அன்புள்ள ஜெயமோகன், சமீபத்தில் தேவதேவன் மற்றும் யுவன் கவிதையரங்கை நடத்தினீர்கள். எனக்கு இது தொடர்பாக நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டுமென்று ஒரு சந்தேகம். ஒரு படைப்பை எழுதிய எழுத்தாளனையோ கவிஞனையோ வைத்துக்கொண்டு அவரது படைப்பைப் பற்றிப் பேசலாமா. பொதுவாக ஒரு உண்மையான படைப்பாளியிடம் படைப்புக்கான கரு அல்லது தரிசனம் கிடைத்தவுடம் தன சமநிலை இழந்து Sub-Conscious Mind or may be Elevated Mindக்கு சென்று செயலாற்றுகிறான். இதை நீங்களே ஒரு முறை எழுதியிருந்தீர்கள். அந்தப் …
Category Archive: கவிதை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35627
கொந்தளிப்பும் அமைதியும்
அன்புள்ள ஜெ, கல்பற்றாவுடன் உரையாடியபோது இப்படிக் கேட்டேன். ஈழத்துக் கவிதைகளிலும், பெண்ணியக் கவிதைகளிலும் என் உணர்வுகளுக்கு அப்பட்டமான “வலி” தெரிகிறது. அவற்றில் கவிதையின் மொழி பயின்று வருகிறதே ஒழிய எழுந்து நிற்பது வலியும் பிணியும் மட்டுமே. அதுவும் அப்பட்டமாக. ஒரு நல்ல கலைப்படைப்பு சமன் அமைந்ததாக இருக்க வேண்டும். கவிதைக்கு அந்த விதி இல்லையா? தேவதேவனின் கவிதைகளிலும், உங்களுடைய கவிதைகளிலும் அப்படி அப்பட்டமாக எதுவும் தென்படவில்லை. இது விதிவிலக்கு மட்டுமேவா? ஒரு நல்ல கவிதை வலியையும் உன்னதமயமாக்கியே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35200
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34937
நிம்மதி
அம்மா இறந்தபோது ஆசுவாசமாயிற்று இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும் எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள் இனி என்னால் காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும் முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம் ஓடிவரும் ஒரு அலறல் என்னை திடுக்கிடச்செய்யாது இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம் நேற்றோடு இல்லாமலாயிற்று இனி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34831
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34844
கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு
சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் பதில் சொன்னார். அப்போது நண்பர் ராம் கல்பற்றா நாராயணனுக்காக ஒரு கவிதையரங்கு ஏற்பாடுசெய்யவேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தேவதேவன், எம்.யுவன் ஆகியோருக்குக் கவிதை வாசிப்பரங்குகளை அமைத்திருந்தோம். பல இடங்களில் இடம்தேடி கடைசியில் ஆலப்புழாவில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34816
துவைதம்
[ஒன்று] தூங்கிக்கொள் முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். இருந்திருந்து சலித்திருக்கும் அவை மாற்றி அமரச்செய்கிறேன் கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன் வாசலுக்கு அழைத்துச்சென்று கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட கடைசிப்பேருந்தை காட்டுகிறேன் பொறாமைக்குடுக்கைகளான இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும் ஒன்று கேசாதிபாத மதுரம் இன்னொன்று சிந்தைக்கினியது* படிஏறுவதிலும் பெருமூச்சுவிடுவதிலும் மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள் சிலசமயம் வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள் சிலசமயம் முற்றத்தில் இறங்கிநிற்கும் இரு நிலைகொள்ளாமைகள் உள்ளே புயலடிக்கும் இரு தேனீர்க்கிண்ணங்கள் வெளியே சொல்லமுடியாத இரு திணறல்கள் சின்னப்பிள்ளைகள் வரையும் மனிதவடிவங்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34824
கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
தற்செயல் ======== வீடு முழுக்க ஆட்கள் உள்ள அந்தப் பண்டிகைநாளில் ஒர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில் நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள். எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை அவளுக்கு அளித்தீர்கள். பிறகு எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர் படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர்வடிக்கிறாள். திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி. எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று எண்ணி. ********* முரண்டு ====== இறந்தவர்கள் பிடிவாதக்காரர்கள். கங்கைநீர் வாயில் விட்டாலும் விழுங்க மாட்டார்கள். நாம் சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=380
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
கவிஞன் ====== பேருந்துக்கு அடியில் விழும் மகனை பிடித்து விலக்க முடியாமல் நின்று பரிதவிக்கும் அவனைபெற்றதுமே இறந்த அன்னையைப்போன்றவன் நான். எனக்கில்லை அதற்கேற்ற கையோ பலமோ. ******** உறுதியான நிலமல்லவா பயங்கரம்! ========================= மண்ணை நோக்கி பயந்து அலறுவதுண்டு ஒரு பைத்தியக்காரி. மேலிருந்து கீழே விழுகின்றவள் நிலத்தில் மோதித் தலைசிதறித்தானே இறக்கிறாள்? நிலத்தை அடைவதுவரை அவளுக்கு ஒன்றும் நிகழ்வதில்லையே? பின்னுக்கு சென்ற உயரமல்ல பின்னுக்குச்செல்ல மறுத்த நிலமல்லவா அவளைக் கொன்றது? உயரத்தின் சதுப்பல்ல நிலத்தின் உறுதியல்லவா அவளுக்கு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=331
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் ‘அத்யாத்ம ராமாயணம்’ காப்பியத்தை எழுதி அதைப்பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வதுபோலவே ஒலிக்கும் கேட்க ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=807



