<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>jeyamohan.in</title>
	<atom:link href="http://www.jeyamohan.in/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.jeyamohan.in</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 08 Feb 2010 19:01:46 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஈராறு கால்கொண்டெழும் புரவி 6</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6462</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6462#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 19:01:46 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[குறுநாவல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6462</guid>
		<description><![CDATA[மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர்  மக்கள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரண்டுமாதங்கள்வரை ஞானமுத்தனின் அந்த தோட்டத்துக் குடிசையிலேயே இருந்தார் பிள்ளைவாள். அந்த தோட்டத்தில் அவர் நட்டு வளர்த்த மலர்ச்செடிகள் இலைதழைத்து தளிர்விட்டு மேலெழுந்தன. சிலசெடிகள் மலர் சிரித்தன. தினமும்  அதிகாலையில் எழுந்து அருகே உள்ள ஓடையில் இருந்து நீர் மொண்டு தோட்டம் முழுக்க நனைப்பார். அதன்பின் குளியல். அப்போது ஞானமுத்தன் வீட்டிலிருந்து உணவு வந்துசேர்ந்திருக்கும். அதைச் சாப்பிட்டுவிட்டு மரக்கூட்டங்களுக்குள் எங்காவது இலைநடனத்தைப் பார்த்துக்கொண்டு காற்றைக் கேட்டுக்கொண்டு வேளிமலையில் இருந்து பாண்டிநாட்டுக்கு தவழும் யானைப்படை போலச் செல்லும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். மந்திரமும் நீறும் மறந்து மனம் வெட்டவெளியாகக் கிடந்தது. கற்றசாத்திரங்களும் உற்ற தத்துவங்களும் வரண்டு பஸ்மமாகக் காற்றில் பறந்துவிட்டிருந்தன.</p>
<p>மலைப்பாறையின் மௌனமான பொருளின்மையை மனம் அடைந்துவிட்ட நாட்களில் ஒன்றில் அவருக்குக் காய்ச்சல் கண்டது. காலையில் எழுந்தபோது உடம்பு கனமாக பாயில்படிந்திருப்பதை உதடு வரண்டுபோயிருப்பதை உணர்ந்தார். இருமுறை எழமுயன்றும் உடல் எடை தாளாமல் மீண்டும் படுத்துக்கொண்டார். மதியம் ஞானமுத்தனின் வேலைக்காரப் பையன் வந்து கஞ்சியை அருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டிருந்தான்.  அவர் கண்விழித்தபோது அதைக் கண்டாலும் கை நீட்டி எடுத்துக் குடிப்பதற்கு மனம்கூடவில்லை. அவ்வளவுதான் என்று தோன்றிவிட்டது. மனமாமி கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை நிறைவறியப்போகிறது. ஒரு வெறும் சருகு. அவ்வளவு இயல்பாக காற்றால் மரத்தில் இருந்து கொய்தெடுக்கப்படுகிறது. அவ்வளாவு சகஜமாக மண்ணில் பொருந்து மட்கியழியப்போகிறது.</p>
<p>இரண்டாம்நாள் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு அவ்வழிவருகையில் தோட்டம் காய்ந்துகிடப்பதைக் கண்டு ஜென்ஸி உள்ளே வந்து கதவை மெல்லத்தள்ளித் திறந்தபோது பாயில் தாடி காற்றில் பறக்க வாய்திறந்து பிள்ளைவாள் கிடப்பதைக் கண்டு &#8221;ஏசுவே, ராசாவே&#8221; என்று வீரிட்டு மார்பைப் பற்றிக் கொண்டாள். ஓடிப்போய் வெளியே பார்த்து அப்பகுதியில் யாருமில்லை என்று உணர்ந்து திரும்பிவந்து பைபிளை ஜன்னல்படியில் வைத்துவிட்டு பிள்ளைவாள் அருகே குனிந்து அவரைத் தொட்டபோது அவரில்  உயிர்வெப்பம் இருப்பதை உணர்ந்தாள். பரபரப்புடன் திரும்பி மண்கூஜாவில் நீர் இருப்பதைக் கண்டு அதை அள்ளி அவர் முகத்தில்  வீசினாள்.</p>
<p>நீர்பட்டு கண்திறந்த பிள்ளைவாள் சிவந்த கண்களால் அவளை ஆயிரம் காதம் அப்பாலிருந்து பார்த்தார். அவள் &#8221;சாமீ&#8230;சாமீ&#8221; என்று அவரைக் குலுக்கியபோது அவரது வாய் பிளந்து காய்ச்சலில் காய்ந்த நாக்கு வெளிவந்து வெடித்த உதடுகளை நக்கிச் சென்றது. அவள் கூஜாவை இடக்கையால் எடுத்தபடி வலக்கையால் அவரை மெல்லத்தூக்கி தன் மார்புடன் சேர்த்து நீர்விளிம்பை அவர் உதடுகளுக்குக் கொண்டுவந்தாள். குளிர்ந்த நீர் அவரது வரண்ட அகம் முழுக்க நனைத்து நனைத்து நனைத்து சென்று இறங்கித்தேங்கி நரம்புகளில் ஓடி சித்தத்தில் பரவி வெம்மை தணிவித்தது. மூச்சு வாங்க போதும் என்று கைநீட்டினார். திரும்பி கூஜாவை ஓரமாக வைத்தபோது அவள் கனத்த மார்பகமொன்று அவர் முகத்தை முட்டி அழுத்தியது.</p>
<p>பிள்ளைவாள் தன் உடலெங்கும் எழுந்த உயிரை, அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதாரபிந்துவை, அதில் திகழ்ந்த நாதத்தை உணர்ந்தார். மெல்லிய முனகலுடன் அவர் உடலில் ஒரு இறுக்கமும் வலிப்பும் கூடியது. சொற்களென பெருகிய சித்தத்தில் எங்கெங்கோ சிலம்பொலித்தது, கைவளை சிரித்தது. மணி மின்ன, அணி மின்ன, மலர் வாசமெழ, சாடைகள் ஆயிரம் சாயல்கள் ஆயிரமென எழுந்தெழுந்த அலைகளில் அவர் மீண்டும் மீண்டும் சொற்களையே அள்ளி அள்ளிக்குடித்துக்கொண்டிருந்தார். மங்கல செங்கலசந்திகழ் கொங்கை. நேரிழையாவாள் நிரதிசயானந்தப் பேருடையாள்! மணிகடல்யானை வார்குழல்மேகம் அணிவண்டுதும்பி வளைபேரி கையாழ்&#8230; இக்கணம் இக்கணம்&#8230;.செல்லும் சதகோடிக் கணங்களை உண்டு தான் தானென்று நிற்கும் இக்கணம்.</p>
<p>பொன்னொளி கொண்டெழுந்தது ஏரிக்கப்பால் புதியதோர் சூரியன். ஏரியின் நீல அலைகளில் பாய்ந்து அடித்தட்டில் அலையடிக்கும் ஒளியில் துழாவிச் சென்றார். மென்கதுப்பாகச் சதுப்பு பரவிய அடித்தளத்தில் ஏதோ நுண்ணுயிர்களெழுதிய வரிகள். ஒவ்வொன்றையும் அப்போது தொட்டுத்தொட்டு வாசிக்க முடிந்தது. ஒவ்வொன்றிலும் அவர் வாழ்க்கை ஒவ்வொரு பக்கமாக எழுதப்பட்டிருந்தது. &#8221;என்னாண்ணு இப்டி பாக்குதியோ? நேரமாகுதில்லா?&#8221; &#8221;நேரமாகாத நேரமுண்ணு ஒண்ணுண்டா?&#8221; &#8221;தொடங்கியாச்சு&#8230; இனி இதே பாடுதான். தெரியாமப்போச்சே&#8221;. &#8221;என்ன தெரியல்ல?&#8221; &#8221;உங்களுக்கு என்னத்துக்கு கெட்டினவளும் குடியும்? ஒரு துணியில படம்வரைஞ்சு கையில குடுத்தா போராதோ?&#8221; துணியில் ஓவியமெதற்கு, ஏட்டில் சொல்லோவியமிருக்கையில்? கண்டதையெல்லாம் காண்கையிலேயே சொல்லாக்கும் சித்தம் எனக்கிருக்கையில் நீயும் எனக்கொரு சொல் மட்டுமே . பொருள் மீது தாமரையிலை நீர் போல ஒளிர்ந்து உருண்டோடும் சொல். &#8221;பொன்னையும் பூவையும் எதனால மனுசப்பய அப்ப்டி ஆசைப்படுதான்னு இப்பல்லா தெரியுது&#8221; வெட்கிச்சிவந்து &#8221;ஒண்ணும் வேண்டாம்&#8230; எனக்கு ஒருமாதிரி இருக்கு&#8221; &#8221;என்னது?&#8221; &#8221;கோயிலுக்குள்ள இருட்டுக்குள்ள அம்மன்சாமியா நிண்ணு மந்திரத்த கேட்டுட்டே இருக்கமாதிரி இருக்கு&#8221; அக்கணத்தில் மூக்குத்தி மின்னும் நீள்முகத்துடன் அவள் கருவறைச் சிலையானாள். கைநடுங்க பின்னிழுத்து &#8221;ஆமா..சில சமயம் எனக்கும் அப்ப்டித்தான் தோணுது&#8230;&#8221; &#8221;அய்யே, என்னது இது..சும்மா ஒருபேச்சுக்குச் சொன்னா&#8230;&#8221; &#8221;இல்லட்டீ&#8230;நான்&#8221; &#8221;சும்மா கெடயுங்கோ&#8230;&#8221; விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி . ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தோடு ஏறிச்செல்லும் பொற்படிக்கட்டுகளில் ஒன்று இரண்டு மூன்றென செம்பவளமணிகள் வெண்பளிங்குமணிகள் உருள குளம்படியோசை வெடிப்பெழ வெண்புரவி பின்வர செம்புரவி நடுவர கரும்புரவி பின்வர சென்று சென்று சென்று&#8230; இருட்டுக்குள் பிணையும் இரு உடல்களில் ஒன்று நான், ஒன்று நீயெனப்படுவதெல்லாம். புணர்ச்சியுள் ஆயிழைமேல் அன்புபோல் உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கி சொல்லிழந்து மௌனத்தால் குலாவி உலாவி அணைத்தலும் இன்பம்&#8230;.விடாய்க்கு இது வெய்யநீர். வெய்யநீர் தன் வழியறியும் தருணங்கள். வெய்யநீர் ஓடும் வழிகள். அதற்கப்பால் அந்த வெய்யநீர்க்குளம். அதில் கைசுருட்டி கால்சுருட்டி கண்மூடிக் கிடந்தார். சுஷ¤¤ப்தி. கனாநிலையில் கருவாகி கையிலிருந்தது ககனம்.</p>
<p>இந்த வெம்மைமிக்க இருளில் நான் இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண். போகத்தில் ஆங்கே புகுந்த புனிதன். என்பால் மிடைந்து நரம்புவரிக்கட்டி, செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து, அதனுள் அள்ளி அள்ளிவிட்டு தேக்கி ,அலைமேல் அலைநிறைத்து, ஒளிபெய்து நிறைத்த பேரானந்தம். கைசுருட்டி இறுக்கி கண்மூடி குவிந்து தலையால் தான் முட்டித்திறந்து வெளிப்போந்து சலமொழுகும் சகதியில் கிடந்தேன். என்னை நடுங்கும் கரத்திலெடுத்து என்முகத்தில் உன்முகம் காணும் உன்னை எத்தனை காலமாக அறிந்திருக்கிறேன். உன் முகம் உருகும் மெழுகாவதை, உன்சொற்களின் பெருங்குவை கரைந்தோடிய வெறுமையில் ஒரு கணம் நீ திகைத்து நின்றிருப்பதை, பின் நாற்புறமும் தத்தளித்து தடுமாறி ஆயிரம் அகக்கைகளால் அண்டமெங்கும் துழாவி எனக்கென ஒரு சொல்லை நீ கண்டடைவதை நான் கண்டேன். அச்சொல் பற்றி நின்று ஆசுவாசம்கொண்டு மூச்சு விட்டு திரும்பி &#8221;பவளம் மாதிரில்லாட்டீ இருக்கான் பய&#8221; என்றாய். &#8221;அதை அங்க போடுங்கோ&#8230;இன்னும் தலை நிக்கல்லை&#8230;&#8221;. &#8221;நூறுசாமம் கடல்கொந்தளிச்சால் கரையிலே ஒருதுண்டு பவளம் ஒதுங்குமிண்ணாக்கும் சொல்லு. பவளமணி எண்ணைக்குமே பெரிய ஒரு பவளத்திலே இருந்து உடைஞ்ச துண்டாத்தான் கிடைக்கும். அந்தப் பெரிய பவளமணி அதைக்காட்டிலும் பெரிய ஒரு பவளத்துக்க துண்டு. அங்கே கடலுக்குள்ள பவளப்பெருமலை ஒண்ணு இருக்குண்ணு சச்சிதானந்தம்பிள்ளை சொல்லுவார். அந்தப் பெரும்பவளம் பிறக்க அலைகடல் எந்தளவுக்கு கொந்தளிச்சிருக்கணும்&#8230;ஆயிரம் பல்லாயிரம் சதகோடி காலம் கொந்தளிச்சிருக்குமோ?&#8221; &#8221;பிச்சும்பேயும் சொல்லாம பயலுக்கு ஒரு பேரச்சொல்லுங்கோ&#8221;&#8217; &#8221;வேறெ என்ன பேரு? அம்பது வருசம் நூறு வருசம் ஆயிரம் வருசம் முன்னாலே பேரு வச்சாச்சே&#8230;பயபேரு சொடலைமாடம்புள்ளை..&#8221; &#8221;அய்யே&#8221; &#8221;என்ன அய்யே. நீ முகம்சுளிச்சா எனக்க பாட்டாவுக்கபேரு மாறிப்போயிருமா? இது சொடலைமாடம்புள்ளை. இவனுக்க குட்டிக்குஞ்சாமணியிலே இருக்காரு எங்கப்பா உமையொருபாகம்பிள்ளை. இவனுக்க நெஞ்சில இருக்கப்பட்ட தீயில இருக்கேன் நான்&#8230;இன்னும் அம்பதுவருசம் நூறுவருசம் தாண்டி பிறந்து விழுந்து கிய்யாமிய்யான்னு கத்தி கைய கால ஆட்டிட்டு தொட்டிலிலே கிடக்கதுக்கு&#8230; அன்னையெத்தனை அன்னையோ அப்பன் எத்தனை அப்பனோ பின்னை எத்தனை பெண்டிரோ&#8230;. பவளமுண்ணு நான் விளிக்கட்டாட்டீ இவனை?&#8221;</p>
<p>இட்டும்தொட்டும் கவ்வியும் துழந்தும் சிறுகை அளாவிய கூழுண்டு இதந்ததரு மனையில் வீற்றிருந்து எண்ணியெண்ணி நாட்கள் செல்கையில் தொட்டுத் தொட்டு விரையும் அப்புரவிகளின் குளம்படியோசை கேட்காமலானதென்ன! பூவின் மணத்தை பொருந்திய வாயு புவனத்தை ஒரு பூவாக ஆக்கியதுபோல. எத்தனை எத்தனை சொற்கள். சொற்களில் விளைந்தது சொல்லரும் பெருங்கனி. &#8221;எளவு இவனைப்பெத்ததுக்கு ஒரு தென்னம்பிள்ளையப் பெத்திருந்தா நாலு காயானாலும் கிட்டியிருக்கும்&#8221;. &#8221;பின்ன, போயி தென்னமரத்த கெட்டிகிடவேண்டியதுதானே? என்னெளவுக்கு வடிவீஸரம் வந்து சம்பந்தம் பேசினியோ&#8221; &#8221;அதுக்கு நான் கண்டேனா இப்பிடியொரு வேதாளமாக்கும் நமக்குண்ணு காத்து கெடக்குததுண்ணு&#8221; &#8221;வித்துகொணம் பத்துகொணம்&#8230;&#8221; &#8221;எளவு இவனாலே எனக்கு தலைநிமுந்து நடக்கப்பளுதில்லியே&#8230;நாட்டில நாலுபேரு நாலுவிதமாட்டுல்லா கேக்கான்&#8230;ஏட்டி, தெரியாம கேக்கேன். இவன் ஒரு செவப்புக்கோமணத்த கம்பில கெட்டி பிடிச்சுட்டு தெருவோடி போனா நாட்டுல இருக்கப்பட்ட பாவப்பட்டவனெல்லாம் நல்லாயிடுவானா&#8230;என்னமோ வெள்ளைத்தாளில விரிச்சுவச்ச எளுத்தைப்படிச்சுட்டுல்லா அலையுதான்&#8230;&#8221; &#8221;அதிப்பம் ஆகிவந்த கொணமாக்குமே. எளுதி வச்சதை படிச்சுட்டு எளகியாடுதது&#8230; நீங்க சும்மா மொளவிடிச்ச உரலில் மூடு உரைச்ச நாயி மாதிரி பத்துபதறி அலையாம ஒரு பாகத்திலே இருந்து ஒரு வாயி இடியப்பம் சாப்பிடுங்க.. எடுக்கட்டா?&#8221; &#8221;தேங்காப்பாலு இருக்கா&#8221; &#8221;இருக்கு&#8221; &#8221;மாங்காப்பாலுண்டு மலமேலிருப்போர்க்கு&#8230;&#8221; &#8221;அய்யோ, தொடங்கியாச்சா&#8230;&#8221;</p>
<p>தட்டுப்பந்தலில் மதியவெயில்வட்டம் காசுபரப்ப, பட்டுவேட்டி உடுத்து, அட்சதை அரிசியும் பூவும் முடியில் சிதறியிருக்க, வேர்வையும் மூச்சும் சந்தனமும் புத்தாடையும் புழுங்கிநாற, குரவை ஒலிக்க, பெண் கைப்பிடித்து நிலைவிளக்கு சுற்றிவந்து,  தாலத்தில் புடவைகொடுத்து, தாலியணிவித்து, தாயம் வலம் வந்து தாள்பணியும் இவனை நானே நடித்திருக்கிறேன். மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். சலிப்பறியாமல் இதையே ஆடிக்கொண்டிருக்கிறான் அரங்கேறிய அண்ணல். ஏயம் கலந்த இருவர் தம் சாயத்து பாயும் கரு தன் உருவெடுக்க கொள்ளும் எளிமையான நாட்டியம். மாயம் கலந்த மனோலயம்.பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன்னுருப்போல் எழுந்த இன்னொரு முகம். &#8221;லே, வீணாப்போனவனே.ஒருநடை தொழியுழவுக்கு போயி பாத்துட்டு வான்னா நிண்ணு புஸ்தகமா படிக்கே.. படிச்சு படிச்சு பாழாப்போனியே&#8230; உன் காலுபட்டா குடிவெளங்குமா&#8221; கைகால் உதைத்து கீறிய வாய் பிளந்து கிடந்து தவழ்ந்து எழுந்தார் சிவசுடலை. &#8221;ஏலே சுடலை, எங்க அய்யால்ல நீ&#8230;எங்க அப்பன்ல நீ&#8230;ஏலே.. அய்யய்ய, .ஏளா இங்க வா&#8230;இங்கபாரு &#8230; எடுத்துக்கிட்டுப்போ&#8221; &#8221;பிள்ளைண்ணாக்க ஒண்ணுக்குவிடத்தான் செய்யும்&#8230;அதுக்கா இந்த கூப்பாடு&#8230;&#8221; &#8221;சீ போட்டீ&#8230;பஞ்சாயத்தாப்பீஸிலே மூத்திரவாடையோட போயி நிண்ணா எனக்குல்லா லீக்கு ஒளுகுதுண்ணு நெனைப்பான்&#8230;நீ இன்னொரு வேட்டியும் நேரியதும் எடுத்து வையி&#8221; &#8221;மூத்து நரைச்சாச்சு மாப்பிள்ளைக்கோலத்துக்கு ஒண்ணும் கொறையில்லை&#8230;&#8221;</p>
<p>காலன் வருகையில் கண்பஞ்சடைகையில் பாலுண் கடைவாய்படுகையில் மேல் விழுந்து உற்றார் அழுகையில் ஊரார் சுடு¨கையில் பற்றாமல் புகையும் படுதிரியென ஒருபெயர். அது உன் பெயர். என்பெயரும் ஆனபெயர். &#8221;ஏட்டீ, எங்க பவளம்? மேலப்பத்துக்கு காளையும் மாடும் போயாச்சா?&#8221; குனிந்த முகங்கள். &#8221;என்னமோ கேக்குதாரு&#8230;நாக்கு தளந்திருக்கு&#8230;&#8221; &#8221;பவளம்&#8230;பவளம்&#8221; &#8221;வெள்ளமுல்லா கேக்காரு&#8230;ஏட்டி கொஞ்சம் பாலெடுத்து வாயில விடுடீ போற உசிரு நனைஞ்சிட்டு போகட்டுமே&#8221; குனிந்து நோக்கும் இது என் அம்மை முகமல்லவா. குனிந்து என் மேல் நிற்பது எனையாளும் பெண்முகமல்லவா? விரிந்துகுவிந்து விளைந்த இம்மங்கை கரந்து உள்ளங்கிருக்கும் காரணி.  ஆம். சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு நின்று என்னைக்கொல்லும் பூரணி. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி. மென்முலையொன்று மெத்தென்று தொட்டுச்சென்றது. மூலாதாரம் சுடரெழ கூம்பியத்தாமரைகளெல்லாம் இதழ் விரிக்க ஊனூறல் உய்வரை உச்சிமேல் வானூறல் பாயும் பொற்கணம்.&#8221;அப்பமே சொன்னேனே, பேத்தீண்ணாக்க அவாளுக்கு உயிராக்கும். கோலம்மைண்ணு வாயெடுத்து விளிக்கம்மாட்டாரே..அவ்வோ ஆச்சிபேருல்லா.. சின்னக்குட்டீண்ணுல்லா நாளிகைக்கு நாபது மட்டம் விளிப்பாரு&#8230;அவ கையால ஒருவாயி பாலு விளுந்துல்லா வாயடங்கிச்சு&#8230;போன ஜீவனுக்கு மேலவாசல் தெறந்திருக்கு. உம்மாணை&#8221; தொட்டதெல்லாம் கைவிட்டு, விட்டதெல்லாம் கைப்பற்றி&#8230; ஈராறுகால்களில் எழுந்தருளும் தேவன் வருக. அமுதப்புனல் வரும் ஆற்றங்கரை. ஆற்றில் புதுநுரைக்குமிழிகள். குமிழிக்கண்களில் வான்வெளி வண்ணங்கள். வளைந்த கரையோரக்காடுகள். இனி,பேரினைநீக்கி பிணமென்று பேரிடுங்கள். சூரையங்காட்டிடை சுட்டபின் நீரினில் மூழ்கி நினைப்பொழியுங்கள்.எல்லாம் நினைக்கில் வண்ணமுடன் உண்ணுவதும் உறங்குவதே ஆம்.</p>
<p>&#8221;என்னான்னு தெரியல்ல&#8230;வெள்ளம் குடுத்தப்ப என்னமோ சொல்லவந்தாரு..தேகத்திலே ஒரு நடுக்கம்..பின்ன ஒண்ணுமில்ல&#8221; என்றாள் ஜென்ஸி. &#8221;குட்டிக்க கையாலே ஒரு வாயி வெள்ளம் குடிச்சு சாகணுமெண்ணாக்கும் விதியிருந்திருக்கு, கேட்டுதா&#8221; ஞானமுத்தன் குனிந்து தாடிபறக்கும் பிள்ளைவாளின் முகத்தையே பார்த்தபின் புன்னகை செய்தான். ஊர்கூடி எரியிட்டு ஒருபிடிச் சாம்பலாக்கிய பிள்ளைவாளின் எச்சத்துடன் அவன் மலையேறிவந்து அந்த மாமரத்தடியில் குழியெடுத்து அதை அடக்கினான். உப்பெனக்கரைந்து உள்நீரில் ஊறி ஆழத்து நதியையும் அதனுள் நெருப்பையும் நெருப்பெழும் வெறுமையையும் வெறுமையின் வெளியையும் பிள்ளைவாள் அறியலாகும் என்றெண்ணி அந்த மரத்தடியில் நின்று கீழே பார்த்தான். வழிந்து கிடந்த பசுமையின் நீர்மை முப்பதாண்டுகளுக்கு முன் சொன்ன சொல்லை மீண்டும் சொன்னது,  ஒன்றே என.</p>
<p>மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர்  மக்கள்.</p>
<p><strong> [முழுமை]</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6462</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;அக்ரஹாரத்தில் கழுதை&#8217;</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6456</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6456#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 19:01:06 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6456</guid>
		<description><![CDATA['அக்ரஹாரத்தில் கழுதை' பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, 'அறிவுஜீவிகள்'. ]]></description>
			<content:encoded><![CDATA[<p>வலைப்பதிவர் சுரேஷ் கண்ணனின் வலைப்பக்கத்தில் [  <a href="http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html">http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html</a> ]தொலைக்காட்சியில் ஜான் ஆபிரகாமின் அக்கிரஹாரத்தில் கழுதை என்ற படம் வெளிவரப்போவதைப்பற்றிய பரவசம் மிக்க அறிவிப்பு [அய்யாங்! அக்கிரஹாரத்தைலே கழுதை!] பார்த்தபோது சிரிப்பை அடக்கிக் கொண்டேன். அனேகமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார் என்றுதான் எண்ணினேன். எண்ணங்களை பதிவுசெய்திருக்கிறார். வாழ்க.</p>
