Category Archive: எதிர்வினைகள்

ரப்பர்-கடிதம்

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார். சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாகப் படிக்க வேண்டிய தருணம் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டாரத் தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்றுப் பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்பப் படித்த பிறகும் கூட பிரான்சிஸ் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35158

சடங்கும் அறிவும்

அன்புள்ள ஜெயமோகன், நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல். ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36631

சினிமா விமர்சனங்கள்

அன்புள்ள ஜெமோ Tree of life பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இணைப்பைப் பாருங்கள். நம்மவர் உலகசினிமா பார்க்கும் லட்சணத்தை விமர்சனம் எழுதும் கேவலத்தைப் பார்த்து நொந்துபோவீர்கள் http://cinemajz.blogspot.in/2012/02/tree-of-life-2011.html சரவணன் அன்புள்ள சரவணன், ஒரு கலைவடிவம் என்பது ஒரு பண்பாட்டில் இருந்து ஊறிவரக்கூடியது. அந்தப்பண்பாட்டைப்பற்றிய பொது அறிதல் இல்லாமல் அந்தக் கலைவடிவத்தை ரசிக்க முடியாது. தமிழ்ப்பண்பாடு பற்றிய அறிதலே இல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சியை ரசிக்கமுடியுமா என்ன? ஒரு கலையை ரசிக்க அந்தக் கலை உருவான பண்பாட்டைப் பிறகலைகள் இலக்கியங்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36651

சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பெற்றோரும் கல்வியும் கேள்வி-பதிலைப் படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றிப் பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவைப்படுகிறது; அதற்காகத் தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த மட்டில் கல்வியைத் தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். தன்னிறைவுக்கான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36619

கடிதங்கள்

ஜெ, வணக்கம். நான் என்ன வாசித்தாலும் எல்லாம் மறந்து விடுகிறது. உண்மையிலேயே மறந்து விடுகிறதா இல்லை மறந்து விடுவது போல தோணுகிறதா என்று தெரியவில்லை. அதுபோல சில வரிகளை வாசித்தவுடன் மீண்டும் திரும்ப திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. இது கவனக் குறைவினாலா இல்லை வாசிப்பதில் அனுபவம் இல்லாமையைக் காட்டுகிறதா? இது போன்று நீங்கள் யாரிடமாவது கண்டு இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாசகர் யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லை ஒருவேளை இது எனக்கு மட்டும் உள்ள குறைபாடா? …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35641

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35536

பகுத்தறிவு ஒரு கடிதம்

ஆசிரியருக்கு, வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன். இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35549

பகத்சிங் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று என் நண்பர் ஒருவர், உங்களது தளத்தில் 2009 மே27 காந்தியின் துரோகம் என்ற கேள்விக்கான பதிலில் நீங்கள் பகத்சிங்கைப் பற்றி “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதைப் பாருங்கள் என்றும் சொன்னார். அதன்பேரில் அக்கட்டுரையை இன்று வாசிக்க நேர்ந்ததால் இத்தனை கால தாமதமாக இந்தக் கேள்வி. அக்கட்டுரையில் முரண்படுவதற்கு அநேகம் இருந்தாலும் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையிலும் நீங்கள் ஒரு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35586

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634

இணைவைத்தல்- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் எழுதிய ‘இணைவைத்தல்’ படித்தேன். இப்படியும் இருந்திருக்க முடியுமா என்ற ஆச்சரியம் தோன்றியது. பொதுவாய் உங்கள் எழுத்துகளை, முக்கியமாய் அசாதாரணத்தன்மை நிறைந்த கதைகளை விரும்பிப் படித்துவருகிறேன். மிக்க நன்றி -ஹேமா அன்புள்ள ஹேமா ஒரு விஷயம் கவனியுங்கள். பெரும்பாலான ஆழமான விஷயங்கள் ‘இப்படியும் இருக்குமா’ என்ற எண்ணத்தை உருவாக்கும்விதமாகவே உள்ளன. ஏனென்றால் நம் வாழ்க்கை பெரும்பாலும் மேலோட்டமான தளத்திலேயே நடந்துகொண்டிருக்கிறது ஜெ வணக்கம் ஜெயமோகன் அவர்களே…! “இணைவைத்தல்“ கட்டுரையை இன்று அதிகாலையில் வாசித்தேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35124

Older posts «

Switch to our mobile site