தேவதேவனின் அருகே…

11

வணக்கம்.

மே 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த தேவதேவன் கவிதைகள் குறித்த கூட்டம். நான் பங்கேற்வில்லை. மனுஷி எழுதிய குறிப்பு மட்டுமே அந்நிகழ்வு பற்றி வாசிக்கக்கிடைத்தது. பவா செல்லத்துரை புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்த தளம் அமைப்புக்கு என் அன்பும் நன்றியும். ஸ்ருதி டிவி ஏமாற்றிவிட்டது. எதிர்பார்த்ததுதான். மே 29 மதியம்தான் எனக்கு இந்நிகழ்வு பற்றித் தெரிந்தது. கொஞ்சூண்டு வருத்தம் பங்கேற்க முடியாமையால். ஆனால், மகிழ்ச்சிக்கு முன் அது தெரியாது.

படங்களில் தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுப்பு தென்படவில்லை. அந்த நூலின் மறுபதிப்பு தயாராகி வருகிறது.

மனுஷி பதிவு

https://m.facebook.com/story.php?story_fbid=1480318975323363&id=100000358248887

படங்கள் – நிகழ்வில்

https://m.facebook.com/story.php?story_fbid=1614529385224533&id=100000024626565

படங்கள் – பவா செல்லத்துரையோடு தேவதேவன்

 https://m.facebook.com/story.php?story_fbid=1308781795895702&id=100002916811783

(மேலும் சில படங்களை இணைத்திருக்கிறேன்)

வானும் இறங்கிவந்தமர விரும்பும்

தேன்மலர்த் தோட்டம்

ஒரு வண்ணத்துப் பூச்சிக்குச் சொந்தம்

தேவதேவன்

நன்றி.

ஸ்ரீனிவாச கோபாலன்

***

வணக்கம்

‘வீட்டிலிருந்து ஒரு சின்ன டப்பாவில் மிளகாய் பொடி/இட்லி பொடி கொண்டு வந்தேன். இன்றுதான் அதைத் திறந்தேன். தோசைக்குத் தொட்டுக்கொள்ள. மிளகாய் பொடியை நல்லெண்ணெயில் கலந்து தொட்டுக்கொள்வது வழக்கம். நல்லெண்ணெய் இல்லாததால் தலைக்கு வைக்கும் Parachute தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொண்டேன். அப்பாவுக்கு தேங்காய் எண்ணெய்தான் பிடிக்கும். எல்லா பதார்த்தத்திலும் ஒரு முட்டை தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்வார். அதை தங்கையும் இப்போது பின்பற்ற தொடங்கிவிட்டாள். நான் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்க மட்டும். மேலுக்கு மட்டும் என்று வலியுறுத்துபவன். இன்று இப்படி மிளகாய் பொடியில் கலந்து சாப்பிடும் போது அப்பாவையும் தங்கையையும் மயங்கிய அந்த ருசி தெரிகிறது. தேங்காய் எண்ணெய் ஸ்பெஷல்தான். இனிமேல் தேங்காயைப் பார்த்தாலே அதிலிருக்கும் எண்ணெய்தான் வேண்டும் என்று நினைப்பேன் போலிருக்கிறது. நாக்கிலிருந்து தொண்டை வரை அதன் ருசி ஆக்கிரமித்திருக்கிறது. வயிற்றிற்குள் சிறிது நேரத்தில் வேலையைக் காட்டுமோ என்னவோ. இன்று அதிகாலை பெருங்கூட்டமாக கிளம்பி சென்றுகொண்டிருந்த சாம்பல் நிற மேகங்களைப் பார்த்தபோதே என்னவோ புதுசா நடக்கப்போகிறது என்று பட்டது. சரியாப்போச்சு. தேங்காய் எண்ணெய் குழைத்த ஆள்காட்டி விரல் மணத்தை எப்படி உங்களுக்குச் சொல்வது?’

இதை யமுனை செல்வன் அண்ணாச்சியிடம் சொன்னேன். நான் இப்போதிருக்கும் மனநிலையை எப்படிச்சொல்ல? தேங்காய் எண்ணெய் குழைத்த ஆள்காட்டி விரல் மணத்தை எப்படி உங்களுக்குச் சொல்வது? நீங்களும் அப்படி தின்றால்தான் தெரியும். என் அறை, அறையில் அவ்வப்போது அடிக்கும் (துர்)நாற்றம், பக்கத்து கட்டிடத்தின் ஓட்டுக்கூரை அருகே இருக்கும் பூனைக்குடும்பத்தின் இடம், நண்பர்கள் கையொப்பமிட்ட சிறு ஜவுளி அட்டை, கார்ட்டூன் ஸ்டிக்கரை உரித்து ஒட்டிய பின் மிஞ்சும் தாளில் உள்ள மற்றொரு படம் எல்லாம் எப்படிச்சொல்ல என்று தெரியவில்லை. எழுத்தில் பிடிக்கவே முடியாத வாசனை! விரலில் இருக்கிறது. பறை ‘ஓசையை’ திருப்புகழில் ‘எழுதி’வைத்து போல ஏதாவது வாசனையை எழுதிவைத்திருக்கிறார்களா?

இன்றையநாள் எனக்கு அடித்திருக்கும் ஜாக்பாட்.

‘இரவெல்லாம் விழித்திருந்த நிலா’ நான்.

அன்பின் அணைப்பு.

 ஸ்ரீனிவாச கோபாலன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33
அடுத்த கட்டுரைசிறுகதைப் போட்டி