<p style="text-align: center;"><img src="http://www.epathram.com/cinema/uploaded_images/john-abraham-award-epathram.jpg" alt="" width="521" height="391" /></p>
<p>சினிமாத்துறையினர் பலர் ஜானைப்பற்றி சில கருத்துக்களை இணையம் மூலமும் செவிவழியாகவும் பெற்றிருந்திருக்கிறார்கள். படத்தை பத்து நிமிடம் பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு &#8221;என்ன சார் இது&#8230;இதுக்கா தேசிய விருது?&#8221; என்றார்கள். பலருக்கு பேசிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பு பீரிட்டது.</p>
<p>&#8221;அந்தக்காலத்திலே பயங்கர சர்ச்சையை கெளப்பின படமாமே சார்!&#8221; என்றார் ஒருவர். எந்தக்காலத்திலும் இந்தப்படம் வெளிவரவே இல்லை.  மிகச்சில திரைமாணவர்கள் அன்றி எவருமே இதைப்பார்த்ததில்லை. இதைப்பற்றிய புகழ்ச்சிகள் எல்லாமே திருமந்திரத்துக்கு அந்தக்காலத்து பிள்ளைமார் &#8216;மனதுக்கெட்டா&#8217; பொருள் சொல்வதைப்போலத்தான்.</p>
<p>இதற்கு தேசியவிருது கிடைத்தது ஒரு வேடிக்கை. க.நா.சு அப்போது நடுவர் குழுவில் இருந்தார். அவர் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தமே பத்து படம் பார்த்திருந்தால் ஆச்சரியம். இந்தப்படத்தையும் அவர் பார்க்கவில்லை. ஆனால் இதன் திரைக்கதையை அவர் வாசித்திருந்தார். அது அவருக்குப் பிடித்திருந்தது. ஆகவே அவர் படத்துக்கு வாக்களித்தார். இன்னொருவரையும் வாக்களிக்க வைத்தார்.</p>
<p>வெங்கட் சாமிநாதனின் திரைக்கதை &#8216;அக்ரஹாரத்தில் கழுதை&#8217; நூலாக வெளிவந்திருக்கிறது. அது டெல்லி வாழ் நண்பர்க்குழு ஒன்றின் கூட்டு முயற்சி என்று சொன்னார்கள். அது ஒரு நல்ல திரைக்கதை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமி அதை ஒரு அமெச்சூர் முயற்சி என்று எழுதியிருக்கிறார். கண்டிப்பாக அமெச்சூர் திரைக்கதைதான். ஆனாலும் ஒரு நல்ல முயற்சி.</p>
<p style="text-align: center;"><img src="http://www.epathram.com/cinema/uploaded_images/john-abraham-agraharathil-kazhuthai-epathram.jpg" alt="" width="521" height="391" /></p>
<p>அதைப் படமாகப் பார்த்தபோது சாமிநாதன் ஆடிப்போய்விட்டதாகச் சொன்னார். முன்னாளில் கிரேஸி பாய்ஸ் ஆ·ப் த கேம்ஸ் என்று ஒருபடம் வந்தது. அதில் ஒரு &#8216;சிற்பி&#8217; ஒருவரை கையில் சுடருடன் நிற்கச்செய்து கணம் தோறும் கூர்ந்து நோக்கி சிற்பம் செதுக்குவார். அசையாதே என்று அடிக்கடி குரல் வேறு. கடைசியில் பார்த்தால் சம்பந்தமே இல்லாமல் மேஜையும் நாற்காலியும் கலந்தது போல ஒருவடிவம். அதுதான் ஜானின் படம்.  </p>
<p>&#8216;அக்ரஹாரத்தில் கழுதை&#8217; பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, &#8216;அறிவுஜீவிகள்&#8217;. ஜானின் எல்லா படங்களும் தழுவல்கள், எல்லா படங்களும் எந்தவிதமான பொறுப்பும் உழைப்பும் இல்லாமல் எடுக்கப்பட்டவை. எந்தபப்டத்தையுமே உலகத்திரைப்படங்களில் சில நல்ல படங்களையாவது எடுத்த எவருமே பொருட்படுத்த மாட்டார்கள்.</p>
<p>தன்னுடைய படமென ஜானே சொல்லிக்கொள்ள விரும்பாத &#8216;வித்யார்த்திகளே இதிலே&#8217; என்றபடம் எந்த ஒரு திரைக்கல்லூரி மாணவனின் தேர்வுப்படத்தைவிடவும் சாதாரணமானது.  அது ஒரு இத்தாலியப்படத்தின் நகல் என்று ஜானே சொன்னார். அதை ஒரு காவியம் என்று ஒரு தமிழ் அறிவுஜீவி எழுதி வாசித்தேன். இலக்கிய ரசனையில் அவர் ஒரு பள்ளிப்பையன் என்பது என் அபிப்பிராயம். சினிமாவிலுமா என்று எண்ணிக்கொண்டேன்.</p>
<p style="text-align: center;"><img src="http://www.keralaflashnews.com/wp-content/uploads/2009/08/john-rw.jpg" alt="" /></p>
<p>ஜான் கேரளத்தின் நக்சலைட் இயக்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் உருவான மனச்சோர்வுக்காலத்தில் அவர்களின் அடையாளமாக ஊடகவியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். உருவாக்கியவர்களின் பெயர்களையே என்னால் கூறமுடியும். இப்படி எளிதாக ஒன்றை உருவாக்கி கணிசமானவர்களை ஏமாற்ற முடிகிறதென்பதே என் இளமையில் ஊடகங்கள் மீதான என் அவநம்பிக்கையை உருவாக்கியது.</p>
<p>ஏன் ஜான் ஒரு சாராரில் செல்லுபடியாகிறார்? அவர்கள் மிகப்பெரும்பாலும் சராசரி வெள்ளைச்சட்டை ஆசாமிகள். உண்மையான படைப்பூக்கம் மூலமோ அறிவார்த்தம் மூலமோ தன்னை கண்டடையமுடியாதவர்கள். ஆகவே ஒரு பகற்கனவுத்தளத்தில் தங்களை கலகக்காரர்களாக அல்லது தோற்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களாக காட்டிக்கொள்ள விழைகிறார்கள். அதற்கு ஜான் ஒரு முகாந்திரம்.</p>
<p>இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜானின் கலகம் பற்றிப் பேசுபவர்கள் அந்த கதையும் திரைக்கதையும் வெங்கட் சாமிநாதனால் எழுதப்பட்டது என்பதை விட்டுவிடுவார்கள். இவர் குடிக்கமாட்டாரே. சாமிநாதனின் பெயரே சொல்லப்படாமல்கூட தமிழில் ஒரு &#8216;அக்ரஹாரத்தில் கழுதை&#8217; பதிப்பு வந்திருக்கிறது, ஜானின் பெயரில்!</p>
<p>இந்தச் போலிச்சித்திரங்களுக்கு அப்பால் ஜான் அபாரமான படைப்பாளுமை கொண்ட ஒரு மனிதர். துல்லியமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். கவிதைக்கு மிக நெருக்கமாகச் செல்லக்கூடியவர். ஆன்மீகத்தின் உயர்கவித்துவமும் உயர் அங்கதமும் முயங்கும் தளத்தில் உலவும் திராணி கொண்டவர். இன்று அவரை விதந்தோதும் எவரும் அந்த ஜானின் மனநிலையின் விளிம்பைக்கூட எட்ட முடியாது.</p>
<p>ஜானின் நல்ல சிறுகதைகளில் [கோட்டயத்தில் எத்ர மத்தாயி உண்டு?]  அவரது அங்கதம் பதிவாகியிருக்கிறது. கவனமின்றி வைக்கப்பட்டவையானாலும் அவரது &#8216;செறியாச்சன்றெ க்ரூர கிருத்யங்கள்&#8217; போன்ற படங்களில் சில இடங்களில் அந்த அங்கதம் வெளியாகிறது. ஜானின் ஊடகமான சினிமா மிகக்கடுமையான உழைப்பைக் கோருவது. அவரோ மிகச்சிறிய அளவில்கூட கவனத்தையும் உழைப்பையும் குவிக்கமுடியாதபடி பலவீனமானவர். இதுவே அவரது பிரச்சினை.</p>
<p>நானறிந்த மென்மையான கவித்துவமான ஜானை, குடிக்காத போது குடிக்க நேர்ந்ததைப்பற்றி மனமுடைந்து அழுகிற ஜானை, தன் கலையை குடி அழித்ததைப் பற்றிச் சொல்லி பாட்டிலை காசர்கோடு தொலைபேசி நிலைய வராந்தாவில் வீசி உடைத்து விம்மிய ஜானை , நினைத்துக்கொள்கிறேன். இப்போது &#8216;அக்ரஹாரத்தில் கழுதை&#8217;யை பார்த்திருந்தால் &#8221; என்றெ ஈஸோயே, ஈ புத்திஜீவிகளேக்கொண்டு ஒரு கிலோ பீ·பின்றே பிரயோஜனமும் இல்லல்லோ&#8221; என்று சிரித்திருப்பார்.</p>
<p><a href="http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html">http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html</a></p>
<p><a title="Permanent Link: ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்" rel="bookmark" href="http://www.jeyamohan.in/?p=537">ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்</a></p>
<p><a title="Permanent Link: ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்" rel="bookmark" href="http://www.jeyamohan.in/?p=538">ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்</a></p>
<p><a title="Permanent Link to மலையாள சினிமா ஒரு பட்டியல்" rel="bookmark" href="http://jeyamohan.in/?p=534"><span style="color: #0066cc;">மலையாள சினிமா ஒரு பட்டியல்</span></a></p>
<p><a title="Permanent Link to மலையாள சினிமா கடிதங்கள்" rel="bookmark" href="http://jeyamohan.in/?p=528"><span style="color: #0066cc;">மலையாள சினிமா கடிதங்கள்</span></a></p>
<p><a title="Permanent Link to சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா." rel="bookmark" href="http://jeyamohan.in/?p=521"><span style="color: #0066cc;">சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.</span></a></p>
<p><a title="Permanent Link to தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை" rel="bookmark" href="http://jeyamohan.in/?p=237"><span style="color: #0066cc;">தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை</span></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6456</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>கேணி சந்திப்பு</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6464</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6464#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 06:31:01 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[நிகழ்ச்சி]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6464</guid>
		<description><![CDATA[ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்
]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் இந்தமாதம் நான் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவதாக இருக்கிறேன். வரும் <strong>பிப்ரவரி 14</strong> [இரண்டாவது ஞாயிறு] அன்று நிகழ்ச்சி. நேரம் <strong>மதியம் 3.30</strong></p>
<p><em>“14 ஞாயிறு மதியம் சரியாக 3.30க்குநிகழ்ச்சியைத்தொடங்கி 6.30க்கு முடிப்போம். முதலில் உங்கள் பேச்சு, பின்னர் கலந்துரையாடல். பொதுவாக சர்ச்சைகள், அக்கப்போர்கள் முதலியவற்றை அனுமதிப்பதில்லை. இலக்கியம், சமூகம் சார்ந்து பேசவே பார்வையாளரை ஊக்குவிக்கிறோம்.  எந்தத்துறை பற்றியும் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் அவை தரம் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதை இதுவரை வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம்”</em></p>
<p>என்று அறிவிக்கிறார் ஞாநி.  வாசகர்களை வருக என வரவேற்கிறேன்</p>
<p>விலாசம்: <strong>39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6464</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈராறு கால்கொண்டெழும் புரவி &#8211; 5</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6392</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6392#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 19:01:51 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[குறுநாவல்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6392</guid>
		<description><![CDATA[மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில்பிய்ந்துசென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில் ஒவ்வொருநாளும் தன்னுடன் தான் மட்டுமாக சிறுதகரக்குடிலில் வாழ்ந்தார். தகரக்கொட்டகை காற்றில்பிய்ந்துசென்றபோது இன்னும் மேலே சென்று ஒரு நரிக்குகைக்குள் ஒதுங்கிக் கொண்டார். அக்குகையைத் தோண்டி விரிவாக்கி கல்லடுக்கிச் சுவர் கட்டி உள்ளே வாழ்ந்தார். அவர் பெயரை அறிந்த கோனார்கள் காலமாகி அடுத்த தலைமுறை உருவாகி வந்து அவரை குகைச்சித்தர் என்றது.</p>
<p>அவ்வப்போது ஊரில் இருந்து யாராவது சோறும் பழங்களும் கொண்டுவந்து குகைச்சித்தருக்குப் படைப்பதுண்டு. பெரும்பாலும் ஏதாவது மாடுமேய்க்கும் பையனின் கையில் கொடுத்தனுப்புவார்கள். குகைக்குள் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கு அற ஆனந்த தேறல் புளித்துப் புளித்துப் பருகும் பிள்ளைவாளை மெல்ல &#8221;சாமீ சாமீ &#8221; என்று அழைப்பார்கள். அவர் மெல்ல எழுந்து கண் மலர்ந்தால் கைகூப்பி வளைந்து கும்பிட்டு &#8221;சாமி&#8230;படைப்பு இருக்கு&#8221; என்பார்கள். அவர் ரத்தவிழிகளால் அந்த மானுட நிழல்களைக் கூர்ந்து பார்த்தபின் மெல்ல எழுந்து வந்து அமந்துகோண்டதும் வாழையிலை விரித்து சோற்றை அள்ளி வைப்பார்கள். பெரும்பாலும் உப்பில்லாத சித்ரான்னம். மூன்றுவகைப் பழங்கள். அவர் மௌனமாக சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு என்ன மொழியென்றே புரியாத சொல்லால் ஆசியளித்துவிட்டு குகையிருளுக்குள் சென்று அமர்ந்துகொள்வார்.</p>
<p>வெளியே நின்று கையேந்தி &#8221;சாமி, வரம்குடுக்கணும்&#8221; என்று இரப்பார்கள். பீடிருக்க ஊணிருக்க பிள்ளைகளுந்தாமிருக்க மாடிருக்க கன்றிருக்க வைத்தபொருளிருக்க ஏதில்லாது நிற்கும் அவர்களை அவர் திடீரென்று திகைத்துப்பார்ப்பார். &#8221;சாமீ, கண்பார்க்கணும்&#8230;ஏழைச்சனங்க சாமி&#8221; . என்ன சொல்கிறார்கள்? அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே&#8230; சட்டென்று சிரிப்பு பீரிட்டுவந்து அவரது உடலை உலுக்கும். மெலிந்த மார்பு அதிர தாடி அதில் உரசும். வெளியே நிற்பவர் மேலும் கூசி வளைந்து கைகூப்புவார். தாளமுடியாத சிரிப்புடன் பிள்ளைவாள் ஆசி போல கையாட்டி &#8221;போ&#8230;போடா&#8221; என்று சொன்னதும் பயந்தவர் போல ஓடி மலைச்சரிவிறங்குவார் பக்தர்.</p>
<p>ஒன்பது வருடம் பிள்ளைவாள் குகைச்சாமியாக இருந்தார். அவர் நட்ட மாமரம் நாற்புறமும் கிளை பரப்பி இலைதழைத்து அந்த பொட்டல்வெறுமைபடர்ந்த மலைச் சரிவில் தன்னதனித்திருப்பது தானொன்றறியாத நிலை என்ன அங்கே நின்றது. கீழே பாறையடி  கணியாகுளம் பார்வதிபுரம் வட்சேரி வரைக்கூட மலைச்சரிவில் பச்சைப்புள்ளியாக அந்த மரம் தெரிந்தது. அங்கே சித்தர் இருக்கும் தகவல் செவிவழிக்கதையாகப் பரவியது. &#8221;எளவு, சித்தன்லாவே அங்கிண இருக்கான்&#8230;காத்தைக் குடிக்கானாம்வே&#8221; என்றார் வாழைக்கு அருகுபிடிக்க அதிகாலையில் மண்வெட்டிகளுடன் சென்ற நேசமணி.</p>
<p>&#8221;அவனுக்கு ஒரு பத்துதலை நாகம்லா கொடைபுடிக்குவு&#8230;உம்மாணைவே, நம்ம கோலப்பனுக்க சொக்காரன் கொமரேசன் ரண்டு கண்ணால பாத்திருக்கான்&#8230;&#8221; என்றார் கபிரியேல். சித்தரின் ஆண்குறி ஒரு பெரிய மலைபபாம்பாக மாறி தரையில் ஊன்றி நிற்க அதன் மேல் ஏறி அமர்ந்து அவர் தவம்செய்வதாக நாட்டுவைத்தியர் ராசமணி சொன்னார். &#8221;அதுக்குள்ள இருக்கப்பட்டது ராசகலையில்லா&#8230;அமிருதம்வே&#8230;நானாழி நஞ்சு நாற்கழஞ்சானா நஞ்சும் அமுதமாமே நாகமணியேண்ணாக்கும் பாட்டு, ஏது?&#8221; &#8221;குப்பியிலே பிடிச்சுவச்சா மணியா ஆவுமாவே?&#8221; என்று கேட்டு அடிவாங்காதொழிந்தார் புல்லுவிளை அருமைநாயகம்.</p>
<p>மாமரத்தடியில் கால்கொண்டு கட்டி கனல்கொண்டு மேலேற்றி பால்கொண்டு சோமன் முகம்பற்றி அமர்ந்து தன்னுள் இருந்தார் பிள்ளைவாள். மாமரத்தின் அடியில் நீரும் நெருப்பும் காலும் ககனமும் சுழிக்கும் சுழிமுனையிருப்பதை தன் உடலையே வேம்புக்குச்சியாக ஆக்கி உணர்ந்துகொண்டிருந்தார். ஆனால் ஒருநாளும் அதனுள் இறங்க அவரால் முடியவில்லை. நீரை வென்றவர் நெருப்பை வெல்லவில்லை. நீரகத்து இன்பம் பிறந்ததென்றாலும் நெருப்பிடை காயத்தில் சோதி பிறக்கவில்லை என்று அவர் மட்டுமே உணர்ந்தார். ஒவ்வொருநாளும் தலையால் முட்ட , முட்டும்தோறும் சுவர் கனத்து வருவதையே அறிந்தார்.</p>
<p>இருட்டுக்குள் நடப்பவன் இருட்டைப்பழகியபின் ஒளியை அஞ்சும் நிலை ஏற்பட்டது போல. பற்றறியா முத்தர்தமை வாழைப்பழம்போல விழுங்குகிற பரமும் கண்பார்க்கவில்லை. ஏற்கனவே பேதி போலும். கரிச்சா இஞ்சி காஞ்சா சுக்கு என்ற பழமொழி பிள்ளைவாளின் நெஞ்சுக்குள் எப்போதோ குடியேறி அதுவே ஒரு அர்த்தமும் இல்லாமல் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. சுக்கென உடல் நொய்ய சிக்கென எழுந்து மனம் பேருருவம் கொள்ள  அகம் மட்டுமே தானாக அவிந்த உடலில் நின்று கொழுந்தாடுவதை கண்டுகொண்டிருந்தார். முத்தி முடிவில்லீதென்று முன்னூலும் பின்னூலும் மற்றநூலெல்லாம் மறந்து மெய்யெனப்படுவதே பொய்யாக இருந்தபோது  அப்படி இருப்பது அவராகவும் பிறிதொருவர் வேறெங்கோ அலைவதாகவும் மாயம் காட்டிய மனமெனும் ஒருபாவி மயங்கிச்சிரித்து உடன்வந்தது.</p>
<p>அந்நாளில் ஓரிரிரவில் பிள்ளைவாள் ஒரு கனவு கண்டார். கனவிலும் ஒரு கனவே காணலானார். அக்கனவினுள் ஒரு பிள்ளைவாள் விசாலமான வீட்டுத்திண்ணைமேல் கனத்த தொந்தி தம்மதென்று தாமிருந்து பட்டினத்துப்பிள்ளைவாளின் பழைய நூலொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு சொல்லும் காதுக்குள் கோழியிறகால் குடைவதுபோல் பேரின்பமூட்டியது. அடிக்கடி கிக்கிளி பூண்டு சிரித்தும் யாராவது பார்க்கிறார்களா என்று ஓரக்கண் எய்து கவனித்தும் எழுத்தெண்ணி தமிழ் நறவு மாந்திக்கொண்டிருந்தார். மங்கையர் யோனி மிசை வைத்திருக்குமாசைதனை பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்து கங்கைமதி வேணியான் பாதார விந்தத்தில் வைத்தக்கால்&#8230;.</p>
<p>&#8221;எளவு, அத எப்டிப்போட்டு பங்கு வைக்கியது? பங்குவச்சா ஒண்ணு நூறாட்டுல்லா ஆவும்&#8221; என்று  சிந்தாந்தமாக விரித்தபோது நெல் காயப்போட நாகம்மை வெளியே வந்து முற்றத்தில் பனம்பாயை விரிக்க ஒருபக்கம் அவள் விரித்துச்செல்ல மறுபக்கம் அது சுருண்டுவந்தது &#8221;செத்த இந்த எளவை வந்து பிடியுங்கோ&#8230; ராப்பகலா அந்த எளவெடுத்த சனியன வச்சு மாரடிக்காம&#8221; என்றாள் நாகம்மை. &#8221;ஏட்டி அது கன்ம மலமுல்லா? விட்டா விடுமா, சுட்டா சுடுமா? நட்டா முளைக்கும் , நாலூர் தேடிவரும் பட்டாங்கில் பாட்டாவும்&#8230; மலம்னா என்னாண்ணு நெனைக்கே..?&#8221; &#8221;ஓ, வாயெடுத்தா மலம்&#8230; நினைச்சு ஒருவாய் சோறு உண்ண முடியாம ஆயாச்சு இந்த வீட்டிலே&#8221; பிள்ளை, &#8221;இது வேற மலமுல்லா&#8221;என்றார். &#8221; ஆமா, போயி ஓரோ மலமாட்டு எடுத்து மோந்து பாத்து கண்டுபிடியுங்கோ&#8221;</p>
<p>பிள்ளைவாள் எழுந்து வந்து பாயைப்பிடிக்க அவள் அதை விரித்து கட்டுத்தறியை எடைவைத்தாள். பிள்ளைவாளின் பேதை மடநெஞ்சு பிறந்திடத்தை தேட, கறந்திடத்தை கண் தேடியது. &#8221;ஏட்டி , உங்க மாமியாக்காரி என்ன செய்யா?&#8221;. ரோகம் பிடிகிடைத்த நாகம்மை &#8221; அய்யே, இது என்ன கார்த்திகை மாசத்து பைரவசாமி மாதிரி எப்ப பாத்தாலும் பென்சிலு மொனையோட&#8230;? வெக்கமில்லை?&#8221; என்றாள். &#8221;உருவின வாளை உறையில போடாத வம்சமுல்லா நாங்க&#8221;. &#8221;வெளங்கும்&#8221; என்று அவள் நொடித்துச் சிரிக்க &#8221;கண்ணுதப்பினா சட்டியும் கலயமுமாட்டு போயிடுவா சிறுக்கி மூளி புருசனுக்கு வாடை குடுக்கதுக்கு&#8230;ஏட்டி சவத்துமட்டை, பசுவுக்கு கூளம் போடச்சொன்னா அங்க என்ன செய்யுகே?&#8221; என்றது உள்ளே குரல். பிள்ளைவாள் கணத்தில் திண்ணையில் பாய்ந்து அன்னையெத்தனை எத்தனை எத்தனையோ என்ற விசாரத்தில் மூழ்கினார்.</p>
