‘மல்லிகை’ ஜீவாவுக்கு 90

mallikai

இலங்கையின் முன்னோடி இதழாளர்  ‘மல்லிகை’ ஜீவா என்னும் டொமினிக் ஜீவா. இடதுசாரி நோக்குள்ளவர். மல்லிகை என்னும் சிற்றிதழை பிடிவாதமாக அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடத்திவந்தவர். இலங்கையில் இன்றிருக்கும் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். 27 -6-2017 அன்று அவருக்கு 90 அகவை நிறைவடைகிறது. தமிழிலக்கியவாதிகளால் நிறைவுடன் நினைக்கத்தக்க ஆளுமை

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மல்லிகை முன்பு எனக்கு வந்துகொண்டிருந்தது. இலங்கையின் இலக்கியச்சூழலை காட்டுவதாகவும், இலங்கையின் இளமெழுத்தாளர்களுக்கான களமாகவும் அது அமைந்திருந்தது

aug2006.0Malliaki Feb_NEW

‘மல்லிகை’ ஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை போற்றும்விதமாக நண்பர் முருகபூபதி [ஆஸ்திரேலியா] எழுதியது இக்குறிப்பு

மல்லிகை ஜீவா வாழ்க்கை வரலாறு நூல்- இலவச வாசிப்புக்காக

=================================

மல்லிகை 43வது ஆண்டு மலர் மதிப்புரை
ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா  நோயல் நடேசன் 
முந்தைய கட்டுரைசபரி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகருவிமாமழை