நண்பர்களே, திருச்சி நட்புக் கூடல் நன்றாகவே நடந்தது. ஜெ.எம்மின் வலைத்தளம் எந்த அளவு ஆவலுடன் படிக்கப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சி மூலம் புரிகிறது. நம் குழுமத்தில் எழுத்தின் மூலம் அறிமுகமான ஜப்பான் செந்தில், பூனே அசோக், போகன் போன்றோரும் பிற கூட்டங்களில் பங்குபெற்ற சாம்ராஜ், செல்வராணி, தினேஷ். ஷிமோகா ரவி என்று பல பழைய நண்பர்களை நேரில் கண்டு பழக நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. புதியவர்கள் நாகை, நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை என்று பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். …
Category Archive: நிகழ்ச்சி
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36204
திருச்சியில் நாளை
எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை என்னைத் தனிப்பட்டமுறையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எழுதுபவை. பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்து அது முடிந்தபின் ஓரிரு சொற்கள் பேசித் திரும்புகிறார்கள். பலர் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சந்திக்கத் தயங்கித் திரும்பிவிடுகிறார்கள். நண்பர்களைச் சந்திப்பதற்காக மட்டுமே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலென்ன என்று பேசிக்கொண்டோம். முதல் நிகழ்ச்சியைத் திருச்சியில் நண்பர் விஜயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார். 28 ஏப்ரல் அன்று இந்நிகழ்ச்சியின் இயல்புகள். திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோ பேசும்தலைப்போ கிடையாது. பொதுவாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அதாவது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36042
நட்புக்கூடல் -திருச்சி
எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை என்னைத் தனிப்பட்டமுறையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் எழுதுபவை. பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்து அது முடிந்தபின் ஓரிரு சொற்கள் பேசித் திரும்புகிறார்கள். பலர் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சந்திக்கத் தயங்கித் திரும்பிவிடுகிறார்கள். நண்பர்களைச் சந்திப்பதற்காக மட்டுமே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலென்ன என்று பேசிக்கொண்டோம். முதல் நிகழ்ச்சியைத் திருச்சியில் நண்பர் விஜயகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார். 28 ஏப்ரல் அன்று இந்நிகழ்ச்சியின் இயல்புகள். திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலோ பேசும்தலைப்போ கிடையாது. பொதுவாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அதாவது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36039
அசடுகளும் மகா அசடுகளும்-கடிதங்கள்
அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன் இளைய தலைமுறை தடை இல்லாத மின்சாரத்தோடு , நோய் வராத பொதுத் தூய்மையோடு, பெண்கள் மீதான வன்முறையற்ற , நெறியான போக்குவரத்து வசதி கொண்ட , விபத்துக்கள் இல்லாத சாலைகளோடு, போதைப் பொருள் சிக்கல் இன்றி, இட ஒதுக்கீடு உரியவருக்குப் போய்ச் சேர வேண்டிய அக்கறையோடு தனக்கு வேண்டிய சமூக அமைப்பினை முன் வைத்தது. இந்த இளைய தலைமுறைக்குத் தேவை இளைய தலைமுறை சொன்ன இலக்குகளை எப்படி அடைதல் என்ற தெளிவும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35144
மார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்
சென்ற மார்ச் ஐந்தாம் தேதி நான் மார்த்தாண்டம் கிறித்துவக்கல்லூரி ஆங்கிலத்துறையில் இலக்கியவிழாவில் கலந்துகொண்டேன். நான் படித்த முதல் கல்லூரி அது. முதல்முறையாக பாண்ட் போட்டுக்கொண்டு அந்த வளாகத்தில் நுழைந்த நினைவுடன் பேசினேன். தமிழின் முக்கியமான எழுத்தாளரான நண்பர் குமாரசெல்வா அங்கேதான் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். உற்சாகமான நிகழ்ச்சியாக இருந்தது. என்னை ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசேகர் அவர்கள் அறிமுகம் செய்தார்.விழா புகைப்படங்களை அங்கே பேராசிரியராகப் பணியாற்றும் சுகிதர் போஸ் அனுப்பித் தந்தார். பார்வதிபுரத்தில் வசிக்கும் ஆங்கிலப்பேராசிரியை ஆன்னி நித்யாதான் என் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34994
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34943
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34844
கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு
சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் பதில் சொன்னார். அப்போது நண்பர் ராம் கல்பற்றா நாராயணனுக்காக ஒரு கவிதையரங்கு ஏற்பாடுசெய்யவேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தேவதேவன், எம்.யுவன் ஆகியோருக்குக் கவிதை வாசிப்பரங்குகளை அமைத்திருந்தோம். பல இடங்களில் இடம்தேடி கடைசியில் ஆலப்புழாவில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34816
அசடுகளும் மகாஅசடுகளும்
நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன். அந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள். அவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34655
விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்
2012 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி கவிஞர் தேவ தேவன் அவர்களுக்கு 22.12.2012 அன்று கோவை ஆர். எஸ். புரம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளையராஜா, மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ,விமர்சகன் மோகனரங்கன், விமர்சகர்கள் மோகனரங்கன், ராஜகோபாலன் ,திரைப்பட இயக்குநர் சுகா ,எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். செல்வி வானதிஸ்ரீ,செல்வி வித்யாலட்சுமி ஆகியோரின் கடவுள் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளார் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33313