<p>கண்விழித்த பிள்ளை காற்றில் அரசிலைபோல நடுநடுங்கி அப்படியே அமர்ந்திருந்தார். மெய்போலும்மே மெய்போலும்மே. பொய்யே என்றும் மெய்போலும்மே. எதிரே நிலவெழுந்த பெருவெளி. கால்கள் களைத்தாட எழுந்து மெல்ல குகைவிட்டு வந்து  பாலில் குளித்த யானை என நின்ற கரும்பாறை ஏறி அமர்ந்து விரிந்த காட்டை பார்த்தார். நிலவை அளைந்த மரங்கள் மேல் காற்று ஓடிக்கொண்டிருந்தது. பூத்த மரங்கள். காய்விட்ட கனிமரங்கள். பச்சைவாசனையும் பன்மலர்வாசனையும் நிறைந்த காற்று வந்து தாடியை அளைந்து சென்றது.</p>
<p>நிலவில் குளிர்ந்து கூழாங்கற்கள் நிழல்மீது அமர்ந்து தவமிருந்த மண்ணில் தன்னுடலை வைத்து விலகி அதைப்பற்றி நீர் நோட்டமென நிலநோட்டமிட்டார். பூமி சூல்கொண்ட பெருவெளியின் வெறுமை நெருப்பாகி நெருப்பின் மேல் நீராகி நீர் மொள்ளும் வேராகி வேர்நீர் விழுங்கிய இலைவெளியாகி இலைவெளிமேல் காற்றாகி காற்றுபரந்த ககனமாகி ககனம் சுமந்த வெறுமையாகி நின்றதைக் கண்டு பிரமித்து சொல்லிறந்து சுழியழிந்து ஒன்பதும் ஒன்றாகி ஒன்று மேலெழுந்து ஒன்றிலாதாகி அமர்ந்திருந்தார்.</p>
<p>பின் திரும்பி தன் குகையை, அங்கே முற்கணம் வரை இருந்த அவனை, உப்பு தேடி அவன் நட்ட புளிப்பை சிவந்து பழுத்த கண்களால் பார்த்தார். பூவும்பிஞ்சும் விடாமல் பச்சை தழைத்து மலட்டுப்பேரழகுடன் நின்றது மாமரம். அந்நிலையில் ஆவிபிரிந்ததென்றால் அந்த மாமரத்தடி எத்தனை நூற்றாண்டுகளுக்கு சித்தர் சமாதியென வழிபடப்படும் என்று எண்ணிக்கொண்டார். எத்தனை சித்தர்கள், எத்தனை யோகிகள்.  அறிந்தவை கோடிகோடியென்று அறிந்து சிரிக்கிறது அறியவொண்ணாமை. நிலா நிறைந்த இரவில் மலைச்சரிவில் அந்த மரத்தடியின் தனிமையில் அப்பால் நின்ற நரி வெருண்டு நோக்க கக் கக் கக் என்று குலுங்கிச் சிரித்துச் சிரித்து மெல்ல அடங்கி கண்ணீர் மல்கி பின் மெல்ல அழலானார்.</p>
<p>அழுவது அவரா என்று அவரே எண்ணிக்கொண்டார். அழுது எத்தனை காலம் என்று உள்ளூர எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பவன் எண்ணிக்கொள்ள இன்னொருவன் மேலும் மேலும் உடைந்து உருகிச் சிதறி அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் தாடியை நனைக்க மெலிந்த மார்பு குலுங்க தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதார்.  அழுது ஓய்ந்து அங்கேயே படுத்து கண்ணீர் உலர கண்ணயர்ந்தார். பின்பு எழுந்தபோது நிலா கிழக்கே சரிந்திருந்தது.</p>
<p>அவர்  குளிர்ந்த நீலநிலவையே நெடுநேரம் நோக்கியபடி இருந்தார். பின்பு மெல்ல எழுந்து உடலை நெளித்து சோம்பல்முறித்தபின் மலைச்சரிவிறங்கினார். நெடுநாட்களாக நடைக்குப் பழகாத கால்கள் தடுமாறின. கூழாங்கற்கள் இடற பாம்புக்குஞ்சுகள் பதறி நெளிந்தோட குள்ளநரிகள் முனகியபடி புதருக்குள் இருந்து எட்டிப்பார்க்க நடந்து களைத்து பாறைகளில் அமர்ந்து மீண்டும் களைத்து கீழிறங்கி வந்தார்.</p>
<p>ஓடையில் நீரள்ளிப் பருகி இளைப்பாறியபோது காலை மெல்ல வெளுத்து வருவதைக் கண்டார். மண்சாலையில் காளைகளுடன் நுகம் தூக்கிச்சென்ற ஏசுவடியான் &#8221;என்னவே, ராத்திரி மாம்பட்டைவெள்ளம் நெத்திக்குக் கேறிப்போச்சோ? போவும் வே, வீட்டுக்கு போயி வல்ல மோரோ எளநீரோ மற்றோ குடியும்&#8230;&#8221; என்றபடி கடந்துசென்றான். &#8221;வயசான காலத்திலே வீடடங்கிக் கெடக்காம&#8230;&#8221; என்று அவன் முணுமுணுத்துச்செல்வது தெரிந்தது.</p>
<p>அவரை எவருமே அடையாளம் காணவில்லை. புழுதியில் பனியீரம் படிந்திருப்பதன்மீது களைத்த கால்களை தூக்கி வைத்து, ஆழத்து நீர் காட்டியவழியில் சென்று, இளவெயில் எழுந்த நேரத்தில் ஞானமுத்தனின் இல்லத்தை அடைந்தார். சிமிண்ட் போட்டு ஓடு வேய்ந்த வீட்டு முகப்பில் அவித்த நெல்லை பனம்பாயில் காயவைத்துக்கொண்டிருந்த மரியாள் &#8221;ஆருவே? பண்டாரமா? நாடு நல்லா வெளங்கும். வே, நேரம் வெளுக்கேல்ல அதுக்குள்ள பண்டாரமும் பரதேசியுமா படியேறி வந்தாப்பின்ன வீட்டுலே லெச்சுமி மயிராட்டா இருப்பா..? போவும்வே&#8221; என்றாள்.</p>
<p>இரும்புக்கதவைப் பற்றியபடி பிள்ளைவாள் அப்படியே நின்றார். மரியாள் ஏறிட்டுப்பார்த்து &#8221;ஏட்டி ,எளவெடுத்தானுக்கு வல்ல கஞ்சியோ பழஞ்சியோ இருந்தா கொண்டுவந்து குடுட்டீ&#8230;படப்புகேக்குத மாடன் மாதிரில்லா வந்து நிக்கான்!&#8221; என்றாள். உள்ளிருந்து உருண்டை முகமுள்ள கரிய இளம்பெண் அலுமினியச் சட்டியில் நிறைய குளிர்ந்த பழையதுடன் வந்தாள். அதில் மயக்கிய மரசீனி மிதந்தது. &#8221;இஞ்சேருங்க சாமி&#8230;&#8221;என்றாள் பெண்.</p>
<p>நிமிர்ந்து அந்த முகத்தைப்பார்த்தார் பிள்ளைவாள். இளமையே அதுவான கரிய மென்சருமம் , கழுத்தும் தோள்களும் எங்கும் எண்ணைபூசிய இலை போல ஒரு மெருகு.  கருணையுடன் விரிந்த புன்னகையும், கனிந்து இனித்த பார்வையும். உயிர் உயிரென ஒருகணமும் நில்லாமல் கொப்பளிக்கும் இந்த பெருங்கடலின் அலைநுரை அள்ளி வீடுகட்டும் பிரக்ஞை..அவரது மனம் எல்லாவற்றையும் அறுத்து மீண்டு வந்தது. கண்களை அவள் மேலிருந்து விலக்காமல் இரு கைகளையும் விரித்து அந்தச் சட்டியை வாங்கி வாய் எடுக்காமல் மொத்த பழையதையும் குடித்தார். வயிறும் உடலும் உடலாகி நின்றதும் எல்லாம் குளிர்ந்து  நிலத்தில் அமர்ந்தன.  காற்றில் பாறிப்பதறிய பஞ்சுத்துகளொன்று மழை நனைந்து மண்ணில் அமர்ந்தது.</p>
<p>தாடி சொட்ட நிமிர்ந்து சட்டியை நீட்டியபோது &#8221;இன்னும் வேணுமா சாமி?&#8221; என்றாள். வேண்டாம் என்று தலையசைத்து தாடியை துடைத்தபின் &#8221;அன்னலச்சுமியாக்கும்.. சந்தானலெச்சுமியா இருப்பே&#8221; என்றார். அவள் முகத்தின் கருமைக்குள் செம்மை பாய கண்கள் சிரிப்பில் ஒளிவிட்டன. முகம் மலர்ந்து இடுப்பில் கைவைத்து எழுந்த மரியாள் &#8221;வந்து இரியுங்க சாமி&#8230; சீணம் இருக்கும்லா?&#8221; என்றாள். பிள்ளை மெல்லச்சென்று ஒட்டுத்திண்ணையில் அமர்ந்தார்.</p>
<p> &#8221;இவ எனக்க மருமொவளாக்கும்&#8230; சென்சிண்ணு பேரு.&#8221; என்றாள். உள்ளே மெல்லிய பெண்குரல் &#8221;ஜென்ஸி&#8221; என்றது. &#8221;ஓ  அதாக்கும்&#8221; என்ற மரியாள் &#8221;சாமிக்கு தூரமா?&#8217; என்று கேட்டாள். மெல்ல புன்னகைசெய்த பிள்ளைவாள் &#8221;ரொம்பதூரம் அம்மா&#8230;&#8221; என்றபின் &#8221;உனக்க கெட்டினவன் எங்கே?&#8221; என்றார். &#8221;அது இங்கிணதான் கெடக்கும்&#8230; அந்திக்கு கள்ளு உள்ள போனா காலம்பர எந்திரிச்சதுமே வடக்கவெளைக்கு ஓடணுமே&#8221; என்றபின் மரியாள் நெல்லை காலால் பரப்பும் மென்மையான நடனத்தை  ஆரம்பித்தாள். உள்ளே இருந்த ஜென்ஸி &#8221;மாமா இப்பம் வந்திருவாரு&#8230;வயலுக்கு போயி பாத்துட்டு ஓடையில குளிச்சிட்டுதான் வருவாரு&#8221; என்றாள்</p>
<p>வீட்டுக்கு வலப்பக்கம் பெரிய மாட்டுத்தொழுவில் இரு பசுமாடுகள் நின்றன. மடிபெருத்த கராம்பசுவின் அருகே கன்றுக்குட்டி சலிக்காமல் சப்பிக்கொண்டிருந்தது. அங்கே சாணியை வழித்து குட்டையில் வைத்திருந்ததன் அருகே ஒரு சிறிய நாய்க்குட்டி கட்டப்பட்டு &#8216;வள் வள் &#8216; என்று பிள்ளையைப் பார்த்து குரைத்தது. பக்கவாட்டில் புதிய வைக்கோல் வாசத்துடன் போர். தூரத்தில் ஒரு சிறிய பைக் நின்றது.</p>
<p>குளித்து தலைதுவட்டாமல் முடியை நீவி மேலேற்றி விட்டு ஈரம் காயா உடலுடன் காதுக்குள் கையை விட்டு ஆட்டியபடி ஞானமுத்தன் வந்தான். தலைமயிர் நன்றாக நரைத்திருந்தாலும் பண்டு போல கட்டுமஸ்தாகத்தான் இருந்தான். உள்ளே வந்து அவரைப்பார்த்ததும் ஒருகணம் நின்றபின் சிரித்தபடி, &#8221;இல்ல இதாரு பிள்ளவாளா? என்னவே உம்ம மாமரம் பூத்துதா?&#8221; என்றான். அடிபட்டவர் போல பிள்ளை எழுந்து நின்றுவிட்டார். &#8221;என்னவே?&#8221; என்றான் ஞானமுத்தன். மெல்லத்தணிந்தபின்னர் &#8221;பூக்கல்லை&#8221; என்றார் பிள்ளைவாள். &#8221;அதுசெரி&#8230;அப்ப அடியூற்று ஓடினா மட்டும் போராது&#8230;&#8221; என்றபின் &#8221;வாரும்&#8221; என்று உள்ளே அழைத்துச் சென்றான்.</p>
<p>&#8221;மாமாவுக்கு இவரை தெரியுமா?&#8221; என்றாள் ஜென்ஸி &#8221;பின்ன? நம்ம பழைய குருவாக்குமே? மண்ணுக்குள்ள மழை இருக்கப்பட்ட விஷயத்தை இவருல்லா சொல்லித்தந்தாரு&#8230; இரியும் வே&#8221; என்றான் ஞானமுத்தன். பிள்ளை தயங்கியபடி அமர்ந்துகொண்டார். &#8221;வெள்ளம் வல்லதும் குடிக்கேரா?&#8221; பிள்ளை மெல்ல &#8221;இப்பம்தான் குடிச்சேன்&#8221; என்றார். ஞானமுத்தன் மருமகள் ஓட்டுச்செம்பில் அளித்த  எருமைப்பால் விட்ட காப்பியை ஒரே மூச்சில் கொதிக்கக் கொதிக்க குடித்து செம்பை திருப்பிக்கொடுத்துவிட்டு அமர்ந்தான்.</p>
<p>&#8221;கண்டீராவே&#8230;இப்பம் இதாக்கும் நம்ம செட்டப்பு. நாலு பெட்டைக்குட்டியள கெட்டிக்குடுத்தாச்சு. நல்லா இருக்காளுக. பெயலுக்கு இந்த கறுத்தரெத்தினத்தை கூட்டிட்டும் வந்தாச்சு&#8230;நம்ம் குட்டிய பாருங்க, சுந்தரியில்லா?&#8221; பிள்ளை திரும்பி ஜென்ஸியைப் பார்த்து &#8221;பின்னே?&#8221; என்றார். அவள் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி வெட்கிச் சிரித்தாள். &#8221;பீயேக்காரியாக்கும்&#8230;இங்கிலீஸ¤ மணிமணியா பேசுவா&#8221; என்றான் ஞானமுத்தன். &#8221;சொல்லுட்டி, இங்கிலீஷ¤ சொல்லி காட்டு பாப்பம்&#8221; அவள் சிரித்து &#8221;அய்யோ&#8221; என்றாள். &#8221;ஒருகொறையும் இல்ல&#8230;மாடு கண்ணு வீடு மனை எல்லாம் இருக்கு. சுபம் மங்களம்&#8230;&#8221; பிள்ளைவாள் சிரித்து &#8221;நல்லா இரு&#8221; என்றார்.</p>
<p>&#8221;எல்லாம் உமக்க ஆசீர்வாதமுல்லா&#8230;ஆனா நீருல்லாவே சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலம் தேடிபோய் உக்காந்துபோட்டீர்&#8221; பிள்ளைவாள் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார்.&#8221;செரி இரும், பேசுவோம். எனக்கு குறெ சோலி கிடக்கு&#8230; செட்டித்தெருவிலே ஒரு வீடு வைக்குததுக்கு இடம் பாத்து சொல்லணும்&#8230; வீட்டுக்கு வட்டி எங்கன்னு தேடுகவனுக செட்டிமாரு&#8230;  வட்டியில்லேன்னா செட்டி இல்லல்லா&#8230;இப்பம் வந்திருதேன்&#8221; என்று எழுந்து வெள்ளை வேட்டி கட்டி கையில்லாத சட்டை போட்டு குடையும் செருப்பும் பட்டைபெல்ட்டில் பர்சுமாக கிளம்பிப் போனான். பிள்ளைவாள் அங்கே திண்ணையில் படுத்து கொஞ்ச நேரம் தூங்கினார்.</p>
<p>ஞானமுத்தன் வந்து மதியம் சாப்பிட்டபின் அவன் அவரை வெளியே தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே தென்னைமரங்களுக்கு நடுவே ஓலைவேய்ந்து ஓர் அறையும் திண்ணையும் கொண்ட சிறிய குடில் இருந்தது. &#8221;இது நமக்கு வல்லப்பமும் தனிச்சிருக்கணுமெண்ணு தோணினா வாற இடமாக்கும்&#8221; என்றான். திண்ணையில் பிள்ளைவாள்  அமர்ந்துகொண்டார். ஞானமுத்தன் கயிற்றுக்கட்டிலை எடுத்துப்போட்டு அமர்ந்து வெற்றிலை பொட்டலத்தை பிரித்தபடி &#8221;முறுக்குதீரா?&#8221; என்றான். &#8221;வேண்டாம்&#8221; .&#8221;ஊனப்பால் உறவெதுக்கு ஞானப்பால் லாகிரி போருமே எண்ணு சொல்றீரு&#8230;&#8221; என்று சிரித்தபடி அவன் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை போட்டுக்கொண்டான்.</p>
<p>&#8221;ம்ம்..பிறவு?&#8221; என்றான் வாயில் சிவப்புடன். &#8221;இப்பம் என்னவாக்கும் பிளான்?&#8221; &#8221;ஒண்ணும் தெரியல்லை&#8230;நான் தோண்டுற இடத்திலே தண்ணி இல்லை&#8230;&#8221; ஞானமுத்தன் கடகடவென்று சிரித்து &#8221;எப்பிடி இருக்கும் வேய்? நீரு அகங்காரத்த வச்சுல்லாவே தோண்டுதீரு?&#8221;என்றான். பிள்ளைவாள் குனிந்த தலையுடன் அப்படியே அமர்ந்திருந்தார். &#8221;வாசிய அடக்கி வலஞ்சுழிபோக்கி இருந்தீராக்கும்?&#8221;என்றான் ஞானமுத்தன் மேலும் சிரித்தபடி. சட்டென்று பிள்ளை நெடுங்காலம் முன்பு சாமித்தோப்பு அய்யாவுநாடாரை சந்திக்கச் சென்றதை நினைவுகூர்ந்தார். அக்கணமே அவரது மனம் கட்டவிழ்ந்தது. கைகூப்பியபடி &#8221;எனக்கொரு வழிகாட்டணும்&#8230;எனக்கு ஒண்ணும் புரியல்லை&#8230; ஒண்ணுமில்லா மண்ணா இருக்கேன்..எனக்கொரு வழியக்காட்டணும்&#8230;&#8221; என்றபோது சட்டென்று உடைந்து கண்ணீர் விட ஆரம்பித்தார்.</p>
<p>ஞானமுத்தன் எழுந்து வந்து அவர் அருகே அமர்ந்தான். &#8221;எனக்கு வழியக் காட்டினவரு நீராக்கும். அதனால நீரு எனக்கு குரு&#8230;பின்ன நான் எங்கயும் நிக்கல்ல. வெள்ளத்திலே போற வித்து மாதிரி போனேன். பதிஞ்ச எடத்திலே முளைச்சேன். அதாக்கும்வே வழி&#8230; நீரு நெருஞ்சிமுள்ளாக்கும். உடம்பெங்கும் கொக்கி. போற எடத்திலயெல்லாம் கொளுத்துதீரு&#8230;இத்தனை வருசத்திலே உடைப்பெடுத்த மடைவழியா வெளியசாடுத குளத்துவெள்ளம் கணக்காட்டுல்லாவே இருந்திருக்கேரு&#8230; ஓடும்நீர்தான்வே கங்கை&#8230;&#8221;. பிள்ளைவாள் பெருமூச்சுகள் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். வெளியே ஏதோ காக்கை பிடிவாதமாக கிரா கிரா என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஜெபமோ தவமோ செய்து தொலைகிறதா அது என எண்ணிக்கொண்டார்.</p>
<p>ஞானமுத்தன் அருகே படுத்து தூங்கிவிட பிள்ளைவாள் விழித்திருந்தார். தன்னையே தன் முன் பார்த்துக்கொண்டு கிடந்தார். உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை என்று எங்கோ ஒரு மூலை சொல்லிக்கொண்டது. உச்சியில் ஓங்கவேண்டுமே. நச்சி நச்சி நாட்கள் நகர்ந்தன என்றாலும்&#8230;ஏன்ன பிழை என்னிடம்? கைப்பிடிக்குள் சிக்கியதை விடமுடியாத குரங்கு. ரசலிங்கம் கனத்தது கையில் மனத்தில் சித்ததில் பித்தத்தில். கல் ஒளிபோல கலந்து உள் இருந்திடும் அதை அறிந்திருக்கவேயில்லை. கல்லை கைப்பற்றலாம், கலவறையில் சேர்க்கலாம். கல்லின் ஒளியை எப்படி கைப்பற்றுவது. ஒளியைக் கைப்பற்றியவனுக்கு கல் எதற்காக? ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வான்வெளிமீதும் அலைதானடிக்குமோ பரவெளியாடும் பரமா!</p>
<p>எப்போதோ தூங்கி எப்போதோ விழித்தபோது இரவாகியிருந்தது. நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது. எழுந்து வேட்டியைக் கட்டி தாடியில் வழிந்திருந்த எச்சிலை துடைத்தபடி வெளியே சென்றார் பிள்ளைவாள். இளம்குளிர் கலந்த இருட்டுக்குள் தென்னையும் மாமரங்களும் சலசலத்து மூச்சுவிட ஒரு ஊருயிர் சருகு கலைத்து ஓடியது. வெளியே வந்து முற்றத்தில் நின்றவர் ஒருகணம் அப்படியே நின்றார். எதிரே கவிழ்த்துப்போட்ட பழைய உரலொன்றில் அமர்ந்தவனாக இருந்தும் இல்லையென வான்நோக்கி அமர்ந்திருந்த ஞானமுத்தனைக் கண்டார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6392</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>பனித்துளியின் நிரந்தரம்</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6454</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6454#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 19:01:41 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினைகள்]]></category>
		<category><![CDATA[கலாசாரம்]]></category>
		<category><![CDATA[சமயம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6454</guid>
		<description><![CDATA[உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பிக்கிறது நம் மரபு. ஆகவேதான் அது இடைவிடாது ஆனந்தத்தை நாடுகிறது. தடைகளை அளிப்பவை நம் அகங்காரத்தின் விளைவுகளே. அவற்றை சற்றேனும் களைந்தால் நம் அகத்துக்கு ஆனந்தமாக இருப்பதெப்படி என்று சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை!]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஜெ,</p>
<p>வணக்கம். நம் மனித வாழ்க்கை ஏன் எனும் கேள்வி சமீபமாக என்னை குடைகிறது. மற்றுமொரு விலங்கான மனிதன் மட்டும் ஏன் விலங்கல்லாத வாழ்வை வாழ்கிறான்? மனித வாழ்வனைத்தும் சம்பாதிப்பதும் அதை செலவழிப்பதும் மட்டுமே என ஆகியுள்ளது. அந்த பொருளீட்டில் தான் மனிதன் வகைபட்டு உள்ளான். நம் வாழ்வின் பயன் தான் என்ன? உலகமயமாக்கலின் பொருளீட்டல்-செலவழித்தல் என்ற மாபெரும் சக்கரத்தில் மாட்டி உழலும் ஓர் அற்ப வாழ்வே நமதா? இதில் நாம் தனித்து இயங்க இயலுமா?</p>
<p>நம் சமூகத்தின் எண்ணிலடங்கா கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் தனி மனித வாழ்வை நகல் வாழ்வாக மட்டுமே ஆக்கியுள்ளது. பொருள்/பதவி/புகழ்/அதிகாரம்/வசதிகள் ஆகியவற்றை மட்டுமே நோக்கி நகர்த்துகின்றது. நகல் வாழ்வை வாழ நாம் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?</p>
<p>நீங்கள் சொல்வதை போல அள்ளிப்பதுக்குகின்றோம். சுயத்திற்காக மட்டுமே செலவழிக்கின்றோம். பதவி அல்லது செல்வத்தின் மூலம் சமூக அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்கிறோம். கல்யாணம் குழந்தை என அடுத்த தலைமுறையை இதே நகல் வாழ்விற்கு தயார் செய்கிறோம்.</p>
<p>சுருக்கமாக இந்த மனித பிறவியின் வாழ்க்கை பயன் யாது? வாழ்வாங்கு வாழ்பவர் யார்?</p>
<p>-ரெ.மோ.ச</p>
<p>பி.கு.: நான் எந்த ஒரு விரக்தியிலோ அல்லது இயலாமையிலோ இவற்றை கேட்கவில்லை. <img src='http://www.jeyamohan.in/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p style="text-align: center;"><img src="http://files.myopera.com/pabha/albums/264809/small%20landscape%20painting.jpg" alt="" /></p>
<p>அன்புள்ள சதீஷ்குமார்,</p>
<p>ஏதேனும் ஒரு கணத்தில் சிந்திக்கும் எவருக்கும் ஆழமாக வந்து தைக்கும் வினா இது. என்ன பிரச்சினை என்றால் விடையை பிறிதொவர் சொல்லிவிடமுடியாதென்பதே. விடைநோக்கிச் செல்லும் பாதையை அமைப்பவையே இலக்கியங்கள், தத்துவங்கள்&#8230; விடை ஓர் அனுபவமாக மட்டுமே அமைய முடியும். ஒரு கருத்தாக, கோட்பாடாக அது இருக்க முடியாது.</p>
