அமிர்தம் சூரியா உரைகள்

amir

நண்பர் அமிர்தம் சூரியா இருபதாண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த சிறிய நண்பர்குழுவில் ஒருவராக அறிமுகமானவர். அன்றைய நண்பர்களில் தொடர்ச்சியாக இலக்கிய ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கல்கி வார இதழில் பணியாற்றுகிறார். அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகளை யூடியூபில் பார்த்தபோது முன்பிருந்த தயக்கமும் தாழ்ந்த குரலும் இல்லாமல் செறிவாகவும் சீராகவும் பேசுபவராக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. இலக்கியம் குறித்த உரையாடல்கள் குறைந்துவரும் சூழலில் இக்குரல் முக்கியமானது என நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
அடுத்த கட்டுரைகடிதங்கள்