அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …
Category Archive: வாசிப்பு
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634
வாசிப்பின் நிலைகள்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், கடந்த சில வாரங்களாக உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். உண்மையைச் சொன்னால் நான் அதிகமாகப் படிப்பதில்லை. படித்து தெரிவதற்கு ஒன்றுமில்லை என்ற ஒரு மூட நம்பிக்கை / சோம்பேறித்தனம். உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது கூடப் பொறுமையில்லாமல் ஒன்றிரண்டு பத்தி தாண்டி ஓடி ஓடிப் படிப்பேன். எளிதான, சிக்கலற்ற, மாற்று சிந்தனை கொண்ட படைப்புக்களைப் படித்து ஒரு வாசகனாக என்னைத் தயார்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் படிக்கும் நண்பர்கள் யாரும் இல்லாததால் உங்களிடம் கேட்கத் தோன்றியது – …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35441
சிவகாமியின் நாவல் பற்றி…
அன்புள்ள ஜெ, உயிர்மை வெளியிட்ட சிவகாமியின் உண்மைக்கு முன்னும்பின்னும்’ நாவல் வெளியீட்டுவிழாவில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். அந்த விழாவில் நீங்கள் அந்நூலை வெளியிட்டு மிகவும் ஒருபக்கச்சார்பாக பேசினீர்கள். அந்நூலை மிகவும் புகழ்ந்து மிகமுக்கியமான இலக்கியப்படைப்பு என்று சொன்னீர்கள். அந்த நாவலை நான் வாசித்தேன். நேரடியனுபவங்களை வேறு பெயரில் எழுதியிருக்கக்கூடிய ஒரு சாதாரண நூல் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் அதை முக்கியமான நாவல் என்று அன்று பாராட்டியது மிகையானது என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள் சரவணக்குமார் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35825
வாடிவாசலும் அதிகாரமும்
என்ன இருந்தாலும், மனிதனிடம் உள்ள சாதுர்யம் மிருகத்திற்கு வராதுதான். ஏனென்றால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. அதில் காளை ஜமீனின் அதிகாரத்தின் பகடைக்காய் தான். பிச்சியின் வீரம் அப்பகடைக்காயை உருட்டித் தள்ள இன்னொரு பகடைக்காய். பிச்சி, தனது முதல் இரண்டு பகடைக்காய்களையும் வீழ்த்திய பின், தனது கடைசி வீழ்த்தமுடியாத பகடைக்காய் என காரிக்காளையை அனுப்புகிறார். ஆனால், அதுவும் வீழ்த்தப்பட்டதும் ஆட்டம் முடிந்துவிடுகிறது. பிச்சி வென்று விட்டான் அனுக்ரகா எழுதிய நல்ல கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35784
சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்
பாதிக்கிணறுதாண்டியவன் மிச்சக்கிணறைக் கற்பனையால் தாண்டுவதுதான் இலக்கியம். ஆழத்தில் விழும்போது அது நிகழ்கிறது. பாரதியின் காணிநிலம் வேண்டும் கவிதையை அந்தக் கற்பனைக்கான மிகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். கற்பனாவாத யுகத்தைச்சேர்ந்த எல்லா கவிஞர்களும் அவ்வகையில் தங்கள் ஆசைகளை எழுதியிருக்கிறார்கள். பாரதிக்கு மண்,பெண்,பண் மூன்றுமே தேவைப்படுகிறது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் க.நா.சுவின் ‘சர்மாவின் உயில்’ என்ற நாவலை வாசித்தேன். அன்று நானறியாத சென்ற நூற்றாண்டுப் பிராமண வாழ்க்கையைச் சொல்லும் ஒரு நாவல் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. சமீபத்தில் நற்றிணைப்பதிப்பக வெளியீடாக …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34971
பஷீர் : மொழியின் புன்னகை
எம்.ஏ.ரஹ்மான் தயாரித்த ‘பஷீர் த மான்’ ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவரிடம் ‘படம் எப்படி?”என்று கேட்கப்பட்டபோது ”நல்ல படம். ஆனால் ஹீரோ சரியில்லை. மோகன்லால் நடித்திருக்கலாம்.” [ஒன்று]நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறுவழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப்பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். ‘வினீதனாய சரித்ரகாரன்’ [பணிவுள்ள வரலாற்றாசிரியன்] எல்லாக் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=285
சுமித்ரா- கடலூர் சீனு
நண்பர்களே , பொதுவாக என் இரவுகள் வாசிப்பில் கரையும் . இப்போதெல்லாம் இங்கு கடலூரில் , மாலை ஆறு மணி துவங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒருமணிநேரம் மின்சாரம் வருகிறது . கொசுக்கடி . வாசிப்பு இன்பத்திற்கான முதல் வாசிப்பைக்கூட , அறுபடாமல் நிகழ்த்தி முடிக்க இயலாத சூழலில் இரு இரவு இழந்து , கல்பற்றா நாராயணனின் முதல் நாவலான ”சுமித்ரா ” முதல் வாசிப்பு முடித்தேன் நவீனத்துவத்தை எனக்குள் இப்படி வரையறை செய்து வைத்துள்ளேன் . …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34339
ஓர் அமரகாதல்
சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு இருந்தால் அது நிலையான உதவிகளை அளிக்க முடியும் என்று சதாசிவ அய்யர் கருதினார். அதற்கு முன்கையெடுத்த திரு.வி.க 1920 ல் சென்னை சௌந்தரியமகாலில் விதவைநலம் காக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.ஸர்.வேங்கடரத்தினம் என்ற பிரமுகர் அதற்கு தலைமை தாங்கினார். சதாசிவ அய்யரின் மனைவி அதில்பேசினார். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=733
கோரா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான ஒரு புரட்சி இருக்கத்தான் செய்கிறது. காந்தியைப் புரிந்து கொள்வதற்குக் கோரா மிகவும் பயன்படுகிறான். நீங்கள் குறிப்பிட்டது போக, மேலும் ஓர் ஒற்றுமை – இருவரும் பழைமையை ஆதரித்துப்பேசிய போதும் அதை முழுக்கப்பின்பற்றவில்லை. கோரா தீண்டாமையைக் கேள்விகேட்காமல் நியாயப்படுத்துகிற வேளையிலேயே, ஏழைகளை …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31502
பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்
ஆம்னிபஸ் தளத்தில் டாக்டர் சுனில்கிருஷ்ணன் (காந்திடுடே இணைய இதழின் ஆசிரியர்) பனிமனிதன் நாவலுக்கு எழுதிய விமர்சனம். http://omnibus.sasariri.com/2012/11/blog-post_16.html தொடர்புடைய பதிவுகள்பனிமனிதனும் அம்மாவும்-கடிதம்படைப்புகள்,கடிதங்கள்பனிமனிதன்பனிமனிதன் ஒரு கடிதம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31889