<p>1987ல் ஒரு பலவீனமான தற்கொலை முயற்சிக்குப்பின் நான் காசர்கோட்டில் கும்பளா என்ற ஊரில் இருந்து காசர்கோடு நகர் நோக்கி ரயில்தண்டவாளம் வழியாக நடந்துகொண்டிருந்தேன். அதிகாலை. மெல்ல கீழே கடல்வெளியில் ஒளி பெருக ஆரம்பித்தது. புதிய வானத்தில் புத்தம் புதிய மேகங்கள் பொன்னொளி பெற்றன. என்னைச்சுற்றி ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு கூழாங்கல்லும் ஒளிபெறுவதைக் கண்டேன்.</p>
<p>அந்தக் கணத்தில் அனுபவமான ஒன்றை மொழியினூடாக பிறருக்கு அனுபவமாக ஆக்க முயல்வதே என் கலை என்று சொல்வேன். அன்று ஒளி ஊடுருவும் ஓர் இலைப்புழு போல் என்னை உணர்ந்தேன். அப்போது சொல்லிக்கொண்டேன், இந்தப்பிறவியில் இனி ஒருபோதும் நான் துயரம் கொள்ளப்போவதில்லை. இந்தப்பிறவியில் இனி எனக்கு இறந்த காலம் இல்லை, எதிர்காலமும் இல்லை. அந்ததக்கணங்களே வாழ்க்கை. அவற்றின் ஒவ்வொரு துளிகளிலும் அனைத்து இருப்புடனும் முழுமையாக நிலைப்பதென்பதே என் யோகம்.</p>
<p>வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது.</p>
<p style="text-align: center;"><img src="http://dougmarx.com/press/wp-content/uploads/2008/03/looking-west-across-salt-creek-sunset-doug-marx.jpg" alt="" /></p>
<p>இதோ இந்த அறைக்கு வெளியே குயில்கள் கூவுகின்றன. குயில்கூவும் பருவம் ஆரம்பித்துவிட்டது. வெயில் எரியும் மதியம். நிழலுக்குள் எங்கோ இருக்கிறது குளிர்ந்த குயில். இப்போது அதனுடன் அந்த நிழலுக்குள் சில கணங்கள் இருக்க முடிகிறது. இந்த நாதத்தில் இக்கணத்தில் என் முழுமையை நான் உணர்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் காகங்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். இரவு வரும். சீவிடுகளின் நாதம் இருக்கும்&#8230;. இத்தகைய கணங்களாலான ஒரு முழுமானுடவாழ்க்கை எனக்கிருக்குமென்றால் இதைவிடப்பெரியதோர் பொருளை நான் கோருவது போல் அபத்தம் ஏதும் உண்டா என்ன?</p>
<p>ஆம், எனக்கும் இருக்கிறது உலகியல் சிக்கல்கள். சவால்கள், வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள்&#8230; இந்த சக்கரத்தில் என் பிறப்புக்கணம் முதலே நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இவை ஒவ்வொன்றையும் நான் நிகழ்த்தியாகவேண்டும். இவையனைத்திலும் நான் என் முழுத்திறமையுடன் வெளிப்பட்டாக வேண்டும். அதற்காக நான் எப்போதுமே முயல்கிறேன். ஆனால் நான் இவையல்ல. இவை என் வெளிப்பாடுகள் மட்டுமே. இவற்றுக்கப்பால் நான் ஒவ்வொரு கணத்திலும் விழித்திருக்கிறேன். ஒவ்வொரு துளியாக இந்த உலகை அருந்திக்கொண்டிருக்கிறேன்.</p>
<p>கவலைப்பட நேரமில்லை என்ற உணர்ச்சி எப்போதும் என்னுடன் இருக்கிறது. வீணடிக்க நாட்கள் இல்லை. விரிந்து பரந்து கிடக்கிறது அனுபவப்பெருவெளி. ஓர் இமைப்பொழுதில்கூட நான் எதையோ இழந்துகொண்டிருக்கக் கூடும்.  இந்த இருபத்துமூன்றுவருடக்காலத்தில் நான் சோர்ந்திருந்த கணங்களே இல்லை.என்  என் உச்சகட்ட சோர்வுகளைக்கூட எழுத்தால் கொண்டாட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். ஊக்கம் குன்றிய என்னை எவரும் பார்க்கப்போவதில்லை. கணமும் சோராத நிலையே நான். நான் அடைவதொன்றும் இல்லை, இங்கே அடையப்படும் எதிலும் எனக்கு மதிப்பும் இல்லை. ஆயினும் செயலாற்றலில் நான் பேரின்பம் கொள்கிறேன்.</p>
<p>செயலாற்றியும் செயலற்றிருந்தும் நான் அறியும் ஆனந்தம் நிறைந்த இந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்தான் நானடையும் பரிசுகள். உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பிக்கிறது நம் மரபு. ஆகவேதான் அது இடைவிடாது ஆனந்தத்தை நாடுகிறது. தடைகளை அளிப்பவை நம் அகங்காரத்தின் விளைவுகளே. அவற்றை சற்றேனும் களைந்தால் நம் அகத்துக்கு ஆனந்தமாக இருப்பதெப்படி என்று சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை. மனித வாழ்க்கையின் இலக்கென்ன என்றால் ஆனந்தமாக இருப்பது மட்டுமே. </p>
<p style="text-align: center;"><img src="http://www.cep.unt.edu/show/025.jpg" alt="" /></p>
<p>என் எல்லா எழுத்துக்களிலும் மீளமீள நான் இக்கேள்விக்கே பதில் தேடியிருக்கிறேன். நாவல்களில். கட்டுரைகளில். கீதைக்கும் குறளுக்கும் எழுதும் விளக்கங்களில். எங்கோ ஓர் உச்சநிலையில், மொழியும் அகமும் ஒன்றையொன்று கண்டடையும் தருணத்தில், நானறிந்ததை நிகழ்த்தியுமிருக்கிறேன். அவற்றில் தன்னை நிகழ்த்தும் வாசகனுக்கு அவை அனுபவ தரிசனமாகலாம். அதற்கு வெளியே நின்று அதைச் சொல்ல இயலாதென்றே உணர்கிறேன்</p>
<p>ஜெ</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6454</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈராறு கால்கொண்டெழும் புரவி &#8211; 4</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6391</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6391#comments</comments>
		<pubDate>Sat, 06 Feb 2010 19:01:36 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[குறுநாவல்]]></category>
		<category><![CDATA[காந்தி]]></category>
		<category><![CDATA[உரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6391</guid>
		<description><![CDATA[4
ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கல் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றை பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் பிறகு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>4</p>
<p>ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கல் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றை பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் பிறகு திருமந்திரத்துக்கு நிலத்தடிநீர் சார்ந்து ஓர் உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். &#8216;நீர் மூலமந்திரம்&#8217; சொற்களை மொண்டு மொண்டு தன்னுள்தேக்கிக் கொண்டு நான்கு திசைகளுக்கும் தன்னிச்சையாக விரிந்து பரவிக் கொண்டே இருந்தது.</p>
<p>பிள்ளைக்கு தூக்கமின்மை நோய் வந்து முற்றி அவரது இமைகள் தடித்து கனத்து கண்கள் மீது விழுந்து கிடந்தன. நரைகலந்த தாடி எழுந்து மார்பின்மீது நிழலாட்டமிட்டது. உடல் மெலிந்து கூன்விழுந்து நடை கோழிக்கால்போலப் பின்னி கைகவிரல்கள் குளிர்ந்து மெலிந்து சொற்கள் உள்ளூர இழுபட்டு மௌனம் உதடுகளில் கனத்து, அவர்  வாழ்ந்த உலகின் கண்களுக்குப் படாமல் அவர் மறைந்தே போனார். பெட்டிக்கடை அரங்குகளில் ஆலயத்திண்ணைக் கூட்டங்களில் அவர் வந்தால் காற்றுவந்து சென்றதுபோல எவர் கண்ணுக்குமே படாதவரானார். எவரும் குறுக்கே வராத பெருநில விரிவில் அவரது நாள்தோறும் விரிந்த நூலின் மூலச்சித்திரமாக நீர்வெளியின் கோடுகள்.</p>
<p>பின்பு நிலத்தடி வெளியின் அடுக்குகளை அவரது வேப்பங்குச்சி தீண்ட ஆரம்பித்தது. வேப்பங்குச்சியின் நீளத்தை நீட்டியும் குறுக்கியும் மண்ணில் புதைந்த உலோகங்களை கண்டடைய ஆரம்பித்தார் . வேப்பங்குச்சியை சிறிய கயிற்றில் கட்டி விரல்களில் தொங்கவிட்டு அவற்றின் சுழற்சிமூலம் மண்ணுக்குள் அடுக்கப்பட்டிருந்த காலங்களைக் கண்டடைந்தார். புரவிகள் மிதித்த சுவடுகளை வேங்கைவரிநகத்தடங்களை நிணம் வடிந்த வடுக்களை. அழத்தில் வரியோடிய உலோகங்கள் என்பவை நீருக்கு முன்பு ஆழத்தில் ஓடிய நெருப்புநதி என அறிந்தார். நீர்த்தடம் ஊடாக நெருப்புத்தடம் பாவாக இழையோடும் மண்ணாழம். அதில் மந்திரத்தின் ஆழ்மௌனம்.</p>
<p>திருமந்திரத்தின் பக்கங்கள் ஒவ்வொருநாளும் அதிகரித்தபடியே சென்றன &#8220;மந்திரம் படிச்சு மீண்டவன் எவம்லே? &#8221; என்று சச்சிதானந்தம்பிள்ளை சொன்ன சொல் அவர் காதில் ஒலித்தது. அவரது அறையெங்கும் மந்திரத்துக்கான நிலத்தடி விளக்கங்களின் வரைபடங்களும் கணக்குகளும் எழுதப்பட்ட தாள்கள் தகரப்பெட்டிகளில் சுவர்ப்பெட்டியடுக்குகளில் கனத்து ஏறி மட்கின. மண்ணான தாள்களிலிருந்து எழுத்துக்கள் அக்காற்றிலும் தரையிலும் பரவி எங்கும் நிரம்பின. ஊடே ஒருநாள் பிள்ளையின் அப்பா இறந்தார். கிடக்கப்படுத்தவர் கிடந்தொழிந்த பின் சூரையங்காட்டிடை சுட்டகணமே நினைப்பொழிந்து மீண்டும் திருமந்திர நிலத்துக்குள் புதைந்தார்.  </p>
<p>கடலிலே கெடுத்து குளத்தினில் காண உடலுற்று தேடும் ஊழ்வினை சுமந்து நீர்தேடி நிலம் அகழ்ந்து சென்ற அக்காலத்தில் ஒருமுறை பொற்றையடி மலைமீது ஏறினார். வெயில்பழுத்துக்கிடந்த பாறைகளினூடாக நீரின் நெருப்பில் லீலைகளுக்குள் நகர்ந்துகொண்டிருந்தவர் பெரும்பாறை நிழலுக்குள் புழுதியில் அமர்ந்து ஒரு மாங்காயைத் தின்றுகொண்டிருந்த சடைமுடிச் சாமியாரைப் பார்த்தார். கரிய பற்கள் காட்டிச் சிரித்த சடைமுடியார் &#8221; உப்பு இருக்கா அய்யா?&#8221; என்றார்.</p>
<p>&#8221;&#8217;இல்லியே சாமி&#8221; என்றார் சாச்தான்குட்டிப்பிள்ளை.</p>
<p>சடைமுடியார் உரக்கச்சிரித்து &#8220;உப்பில்லா பண்டம் குப்பையிலே&#8221;  என்றார்</p>
<p>சாஸ்தான்குட்டிப் பிள்ளை &#8220;உப்பு கொண்டு நடக்கிறதில்லே சாமி &#8221; என்றார் &#8220;தண்ணிவேணுமானா சொல்லுங்க. ஊற்று காட்டித்தாறேன். சாமி நல்ல தண்ணி மேலேல்லா உக்காந்திருக்கு&#8221; .</p>
<p>சடைமுடியார் குபீரென்று சிரித்தார். ஒரு கண்களிலிருந்து மட்டும் நீர் வழிய ஆரம்பித்தது . தலையை ஆட்டி ஆட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.</p>
<p>ஒரு கணம் எரிச்சல் கொண்டாலும் ஏன் வம்பு என்று சாஸ்தான்குட்டிப்பிள்ளை விலகி நடந்தார். பொதுவாக தாடிவைத்தவர்கள் வம்புபிடித்தவர்கள் என்று கற்றிருந்தார். கைப்பட்ட மாமணி தானிடைக் கைவிட்டு எதற்கு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பது? இரு பாறைகளின்மீதேறி மறுபக்கம் இறங்கி வியர்வையை துடைத்தபோது வாயில் உப்புக் கரித்தது. அடுத்த அடிவைப்பதற்குள் பிடரி சிலிர்த்தது.</p>
<p>திரும்ப ஓடி சடைமுடியார் இருந்த இடத்துக்கு வந்தார். பாறை நிழலில் மாங்கொட்டை மட்டும் கிடந்தது. &#8220;சாமீ&#8221; என்றார் பாறை ஒன்று அக்குரலை எதிரொலித்தது. &#8220;சாமீ உப்பு கொண்ண்டாந்திருக்கேன் சாமீ &#8221; என்றார்.அப்பகுதியில் அவர் இல்லை என்பதை அங்கிருந்த காற்றே சொன்னதென்றாலும் மீண்டும் பரிதாபமாக &#8221;உப்பு இருக்கு சாமீ&#8221; என்றார்</p>
<p>ஏதோ தோன்றி அந்த இடத்தின் மீது வேப்பம் குச்சி வைத்து பார்த்தார், குச்சி அதிர வெகுநேரமாயிற்று. அம்பலத்தில் அரனேற ஆயிரம்காதம் அடிநீளவேண்டியிருந்தது. அடியில் கனமான ஏதோ இருக்கிறது . ஆழம் மிக்க நீர்வெளி. அல்லது கனத்திருண்ட உலோகப்படுகை. கொதித்துருண்ட நெருப்பாலான செம்பு அல்லது இரும்பு &#8230;. குச்சி அதிர்ந்தது. அரனடி பட்ட அரங்கு வெடிபட திமிகெட குச்சி அவரையே உலுக்கியெடுத்தது . அதை விட்டுவிட எண்ணினார் , உதறியும் அது உதிரவில்லை . அதில் ஒட்டிக் கொண்டு கனத்த பாறையுடன் நீராழத்திலிறங்குவதுபோல சென்றார். ஆனால் செல்லும்தோறும் அழுத்தம் ஏறிய இருளன்றி ஏதுமில்லை. ஏதுமின்மையின் அழுத்தத்தில் செவிகளுடையத் தெறித்து மார்பு விம்மிப்புடைத்து சென்று சென்று சென்று காதமாயியரம் காலமாயிரம் கண்டு மீண்டார்</p>
<p>விழித்தெழுந்து அப்புழுதியிலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் அதன்மீது வேப்பங்குச்சி வைத்துப் பார்த்தார். வேப்பின் கசப்பில் ஊறும் உச்ச அதிர்வில் அங்கே அறுபடாத பெருமௌனமே இருந்தது. பித்தெடுத்தவராக அங்கேயே விழுந்து கிடந்தார். பின் எழுந்தோடி  திசைவெளிவரை விரிந்த மலையடிவாரத்து வயல்கள்மீது வெயிலின் அலைகளைக் கண்டு திரும்பி வந்து விழுந்தார் .</p>
<p>மூன்றாம் நாள் அவரிடம் சித்தமென எஞ்சியிருந்தது நான் என்ற சொல் ஒன்று மட்டுமே. அப்போது மீண்டும் சடைமுடிச்சாமி அங்கே வந்தது. அதே சிரிப்பும் அழுக்குமூட்டையும் ஊன்று கம்புமாக. காலடியோசைகேட்டு கண்விழித்து சாமியைக் கண்டபோதும் அவர் மனதில் ஏதும் பதியவில்லை . கண் கண்ணாகவே கண்டிருக்க படுத்திருந்தார்.</p>
<p>&#8220;ஊற்றிருக்கா அய்யா?&#8221; என்றார் சாமி .</p>
<p>பிள்ளையின் மனம் மெல்ல மிக மெல்ல நான் என்ற சொல்லில் இருந்து முளைவிட்டு இலைவிரித்து எழுந்தது. இருக்கிறேன் என்றும் ,இங்கே என்றும் ,இப்போது என்றும் ,அது என்றும், பின் அவை என்று படர்ந்து, இவை என்றும் என்றும் இவற்றுக்கப்பால் என்றும் பகுந்தது. மனம் மனதைப் பார்த்த கணத்தில் பதற்றமேறி எழுந்தமர்ந்து &#8220;சாமீ &#8221; என்றார்.</p>
<p>&#8220;ஊற்றிருக்கா அய்யா?&#8221; என்றார் சாமி &#8220;தாகமிருக்கே&#8221;</p>
<p>&#8220;இங்க தண்ணியில்ல சாமீ&#8221; என்றார் பிள்ளை.</p>
<p>&#8220;கலந்தது நீர் அது உடம்பினில் கறுக்கும் . கலந்தது நீர் அது உடம்பினில் சிவக்கும். கலந்தது நீர் அது உடம்பினில் வெளுக்கும். கலந்தது நீர் அனல் காற்று அது ஆமே&#8221; என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி &#8220;..என்ன அய்யா சரியா? மந்திரம் படிச்சவிக. தந்திரம் தெரிஞ்சவிக. &#8221;</p>
<p>&#8220;சாமி வித்தை தெரிஞ்சவுங்க&#8230;&#8221; என்றார் பிள்ளை எழுந்து வணங்கி.</p>
<p>&#8216;சதுரகிரிமலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி . திருகு கள்ளி பாலெடுக்க திரிஞ்செனடி சிலகாலம் &#8221; என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி .அருகே வந்து சிறுபாறைமீது கால்மேல் காலிட்டு அமர்ந்தார். துரிசுல் வலக்காலை தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளில் அங்கைகள் நீட்டி உருகியிடும் உடல் செவ்வே இருத்தி அமர்ந்த கோலம். வெயில் அவருக்குப் பின்னால் பொழிந்தனால் பிள்ளைக்கு கண் கூசியது.  சாமி தன் மூட்டையிலிருந்து ஒரு மாங்காயை எடுத்து அவருக்கு நீட்டினார் .</p>
<p>பிள்ளை மாங்காயை வாங்கிய அக்கணமே தன் வயிற்றின் அமிலங்கள் கொந்தளித்தெழுவதை உணர்ந்தார். அக்கணமே அவர் வேறு மாம்பழம் வேறல்லாத சித்தியிலாழ்ந்தார். அக்கினி அணைந்ததும் நிமிர்ந்து பெருமூச்சுடன் சாமியைப்பார்த்தார்</p>
<p>&#8220;ருசிச்சதோ?&#8217; என்றது சடைமுடிச் சாமி</p>
<p>&#8220;ஆமா&#8221;</p>
<p>&#8220;ருசிச்சது உம்ம பசி அய்யா . பசிக்கப்பால் உள்ள ருசியென்ன ? அதன் தந்திரமென்ன?&#8221; சாமி சிரித்தது.</p>
<p>பிள்ளை மெல்ல மனதின் அலைகள் அடங்கி தரையில் அமர்ந்தார்.</p>
<p>&#8220;வீட்டுக்கு போமய்யா&#8221; என்றார் சாமி. &#8221; லையிலே சமாதியாக நீரென்ன செந்நாயா மந்தியா மரநாயா ? &#8220;  </p>
<p>&#8220;நான் போகமாட்டேன்..&#8221;</p>
<p>&#8220;ஏன் ? பொதையல் கண்டீரோ?&#8221;</p>
<p>&#8220;ஆமா. பொதையல்தான். பொதைஞ்சிருக்கது என்னாண்ணு தெரியல்ல&#8230;&#8221;</p>
<p>&#8220;எங்க?&#8221;</p>
<p>&#8220;இங்கதான்..&#8221; என்றார் பிள்ளை &#8220;என் வேம்புக்கு இங்கெ உள்ளதென்னாண்ணு காணமுடியல்ல&#8221;</p>
<p>&#8220;கூறு அது ஆகக் குறி£த்து நல் சக்கரம் . கூறு அது செய்து கொடுத்தனன்&#8230;.ஏய்யா  சக்கரத்தை அறிய சுழிமுனையை தொடலாமா? சக்கரமிருப்பது சுழற்சியிலே அல்லவா? சக்கரத்திலே சுழலாமலிருக்கும் சுழிமுனை சக்கரமேயில்லை அய்யா.  &#8221;</p>
<p>பிள்ளை வெறுமே பார்த்திருந்தார்.</p>
<p>&#8221;இந்த இடத்தை என்னாண்ணு நெனைச்சீக அய்யா? இது புவிநரம்போடும் மூலாதார முழுச்சக்கரமல்லவவா? இந்த ஒரு வட்டத்துக்குள்ளே என்னென்ன ஓடுதுண்ணு அறிஞ்சிடுவீரோ ? என்னென்ன சக்திகள், என்னென்ன தெய்வங்கள் . சென்றதும் நடப்பதும் வருவதும் . முக்காலமுமான இக்காலம். உலகைத்தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர் ? இந்த எடத்தை அறியும். இங்கே இருக்கு உம்ம ஞானம். மூலாதரம் கனிஞ்சு முளைக்கும் முழுநிலவு இங்கே உதிக்கும்&#8230;.  &#8221; சாமி உரக்கச்சிரித்து&#8221;பலமரம் கண்ட தச்சன் &#8230;&#8221; என்றபின் வெடித்து சிரித்து பின்னால் சாய்ந்துவிட்டார்.   </p>
<p>பிள்ளைக்கு கால்விரல் சிலிர்த்து வேகம் உச்சந்தலைவரை ஏற அவர் கைகள் கூப்பின. கண்களிலிருந்துவழிந்த நீருடன்&#8221;உத்தரவு.. உத்தரவு.. இங்கே இருக்கேன். இதை மட்டுமெ அறியுதேன்&#8230; சாமி அருள்போரும்&#8230;.&#8221; என்றார்  .</p>
<p>சாமி எழுந்தது &#8220;சரி , நான் வாறேன். மலையேறி மறுபக்கம் போனால்தான் கட்டைக்கு இண்ணைக்கு சமாதி&#8230;&#8221; என்று  பாறைக்கு அப்பால் சென்றார். </p>
<p>பிள்ளை சொல்லிழந்து நின்றார். மனம் பல திசைகளுக்கும் பாய்ந்தோடியது . கேட்க எண்ணிய ஒரு கேள்வி சொற்களைக் கண்டடையவில்லை. பின்பு சொற்களை மனம் தொட்டதுமே பரபரத்து பாய்ந்தோடி சாமியைத்தேடினார். பெரியபாறைக்கு அப்பால் மலைச்சரிவெங்கும் மனிதச்சலனமே இல்லாமல் வெறித்துக் கிடந்தன வெயிலும் காற்றும் .</p>
<p>பிள்ளை ஓர் ஐயத்துக்கு ஆளாகி  அந்த மாங்கொட்டையை எடுத்து திரும்பித்திரும்பி பார்த்தார். அது பொரூண்மையுடன்தான் இருந்தது. சுற்றும் பார்த்து நிலத்துநீரின் சுழி ஒன்றை தோண்டி மீட்டு அந்த ஈரத்தில் அதை நட்டார் . புதைந்த விதையின் உள்ளே மெல்ல ஒரு சுருள் தன்னை விரித்துக் கொண்டு எழுந்து  &#8216;நான்&#8217; என்றதைக் கேட்டார்.</p>
<p>மறுநாளே திரும்பிவந்து தனக்கிருந்ததை எல்லாம் கைவிட்டு மலை மீது ஏறினார். அந்த மலைச்சரிவில் தன் கையாலேயே சிறுவீடு ஒன்றைக் கட்டினார். அங்கே அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்க தந்நெறி சென்று தவமிருந்தார். குச்சியும் கோலும் இழந்து தத்துவம் நீக்கி மருள்நீக்கி தான் ஆகி பொய்த்தவம் நீக்கி காவலிருந்தார். ஈராறுகால் கொண்ட புரவி தன்னை தாண்டிச்செல்லும் குளம்படிகளை கேட்டுக்கொண்டு மெல்ல மெல்ல முதிர்ந்தொடுங்கினார்.</p>
<p>[மேலும்]</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6391</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை, இறுதிப்போர்.</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6448</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6448#comments</comments>
		<pubDate>Sat, 06 Feb 2010 19:01:01 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6448</guid>
		<description><![CDATA[ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய &#8216;ஹிமாலயன் பிளண்டர்&#8217; [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.
