ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை

Jeyakanthan
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

அன்புள்ள ஜெமோ,

உங்கள் தளத்தில் வந்த சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் கட்டுரைக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை படித்தேன். என் இளமை முதல் படித்திருந்தாலும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதியதாக ஒரு சிந்தனையைத் தூண்டும் இயல்பு அந்த நாவலுக்கு உண்டு. அப்படி நான் அறிந்ததில் சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். இவை அந்த கதாபாத்திரங்களுக்கான, அவற்றின் செயல்களுக்கான சாத்தியங்கள். இவற்றை அடைவதன் மூலம் எத்தனை நெருக்கமாக ஜெயகாந்தனை உணர்கிறேன் என்பதே என் வெற்றி.

கங்கா ஈஸ்வர்

sila-nerangalil-sila-manithargal

அன்புள்ள கங்கா

இதுவரை ஜெயகாந்தனைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவே தலையாயது. உண்மையில் பிரமித்துப்போயிருக்கிறேன். ஜெயகாந்தனுக்குக் கிடைக்கும் நவீன வாசிப்பு, அதுவும் அடுத்த தலைமுறைப் பெண்களிடமிருந்து, அவர் நம் பண்பாட்டில் எப்போதும் தன்வினாக்களுடன் நீடிப்பவர் என்பதைக் காட்டுகிறது. ஒருகணம் அவர் இருந்து இதைப்பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அதனாலென்ன என்றும் தோன்றியது. இறப்பில் எழுத்தாளன் உயிர்த்தெழுகிறான் என்பதை மீண்டும் காண்கிறேன்

ஜெ

கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்

——————————————————————————————————

ஜெயகாந்தன் –கடிதங்கள் 2
ஜெயகாந்தன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைகண்ணதாசன் விருதுகள்
அடுத்த கட்டுரைஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு