#8221; தன் குழந்தையை உருவாக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?</p>
<p>இந்தக் கேள்வி இந்த வலைத்தளத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.</p>
<p>இப்படிப்பட்ட பள்ளிகளும், மனிதர்களும் மட்டுமே நம்பிக்கையை விதைக்கிறார்கள்.</p>
<p><a href="http://writersamas.blogspot.in/2010/11/45e.html">http://writersamas.blogspot.in/2010/11/45e.html</a><br />
<a href="http://writersamas.blogspot.in/2013/03/blog-post_6.html">http://writersamas.blogspot.in/2013/03/blog-post_6.html</a></p>
<p>நன்றி.</p>
<p>என்றும் அன்புடன்,<br />
பா.சரவணன்</p>
<p>உதாரணங்களை மென்பொருள் பணியாளர்கள் சார்ந்து சொன்னது என் அனுபவத்தை விளக்க மட்டுமே. இந்தப் பிரச்சனை எல்லோருக்கும் பொதுவானதே.</p>
<p>அன்புள்ள பா சரவணன்,</p>
<p>கல்வி குறித்த நோக்கில் மேலைநாட்டினருக்கும் கீழைநாட்டினருக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.இன்று பொதுவாக கீழைநாட்டினர் கல்வியைக் கடுமையான ஒரு பயிற்சி என்றே எடுத்துக்கொள்கின்றனர். நம்மைப்போலத்தான் சீனர்களும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.</p>
<p>இது ஏன் என்று பார்த்தால் எனக்குத்தெரியும் விடை இதுதான். நெடுங்காலமாக நம்மிடம் இருவகைக் கல்விகள் இருந்துள்ளன. ஒன்று வாழ்க்கைத்தொழில் கல்வி. அதைப் பயிற்சி எனலாம். இன்னொன்று ஆளுமை மலர்வுக்கான கல்வி.</p>
<p>இங்கே பெரும்பாலான கல்வி முதல்வகையைச் சேர்ந்ததாகவே இருந்துள்ளது. சென்ற காலத்தைய ஒரு தச்சன் குழந்தை மூன்று வயதில் உளி எடுத்து மரத்தைச் செதுக்கச் செய்யப்படும். எட்டு வயதில் கொட்டுவடி கையில் இருக்கும். பதினெட்டு வயதில் தேர்ந்த ஆசாரியாக ஆகும். இதுதான் வேதபாடக் கல்விக்கும் வழக்கம்.</p>
<p>இந்தவகையான கல்வி, தொழில்சார்ந்த பயிற்சிகளுக்கு பெரிதும் உகந்ததாக இருந்தது. இது சார்ந்த ஒரு முன்னுதாரணமே நமக்குக் கல்வி என்றால் பொதுவாகக் கிடைக்கிறது. இன்று கோடீஸ்வரர்கள் கூடத் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க நினைக்கும் கல்வி இதுதான்</p>
<p>இன்னொரு வகைக் கல்வி இருந்தது. அது குருவிடமிருந்து ஞானத்தைப்பெற்று அறிவிலும் ஆளுமையிலும் ஆன்மீகத்திலும் மலர்தல். அதுவே கலைகளுக்குரிய கல்வியாக இருக்கமுடியும். தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் உரிய கல்வியாக இருக்க முடியும்.</p>
<p>ஆனால் அந்தக் கல்வி அன்றும் மிகமிகச் சிறுபான்மையினருக்குரியதாகவே இருந்தது. அந்தக் கல்விக்காக உலகியல்சார்ந்த பிற அனைத்தையும் உதறிச் செல்லக்கூடிய சிலருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது அது. அதை சாதாரண மக்கள் அறிய மாட்டார்கள்.</p>
<p>ஆகவே நம் சாதாரண மக்களின் மனதில் இன்றும் கல்வி என்றால் முதல்வகையான கடும் பயிற்சியே இருக்கிறது. இங்கே பொறியியல் முதல் ஐஐம் வரை கற்கும் நம் இளைஞர்கள் அடைவது இந்தக்கல்வியைத்தான். இவர்கள் திறன் மிக்க உழைப்பாளிகளாக ஆகி உலகியல் வெற்றிகளை ஈட்டுவார்கள். அதுவே பெற்றோரின் கனவு.</p>
<p>உண்மையில் நம்முடைய இளைஞர்களில் லட்சத்தில் இருவர் தவிர மற்றவர்களும் இதே கனவைத்தானே கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்தக்கல்வி அவர்களுக்கு அளிக்கப்படுவதுதானே முறை? அப்படி அளிக்கப்படாவிட்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் பெற்றோரைக் குறை சொல்வார்கள்.</p>
<p>நம் இளைஞர்களில் அனேகமாக அத்தனைபேருமே உலகியல் தளத்தில் நல்ல உழைப்பைக் கொடுக்கக்கூடிய இயந்திரங்கள்தான். அவர்களைக் கலைஞர்களும் சிந்தனையாளர்களுமாக ஆக்க முயல்வது வீண்.</p>
<p>எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் விதிவிலக்கான அந்த லட்சத்தில் இரண்டுபேருக்காக நாம் ஏன் ஒட்டுமொத்தக் கல்விமுறையை மாற்றவேண்டும் என்றுதான். அந்த இரண்டுபேரும் அவர்களைக் கட்டுப்படுத்தும் கல்விமுறையின் இரும்புத்தளைகளை முடிந்தால் மீறி வந்து கற்கட்டுமே. அப்படித்தானே நேற்று உலகியல் வெற்றிகளைத் துறந்து ஒரு குருவைப் பின் தொடர்ந்து சென்றார்கள்?</p>
<p>ஜெ</p>
<p><a href="http://www.jeyamohan.in/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF">கல்வி குறித்த கட்டுரைகள் இணைப்பு </a><br />
<a href="http://www.jeyamohan.in/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF"><br />
சமச்சீர்க்கல்வி-கட்டுரைகள் இணைப்பு </a></p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=4898">கல்வி புராணம் </a></p>
<p><a href="http://www.jeyamohan.in/?p=488">தேர்வு<br />
</a><br />
<a href="http://www.jeyamohan.in/?p=13982">தேர்வுசெய்யப்பட்ட சிலர் </a><br />
<h3 class='related_post_title'>தொடர்புடைய பதிவுகள்</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய பதிவுகள் இல்லை</li>
</ul>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&#038;p=36512</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