 
என்ன நடக்கிறது? ஒரு போர் நடக்கும்போது அந்தப்போரில் ஈடுபடும் இரு சமூக ராணுவங்களும் அரசியல்தலைமைகளும் தங்கள் சமூகத்தின் முழு ஆதரவை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய &#8216;ஹிமாலயன் பிளண்டர்&#8217; [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.</p>
<p style="text-align: center;"> <img src="http://www.freewebs.com/vijayatharsan2003/prapa%201.jpg" alt="" width="293" height="391" /></p>
<p>என்ன நடக்கிறது? ஒரு போர் நடக்கும்போது அந்தப்போரில் ஈடுபடும் இரு சமூக ராணுவங்களும் அரசியல்தலைமைகளும் தங்கள் சமூகத்தின் முழு ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஆதரவை ஒரு வெறி என்ற அளவுக்கு உச்சப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அது போருக்கு உதவும் சக்தி கொண்டிருக்கும்.</p>
<p>அதற்காக அவை அனைத்து விஷயங்களையும் ஒற்றைப்படையாக ஆக்குகின்றன.  அதன் பொருட்டு தகவல்களை திரிக்கின்றன, மறைக்கின்றன. அவற்றை உச்சகட்ட பிரச்சாரம் மூலம் சொல்லியபடியே இருக்கின்றன. தங்கள் சமூகங்களை உச்சகட்ட உணர்ச்சிநிலையில் வைத்திருக்கின்றன.</p>
<p>ஆகவே போரில் ஈடுபடும் சமூகங்கள் போரின்போது போரைப்பற்றிய உண்மைகளை அறியவே முடிவதில்லை. என்ன நடக்கிறது என்பது ஒரு பக்கமும் என்ன சொல்லப்படுகிறது என்பது மறுபக்கமும் நின்று சமராடுகின்றன. சராசரி சமூகக்குடிமகன் யதார்த்தம் நோக்கிச் சென்றால் அவனது சமூகப்பொறுப்புணர்வு ஐயத்துக்குள்ளாகும். அவனது மனமும் ஒருசார்பான திரிபுகள் கொண்டிருக்கும். ஆகவே பெரும்பான்மையின் உணர்ச்சிவெறியில் அவனும் பங்குகொள்கிறான்.</p>
<p>இமயமலைகளில் சீனாவிடம் அடிபட்டு, இழிவுபட்டு, பலவீனமான இந்திய ராணுவம் பின்னடைந்துகொண்டிருந்தபோது இந்திய அரசும் ஊடகங்களும் நம் படைகள் உக்கிரமாக போராடி சீனாவை துரத்திக்கொண்டிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தன. நாம் சில இடங்களில் போர்தந்திரத்தின்பொருட்டு எதிரியை உள்ளே வரவழைத்து அடிப்பதற்காக பின்னகர்ந்தோம் என்றது இந்திய அரசு.</p>
<p>ஆனால் போரின் முடிவு என்பது நம்பிக்கைகளைக் கீறி யதார்த்தம் வெளியே வந்து கிடக்கும் தருணமாக அமைகிறது. எல்லா பிரச்சாரங்களும், திரிபுகளும் வெளிறுகின்றன. உண்மை கண்கூச திறந்து கிடக்கிறது. சென்றகாலங்களில் அது மெல்லமெல்ல துலங்கியதென்றால் இந்த ஊடகயுகத்தில் சில கணங்களில் வெளுத்துவிடுகிறது</p>
<p style="text-align: center;"><img src="http://www.chinadaily.com.cn/english/doc/2005-08/30/xin_480802300925377161246.jpg" alt="" /></p>
<p>நம் சமகாலகட்டத்துப் பெரும்போர் என்றால் அது ஈழப்போராட்டம். அதன் முடிவு நாம் ஒருபோதும் முகத்துக்கு முகமாகச் சந்திக்க விரும்பாத யதார்த்தத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஈழப்போர் முடிந்து எட்டுமாதங்களாகியும்கூட இன்றும் அந்த யதார்த்தங்களைக் காணமுடியாதவர்களை நாம் சந்திக்கிறோம். இன்றும் அது சார்ந்த மூடநம்பிக்கைகளும், மிகையுணர்ச்சிகளும் நம்மிடையே உலவுகின்றன.</p>
<p>நிதின் கோகலே எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கும் &#8216;இலங்கை இறுதி யுத்தம்&#8217; அந்தப் போர் எப்படி வெல்லப்பட்டது என்பதை விரிவான தகவல்கள் மூலம் வெளிப்படுத்தும் இதழியல் பதிவு. என்.டி.டி.டி.வி  தொலைக்காட்சியின் செய்தியாளரான நிதீன் கோகலே போர்ச்செய்திகளை சேகரிப்பதில் நிபுணர். ஈழ விஷயங்களை பலவருடங்களாக நேரில் அவதானித்து வருபவர்.</p>
<p style="text-align: center;"><img src="http://www.ndtv.com/convergence/images/fullimage/ver1/Other/nitingokhale.jpg" alt="" /></p>
<p style="text-align: center;"><strong>நிதீன் கோகலே</strong></p>
<p>ஓரளவு செய்திகளை வாசிப்பவர்கள் அறிந்திருக்கும் தகவல்கள்தான் இவை. ஆனால் நிறைய புள்ளிவிவரங்களுடன் வரிசையாக கோர்வையாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் இந்தக்கடைசிப் போர் ஈழத்தில் ராஜபட்சே பதவிக்கு வந்தபோதே ஆரம்பித்துவிட்டது. அவருக்கு தெளிவான இலக்குகள் இருந்தன. பதவிக்கு வந்ததுமே இந்த இறுதிப்போருக்கான  துணைவர்களை அவர் சேர்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். தன் தம்பியரான பசில் ராஜபட்சே மற்றும் கோத்தபய ராஜபட்சேயை சேர்த்துக்கொண்டார். ராணுவநிபுணரான சரத் ·பொன்சேகாவை தளபதிபதவிக்குக் கொண்டுவந்தார்.</p>
<p>ராஜபட்சே பதவிக்கு வருவதற்குப் ஒருவகையில் புலிகள்தான் காரணம். அவர்கள் அவரை கடைசிவரை குறைத்தே மதிப்பிட்டார்கள். ராஜதந்திரியான ரனில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்தால் அவர் சர்வதேச அளவில் தங்களை தனிமைப்படுத்தக்கூடும் என்றும், அந்த திறன் ராஜபட்சே போன்ற உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்றும் புலிகள் எண்ணினார்கள். ஆகவே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தால் வெல்லும் வாய்ப்பிருந்த ரனிலுக்கு வாக்களிக்காமல் இருக்கும்படி தமிழர்களை புலிகள் விலக்கினார்கள். ரனில் புலிகளை அழித்தொழிப்பதற்குப் பதில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் எண்ணம் கொண்டிருந்தார்.</p>
<p style="text-align: center;"><img src="http://fiddlingwhileitburns.files.wordpress.com/2009/04/r361827_1670841.jpg" alt="" width="587" height="391" /></p>
<p>இரண்டாவதாக, செப்டெம்பர் ஆறு 2000த்துக்குப் பின் உலக நாடுகள் சர்வதேச தீவிரவாத வலைப்பின்னலை அறுக்கும் திடமான முடிவுக்கு வந்திருந்தன. அது ராஜபட்சேவுக்கு சாதகமாக அமைந்தது. அந்த மாற்றத்தை உய்த்துணரவோ, அதற்கேற்ப தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளவோ புலிகளால் இயலவில்லை.</p>
<p>ராஜபட்சே  பதவி ஏற்றது முதல் இரு தளங்களில் இந்த இறுதிப்போருக்கான தயாரிப்புகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது என்று இந்நூல் காட்டுகிறது. ஒன்று சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் புலிகளை அன்னியப்படுத்தி விலக்க வைப்பது. அதன் வழியாக புலிகளின் நிதியாதாரங்களை உறையச்செய்வது. அவர்களுக்கு தார்மீக ஆதரவுகள் இல்லாமல் செய்வது.</p>
<p>இரண்டு, பயிற்சியும் மனஉறுதியும் இல்லாமல் இருந்த இலங்கை ராணுவத்தை கடைசிப்போருக்குத் தயார் செய்வது. சீனா மற்றும் பாகிஸ்தானின் தங்குதடையற்ற ஆயுத உதவியும், பயிற்சி உதவியும் இலங்கை ராணுவத்திற்குக் கிடைத்தது. சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை மிரட்டி இந்திய உதவியையும் பெற்றுக்கொண்டது இலங்கை.</p>
<p>இந்த காலகட்டத்தில் எல்லாம் இலங்கையரசை மிகவும் குறைத்து மதிப்பிட்ட புலிகள் அமைப்பு உரிய எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன் தன் செயல்பாடுகள் மூலம் இலங்கைக்குச் சாதகமான விளைவுகளை உருவாக்கி அளித்தார்கள். கருணா தன் படையுடன் பிரிந்து சென்றது புலிகளின் ராணுவ வலிமையை பெரிதும் பாதித்தது. நெடுங்காலமாக யாழ்ப்பாணப்பகுதிகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அங்கிருந்து புலிப்படைக்கு ஆள்சேர்ப்பது சாத்தியமில்லாமலாகியது. ஆகவே புலிப்படைக்கு புதிதாக வந்தவர்கள் கிழக்குப்பகுதியான மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிழக்கைச் சேர்ந்த கருணாவால் கொண்டுவரப்பட்டவர்கள்</p>
<p style="text-align: center;"><img src="http://media.nowpublic.net/images//2a/f/2af50397e25e3e6ddc40446f0909dbf9.jpg" alt="" /></p>
<p>ஈழத்தமிழர்களிடையே வடக்கு-கிழக்கு பிரிவினை எப்போதும் உண்டு. அந்தப் பேதம் புலிப்படையிலும் இருந்தது. வீரர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முக்கியமான தலைவர்கள் அனைவருமே வடக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தது ஒரு கசப்பை வளர்த்தது. மறுபக்கம், புலித்தலைமை கிழக்கைச் சேர்ந்தவர்களை எப்போதுமே உள்ளூர ஐயப்பட்டது. இந்த சந்தேகம் பகைமையாக ஆகியதனால்தான் கருணா வெளியேற நேர்ந்தது. கருணாவின் படையுடன் புலிகள் நடத்திய போர் புலிகளை பலவீனமாக்கியது என்று இந்நூலில் வாசிக்கிறோம்.</p>
<p>அந்தப் பலவீனத்தை மறைக்க புலிகள் அதிரடியான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல்களை புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்த இலங்கை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதை இந்நூல் காட்டுகிறது. புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கை அரசின் தரப்பில் உலகநாடுகள் அனேகமாக அனைத்துமே நிற்பதற்கு வழியமைத்தன. புலிகள் சொன்ன உரிமைப்போராட்டம் சார்ந்த காரணங்கள் அனைத்துமே பின்னுக்கு நகர்ந்தன. இங்கே இலங்கைப்படை தன் முதல் வெற்றியை பெற்றுவிட்டது.</p>
<p>வழக்கமாக ஏதேனும் ஓர் இடத்தில் புலிகளை தாக்குவதே இலங்கைப்படைகளின் வழக்கம். புலிகள் உக்கிரமாக திருப்பித் தாக்கினால் பின்வாங்கிவிடுவார்கள்.ஆனால் இம்முறை இலங்கைப்படைகள் அனைத்துப்பகுதிகளிலும் சூழ்ந்து பலமுனைத்தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். கருணாவின் படையைச் சேர்ந்த தமிழ்ப்போராளிகளை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டார்கள். விடாப்பிடியாக முன்னேறினார்கள்.</p>
<p>அப்போதும்கூட சிங்களப்படையை புலிகள் குறைத்தே மதிப்பிட்டனர் என்கிறார் நிதீன் கோகலே. இம்முறை அவர்கள் சிறந்த ஆயுதம் மற்றும் பயிற்சியுடன் வருவதை அவர்கள் உய்த்துணரவில்லை. அதே போல சர்வதேச சமூகம் தங்களை பொது எதிரியாக கருதுவதையும் அவர்கள் உணரவில்லை. தாங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்டபோது சர்வதேச சமூகம் முன்வந்து காப்பாற்றும் என நம்பினார்கள். இந்த தவறான புரிதல்களுக்கான விலையாகவே பூரணமான தோல்வி கிடைத்தது.</p>
<p><img src="http://www.rnw.nl/data/files/imagecache/must_carry/images/lead/sri%20lanka.gif" alt="" /></p>
<p>கடைசிப்போர் நிகழ்ந்த சூழலையும் அதன் வியூகங்களையும் இந்நூல் விவரிக்கிறது. புலிகள் உலகப்போக்கு பற்றிய அறிதலே இல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்கள் அளித்த பிழையான நம்பிக்கைகளின் பலத்தில் மக்களை பிணையாக வைத்துக்கொண்டு மாட்டிக்கொள்ள, மெல்ல உறுதியாகச் சூழ்ந்துகொண்டு அவர்களை அழித்தது இலங்கை ராணுவம்.</p>
<p>இதில் இந்திய ரடார்கள் மற்றும் சீன ஆளில்லா விமானங்கள் அளித்த பங்களிப்பை இந்நூல் முக்கியமாக குறிப்பிடுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் பார்த்ததில் புலிகள் சூழ்ந்து பிணையாக வைத்திருந்த மக்கள்கூட்டத்தில் ஒரு இடத்தில் புலிகளின் வளையம் பலவீனமாக இருப்பதைக் கண்டு அங்கே தாக்கி உடைத்தார்கள். அதன் வழியாக மக்கள் வெளியேற்றம் ஆரம்பமாகியது. அதுவே புலிகள் எளிதில் விழ காரணமாக அமைந்தது.</p>
<p>இந்நூல் இனிமேல்தான் ராஜபட்சேயின் உண்மையான சவால் உள்ளது என்று சொல்லி முடிகிறது. தான் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள்நலன்  சார்ந்து போராடுவதாக ராஜபட்சே உலகிடம் சொன்னார். பாதிக்கப்பட்ட மக்களை உரியமுறையில் மீள்குடியேற்றுவதில்தான் அவரது நம்பத்தன்மை நீடிக்க முடியும் என்கிறார் நிதீன் கோகலே.</p>
<p>இந்நூல் சரளமான மொழியாக்கத்துடன் ஒரே மூச்சில் வாசித்துப்போகத்தக்க இதழியல் ஆக்கமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் பெயர் சுட்டப்படவில்லை.</p>
<p style="text-align: center;"><img src="http://beta.thehindu.com/multimedia/dynamic/00013/SRI_LANKA_WAR_REFUGE_13539f.jpg" alt="" /></p>
<p>இந்நூலின் தொனி நம் கவனத்துக்குரியது. ஒரு பயங்கரவாத இயக்கத்தின் இன்றியமையாத அழிவு என்று மட்டுமே ஆசிரியர் புலிகளின் வீழ்ச்சியைப் பார்க்கிறார். அதில் நிகழ்ந்த மானுட அழிவேகூட புலிகளின் போர்வெறியால்தான் என்ற எண்ணம் அவரிடமிருப்பது தெரிகிறது. அதை உரிமைப்போராகவே அவர் எண்ணவில்லை.</p>
<p>கடந்த பதினைந்தாண்டுகளில் எழுதவந்த இந்திய இதழியலாளர்கள் பெரும்பாலும் அனைவரிடமும் இந்த மனநிலையே உள்ளது என்பதைக் காணலாம். இது ஆராயத்தக்கது. இவர்களை தமிழ்விரோதிகள் என்றோ இந்தியவெறியர்கள் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் பொதுவாக அதிகாரத்துக்கு வணங்காதவர்களாக, அடிப்படை நீதியுணர்வு கொண்டவர்களாக, பெரும்பாலான தருணங்களில் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் குரலாக ஒலிப்பவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதே யதார்த்தம்.</p>
<p>இவர்கள் புலிகளைப் பற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவு சென்றகாலங்களில் புலிகள் போர்முறையாகக் கொண்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளைச் சார்ந்து உருவான ஒன்று. ஓர் உரிமைப்போராட்டம் எங்கே, எவ்விதம் வெறும் பயங்கரவாதமாக எண்ணத்தக்க தோற்றம் கொண்டது,உலகை நோக்கி ப்பேசுவதில் எங்கே பிழை நிகழ்ந்தது என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.</p>
<p>இந்நூலை வாசிக்கும்போது ஈழப்போர் நடந்துகொண்டிருக்கும்போது ஆனந்தவிகடன் முதலிய இதழ்கள் அளித்த போர்விவரணைகளை மீண்டும் எடுத்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்தியது. எத்தனை அப்பட்டமான பொய்கள். எவ்வளவு விருப்பக் கற்பனைகள். சென்னையை விட்டு நீங்காமலே எழுதப்பட்ட உக்கிரமான களவருணனைகள். ஒருமுறை புலிகள் எந்த இடத்தில் இலங்கை ராணுவத்தை &#8216;உள்ளேவரவிட்டு&#8217; அடிக்கப்போகிறார்கள் என்று விரிவான வரைபடங்களுடன் செய்தி வெளியிட்டது ஆனந்தவிகடன்! அதாவது அந்தப்போரே சிங்கள ராணுவத்தை அழிக்கும்பொருட்டு புலிகள் திட்டமிட்டு நடத்துவது என்ற சித்திரமே நமக்களிக்கப்பட்டது.</p>
<p>இந்நூலில் உள்ள கசப்பான ஓர் உண்மைச்சித்திரத்தை நாம் அந்த பொய்யுரைகளுடன் ஒப்பிடவேண்டும். அது நம்மைப்பற்றி இந்த ஊடகங்கள் என்னதான் நினைக்கின்றன என்பதைக் காட்டும். மேலும் அவர்கள் எழுதுவனவற்றை அப்படியே அள்ளி விழுங்கிச் செரித்துக்கொள்ளும் உணர்ச்சிமந்தைகளாக இப்போதும் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நமக்குக் காட்டும். </p>
<p><strong>[இலங்கை இறுதி யுத்தம். இலங்கை ராணுவம் வென்றது எப்படி? நிதீன் கோகலே. கிழக்கு பிரசுரம். ]</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6448</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈராறு கால்கொண்டெழும் புரவி 3</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6390</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6390#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 19:03:14 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[குறுநாவல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6390</guid>
		<description><![CDATA[[3]
சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது &#8221;இது ஏம்ளா இப்டி இருக்கு ?&#8221; என்று கேட்டார். .நாகம்மை நொடித்து&#8221; பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? &#8221; என்றாள் .
அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. &#8221;நான் எங்க கண்டேன் ? ஆனா&#8230;&#8221;
நாகம்மை வாரிச்சுருட்டி&#8221; என்ன ஆனா?&#8221; என்றாள்
&#8220;இப்பிடி இருக்கு?&#8221;
&#8220;பின்ன எப்பிடி இருக்கணும்?&#8217;
&#8220;இல்லே &#8230;உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே&#8230; &#8221;
&#8220;அவன் கண்டான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>[3]</p>
<p>சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது &#8221;இது ஏம்ளா இப்டி இருக்கு ?&#8221; என்று கேட்டார். .நாகம்மை நொடித்து&#8221; பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? &#8221; என்றாள் .</p>
<p>அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. &#8221;நான் எங்க கண்டேன் ? ஆனா&#8230;&#8221;</p>
<p>நாகம்மை வாரிச்சுருட்டி&#8221; என்ன ஆனா?&#8221; என்றாள்</p>
<p>&#8220;இப்பிடி இருக்கு?&#8221;</p>
<p>&#8220;பின்ன எப்பிடி இருக்கணும்?&#8217;</p>
<p>&#8220;இல்லே &#8230;உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே&#8230; &#8221;</p>
<p>&#8220;அவன் கண்டான் .. பெரிசா&#8221; என்றாள் நாகம்மை</p>
<p>சாஸ்தான்குட்டிப்பிள்ளை மேலும் தமிழாய்ந்து &#8221;இணைமுலைண்ணு வேற சொல்லுதானே?&#8221; என்றார்</p>
<p>&#8220;கல்லோ கலயமோ கண்டிருப்பான். இஷ்டமானா பாருங்கோ&#8230; சும்மா&#8230;.&#8221; என்றாள் அவள்</p>
<p>ஒருவாரம் பிள்ளைக்கு ஊடே தமிழ் வந்து தொந்தரவு செய்தது.  இருதோளுற்று அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ</p>
<p>உதட்டை மென்று பல் இடுகுறிகளும் இட்ட பிறகு அவரே கற்றுக் கொண்டார். பின் உடலின் தூலவிசித்திரங்களை மொழி தொட முடியாதென்று அறிந்தார். தொடமுயலும்தோறும் மொழி வேறு வகை உடல்களையே உருவாக்குகிறது. சருமத்தின் வரிகளும் வெண்விரிசல்களும் மடிப்புகளும் கருமைகளும் &#8230;&#8230;</p>
<p>அணைத்துப்படுக்கையில் &#8220;என்னாண்ணு இப்பிடி பாக்கியோ? &#8221; என்றாள் அவள்</p>
<p>&#8220;பாத்து தீரமாட்டேங்கே&#8221; என்றார் பிள்ளை.</p>
<p>&#8220;அதுக்காச்சுட்டி இருவத்துநாலு நாழியுமா பாத்துட்டிருக்கது ?நாலாளு கண்டா என்ன நெனைப்பாக? நேத்தைக்கு களத்திலே வச்சு அப்பிடி உத்து பாக்கியோ. வேலம்மை அக்காவும் சரஸ்வதியக்காவும் பாத்துபோட்டு முணுமுணுங்கியாவ.. சிரிக்காவ&#8230;  எனக்கானா ஐயேண்ணு ஆயிப்போச்சு.. &#8221;</p>
<p>&#8216;உனக்கு பிடிக்கல்லியா?&#8217;</p>
<p>&#8220;பிடிக்கல்லண்ணு இல்ல. ஆனா ஒரு இது வேணுமில்லா. இப்டியா ?&#8221;</p>
<p>&#8220;என்ன இது&#8230; கெட்டின பெண்டாட்டி .. பாக்காமப்பின்ன? இந்த ரோமம் இருக்கே.. இது மனுஷ சருமம் முழுக்க விதவிதமா பரவி என்னா வெளயாட்டு காட்டுதுங்கே?காவியத்த படிச்சு முடிக்கலாம், இதுக்க வரையெழுத்த வாசிச்சுமுடிச்சவன் இருக்கமாட்டான். கம்பனும் அருணகிரியுமொண்ணும் இதுக்க வெளயாட்ட கண்டு பாடிக்கிட மாட்டான். &#8230;&#8221;</p>
<p>&#8216;போரும் பெனாத்தினது&#8230;&#8221; அவள் எழுந்து தலைமயிரை சுட்டிக்கட்ட &#8221; அய்யோ &#8221; என்றார் அவர்</p>
<p>&#8220;என்னது?&#8221;</p>
<p>&#8220;உனக்க கையில பாத்தியா? இங்க தோளில.. முத்தின செம்மூங்கில்மேல ஒரு வரியோடியிருக்குமே&#8230; அதமாதிரி&#8230;&#8221;</p>
<p>&#8220;செரியான கிறுக்கு&#8230;&#8221; என்று நாகம்மை கதவைத்திறந்தாள்.</p>
<p>&#8220;ஏளா ஒரு நிமிசம்ட்டி &#8230; இந்தா ஒரு நிமிசம் பாத்துக்கிடுதேன்&#8230;&#8221;</p>
<p>இரண்டுவருடம் இடைவெளியில்லாமல் பார்த்தும் நாகமையை பிள்ளை ஓரளவேனும் பார்த்துமுடிக்கவில்லை . பிறகு இருந்து நினைத்தால்கூட அவள் முகம் நினைவு வராது. கனவுபோல முனையும் தோறும் கலையும். ஆனால் எதிர்பாராத கணத்தில்  அவள் உடலின் ஒருபகுதி ஒரு கோணத்தில் துளித்துல்லியம் துலங்கி எழும். பிறகு மண்டை மார்பில் முட்டும்படி நாட்டுச்சாராயம் குடித்தால்தான் தூங்க முடியும்.</p>
<p>வேப்பம்குச்சி உணர்வுகொண்ட பிறகு பிள்ளைக்கு மது தேவையில்லை என்றாயிற்று. நடக்கும்தரை ஒரு கண்ணாடி வெளியென்றானது போல. மிருகங்களின் பறவைகளில் கண்கள் வழியாக அறிந்த சொற்களில் அறியாத விஷயங்கள் தெரியவந்தன. குச்சியுடன் அலைந்து திரிந்து எட்டாம் நாள் பஞ்சைத்தலையும் வெடித்த உதடுகளும் புழுதிப்பாதங்களுமாக சாமித்தோப்புக்குச்சென்று சேர்ந்தார்.</p>
<p>அய்யாவுநாடார் விறகுக்காக தென்னைமட்டைகளை பிளந்து வெயிலில் போட்டுக் கொண்டிருந்தவர் &#8220;வாருமே பிள்ளை&#8230;மடை பொட்டியாச்சுண்ணு தோணுதே&#8230;&#8221; என்றார்.</p>
<p>&#8220;என்னால முடியல்ல&#8230; என்னால முடியல்ல&#8221; என்றார் பிள்ளை</p>
<p>&#8220;உம்மட்டே ஆருவே கம்பத்தூக்கச் சொன்னா? செயிச்சாச்சுல்லா .. தூக்கிப்போட்டுட்டு சோலிமயிரப் பாரும்&#8230;&#8221;</p>
<p>பிள்ளை சாணித்திண்ணையில் அமர்ந்தார்.</p>
<p>&#8216;மோரு குடிக்கேரா?&#8221; நாடார் &#8220;டெயிசியே மக்களே&#8221; என்றார்.</p>
<p>பெரிய கரிய உதடுகள் கொண்ட பெண் &#8220;ஓமப்பா&#8221; என்ற படி எட்டிப்பார்த்தது</p>
<p>&#8220;மோரு எடு குட்டீ&#8221;</p>
<p>செம்புநிறைய மோரை குடித்ததும் மெல்ல சாத்தான்குட்டிப்பிள்ளை அடங்கினார்.</p>
<p>&#8220;பத்து கேள்விக்கு ஒரு சொம்பு மோரு பதில் சொல்லிப்போடும் பாத்துக்கிடும்&#8221; என்றார் நாடார் மீண்டும் அரிவாளை எடுத்தபடி&#8221; அப்பம் உமக்கிப்ப ஊணுமில்ல உறக்கமும் இல்ல&#8230; &#8221;</p>
<p>பிள்ளை &#8220;எனக்கு வேற நெனைப்பே இல்ல . இப்பம் நான் காலுவைக்க நிலமில்ல&#8221; என்றார். சட்டென்று சீறிய விசும்பலுடன் &#8221;என்னால முடியல்ல&#8230;எனக்கு நிக்க முடியல்ல&#8221; என்று அழுதார்.</p>
<p>நாடார்  இன்னொரு மட்டையை எடுத்து பிளந்தபடி பேசாமல் இருந்தார். அழுது ஓய்ந்ததும் பிள்ளை&#8221;நான் போறேன். இந்த கம்பும் தண்ணிவித்தையும் ஒண்ணும் எனக்கு செரிவராது&#8230; நான் போறேன்&#8230;&#8221; என்றார்.</p>
<p>&#8220;நீரு ரெசக்கெட்டும் பாசாணக்கெட்டும் படிச்சவருல்லா&#8230;? &#8221; என்றார் நாடார்.</p>
<p>&#8220;அது இப்பிடி இல்ல&#8221;</p>
<p>&#8220;அது நீரு கெட்டுத கெட்டாக்குமே. அப்பம் உம்ம கெட்டு நல்ல உறப்பாத்தான் இருக்கும். தான் சிக்கல்லேண்ணா சிலந்தி உலகத்த சிக்கவைக்க வலைகெட்டும். ஆனா இது தண்ணிக்க கெட்டுல்லா&#8230; ம்ம்ம் &#8221; நாடார் அரிவாளால் முதுகை சொறிந்தார். &#8221; நல்ல வெயிலு. ஆனியாடீல இந்த வெயிலுண்ணா இனி கிருசி நெறைஞ்சதுதான். என்னெங்குதீரு? &#8221; என்றார்</p>
<p>&#8220;என்ன இதிலேருந்து அறுத்துவிட உம்மால முடியுமா?&#8221;</p>
<p>&#8220;இஞ்ச பாரும் வே. ஒரோ பிராயத்துக்கும் உலகம் ஓரோண்ணாக்கும் . ஒருவயசுக் குட்டிக்கு உள்ள உலகமில்லே ரெண்டு வயசுக் குட்டிக்கு. கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்&#8230;&#8221;</p>
<p>&#8220;இல்ல நாடாரே.. இந்த உலகம்&#8230;. உள்ளதச்சொன்னா கண்ணாடிக்குப்பிக்குள்ள கெடக்கமாதிரி இருக்கு எல்லாம் . ஒண்ணு பத்தாகி பத்து நூறாகி&#8230; ஓய் ,இவ்வளவு பெரிய வலைக்கோலத்துக்குள்ள நாம மனுசங்க இங்க என்னவே செய்யுதோம்? &#8221;</p>
<p>&#8220;அது உமக்கென்னத்துக்குவே ? அறிஞ்சா என்ன செய்வீரு ?&#8221;</p>
<p>&#8220;அறியலாமே. அறியாம இருந்தா இதில இருக்கமுடியல்லியே&#8230;&#8221;</p>
<p>&#8220;அறிஞ்சவன் அமைவான். செரி, உம்மகிட்டே ஒண்ணும் சொல்லி பிரயோசனமில்ல . உமக்கொரு யோகமிருக்கு.நம்ம ஆசான் சொல்லுவாரு மொத்தம் ரெண்டு பூலோகம் உண்டூண்ணு ஒரு மண்புழு நினைச்சுதுண்ணுட்டு . ஒண்ணு அது திங்கப்போற மண்ணு, இன்னொண்ணு அது திண்ணு வெளிக்கெறங்கின மண்ணு . அப்டியாக்கும் கத&#8230; மீனும் கெளங்குமுண்டு. சோறு திங்குதேரா? &#8221;</p>
<p>சாப்பிட்டுவிட்டு திண்ணையிலேயே பாய்போட்டு படுத்தார் பிள்ளை. நாடார் காய்ப்பேறிய கனத்த பெரிய கைகளால் அவர் நெற்றியைத்தொட்டு &#8221; உறங்கும்&#8221; என்றார்.</p>
<p>&#8220;உறக்கமே இல்ல&#8230;எட்டுநாளாச்சு அசந்து உறங்கி&#8230;&#8221;என்றார் பிள்ளை.</p>
<p>&#8220;உம்ம சிந்தையில பாதிய நம்ம கிட்ட குடுத்துப்போடும்&#8221; என்றபடி அவர் நெற்றியிலிருந்து கையை எடுத்ததும் தலை சட்டென்று விசையிழந்து இலகுவாகியது. தரை மீது உடலின் அழுத்தம் குறைந்தது.</p>
<p>&#8220;இப்பம் நீரு சாத்தாங்குட்டிப்பிள்ளை இல்ல . ஒரு புழுவாக்கும். சும்மா பூவில இருக்க புழு. இல்லாட்டி கனியிலே இருக்க புழு. பீயில இருக்கபப்ட்ட புழுவுண்ணும் வையும். புழுவுக்கு எல்லாம் ஒண்ணுதான்&#8230;என்னவே?&#8221; என்றார்.</p>
<p>பிள்ளை மெல்ல தூங்கிவிட்டார். கனவில் நாகமையைக் கண்டார் . அவளுடைய வலிமையான திரண்ட தொடைகள் இடுப்பில் இணையும் இடத்தில் மென்மையான சதைவரிகள் , மென்மயிர்ப்பரப்பு எழுந்த அடிவயிற்றுக் கதுப்பு. பிள்ளை வேப்பம்குச்சியை அவள் வயிறுமீது வைத்தார். பேச்சுக்குரல்கள் கேட்டன. ஒளிரும் கண்களும் காலடியோசைகளும் . மிகவும் தெரிந்தகுரல்கள் , சில தெரியாத குரலகள்.&#8221; ஆரு?&#8221;  என்றார் பிள்ளை செவிகூர்ந்து. &#8221;ஆராக்கும் ?&#8221; என்றார் &#8221;அய்யே&#8230;&#8221; என அவள் குச்சியைத் தட்டிவிட்டாள். அவளது மார்புகளுக்கு மேல் குச்சியை வைத்தார்.</p>
<p>உள்ளே ஒரு அசைவு. நதிகளின் சுழிப்பி. அச்சத்துடன் பிள்ளை &#8221;அய்யோ &#8221; என்றார். குச்சி விலக அவள் கோபத்துடன் பாய்ந்தெழுந்து அதை தட்டிவிட்டாள். அவமதிக்கபப்ட்டவள்போல சீறிய மூச்சும் ஈரமான கண்களுமாகப் பார்த்தாள்.</p>
<p>பிள்ளை எழுந்து ரத்தம் கட்டிய கண்களுடன் அமர்ந்து பரட்டைத்தலையை வருடினார்.</p>
<p>குளித்து , நரைகலந்த அடர்மயிர் அகன்ற மார்பில் ஈரத்துடன் அருகே அமர்ந்த நாடார் &#8220;நல்ல உறக்கமா வோய் ?&#8221; என்றார்.</p>
<p>&#8220;சொப்பனம்&#8221;</p>
<p>&#8216;செண்ணு குளிச்சுட்டுவாரும் . நல்ல மீன் கறியுண்டு . தின்னுட்டு மேல ஒரு தூக்கத்தப் போடும். காலம்ப்ற எல்லாம் தெளிஞ்சுப்போயிடும்&#8221;</p>
<p>&#8220;இங்க இருக்கப்பதான் தூக்கம் வருது &#8221;</p>
<p>&#8221;நமக்கு படிப்பில்லல்லா ? எழுத்தறியா ஏடறியா சொல்லு . அதுக்கு இருக்க கல்லிலே பீடமுண்டு . எழுதின எழுத்துக்கு தண்ணியிலாயக்கும் பீடம். பத்தினிப் பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்க சிதைவுகள் செய்தவர்&#8230; ஹெ ஹெ ஹெ!&#8221;</p>
<p>&#8220;திருமூலர் சொல்லாக்குமே&#8221; என்றார் பிள்ளை வியந்து.</p>
<p>&#8220;ஆரு சொன்னா என்ன ?நம்ம ஆசான் அண்டுகோடு ஞானப்பிரகாசம் வாத்தியாராக்கும் எனக்குச் சொன்னது &#8221;</p>
<p>மீன்கறி சேர்த்து சோறுண்டுவிட்டு இரவில் சாணிமெழுகிய களமுற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்தார்கள்.  மேலே நட்சத்திரங்கள் விரிந்த வானில் ஒரு மூலையில் பிறை நிலா.</p>
<p>&#8220;மண்ணைப்பாக்க வேப்பம்கம்பு வச்சிருக்கேரு. விண்ணைப்பாக்க வச்சிருக்கேராவே?&#8221;</p>
<p>&#8220;விண்ணைப்பாக்க முடியுமா?&#8221; என்றார் பிள்ளை</p>
<p>&#8220;விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்தங்கிருந்தது &#8221; என்றார் நாடார். &#8220;தேடாதேரு. தேடிக் கிட்டுத ஒண்ணுமே தேடுகதுக்குண்டானது இல்லை. தேடிவாறதே செல்வம். ஆக்கம் அதர்வினாய் செல்லணும்ணாக்கும் சொல்லு. கேட்டேரா? &#8221;</p>
<p>பிள்ளை வானையே பார்த்து கிடந்தார். விண்மீன்கள் அடியற்ற ஆழம் கொண்ட கடலில் மிதந்து கிடந்தன. அருகே இருப்பவையெல்லாமே திடமாக , அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றன. அகலுதோறும் அருவமாகின்றன, அர்த்தமிழக்கின்றன. அருகமையே வடிவமும் பொருளுமாகின்றதா என்ன? விண்மீன்களின் நடுக்கம் விண்மீன்களின் வண்னமெனும் பிரமை விண்மீன்கள் கோடானுகோடியென்றாலும் ஒவ்வொன்றிலும் சூழ்ந்துள்ள தனிமை . விண்மீன்களின் மௌனம் .</p>
<p>&#8216;நான் விட்டுடுதேன்&#8221; என்றார் அவர்.</p>
<p>நாடார் அதை கேட்டதாகத் தெரியவில்லை. தூங்கிவிட்டார் என்று எண்ணி திரும்பிப் பார்த்தார். நாடார் அருகே கிடந்தாலும் அவர் அங்கே இல்லை என்றே பிள்ளையின் உட்புலன்கள் சொல்லின. உடல் நெடிது நீண்டு கிடந்தது. திறந்த கண்கள், மென் மூச்சு. ஆனால் அவர் அங்கே இல்லை.</p>
<p>மன எண்ணங்களை எண்ணி எண்ணி தவிக்க அவரையே பார்த்திருந்தார். எங்கே சென்றிருக்கிறார்? விண்மீன்களிலா, இல்லை அவற்றுக்கிடையேயான அடியற்ற ஆழ இருளிலா? சிறகாட்டும் தென்னை, சிலுசிலுக்கும் பூவரசு எல்லாவற்றுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சொல்லப்படமுடியாதது.</p>
<p>பின் மெல்ல நாடார் வந்தார். அவரது வருகையை உடனே உள்மனம் உணர முடிந்தது . ஒரு மூச்சொலி . அழைக்க எண்ணினார். ஆனால் அழைக்கவில்லை. தூக்கம் வருமென்று நம்பி அங்கே படுக்கமுடிந்தது.  அதுவே போதுமென்றிருந்தது.</p>
<p>[மேலும் ]</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6390</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜோதி பாஸு</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6438</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6438#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 19:01:15 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நூல்]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6438</guid>
		<description><![CDATA[அன்புள்ள ஜெயமோகன் ,
              மறைந்த முதுபெரும் தலைவர்  ஜோதிபாசு  பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?  சமீபத்தில் சண்டே இந்தியனில் ஜோதிபாசு பற்றிய கட்டுரையில் (ஜோதிபசு ஏன் இந்தியாவிற்கு தேவையில்லை http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&#38;pageno=1
 ) அவரைப் பற்றி  முற்றிலும் ஒரு எதிர்மறையான சித்திரமே கிடைத்தது . இருபத்தி ஏழு வருடங்கள் ஆட்சி செய்தவர் இவ்வளவு அலட்சியமாக இருந்திருப்பார் என நம்ப முடியவில்லை.
&#8211;
shankaran e r

 
அன்புள்ள சங்கரன்
ஜோதி பாஸ¤வின் மரணச்செய்தி என்னை வருத்தமுறச்செய்தது. ஏனென்றால் சிறுவயது முதலே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்புள்ள ஜெயமோகன் ,</p>
<p>              மறைந்த முதுபெரும் தலைவர்  ஜோதிபாசு  பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?  சமீபத்தில் சண்டே இந்தியனில் ஜோதிபாசு பற்றிய கட்டுரையில் (ஜோதிபசு ஏன் இந்தியாவிற்கு தேவையில்லை <a href="http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&amp;pageno=1">http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&amp;pageno=1</a></p>
<p> ) அவரைப் பற்றி  முற்றிலும் ஒரு எதிர்மறையான சித்திரமே கிடைத்தது . இருபத்தி ஏழு வருடங்கள் ஆட்சி செய்தவர் இவ்வளவு அலட்சியமாக இருந்திருப்பார் என நம்ப முடியவில்லை.</p>
<p>&#8211;<br />
shankaran e r</p>
<p style="text-align: center;"><img src="http://a2zindianews.com/wp-content/uploads/2010/01/Jyoti-Basu101.jpg" alt="" width="302" height="391" /></p>
<p> </p>
<p>அன்புள்ள சங்கரன்</p>
<p>ஜோதி பாஸ¤வின் மரணச்செய்தி என்னை வருத்தமுறச்செய்தது. ஏனென்றால் சிறுவயது முதலே அவரைப்பற்றிக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்களூரில் அவரது நினைவாக ஜோதி என்று ஆணுக்கோ பெண்ணுக்கோ பெயரிடுவது சாதாரணம். என் அக்காவின் [ பெரியம்மா மகள்:] பெயர்கூட ஜோதிதான்.</p>
<p>ஆனால் கடந்த பத்தாண்டுகளாகவே நான் உறுதியான கருத்தியல்களை ஐயப்படுபவனாக இருந்துகொண்டிருக்கிறேன். மார்க்ஸியம் மற்றும் அதன் விளைபொருளாகிய ஸ்டாலினியம் ஆகியவற்றின் உலகளாவிய பங்களிப்புகளைப் பற்றி ஆழமான ஐயம் எனக்கிருக்கிறது. ஜோதி பாசு ஓர் உறுதியான ஸ்டாலினிஸ்ட் என்பதே என் கணிப்பு.</p>
<p>மறைந்த ஜோதி பாஸ¤வின் உண்மையான பற்று எதில் என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டால் குழப்பமே எஞ்சுகிறது. அவரை மனிதாபிமானி என்று சொல்ல முடியாது. வறியவர்களின் தோழர் என்றும் சொல்ல முடியாது. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். உயர்தரக் கல்வி பெற்றபின் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தொழிற்சங்க அரசியல் வழியாக இடதுசாரி இயக்கத்துக்கு வந்தவர். அவர் கல்கத்தாவுக்கு வெளியே எங்குமே வாழ்ந்ததில்லை. கல்கத்தா அல்ல வங்கம். கல்கத்தா  மாபெரும் பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட நகரம். வங்கம் மிகவும் பிற்பட்ட ஒரு மாநிலம்.</p>
<p>பாஸ¤வின் முதல் விசுவாசம் அவர் நம்பி ஏற்ற கோட்பாட்டுக்கே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தக்கோட்பாடு தவறிழைக்கும் என்று அவர் நம்பவில்லை. அதை முரட்டுத்தனமாக முன்வைப்பவராக இருந்திருக்கிறார். அதற்காக எதையும் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் பாஸ¤ அவரது மார்க்ஸிய-ஸ்டாலினியக் கோட்பாட்டை தொடர்ச்சியாக சமரசம் செய்பவராகவும் இருந்திருக்கிறார். அந்தச் சமசரம்கூட அக்கோட்பாட்டை புதிய காலமாற்றத்துக்கு ஏற்ப தக்கவைத்துக்கொள்வதற்காகவே.</p>
<p>வங்க அரசியல் குறித்து தெற்கே நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை. நாமறிந்தது பதவிக்கு வந்த காலம் முதல் ஒருபோதும் தோல்வியுறாமல் இன்றுவரை வங்கத்தில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியை பாஸ¤ அதிகாரத்தில் வைத்திருக்கிறார் என்பதே. அதன் பின்னால் உள்ள குன்றாத மக்கள் செல்வாக்கே அவரது சாதனையாக இப்போதும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணமாக  வங்கத்துக்கு அவரது பங்களிப்புகள் இருந்தன என்று.</p>
<p>எண்பதுகளின் இறுதியில் நான் கல்கத்தாவிலும் வங்க கிராமங்களிலும் பயணம் செய்தபோது கண்ட நேரடி உண்மை முற்றிலும் மாறானது. வங்க கிராமங்கள் அளவுக்கு கல்வி,போக்குவரத்து,உட்கட்டுமானம் எல்லாவற்றிலும் வளர்ச்சி மங்கிய ஊர்களை பிகாரில்கூட பார்க்க முடியாது. கிராமியப் பொருளியலே சிதைந்து கிடக்கிறது அங்கே. தமிழகத்தின் எந்தக் கிராமத்திலும் நாம் புதியவீடுகளையே எண்ணிக்கையில் அதிகமாகக் காணநேரும். ஆனால் வங்காளக் கிராமத்தில் ஒரு புதியவீடு என்பது மிக அபூர்வமான காட்சி. தொழில்கள் இல்லை. வணிகம் அனேகமாக உறைந்துவிட்டிருக்கிறது. அரசின் பொருளியல்நிலையே பரிதாபகரமாக, ஊழியர்களுக்கு ஊதியம்கூட கொடுக்கமுடியாதநிலையில் உள்ளது.</p>
<p>சண்டே இண்டியன் கட்டுரையின்படி கடந்த முப்பதாண்டுகளில் அங்கே 30 000 தொழில்நிறுவனங்கள் நலிந்து மூடப்பட்டுவிட்டிருக்கின்றன. 27 000 நிறுவனங்கள் நலிந்தவை என அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் நலிந்த நிறுவனங்கள் அதிகமான மாநிலமே வங்கம்தான். மூடப்பட்ட சணல் ஆலை ஊழியர்களுக்கு அளிக்கப்படவேண்டிய வைப்புநிதி 1977 முதல் இன்று வரை அளிக்கப்படவில்லை. இன்று அதன் மதிப்பு  200 கோடி. மேற்குவங்கமளவுக்கு பொருளியல் ரீதியாக சீரழிந்த இன்னொரு மாநிலமே இந்தியாவில் இல்லை.</p>
<p><img src="http://www.thelatestnews.in/wp-content/uploads/2009/03/cpi-m2.jpg" alt="" width="587" height="391" /></p>
<p>இந்தியாவில் 100 பரம ஏழை மாவட்டங்கள் கண்டடையப்பட்டுள்ளன. அவற்றில் 13 மாவட்டங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவை. அங்கேயுள்ள முக்கியமான மாவட்டங்கள் 18 தான். அவற்றில் 13 வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளன. இன்று கேரளம் முழுக்க அடிமட்டக்கூலி வேலைக்கு வங்காளிகள் வந்து குவிவது கேரளத்து மார்க்ஸிஸ்டுகளைச் சங்கடப்படுத்துகிறது என்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் வங்கத்திற்குள் சென்றபோதும் அதே நிலையையே கண்டேன்.</p>
<p>அதையும் மீறி எப்படி மார்க்ஸிஸம் அங்கே கோலோச்சுகிறது? நெருக்கடி நிலைக்காலத்தில் சித்தார்த்த சங்கர் ரேயின் அடக்குமுறை ஆட்சி இடது தீவிரவாதிகளை கொன்றொடுக்கியது. வங்கத்தில் மட்டும் 50000 பேர் கொல்லப்பட்டதாக தகவல். வங்கத்தின் மனதில் பதிந்த அந்த ரணம் அங்கே காங்கிரஸை முழு நிராகரிப்புக்குக் கொண்டுசென்றது. விளைவாக  1977ல் பாஸ¤ அதிகாரத்துக்கு வந்தார் என்பது ஒரு பாடம்.</p>
<p>இன்னொரு பாடமும் உள்ளது. இதுவே இன்னமும் வரலாற்றுச்சார்பானது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் முன்னர் கிழக்கு வங்காளத்தில் அங்குள்ள முஸ்லீம்களால் இந்துக்கள் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். அங்கிருந்து மாபெரும் அகதிப்பிரவாகம்  கிளம்பி வங்கத்துக்குள் வந்தது.</p>
<p>&#8216;வங்கம் எல்லா வங்காளிகளுக்கும் தாய்மண்&#8217; என்பதே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது முன்வைத்த கோஷம். 1960 முதல் வங்கத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சிதான் இருந்தது. அனால் ஒருகட்டத்தில் வங்கத்தில் அகதிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகியது. அவர்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்கள்.  ஆகவேதான் 1977ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர முடிந்தது. </p>
<p>1977 ல் முழு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த முதல் பத்துவருடம் உபரி நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் கைப்பற்றப்பட்டு அவை அகதிகளாக வந்த மக்களுக்கு வழங்கப்பட்டன. அந்த நிலச்சீர்த்திருத்தமே மேற்குவங்கத்தின் நிலையான மார்க்ஸிய ஆட்சிக்குக் காரணம் என்று  கேள்விப்பட்டேன். </p>
<p>அதன் பின்னர் மிக உறுதியான கட்டுக்கோப்புள்ள ஒரு அதிகார அமைப்பு ஒன்று அங்கே உருவாகியது என்கிறார்கள். 1989ல் நான் சந்தித்த பல மேற்குவங்க இதழியல் &#8211; இலக்கிய நண்பர்கள் ஏற்கனவே இருந்த உயர்சாதி நிலவுடைமை ஆதிக்கமும்,  மார்க்ஸியக் கட்சியும் , தொழிற்சங்கங்களும்,  அரசாங்க அதிகாரமும் முழுமையாகவே ஒன்றாக இணைந்து விட்டன என்றும் அந்த அதிகார அமைப்பு தேர்தல்களை முழுமையாகவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதனால் மேற்குவங்கத்தேர்தல்முறை என்பதே ஒரு மோசடி என்றும் சொன்னார்கள்.</p>
<p style="text-align: center;"><img src="http://bangalnama.files.wordpress.com/2009/07/dsc00863.jpg" alt="" width="476" height="391" /></p>
<p>அப்போதுதான் மரிச்சபி [ Marichjhapi ] படுகொலைகளைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் அன்று அது ஆதாரங்கள் இல்லாத ஒரு பொதுக்கூற்றாகவே சொல்லப்பட்டது. அந்தப் பெயர்கூட என் நினைவில் நிற்கவில்லை. சமீபமாக நண்பர் ஷாஜி அதைப்பற்றி சொல்லி இணைய ஆதாரங்களை அளித்தார். வங்காளத்தில் ஒருகட்டத்தில் எதிர்கட்சி ஊடகங்கள்கூட மரிச்சபி குறித்து பேசமுடியாத நிலை இருந்தது. தமிழகத்தில் மரிச்சபி பற்றி ஒரு வரிகூட எழுதப்பட்டதில்லை. இப்போது இணையம் ஆதாரங்களை அள்ளிக் கொட்டுகிறது.</p>
<p>1971ல் இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச அகதிகளில் கணிசமானோர் தலித்துக்கள். மேற்குவங்கத்தில் பிற்பட்ட மற்றும் உயர்சாதி அகதிகளே ஆதரிக்கப்பட்டார்கள். தலித்துக்களை இந்திய அரசு மத்தியபிரதேசத்தில் தண்டகாருணியத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் கொண்டு சென்று தங்க வைத்தது.</p>
<p style="text-align: center;"><img src="http://bangalnama.files.wordpress.com/2009/07/dsc00864.jpg" alt="" width="521" height="391" /></p>
<p>&#8216;தங்கள்&#8217; ஆட்சி வந்தபோது தண்டகாருணியத்தில் இருந்த தலித்துக்கள் திரும்ப தங்கள் சொந்த மண்ணான மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் பல இடங்களில் உபரி நிலங்களையும் சதுப்புகளையும் கைப்பற்றி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் ஏற்கனவே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக ஆகிவிட்டிருந்த உயர்சாதி அகதிகளுக்கும் இடையே பூசல்கள் வெடித்தன. இத்தகைய பூசல்களில் ஒன்றே மரிச்சபி. அங்கே தண்டகாருண்யத்தில் இருந்து குடியேறிய 30 000 தலித் அகதிகள் குடியேறி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். </p>
<p>1978- 1979ல்  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போலீஸ¤ம் இணைந்து மரிச்சபியை தாக்கினார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் மரிச்சபி முழுமையாக துண்டிக்கப்பட்டது. எந்த தொண்டுநிறுவன அமைப்புகளும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. செய்திகள் முழுமையாகவே மறைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் நடந்ததாகவும் கிட்டத்தட்ட 200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மரிச்சபி முழுமையாகவே காலிசெய்யப்பட்டது. Jagadis Chandra Mandal எழுதிய  Marichjhapi: Naishabder Antaraley (Marichjhapi: Beyond silence), Sujan Publications, Calcutta; 2002 என்ற நூல் இந்த தகவல்களை விரிவாகவே பேசுகிறது.</p>
<p style="text-align: center;"><img src="http://4.bp.blogspot.com/_leGDuVvav5E/SnbxJCjTFNI/AAAAAAAAAfE/nUAAUr-o3Vo/s320/Delta+1.JPG" alt="" /></p>
<p>நான் இப்போது இணையத்தில் இத்தகவல்களை வாசிக்கும்போது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் வங்காளத்திந் மூத்த இதழாளர்களிடமிருந்து கேள்விப்பட்ட கிராமப்புற யதார்த்தம் உண்மைதானா என்று எண்ணிக்கொள்கிறேன். இன்றுவரை இந்த விஷயங்களுக்குள் முழுமையாகச் சென்று ஆராய என்னால் இயலவில்லை. எழுதப்பட்ட வரலாறுகள் கொஞ்சம்தான். காரணம் நமது ஊடகம் எப்போதுமே இடதுசாரி சாய்வுள்ளது. மேலும் வங்காளிகள் இதைப்பற்றிப் பேச வெட்குவார்கள்.</p>
<p>ஜோதிபாஸ¤வின் மரணச்செய்தியுடன் இந்த எண்ணங்கள் என்னை சூழ்கின்றன. அசாதாரண அறிவுத்திறனும் நேர்மையும் கொண்டிருந்த மனிதர். ஆனால் அவரது சாதனைகள் என்ன? துரதிருஷ்டவசமாக ஒரு காலாவதியான கோட்பாட்டை அவர் உறுதியாக நம்பினார். கோட்பாட்டின் சுமையால் வங்கம் அழிந்தது என்பதே உண்மை.</p>
<p>அவதார் படத்தில் ஒரு மாபெரும் ரோபோவுக்குள் அதை இயக்கியபடி செல்லும் மனிதர் இருப்பதைப்போல எனக்கு பாஸு தோற்றமளிக்கிறார்.அனைத்து வகையிலும் பாஸ¤ ஒரு ஸ்டாலின். ஸ்டாலினைப்போலவே கோட்பாட்டைக் கொண்டு ஓர் உறுதியான அமைப்பை அவர் உருவாக்கினார். அந்த அமைப்பு ஒரு மகத்தான யந்திரம். அது தவிர்க்க முடியாமல் உருவாக்கிச் சென்ற அழிவுகளை அவர் வழிநடத்த வேண்டியிருந்தது, நியாயப்படுத்தவேண்டியிருந்தது. மறைக்க வேண்டியிருந்தது.</p>
<p>ஜோதிபாஸ¤ கொஞ்சம் ஜனநாயக நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கலாம். கொஞ்சம் கோட்பாட்டுக்கு வெளியே வந்து சிந்தித்திருக்கலாம். அவ்வளவுதான் சொல்லத்தோன்றுகிறது. மிகுந்த வருத்தத்துடன். </p>
<p><a href="http://empireslastcasualty.blogspot.com/2009/08/marichjhapi-west-bengal-india-communist.html">http://empireslastcasualty.blogspot.com/2009/08/marichjhapi-west-bengal-india-communist.html</a></p>
<p><a href="http://blog.insightyv.com/?p=864">http://blog.insightyv.com/?p=864</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6438</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈராறு கால்கொண்டெழும் புரவி 2</title>
		<link>http://www.jeyamohan.in/?p=6389</link>
		<comments>http://www.jeyamohan.in/?p=6389#comments</comments>
		<pubDate>Thu, 04 Feb 2010 19:01:39 +0000</pubDate>
		<dc:creator>ஜெயமோகன்</dc:creator>
				<category><![CDATA[குறுநாவல்]]></category>
		<category><![CDATA[நூல்]]></category>
		<category><![CDATA[காடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.jeyamohan.in/?p=6389</guid>
		<description><![CDATA[[2]
நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும் சித்தமருத்துவமும் அந்த உறுப்பு ஒரு திரவவடிகால் என்பதற்கப்பால் பொருள் கொள்ளமுடியாமல் செய்தன.
எல்லாம் தற்செயல்தான். திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுக்கூரை சரிந்த குளுளுத்த கல்திண்னையில் கல்திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்த, சட்டையற்ற உடலில்   சாம்பல் தடியங்காய் போல திருநீற்றுக்கோலம் பூண்ட, வயோதிகர் &#8216;தம்பி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>[2]</p>
<p>நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும் சித்தமருத்துவமும் அந்த உறுப்பு ஒரு திரவவடிகால் என்பதற்கப்பால் பொருள் கொள்ளமுடியாமல் செய்தன.</p>
<p>எல்லாம் தற்செயல்தான். திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுக்கூரை சரிந்த குளுளுத்த கல்திண்னையில் கல்திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்த, சட்டையற்ற உடலில்   சாம்பல் தடியங்காய் போல திருநீற்றுக்கோலம் பூண்ட, வயோதிகர் &#8216;தம்பி செத்த வாப்பா&#8217; என்றழைத்தார் . பிள்ளை சைக்கிளை நிறுத்தியைத் தட்டி நிற்கவைத்துவிட்டு வேட்டியை தழைத்துக் கொண்டு சென்றார்.</p>
<p>கிழவர் &#8220;ஒண்ணுமில்லே&#8230; இந்த தட்டை எடுத்து செத்த உள்ள எடுத்துக் குடுத்திட்டுப்போ. வீட்டிலே பொம்புளயாளுக மட்டும்தான் பாத்துக்கோ. மவன் எடுத்து வச்சது, அவன் வேலைக்குப்போயிட்டான். நம்ம சிவபூசை முடிய வெயிலேறிடும். பொம்புளைக தூக்கிக்கிடாது .. வெலயுள்ள பொருளாக்கும்&#8230;&#8221; என்றார்.</p>
<p>துலக்கப்பட்ட  செம்பாலான மாந்தளிர் நிறத் தாலம் மீது கொட்டைத்தேங்காய் அளவுள்ள சிறிய உலோகச் சிவலிங்கம் இருந்தது. புராதன வெள்ளி அல்லது அலுமினியக்கலவைபோல ஒரு நிறம். அடிக்கடி துலக்கமாட்டார்போல என்று எண்ணிக் கொண்டார்.</p>
<p>&#8220;டே, பாத்தா சைவமா இருக்கியே&#8230; என்னடே கொலம்?&#8221; என்றார் பெரியவர்.</p>
<p>&#8220;நாஞ்சிநாட்டுச் சைவம். &#8221;</p>
<p>&#8220;அப்பம் நெருங்கிட்டோம் ..எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே&#8230;.. என்னா ? மக்கத்தாயமா? &#8221;</p>
<p>&#8220;ஆமா&#8221;</p>
<p>&#8220;அப்ப சரி . கேட்டுக்குங்க மாப்பிளே , மருமக்கத்தாயம்ணாக்க நாயருக்க கோமணவாலுண்ணுல்லா அர்த்தம். .. சரி வாங்க &#8221;</p>
<p>தாலத்தை சாதாரணமாகத் தூக்கப்போன சாஸ்தான்குட்டிப்பிள்ளை ஒருசக்தி புறங்கழுத்தில் அடித்து கீழே அழுத்துவதாக உணர்ந்தார் . அத்தனை கனமிருந்தது. இரு கையாலும் தூக்கினாலும் மூச்சை சுளுக்கவைக்குமளவுக்கு எடை . கழுத்தெலும்புகள் புடைக்க அவர் அதை தூக்கியதும் பெரியவர் எழுந்து விந்தியபடி நடந்து &#8221; வா&#8230; அறைக்குள்ள கொண்டுட்டு வைக்கணும். என்னான்னா அறையில கெழக்குபாத்து நடையில்ல பாத்துக்கோ &#8221; என்றார்.</p>
<p>அறைக்குள் இருந்த சிறுமேடையில் தாலத்தை வைத்ததும் வியர்வையும் மூச்சுத்திணறலுமாக சாஸ்தான்குட்டிப் பிள்ளை இடுப்பில் கைவைத்துநின்றார். &#8220;வெள்ளி இம்பிடு கனமா இருக்கு?&#8221;</p>
<p>&#8220;வெள்ளியா ? நல்ல கத. இது பஞ்சபாஷாணம்லா ? &#8221;</p>
<p>&#8216;அப்டீண்னா?&#8221;</p>
<p>&#8221;அஞ்சுவகை உலோகங்கள் . சரியாச்சொன்னா உலோகங்கள் இல்லை. உலோகங்களை பஸ்பமாக்கி அப்றமா பாஷாணமாக்கணும் . எப்படிச் சொல்றது?  நீ ஒண்ணு பண்ணு&#8230;காலம்பற தினம் ஒருநடை இந்தப்பக்கமா வா. சித்தமருத்துவம்னாக்கா வெறும் சிகிழ்ச்சை இல்லை . சித்தத்தை வென்றவன் சித்தன். சித்தமருத்துவம் சித்தமெனும் நோய்க்கு சித்தத்தாலான மருந்து. கல்யாணமாய்ட்டுதோ?&#8221;</p>
<p>அப்படித்தான் சச்சிதானந்தம்பிள்ளையின் சீடராக ஆகி ஊத்தைக்குழி, உப்பிருந்தபாண்டம் முதலிய சொற்களைக் கற்றுக் கொண்டார். அதிகாலையில் எழுந்து குளிரக்குளித்து விபூதி அணிந்து, சைக்கிளில் ஏறி, வாசல்தெளிக்கும் தெருப்பெண்டிரின் சாணிவீச்சுக்கும் தெருநாய்களின் உறுமல்களுக்கும் தப்பி, இருள்பிரியாத நேரத்தில் சச்சிதானந்தம்பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்வார். அரைமணி நேரம் சித்தாந்தப் பயிற்சியும், தொடர்ந்து வடிகட்டிக் காப்பியும் . பிறகு சித்தமருத்துவமும், பரசமய கண்டனமும், சிற்றுண்டியும் . முடிந்து மண்டைகனக்க பள்ளிக்குச்சென்று முதல்வகுப்புப் பிள்ளைகளுக்கு  கொன்றைவேந்தனை பாடச்சொல்லி உத்தரவிட்டு பிரம்பை மும்முறை மேஜைமீது ஓங்கியடித்து விட்டு கண்ணயர்வார். ஆறுவது சினம் தாண்டும்போதே குரட்டை ஒலிக்க ஆரம்பித்துவிடும்.</p>
<p>சச்சிதானந்தம்பிள்ளை பழைய வக்கீல் குமாஸ்தா . ஓய்வுநேரத்தில் பாலத்தடியில் சாஸ்திரம்பேசும் சகபிள்ளைகளுடன் சரசமாகப்பேசிக் கொண்டிருக்கையில் ஒருநாள் சண்முகத்தேவர் , அவர் தேவரானாலும் தற்காலிகமாக பிள்ளைப்பருவத்திலிருந்தார், பாடிய திருமந்திரத்தால் நெக்குருகி சைவசித்தாந்தத்தில் விழுந்தார்.  &#8216;நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும். கோல் ஒன்று பற்றினால் கூடாப்பறவைகள். மால் ஒன்றுபற்றி மயங்குகிறார்களே&#8217;. அன்றிரவே பால்பற்றும் செயலை விட்டொழித்து கோல்பற்ற ஆரம்பித்தார். பறவைகள் கூடுவது குறைந்தது. தாடிநரைத்தபிறகு அதுவும் மாதம் மும்மாரி என்ற கணக்கில் சுருங்கி வந்து மும்மாதம் ஒருமாரி போதுமென்றாயிற்று. . சித்தாந்தத்தின் தலை சித்து என்றுணர்ந்து அதிலிறங்கி , வைத்தியம் பழகி ,ரசக்கட்டும் பாஷாணக்கட்டும் கற்று ,ஊருலகில் வைத்தியர்சாமி ஆகி ,எட்டுகோட்டை நிலமும் காரைவீடும் ஈட்டி, மூன்று பெண்களை கட்டிக்கொடுத்து , அன்பே சிவமாவதறிந்து அன்பேசிவமென திண்ணையிலமர்ந்தார் .</p>
<p>ரசக்கட்டுவரை கற்று தேர்ந்தபிறகுதான் சச்சிதானந்தம்பிள்ளையிடன் ஆசிவாங்கி சாத்தான்குடிப்பிள்ளை நாஞ்சில்நாட்டுக்குத்திரும்பினார். அதற்குள் பெண்பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், மேலூர் மூத்தபிள்ளையும் தொழிவயலில் உதிர்ந்த நெல்பொறுக்கும் கஞ்சனுமான தந்தைசொல் தட்டமுடியாத சாஸ்தான்குட்டிப்பிள்ளை எட்டு கோலம்மைகளையும் மூன்று வடிவம்மைகளையும் இரு நாகம்மைக¨ளையும் பெண்பார்க்க வைக்கப்பட்டார். கடைசியில் இரண்டாம் நாகம்மைக்கு சித்திரை எட்டாம்தேதி இருவகை பிரதமனும் புளிசேரியும் எரிசேரியும் மணக்கும் தட்டுப்பந்தலில் வெயில்கொளுத்தும் முன்மதியத்தில் மாலையிட்டார். சச்சிதானந்தம் பிள்ளைக்கு தகவல் சொல்லவில்லை.</p>
<p>முதலிரவிலேயே சொல்லவேண்டிய வஞ்சினச்சொற்களை பிள்ளை சேர்த்துக் கோர்த்து எதற்கும் இருக்கட்டுமென இருமுறை தெளிவாகச் சொல்லியும் பார்த்துக் கொண்டார். இலக்கணம்கூட சுத்தமாகவே இருந்தது. சாரதாதேவி ,மிருணாளினீதேவி சரித்திரங்களுடன் சைவமணத்துக்காகக் கிள்ளிபோட்ட திருநீலகண்டர்.  அவரது பேச்சை நாகம்மை குனித்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தாள். சீக்கிரமே அவளுக்கு எல்லாம் ஒருமாதிரி புரிந்துவிட்டது. &#8221;வெளக்கை அணையுங்கோ&#8221;  என்று மட்டும் ரத்தினச்சுருக்கமாகச் சொல்லி அதை முடித்துவைத்தாள். வெயிலெழுந்த காலையில் &#8221;ஆருலே வெளக்கை போட்டது ?&#8221; என்றுதான் பிள்ளை வள்ளென்று விழுந்தார். அத்தைமுறையான சுப்பம்மைப்பாட்டி &#8221;பய  இன்னி பத்துவரிசத்துக்கு ராத்திரிதாண்ணுல்லா நெனைச்சுப்போட்டான்&#8230;சீ எந்திரிலே மூதி&#8221; என்றாள்.</p>
<p>பல்தேய்க்கும்போது பிள்ளை மிகுந்த பரவசத்துடன் ஊத்தைக்குழியை உப்பிருந்தபாண்டத்தையும் பற்றிய வரிகளை உள்ளூரப் பாடிக் கொண்டார்.&#8221;ஏம்லே ஒரு சிரிப்பு மொகத்திலே ?&#8221; என்று கேட்ட  கோலப்பண்ணாச்சிக்கு &#8221; இல்லண்ணே இந்த சித்தனுக எல்லாம் அறிஞ்சனுபவிச்சுத்தான் எழுதியிருக்காக. என்னாங்குதீக?&#8221; என்றார் .</p>
<p>அதன் பிறகு இரண்டுவருடம் முட்டையிடப் பம்மும் கோழிபோல சமையற்கட்டைச் சுற்றுவதே பிள்ளையின் வேலையாயிற்று. &#8216;தீராத வயிற்றுவலியால்&#8217; இடைவெளியின்றி விடுப்பு எடுத்து &#8216;கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடும்&#8217; கலையறிந்து ஒழுகினார். இரண்டுவருடமாகியும் காய்விடாததைக் கண்டு மூத்தபிள்ளை மனைவியிடம் கேட்க அவள், &#8221;சவம் கெடக்கான். அவன எங்கிணயாம் கெழக்க அடிச்சுவிட்டு மாசத்துக்கொருக்க வாற மாதிரி வச்சாத்தான் எனம் வெளங்கும். நாய் மோண்டதுமாதிரி மூச்சுக்கு முன்னூறுமட்டம் சொட்டுசொட்டா ஊத்திவச்சா என்னாண்ணு  முளைக்கும் ?&#8221; என்றாள். கண்ணீரும் கம்பலையுமாக பிள்ளை சாத்தூருக்கு தற்காலிக மாற்றம் பெறப்பட்டு  அனுப்பப்பட்டார். ஆனால் இரண்டாவதுமாதம் நாகம்மைக்கு நாள் தவறியது. அதன் அவர் திண்ணைக்கு அப்பால் அனுமதிக்கப்படவில்லை. கடிதோம்பிக் கோலோச்சும் கலையை அவரும் நம்பவேண்டியதாயிற்று.</p>
<p>பேறு எடுக்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழக்கம்  மேலூரிலேயே இல்லை. கண்டசாதியும் கண்டபிறகு கருவறைவாசலுக்குள் குலதெய்வம் இருக்குமா என்றார் அம்மன்கொண்டாடி வயிரவன்பிள்ளை. வயற்றாட்டி சின்னம்மைக்குக் கண்ணாடி இருக்கும்போது பார்வை பிரச்சினையில்லை , கண்ணாடி தொலைந்துவிட்டால் அதைத் தேடுவதுதான் சிக்கல். அன்றைக்கு மூக்குக் கண்ணாடியை வாலாய்மைத்துணிச்சுருள்களுடன் சேர்த்துச் சுருட்டிவிட்டு பிள்ளையைத் தூக்கி பக்கத்தில் விட்டுவிட்டு தரையில் இழுபட்ட முந்தானையை இழுத்துசெருகியபோதுதான் அது தாய்க்கொடி என்றறிந்தாள். கண்ணாடி கிடைத்தபோது குழந்தை இறந்து நாகம்மை கைகால்கள் வெட்டிக் கொண்டிருந்தாள். &#8221;கர்மத்துக்கும் கசண்டிக்கும் மருந்தில்லை மொதலாளீ&#8221; என்றாள் சின்னம்மை.</p>
<p>அதன் பிறகு சாத்தான்குட்டிப்பிள்ளை மீண்டும் தாடிவளர்க்க ஆரம்பித்தார். &#8216;மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய  இதணம் தேறி பொதுவூர் புறஞ்சுடுகாடு அதுநோக்கி&#8217; பிரக்ஞை செல்ல ஆரம்பித்தது. சிவமூலி கொஞ்சம் இழுத்துப் பார்த்தார். மூக்குவழியாக ஒரு செடி முளைத்து மேலெழுந்து மரமாகி அதில் கணக்கிலாபறவைகள் அடைந்து முப்பது மொழிச்சொற்களை கலந்து பேசுவதைக்கேட்டபடி கீழே அமர்ந்திருக்கும் அனுபவமே மீண்டும் மீண்டும் வந்தது. சாராயமும் கள்ளும்  வேறு திசையில் ஓடி உள்ளிறங்க சித்தாந்தமும் தமிழ்பாடங்களும் கலந்த சித்தம் தனியாக நின்று அரற்றியது. ஒரு நினைப்புமே இல்லமலிருக்கும்போது  முழங்கும் தவுலுக்குப் பக்கவாட்டில் நிற்கும்போது வருவதுபோன்ற அதிர்வு வயிற்றில்இருந்தபடியே இருப்பதை உணர்கையில் அது எல்லா சொற்களுக்கும் எல்லா நினைப்புகளுக்கும் ஊடாக ஓடுவதையும் அறியமுடிந்தது. ஆனால் படுக்கையில் விழுந்து கூரையில் நெளிவைப்பார்த்துப் படுத்திருக்கும்போது தூக்கம் விழுங்கும் கணத்துக்கு முன்வரை நாகம்மை நினைவு வருவதில்லை. வந்ததுமே எல்லாம் நின்றுவிடும். அக்கரைக்குளத்துக்கு அடியில் சேற்றுப்பரப்பில் குளிர்ந்து கிடக்கும் துர்க்கையம்மனின் கருஞ்சிலைபோல அவள்முகம். அவள் மூடாத கண்கள் மீது அலையடிக்கும் ஒளி.</p>
<p>அந்நாட்களில் ஒருநாள் பிள்ளையின் பள்ளிவளாகத்தில் பஞ்சாயத்துக்கிணறுவெட்ட ஏற்பாடாகி சாமித்தோப்பு அய்யாவுநாடார் நீர்நோட்டத்துக்கு வந்திருந்தார் . பிள்ளை அருகே சென்று அவர் செய்வதைப் பார்த்தார். நாடாரின் கையில் இரு வேப்பங்குச்சிகள் இருந்தன. அவற்றை இருகைகளிலும் நுனிகள் மிகநெருங்கியிருக்க வைத்தபடி மெல்ல நடந்த்தார் . மணற்தரையின்மிது கால்புதைய நடப்பதுபோல ஒருவகை தள்ளாட்டம். அரைக்கண்மூடி கழுத்து நரம்பு ஒன்று புடைத்திருந்தது . சுற்றிச் சுற்றிவந்தபோது ஒரு இடத்தில் குச்சிகள் மெல்ல முட்டிக்கொண்டு அதிர ஆரம்பித்தன. அவை நடுநடுங்குவதை பிள்ளை பார்த்துநின்றார்.</p>
<p>நாடார் கண்திறந்து &#8220;செரி இஞ்ச தோண்டுங்க. பத்தடியிலே ஒரு கன ஊற்றுண்டு . பின்ன அடிக்கொரு செறு ஊற்று . இருபத்தெட்டில நல்ல கன ஊற்று. பின்ன அஞ்சடியிலே ராஜ ஊற்று. ஒருக்காலும் தண்ணிக்கு கொறவில்ல . தாணுமாலையன் அருள்&#8230;&#8221; என்றார். தலைமையாசிரியரும் பஞ்சாயத்துத் தலைவரும் கைகூப்பினார்கள்</p>
<p>பிள்ளை சற்றே சுடலைமாட உபாசனையில் இருந்தார் . கம்பீரமாக &#8221;ஓய் நில்லும்&#8221; என்றார் &#8220;என்னவே கணக்கு இது ? இதுக்க சாஸ்திரமென்ன?&#8221;</p>
<p>&#8220;நீர்நோட்டம்லா ?&#8221; என்றார் நாடார்</p>
<p>&#8220;செரி. ஆனா அதுக்கொரு கணக்குவேணுமே. சும்மா சொன்னா முடியாதுல்லா. &#8230;&#8221;</p>
<p>&#8220;கணக்குண்ணா இது தண்ணிக்க கணக்குல்லா&#8230;.தண்ணி மண்ணிலயும் விண்ணிலயும் சூக்குமமாட்டு இருக்குவு. அதுக்கொண்டு&#8230;&#8221;</p>
<p>&#8220;சாமிகூட அப்பிடித்தான் இருக்குவோய் . அத அறிஞ்சு சொல்ல சாஸ்திரங்களுண்டு கேட்டேரா? கணக்கு கணக்காட்டு இருக்கணும். இங்க கேக்கிறதுக்கு ஆளுண்டுவே&#8230; என்ன கணக்கு ? அம்பதடி முப்பத்திரண்டரையடீண்ணு  அச்சொட்டா சொன்னேரு&#8230;&#8221;</p>
<p>&#8220;இங்க பாருங்க பிள்ளசார்&#8230; கல்லும் மண்ணும் காயுமானா எண்ணி சொல்லலாம் . தண்ணிய எண்ணிச்சொல்ல முடியுமா? அது ஓடுவழிஓடி ஒருகணம் நில்லா கெங்கையில்லா ? &#8221;</p>
<p>&#8220;செரி ஒரு வரி எடுத்துப்போட்டுட்டீரு. நல்லாத்தான் இருக்கு . தண்ணிய கும்பா வச்சு அளக்கிலாம்வே. எப்பிடி நீரு அளந்தீரு சொல்லும்&#8230;&#8221;</p>
<p>நாடார் மேல்துண்டால் முகத்தைதுடைத்து &#8221; ஆழஓடி ஊறிஓடி கடல்சேருத தண்ணிமாதிரியாக்கும் சித்தம்ணு எனக்க குரு சொல்லுவாரு&#8230;.&#8221; என்றார்.</p>
<p>&#8220;பாட்டை விடும். நான் நெறைய் பாட்டு படிச்சாச்சு கேட்டேரா? அப்பம், நீரு உம்ம மனசை வச்சாக்கும் அளக்கேரு?&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8221;</p>
<p>&#8220;அப்பம் இந்த வேப்பம்கம்பை ஆட்டுயது தண்ணியா உம்ம மனசா?&#8221;</p>
<p>&#8220;விடும்வேய் .. என்னமோ ஒருகணக்கு . இத நாஞ்சிநாட்டிலே பாதிக்கெணறு இவரு பாத்த எடம்தான்..&#8221; என்ரார் ஹெட்மாஸ்டர்.</p>
<p>&#8220;நாஞ்சிநாட்டிலே பத்தடிக்குக் கீழ தண்ணி இருக்குண்ணு சொல்ல எந்த கூமுட்டையனும் வேண்டாம் பணிக்கரே. நீரு போவும் நான் இந்தாளுக்க கணக்க ஒரு குடை குடைஞ்சுட்டு வாறன்..வோய் அப்பம் இந்த கம்ப நீரு ஆட்டுதீரு..&#8221;</p>
<p>&#8220;நான் ஆட்டல்ல&#8221;</p>
<p>&#8220;பின்ன உம்ம அப்பன் மூத்தநாடாரு வந்து ஆவியா நிண்ணு ஆட்டுதாரோ?&#8221;</p>
<p>&#8220;இல்ல&#8221;</p>
<p>&#8220;விட்டுபோடும் சாஸ்தான்குட்டியே. அவருக்க பொழைப்புல்லா&#8221;</p>
