ஆசிரியருக்கு , வணக்கம். நுகர்வின் வழி மனிதன் நகர்வை சொல்லும் குறும் படம் பார்த்தேன். மகளுக்காக dr.seuss கதைகள் வாசிக்க , மிகப் பெரிய தத்துவக் கதைகளைக் குழந்தைகள் மொழியில் மிக அருமையாக சொல்லியிருந்தார். அவர்து “LORAX” என்னும் கதையைப் படித்துப் பின்னர் திரைப்படமாகப் பார்த்தோம். மிக அழகான கதையாக இருந்தது. குல தெய்வங்களின் மொழி நல்ல கட்டுரை. கல்வித்தளங்களை நிறுவித் தகவல்களைத் திரட்டிக்கோர்ப்பதில் மேற்கத்தியவர்கள் மிக வல்லவர்கள். அவர்களது 2000 ஆண்டு மதப் பயிற்சியினால் சில சிக்கல்கள் …
Category Archive: பொது
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37116
தமிழ்நேயம் அறக்கட்டளை
கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை நண்பர்களுக்கு வேண்டுகோள் 13-06-2013 கோயபம்புத்தூர், காந்திபுரம் சிபி ஐ.ஏ.எஸ். அகாதமியில் எழுத்தாளர்கள், நண்பர்கள் பலர் கூடி தமிழ் நேயம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்க வேண்டுமென்றும் அதன் சார்பில் சில முக்கியமான பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானித்தோம். கூட்டத்தில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து, அறிஞர் செ. நாராயணசாமி, முனைவர் கோ. ஆறுமுகம், கவிஞர். அறிவன், பாவலர் இரணியன், நந்தினி பதிப்பக உரிமையாளர் திரு. வேனில், முனைவர் வே. சுகுமாரன், எழுத்தாளர் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37118
தமிழ் அகராதி
இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37111
ப.சிங்காரம் நாவல்போட்டி
புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியை அறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். முதல்பரிசு ரூ 50000 இரண்டாம் பரிசு ரூ 30000 மூன்றாம் பரிசு ரூ 20000 பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15. அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும். நிபந்தனைகள் 1. பக்கவரையறை இல்லை. 2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள் 3. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37074
குலதெய்வங்கள் பேசும் மொழி
சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள். ‘என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36606
மனிதன்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு , நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் யூடியூபில் காணக்கிடைத்த வீடியோ ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. Cheers, BALA.R தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37046
உடலழகும் இன்றைய நாகரீகமும்
அன்புள்ள ஜெ தங்களின் நீண்டநாள் வாசகன் நான், சமீப காலமாக நம் சமூகத்தில் வேரூன்றி வரும் ஒரு நவீன தீண்டாமையைப் பற்றிய தங்களின் எண்ணத்தைப் பற்றி அறிய ஆவல். நம் சமுத்தில் அழகியல் சார்ந்த தீண்டாமை மெல்ல பரவி வருகிறது. நாம் வழும் வணிக கலாச்சாரத்தில் அழகு என்பது எல்லாவற்றுக்கும் வரையருக்கப்படாத ஒரு தகுதியாகவே மாறிவிட்டது. எனக்கு தெறிந்து எல்லா மட்டத்திலும் அழகியல் விதிகளுக்கு உட்படாதவர்கள் தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள்.மேலும் அவர்களது நட்பு,அன்பு,காதல்,மரியாதை போன்ற அடிப்படை உணர்வுகள் கூட …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37026
எதிர்வினைகளின் வழியே
அன்புள்ள ஜெ, கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்துவருபவன் என்ற முறையில் கேட்கிறேன். அதுவும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக இடப்படும் உங்கள் ‘மொண்ணைத்தனம் மற்றும் சினிமாவில் எழுத்தாளர்கள் பங்கு’ தொடர்பான பதிவுகளினால் உண்டான ஆயாசத்தினால் கேட்கிறேன். விஷயத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு முன்னுரை. வெற்று அரட்டைகளும், சினிமா செய்திகளும், அன்றன்றைய தலைப்புச்செய்திகளுக்கு தீவிர எதிர்வினையாற்றுவதுமாய் நிறைந்திருந்த தமிழ் இணையத்தைக் கைவிடும் எண்ணத்திலிருந்து என்னை விடுவித்தது சொல்வனமும் உங்கள் பதிவுகளும்தான். உங்கள் பதிவுகளில் நான் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37050
விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013
ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெண் வாசகிகள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36442
சராசரிகளின் சாரம்
அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரை [ விற்பனையும் இலக்கியமும்] வாசித்தேன். நானே சிலநாட்களாக அமெரிக்க எழுத்திலும் சினிமாவிலும் உள்ள ‘டெம்ப்ளேட்’ தன்மை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இவை யாரால் இப்படித் திட்டமிடப்படுகின்றன என்று எனக்குப்புரியவேயில்லை. யாரோ எங்கோ அமர்ந்து இவற்றை உருவாக்குகிறார்கள் என்றும் தோன்றவில்லை. அப்படியென்றால் சராசரி மனிதமனம் மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை நான் சிலவருடங்கள் முன்பு வரைக்கும்கூட தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சிலசமயம் சீரியசான ஆக்ஷன் படங்களைப்பார்க்கும்போதுகூட …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36285


