மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , …
Category Archive: கலாச்சாரம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36237
சடங்கும் அறிவும்
அன்புள்ள ஜெயமோகன், நல்ல பதிவு. சடங்குகள் கூடிய வழிபாடு என்று எதுவும் தினசரி வாழ்வில் இல்லை. விளக்கேற்றிப் பூ வைப்பது தவிர. நல்ல வாசனையான பூவும், பளிச்சென்று இருக்கும் விளக்கில் ஏற்றும் தீபமே ‘சித்திரை பிறக்கும்போது தொங்கவிடும் நெற்கதிரும், கொன்றைமலர் செண்டும் போல் நிறைவு தருகிறது. பண்டிகைகள் பொறுத்த மட்டில் ritualistic காரணங்களைக் காட்டிலும் அவை நம்மை நம் பண்பாட்டுடன் இணைக்கும் கண்ணிகளாக நினைத்துக் கொண்டாடுகிறேன். குறிப்பாகப் பொங்கல். ஆனால் நேர்த்திக் கடன்கள், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள், …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36631
கடிதங்கள்
அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35536
சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
அன்புள்ள ஜெ. சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி: உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது – இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு கடுப்பைக் கிளப்புகிறது. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35632
சாதி-வர்ணம்-முக்குணங்கள்
http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM அன்புள்ள ஜெயமோகன், பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே. நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு – குரூரம்-இவை இரண்டையும் சம அளவில் கொண்டவர்கள்(தேவர்-மானுடர்-ராக்ஷசர்?) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.குறிப்பாக மகாபாரதக் கதாப்பாத்திரங்கள். ஆனால் மகாபாரதத்தில் சாதிப் பிரிவினை பற்றித் தெளிவான சித்திரம் இல்லை என்றே எண்ணுகிறேன். நமது மரபு குணத்தின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்த முனைந்தது சாதிப் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35524
பெயர்ந்தோர்
அன்புள்ள ஜெ, உங்கள் வாழும் தமிழ் பதிவு, http://www.jeyamohan.in/?p=29570, மனதை நெகிழவைத்தது. இந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு. ( பிரஞ்சு – கரீபியத் தீவுகளில் உள்ள தமிழர்களை / இந்தியர்களைப் பற்றிய ஆவணம்). https://www.youtube.com/watch?v=CZ11YjOMp4o https://www.youtube.com/watch?v=ZR1zisa_N-o&feature=relmfu பாண்டிச்சேரியிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கொத்தடிமைகளாக சென்றவர்களின் வம்சாவளியினர் பற்றிய ஆவணம். இவர்களுக்குத் தமிழ் மறந்துவிட்டது. ஆனால் மாரியம்மனும், மதுரைவீரனும் மறக்கவில்லை. பிரெஞ்ச் பேசிக்கொண்டு, இலைபோட்டு சாப்பிடும் இவர்களைக் காணும்போது, உங்கள் கொற்றவை நினைவிற்கு வருகிறது. இவர்கள், ஆழி அடித்துச்சென்ற கன்னியன்னையின் மெட்டி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35493
அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா? செந்தில் வி அன்புள்ள செந்தில் தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35458
கோயில்நிலங்கள்-கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் ” கோயில்நிலங்கள்” சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதே போல் சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக ஊர் ஊராக சென்று ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்துவது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக பக்தர்கள் இலவசமாக கொடுத்த இடத்தில் கன்யாகுமரியிலும்,சென்னையில் பிரதான இடத்திலும் கோயில் கட்டுவது.எத்தனையோ …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35450
வயக்காட்டு இசக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் . நேற்று அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகத்தான் தாணுமாலையன் ஆலயம் புத்தகம் எனக்குக் காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்குக் காட்டியது . ராப்பாடிகளைப் பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லிச் செல்கிறார் . ஓநாயின் மலத்தைத் தேய்த்துக் குறி சொல்லவருவதால்தான் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35196
சடங்குகள் ஒரு கடிதம்
ஆசிரியருக்கு , வணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டிப் படையல் போடப் பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைத்தான் செய்தேன். நாத்திகம் பேசியதைப் பின்பு பிரியாணி சாப்பிடுகையில் மறந்து போனேன். சாப்பிட்டு முடித்த பின் நியாபகம் வந்தது. :-) அம்மா தனியாக சைவ உணவு சாப்பிட்டார்கள் என்பது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35336