<p>&#8220;கோட்டாறு கம்போளத்துல முடிச்சவுக்குதவனும் பொழைக்கத்தான்வே செய்யுதான். இங்க கேட்டறிய நாலெழுத்து படிச்சவன் இருக்காண்ணு நாலாளு தெரியட்டுமே. பள்ளிக்கூடம்ணாக என்னா சரஸ்வதி ஷேத்ரம்லா? &#8216;கல்வி உடையார் கழிந்து ஓடிப்போகின்றார். பல்லியுடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்&#8217; &#8211; ணு சொல்லுதாரு திருமூலர். பாம்பு தின்ன நாம இங்க என்ன சீனாக்காரனாவே இருக்கம்? இல்ல கேக்கேன்&#8230;&#8221;</p>
<p>நாடார் &#8220;நான் கண்ட சாஸ்திரம் இது. இஷ்டமானா தோண்டுங்கோ. உள்ள பணத்த தாருங்கோ. .. இல்லேண்ணா விட்டுடுங்கோ..&#8221; என்றார்.</p>
<p>&#8220;அப்பிடி வாரும்வே காட்டுவழிபோனாலும் தன்ணிகுடிக்க துறைக்குத்தானெ வரணும்&#8230; ஹெ ஹெ ஹெ&#8221; என்றார் பிள்ளை</p>
<p>&#8220;சரி. ஆனா கெணறு தோண்டணுமே&#8230;&#8221;</p>
<p>&#8220;இவன் சொன்ன கணக்கு தப்பு. இது ஈசான மூலை.  சாஸ்திரப்படி இங்க ஒரு கட்டுமானமும் நிக்கப்பிடாது .கிணறுண்ணா எப்பிடியும் மதிலுகெட்டுவம். அது கட்டுமானமாக்கும். &#8221;</p>
<p>&#8220;கெணறு ஆழம். உசரத்தைத்தான் கெட்டுமானம்பாவ&#8221; என்றார் நாடார்</p>
<p>&#8220;நீரு மூடும்வே. உம்ம தண்ணிகணக்கில்ல இது . இது அணுஎண்ணி அண்டம் துளைக்குத ஆகாசக் கணக்காக்கும் &#8221; என்றார் பிள்ளை. &#8220;கன்னிமூலைலே தோண்டுவம் . நெறஞ்ச எடம்..&#8221;</p>
<p>&#8220;கன்னிமூலையிலே எட்டடிக்கு கீழ செம்பாறையாக்கும். முப்பதடியில அரை ஊற்று உண்டு. பிறவு காஞ்சகரும்பாறை&#8230;&#8221; என்றார் நாடார்</p>
<p>&#8220;பாப்பமே&#8221; என்றார் பிள்ளை.&#8221;நான் எடுத்துக்காட்டுதேன் தண்ணி&#8221;</p>
<p>அய்யாவு நாடார் காசுவாங்காமல் பக்கத்தில் தெரிந்த ஒரு பனையேறியிடம் கடன்வாங்கிவிட்டு அவரிடம் &#8220;படிப்பு நல்லதாக்கும். ஆனா படிப்பு பாம்புமாதிரி இருக்கணும். தலையிளுக்க உடல் செல்லும் திக்கில நேரா போணும். நண்டு மாதிரி நாலுதிக்கும் போவப்பிடாது&#8230;.&#8221; என்றார் .</p>
<p>&#8220;பின்ன . உள்ள காரியம்லா?&#8221; என்றார் பனையேறும் பரமசிவம்நாடார். &#8221;&#8230; ஈசானமூலையிலே வெள்ளமுண்டு சாமித்தோப்பாரே. கன்னிமூலையிலே பனைவேரு பழுதாவுத கள்ளப்பறையாகும். மூத்தகரும்பனையாக்கும் கன்னிமூலையிலே நிக்குதது.  அங்க அக்கானி அரக்காட்டு இறுகிக் கெடக்கும் கேட்டேரா. இந்தால ஈசானமூலையிலே கலம்பொங்கி வழிஞ்சு தரையில நாயிநக்கி நிக்கும். அதாக்கும் கணக்கு. &#8221;</p>
<p>&#8220;உம்ம கணக்கு வேருக்க கணக்குல்லா&#8221; என்று அய்யாவுநாடார் வியந்தார்.</p>
<p>&#8221;பனை பாதாளமறிஞ்ச காளியாக்குமே . பொடி போடுதேரா?&#8221;</p>
<p>பொடிபோட்டுவிட்டு அய்யாவுநாடார் கிளம்பிப்போனார். அன்றைக்கே கிணறுவெட்ட பணகுடி ஒட்டர்கும்பல் வந்து சேர்ந்தது . மூத்த ஒட்டன் கன்னிமூலையை காலால் எத்திப் பார்த்துவிட்டு &#8221;ஜாமிகோ .. நீ£ருபாத்தவன் வச்ச கம்பு பொட்டையல்லோ &#8221; என்றான்</p>
<p>&#8220;ஏம்டே?&#8221; என்றார் பணிக்கர்.</p>
<p>&#8220;கல்லு குளுந்து காணுகில்ல ஜாமிகோ &#8221; என்றான் அவன் தரையிலிருந்து ஒரு கல்லை எடுத்து காட்டி&#8221;தண்ணி உண்டுமானா கல்லு அடிகுளுந்து இருக்கும் ஜாமிகோ. மாட்டுச்சதை முறிச்சமாதிரி செவப்படுக்காட்டு கீழ்க்கல்லு இருக்கும் ஜாமிகோ. மாட்டுக்கண் மாதிரி ஈரம் மின்னுத கருப்புக்கல்லு இருக்கும் ஜாமிகோ . இங்க செம்மண் கல்லில்லா இருக்கு&#8230; ஜாமிகோ எடம் மாத்தி பாக்கணம்&#8230;&#8221;</p>
<p>&#8220;என்னவெ இப்படிச் சொல்லுதான்?&#8221; என்றார் பணிக்கர் . &#8220;சர்க்காரு பைசா பாத்துக்கிடும்&#8221; </p>
<p>&#8220;வேய் உம்மக்க தலைக்குள்ள என்னவே ? அந்த எடத்துக்கும் இதுக்கும் எடையிலே ஒம்பதடி தூரம். இங்க இருக்க பாறை அங்க இருக்காதோ? நாஞ்சிநாட்டிலே பத்தடியிலே தண்ணிவராத மண்ணு உண்டுமா? அந்தால இருக்கு, தீமழைபெய்யுத கோடையிலயும் வத்தாத வீ£ரசோழங்கொளம். அந்த தண்ணிதான் எங்கயும் ஊறிவரும். இவனுக ஆளுக்கொரு காரியம் சொல்லுகானுக . என்னடா கணக்குண்ணு கேட்டா கண்ண தள்ளுகானுக. இவன்கிட்ட கேட்டா சக்கம்மை கணக்கும்பான்&#8230; ஓய் உம்ம கணக்கு என்னவே? &#8221;</p>
<p>ஒட்டர்கிழவர் புகையிலையைவய் பாதாளத்து துளையொன்றுக்குள் ஆழச்செருகி &#8220;ஜாமி , இது கல்தேரை கணக்காக்கும்&#8221; என்றார் &#8221;தேரையறியா தண்ணியில்ல ஜாமிகோ&#8221;</p>
<p>&#8220;நெறைஞ்சதுபோ . இவனுக்கு சாமிகணக்கும் இல்ல , தேரைக்கணக்கு..பணிக்கரே. நீரு தோண்டும். தண்ணிவராட்டி செலவு என் கணக்கிலே வையும்&#8230;போருமா?&#8221;</p>
<p>தண்ணி வருமென எதிர்பார்த்த ஒரே ஆள் பிள்ளைதான். எட்டடி வரை செம்மண். அதற்குப் பிறகு மண் ஈரமாகி வெள்ளை எழுந்தது. . அதன் பிறகு பன்னிரண்டடி வரை கசியும் சுண்ணாம்புக் கல்லடுக்குகள் . பிறகு முப்பதடிவரை ஒரே சொறிப்பறை. பிளந்து பிளந்து மாட்டுத்தொடைக்கறிபோல  தூக்கி மேலே வைத்தபடியே இருந்தார்கள் ஒட்டர்கள்.</p>
<p>&#8216;நிப்பாட்டிப்போடுவம் பிள்ளே&#8221; என்றார் பணிக்கர்.</p>
<p>&#8220;தோண்டும்வே. எனக்க செலவு &#8220;என்றார் பிள்ளை கண்கள் சிவக்க. ஜிப்பா பையில் திரவம் சப்பைப்புட்டியில் மிச்சமிருந்ததை வாயில் விட்டுக்கொண்டார்.</p>
<p>முப்பத்தெட்டடியில் கடப்பாரை கணீரிடும் கரிய பாறை. &#8220;ஜாமிகோ, இனிமே வெடிதான் வைக்கணும் ஜாமிகோ&#8221; என்றார் ஓட்டர்கிழவர்.</p>
<p>இரண்டாயிரம் ரூபாய் பெற்று ஒட்டர் போனபிறகு பிள்ளையே போய் மைலாடியிலிருந்து வெடிவைப்பவர்களைக் கூட்டிவந்தார். &#8220;ஓய் கிறுக்கு காட்டாதேரு. இந்த நாட்டிலே கெணத்துக்கு வெடிவச்சதில்லே. அதெல்லாம் பாண்டிநாட்டு பன்னக்கருக்கு மண்ணிலே செய்யுத காரியமாக்கும்&#8230;&#8221; என்றார் பணிக்கர்.</p>
<p>&#8220;இங்க தண்ணி உண்டும்&#8221; என்றார் சாத்தாம் பிள்ளை , போதை இல்லாமலேயே தள்ளாடியபடி.</p>
<p>வெடிக்கார மிக்கேல்ராஜ் கிணற்றுக்குள் இறங்கியதுமே &#8221;சார் இங்க ஊற்று இல்லேல்லா &#8230;&#8221; என்றான்</p>
<p>&#8220;ஏம்டே?&#8221;</p>
<p>&#8220;கந்தகம்லா நாறுது? குளுமையில்லியே&#8221;</p>
<p>&#8220;செரி கேறிவா&#8221; என்றார் பணிக்கர்.</p>
<p>&#8220;நீரு வெடிவையும் வே &#8230;&#8221; என்றார் பிள்ளை உச்சக்குரலில் &#8221;உமக்கு பணம் தாறது நான்&#8230;&#8221;</p>
<p>&#8220;அதுக்கு நீரு கெடந்து பொட்டாதேரு . வைடே வெடி &#8221; என்றார் பணிக்கர் &#8221;அப்ப காரியங்க சொன்னதுமாதிரி. பணம் உம்மதாக்கும்..&#8221;</p>
<p>மேலும் இருபதடிக்கு பாளம் பாளமாக கரும்பாறை. உலோகமினுமினுப்புடன் சிப்பியும் கோடாலியுமாக.</p>
<p>பக்கத்துவீட்டு ஏசுவடியா கிழவி சிரித்தபடி &#8220;பணிக்கரே போறபோக்கப்பாத்தா பாதாளம் தொடுமுண்ணில்லா தோணுகு&#8230;வல்ல வேதாளமும் கேறி வந்திரப்போவுது&#8230;.&#8221; என்றாள் .</p>
<p>&#8220;கொல்லுவேன், நான் இப்பம் கொல்லுவென்&#8221; என்று பிள்ளை குடையுடன் அவளை அடிக்கப் பாய்ந்தார். பணிக்கர் பிடித்துக் கொண்டார்.</p>
<p>&#8220;இனி எறங்கினா எங்களால கல்லு தூக்க ஒக்காது பணிக்கரே&#8221; என்றபடி மிக்கேல்ராஜ் குழுவுடன் விடைபெற்றான்.</p>
<p>பக்கத்திலேயே துண்டுபோட்டு சாஸ்தான்குட்டிப்பிள்ளை தளர்ந்து படுத்துவிட்டார்.</p>
<p>பணிக்கர் கூட்டிவர ஈசானமூலையில் ஒட்டர்குடி வந்து தோண்டியது . நான்கடி தாண்டியதுமே ஊற்று கனிய ஆரம்பித்தது. பத்தடியிலேயே இறைத்து ஊற்றி தோண்டினர். பதினைந்தடியில் எட்டுபேர் இறைக்க மூன்றுபேர் தோண்டினர். இருபதடியில் மடைமதகு திறந்ததுபோல ஊற்று கண்ணாடிச்சருவம் கவிழ்த்துவைத்ததுபோல பெருங்குமிழியிட்டது. பிறகு மாடுவைத்து இறைத்து தோண்டினார்கள். பிறகு இரண்டு கப்பிகட்டி இரண்டுமாடு இடைவிடாது இறைக்க நடுவே நின்று துளித்துளியாக சேறுடன் சேர்ந்த்து வெட்டி முப்பத்திமூன்றடியில் தோண்டி நிறுத்தியபோது கரையேறும் ஒட்டனுடன் நீரும் சேர்ந்தேறியது. ஏழடி ஆழத்தில் நீர் நின்று சுழித்தது .</p>
<p>பள்ளித்திண்னையிலேயே படுத்திருந்த பிள்ளை ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை . வந்துகுவிந்தவர்கள் எல்லாம் அவரை நோக்கி ஏதேனும் நக்கலும் கிண்டலும் செய்தார்கள். பலசொற்கள் கூர்மை மிக்கனவாக இருந்தாலும் எட்டாம் வகுப்பு ரெஜினாள் போகிறபோக்கில் சொல்லிச்சென்ற &#8221;அணுவைத் துளைச்சு ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறிச்சு குமட்டிலே குத்தின ஆளுல்லா?&#8221; என்றவரிதான் அவரை துடிக்கவைத்தது. இரவில் அத்தனைபேரும் போனபிறகு அவர் மெல்ல எழுந்து வந்து கிணறை எட்டிப் பார்த்தார். தன்ணீர் புன்னகையுடன் வான்வெளிச்சத்தை சுழித்துக் காட்டியது. மிக ஆழத்திலிருந்து ஒருவர் தன்னை உற்றுப் பார்ப்பதை அவர் உணர்ந்தார் .</p>
<p>அன்றிரவே ஓடி விடிகாலையில் சாமித்தோப்பில் அய்யாவுநாடாரின் வீட்டைத்தேடிக் கண்டடைந்து, பால்கறந்து நுரைமுடி சூடிய செம்புடன் வந்த நாடாரின் காலடியில் குப்புற விழுந்து கண்ணீர் விட்டார். நாடார் பதறிப்போய் அவரை அள்ளி எடுத்து &#8221; பாவம் செய்துபோட்டேரே&#8230;. நீரு பிள்ளமாருல்லாவே?. நாடான்காலிலேயா விளுகது? சைவத்தீட்சையும் உண்டுல்லா ?&#8221; என்றார்.</p>
<p>&#8220;கைதூக்கிவிடணும்&#8230; இருட்டிலே இருக்கேன்.. &#8221; என்றார் பிள்ளை கை கூப்பி கண்ணீர் மல்கி.</p>
<p>திண்ணையில் அமரச்செய்து எருமைப்பால் கருப்பட்டிக்காப்பி முக்கால்செம்பு கொடுத்து நாடார் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னார். &#8220;ஞானம் ஊர்க் கெணறாக்கும். வாற தோண்டிக்கெல்லாம் வழங்கணும்ணு விதி இருக்கு&#8221; என்றார்.</p>
<p>&#8220;நான் என்ன தப்பு செய்தேன் ? ஆதாரப்பிழை என்ன?&#8221;</p>
<p>&#8220;சொல்லிலே சொகம் கண்டுப்பிட்டீரு .அதாக்கும்&#8221;</p>
<p>பிள்ளை வாய்திறந்து அமர்ந்திருந்தார்.</p>
<p>&#8220;சொல்லுத சொல்லு சுகம். சொல்லாத சொல்லோ மகாசுகம் .கட்டிப்போட்டிரும் பாத்துகிடும் &#8221;</p>
<p>&#8220;ஆமா&#8221;</p>
<p>&#8220;சொல்லில நிக்காதபடித்தானேவே எல்லாம் கெடக்கு. மானம். காத்து , பூமி, தண்ணி, தீ &#8230;.  பின்ன அஞ்சும் சேந்து அஞ்சிலே வெளைஞ்ச சித்தமும், சித்தத்திலே வெளைஞ்ச சித்தும் , சித்தநாதனும் எல்லாமே. சொல்லித் தொடங்கணும் ,சொல்லி நிக்கணும், சொல்லாம அறியணும், சொல்லை விடணும். என்னங்குதீரு ?&#8221;</p>
<p>சாமித்தோப்பு அய்யாவுவின் சீடராக ஆகி வேம்புச்சுள்ளி பிடிக்க கற்றுக் கொண்டார் பிள்ளை. முன்றுவருடம் நாடாருக்குப் பின்னால் விசுவாசமான நாய் போல அலைந்தார். கண்மூடி கையில் வேப்பங்குச்சியுடன் அமர்ந்திருந்தார். வேம்புக்குள் ஓடும் நீரும் தன் ரத்தமும் இணைந்து ஒரே ஓட்டமாக ஆகும் உணர்வை அடைய ஆறுமாதமாகியது. அதன் பின் வேம்புக் குச்சியை கையிலெடுத்தாலே விடுபட்டிருந்த ஒன்றை மீட்டுக் கொண்டதுபோல ஒரு முழுமையுணர்வு ஏற்பட்டது.</p>
<p>தென்தாமரைக்குளத்தில் ஒரு கிணற்றுக்கு அய்யாவுநாடர் இடம் பார்த்துச் சொன்ன பிறகு அதேயிடத்தில் பிள்ளை வேம்புக்குச்சியுடன் நடந்தார். குச்சி கையிலிருந்து எதையோ எதிர்பார்த்து தவித்தது. ஆனால் இணையவில்லை , அதிரவில்லை. குச்சியின் நுனிக்கு மிக அருகே மறுகுச்சி நின்றது. ஆனால் தொடவில்லை.</p>
<p>தளர்ந்து தொங்கிய முகத்துடன் நாடாருடன் திரும்புகையில் &#8221; என்னவே மொகத்திலே ஒருவாட்டம் ?&#8221; என்றார் நாடார்.</p>
<p>பிள்ளை நடந்ததைச் சொன்னார்.</p>
<p>&#8220;அப்பம் உம்ம கையிலே கம்பு இருந்தது உள்ளதா ?&#8221;</p>
<p>&#8220;ஆமா&#8221;</p>
<p>&#8220;கம்பிருந்தா எப்பிடிவே தண்ணி அதைத் தொடும்? அது சாதாரணமான கம்புல்லா. ஜடமுல்லா?&#8221; </p>
<p>அவர் என்ன சொல்கிறார் என்று பிள்ளைக்குப் புரிந்தது. கம்பு அவராகவேண்டும், அவர் மனம் கம்பாக வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கம்பு அவர் கையிலேயே இருந்தது .ஒன்றைரை வருடம் அவர் அந்தக் கம்பை செரித்துக் கொள்ள முயன்றார். இரவுகளில் கையில் கம்புடன் அமர்ந்து காத்து காத்து தூங்கி விழித்தார் . தனிமையில் மார்பை அறைந்து அழுதார். குச்சியைத் தூக்கி தூரவீசிவிட்டு ஒருமாதம்நாடாரைத் தவிர்த்து ஆங்காரத்துடன் அலைந்தார் . மீண்டும் கண்ணீருடன் தேடிவந்தார் &#8221;பிடிச்சு இழுக்காதிய பிள்ளே . இழுத்தா வராது. வானத்தைப் பாக்கணும், பூமிவசப்படும். கேட்டுதா &#8221; என்றார் நாடார்.</p>
<p>ஒரு நள்ளிரவில் சிறுநீர்கழிக்க முற்றத்து தென்னையின் அடியில் உட்கார்ந்தபோது ஒருகணம் மண்டைக்குமேல் காற்றில் ஓர் எண்ணம் உதித்தது. எழுந்து விலகியகணம் தேங்காய் அவரது மண்டை விலகிய வெற்றிடத்தை அறைந்து மண்ணில் விழுந்து தெறித்தது. ஒருசில கணங்கள் வெலவெலத்து நின்ற பின் ஏதோ தோன்றி ஓடி உள்ளேபோய் வேப்பம்குச்சியை எடுத்துவந்து தேங்காய் விழுந்த அதே இடத்தில் நின்றார். தலைமீது அதே எச்சரிக்கையுணர்வு ஒரு கணம் ஏற்பட்டது . அக்கணமே குச்சி நடுங்க ஆரம்பித்தது. காலுக்குகீழே கீழ் கீழாக அடுக்கப்பட்ட நதிகள்போல நீர் ஓடுவதை அறிந்தார் .</p>
<p>அன்றிரவெல்லாம் தோட்டத்தில் பக்கத்து தோட்டங்களில் வேப்பம்குச்சியுடன் அலைந்தார். நதிகள்மீதும் நீர்நிலைகள்மீதும் நடக்கும் அனுபவத்தின் உக்கிரம் அவரது உடலில் துடிதுடித்து அவரை எங்கும் அமரமுடியாமல்செய்தது. பகல்முழுக்க அலைந்து திரிந்து செக்கடிமாடன்கோவில் திண்ணையில் கண்ணயர்ந்தபோது அவரது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அரைத்தூக்கத்தில் ஏதோ ஒலிகேட்டுக் கண்விழித்தார் . அவர் அருகே பாண்டன் என்ற முதிர்ந்த ஊர்நாய் நின்று கொண்டிருந்தது. அதன் பழுப்புநிறமான கண்கள் அவரை உற்றுப் பார்த்தன. அது பாண்டன் படுக்கும் இடம் போலும். அவர் எழுவதற்குள் பாண்டன் &#8216;பரவாயில்லை&#8217; என்று சொல்லி சற்றுத்தள்ளி சென்று படுத்துக் கொண்டது.</p>
<p>ஒருகணம் கழித்துத்தான் சாஸ்தான்குட்டிப்பிள்ளை பாய்ந்து எழுந்து அமர்ந்தார். அது தன்னை அடையாளம் கண்டுகொண்டதும் அதற்கும் தனக்குமிடையே அன்றுவரை இருந்த திரை இல்லாமலிருப்பதும் அவருக்குத் தெரிந்தது. அக்கணத்தில் அவருக்கு அது தாங்கமுடியாத அச்சத்தையே அளித்தது. பாண்டன் முதிர்ந்த விவேகம் கனிந்த பார்வையால் அவரைப்பார்த்து மீண்டும் &#8216;பரவாயில்லை&#8217; என்றது.</p>
<p>[மேலும்]</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.jeyamohan.in/?feed=rss2&amp;p=6389</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Dynamic page generated in 6.509 seconds. -->
<!-- Cached page generated by WP-Super-Cache on 2010-02-09 20:06:09 -->
