அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு உங்கள் இணையதளக் கடலில் தினந்தோறும் நீச்சல் பழகும் மாணவன் நான். அது தரும் அனுபவமும் எனக்குள் நிகழ்த்தும் மாற்றங்களும் சொல்லில் வெளிப்படுத்தமுடியாத உன்னதமிக்கவை. மனது சலிப்புற்று சோர்வுறும் போதெல்லாம் உயிர்தளிர்ப்பச் செய்யும் மாயம் கொண்டது உங்கள் கதைகளும் கட்டுரைகளும் உரைகளும். (மிகக் குறிப்பாக அந்தக் குறுந்தொகை உரை). உங்கள் பெருங்கருணைக்கு மிக்க நன்றி. உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து தெளிவு பெறவே இதை எழுதுகிறேன் (நீண்ட யோசனைக்குப் பிறகும் ஒருவித தயக்கத்துடனேயே). …
Category Archive: சமூகம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35808
கடைசி அங்கத்தில்- கடிதங்கள்
சென்ற வாரத்தில ஒரு எஸ்.எம்.எஸ் மும்பையில் இருந்து வந்திருந்தது. மும்பையில், எனக்காகக் காரோட்டும் நண்பர் கணேஷ் அனுப்பியிருந்தார். தன் மகனின் பள்ளியிறுதி மதிப்பெண்களை அனுப்பியிருந்தார். அழைத்து, அவனின் மேற்படிப்பைப் பற்றிப் பேசினேன். வணிகம் படிக்கப் போவதாகச் சொன்னார். மும்பையின் போக்குவரத்து நெரிசல்களில் பல மணிநேரம் மாட்டிக் கொண்டு, நானும் அவரும் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம். தன் மகனின் படிப்பின் மீது மிகவும் கவனம் உண்டு அவருக்கு. விரார் என்னும் புற நகரில் அவருக்கு இருந்த வீட்டை விற்று, …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37169
இடப்பெயர்கள்
அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.எனது ஊரின் பெயர் நாரந்தனை.இது யாழ்ப்பாண மாவட்டதில் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு நாரந்தனை மறுமலர்ச்சி மன்றமும் பாரதி சனசமூக நிலையமும் இணைந்து ஒரு நூலை வெளியிட்டிருந்தன.அந்த நூலில் எங்களின் ஊரின் பெயருக்குக் காரணம் என்ன என்பதை விளக்கி ஆய்வுக்கட்டுரையொன்றும் எழுதப்பட்டிருந்தது.நாரந்தனைக்கு அண்மையில் உள்ள ஊர்களில் இரண்டின் பெயர் சரவணை மற்றும் வேலணை ஆகும்.கட்டுரையில் இப்பெயர்கள் நாராயணன்+ தானை= நாரந்தனை,சரவணன்+தானை=சரவணை,வேலவன்+தானை=வேலணை என்று பொருள் பிரிக்கப்பட்டு நாராயணன்,சரவணன்,வேலவன் என்பவர்களின் படையணிகள் நின்ற இடங்கள் என்றும் அவர்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35638
குலதெய்வங்களின் மொழி-கடிதம்
ஆசிரியருக்கு , வணக்கம். நுகர்வின் வழி மனிதன் நகர்வை சொல்லும் குறும் படம் பார்த்தேன். மகளுக்காக dr.seuss கதைகள் வாசிக்க , மிகப் பெரிய தத்துவக் கதைகளைக் குழந்தைகள் மொழியில் மிக அருமையாக சொல்லியிருந்தார். அவர்து “LORAX” என்னும் கதையைப் படித்துப் பின்னர் திரைப்படமாகப் பார்த்தோம். மிக அழகான கதையாக இருந்தது. குல தெய்வங்களின் மொழி நல்ல கட்டுரை. கல்வித்தளங்களை நிறுவித் தகவல்களைத் திரட்டிக்கோர்ப்பதில் மேற்கத்தியவர்கள் மிக வல்லவர்கள். அவர்களது 2000 ஆண்டு மதப் பயிற்சியினால் சில சிக்கல்கள் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37116
உளச்சிக்கலும் இலக்கியமும்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ,நான் கடந்த ஐந்தாறு வருடங்களாக ,தங்கள் தளத்தைத் தொடர்ந்து வருகிறேன்…சங்க சித்திரங்களின்(விகடன்) வாயிலாகத் தங்களை அறிந்தேன். நான் வாசித்த உங்களது முதல் நூல் “அமர்தல் அலைதல்”,பிறகு தங்களது பெரும்பான்மையான “தத்துவம் ,ஆன்மிகம் ,மதம் ” சார்ந்த கட்டுரைகள், மற்றும் “ஊமைச்செந்நாய் “,”யானை டாக்டர் “,”மாடன் மோட்சம் “,”உற்று நோக்கும் பறவை “,போன்ற சில பிற கதைகளையும் ,கட்டுரை வகைகளையும் வாசித்திருக்கிறேன்…உங்களை எழுத்தாளர் என்ற எல்லையைக் கடந்து எனது நெருங்கியவராகவே உணர்கிறேன். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35635
கடைசி அங்கத்தில்…
அன்புள்ள ஜெ, நான் உங்களுடைய மனிதவாழ்க்கைபற்றிய அசலான சிந்தனையிலும் ஆய்விலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இன்றைய பெரும்பாலான தம்பதிகளிடமிருக்கும் கீழ்க்கண்ட பிரச்சினை பற்றி உங்கள் கருத்துக்களை அறிய ஆசைப்படுகிறேன். உங்களுக்குத்தெரியும் இன்று 95 சதவீதம் இந்தியத் தம்பதிகளும் மரபான முறையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் குழந்தைகளைப்பெறுகிறார்கள், வளர்க்கிறார்கள். அவர்களை சமூகத்தில் மதிக்கத்தக்க மக்களாக ஆக்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் குடும்பத்தைவிட்டுச் சென்றுவிட்டால் வயதான தம்பதிகள் தனித்துவிடப்படுகிறார்கள். அத்துடன் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கை அதிகபட்சம் பத்து …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36609
காந்தி கடிதங்கள்
உங்கள் “எப்படிக் கிடைத்தது சுதந்திரம்” படித்தேன். நல்ல கடிதம் காந்தி வெள்ளைக்காரர்கள் என்று இன ரீதியாக எதிர்க்கவில்லை , காலனி ஆதிக்கம் எனும் ஆட்சி முறையைத்தான் எதிர்த்தார் என்றே நினைக்கின்றேன். காலனி ஆதிக்கம் எனும் ஆட்சி முறையே பொருளாதாரச் சுரண்டலை வெளிப்படையாகவும் , மையமாகவும் வைத்தே இயங்குவதே. மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் ராணிக்கு இந்தியர்களைப் பல்லக்குத் தூக்க அனுமதித்தாலும் அவர்கள் பிரிட்டிஷ் குடிமகனுக்கு இணையான குடியுரிமையும் , சட்டப்பாதுகாப்பும் இந்திய மண்ணில் உள்ளவர்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரு பொழுதும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37113
சிந்துவெளிநாகரீகம் பற்றி…
அன்பு ஜெ மோ , நலம் நலமா ?? ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு,சிந்து சமவெளி நாகரீகத்தின் அழிவு பற்றி. ஒரு அகண்ட பரப்பளவு கொண்ட, சமகால நாகரீகத்தின் உச்சியில் திகழ்ந்த சிந்து சமவெளி நாகரீகம் பற்றி……… http://www.pnas.org/gca?allch=citmgr&submit=Go&gca=pnas%3B1112743109v1 தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35547
தமிழ் அகராதி
இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37111
வாசலில் நின்றுகொண்டு…
அன்புள்ளஜெ, நான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை. உங்களது “இன்றைய காந்தி” என்னை சில தினங்களாக தூங்கவிடாமல் கற்பனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதே நிம்மதியளிக்கும் ஒன்று. இது என் அப்பா எனக்கு ஊட்டியது. இயல்பாகவே பிறரின் மகிழ்ச்சியில் என் மகிழ்ச்சியைக் காண்கிறேன். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35887


