ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

TARAS

 

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்

அன்புள்ள ஜெ.

நீங்கள் பரிந்துரைக்கும் நாவல்கள் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன்.. அக்னி நதி, பிறகு ஆரோக்ய நிகேதன்…

முந்தையதைவிட இரண்டாவது மனதுக்கு நெருக்கமாக இருந்தது.. அதிலும் அதன்இறுதிப் பகுதி – மருத்துவர் இறந்த சில நாட்களில் மனைவியும் இருக்கிறார்.. ஏதோ ஒரு தகவல் போல ஒற்றைவரியில் சொல்லப்பட்டிருக்கிறது.. ஆனால் கதையின்மிக அழுத்தமான வரி இது என்றே எனக்குப் பட்டது..

மகனை இழந்தவள்; கணவனின் காதலைப் பெறமுடியாதவள்.. ஆனால் கணவருடன் ஏதோஒருவகையில் ஆழப்பிணைந்தவள்.. மரணம் பற்றி அறிந்த மருத்துவத்தால்,மனதைப்பற்றி அறியமுடியவில்லை.. அந்த ஒருவரியில் அந்தக்கதாபாத்திரம்விஸ்வரூபமெடுத்துவிடுகிறது..

நன்றி,
ரத்தன்

 

bibhutibhushan_bandopadhyay_300
விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய

 

அன்புள்ள ஜெ

உங்கள் சிபாரிசில் வனவாசியை வாசித்தேன். அற்புதமான நாவல். அதன் உள்ளடக்கம் என்பது பசுமைதான். காடுதான். காட்டின் வர்ணனைகள் வழியாகவே அது ஒரு அற்புதமான அனுபவமாக ஆகிவிடுகிறது. அதிலும் காட்டில் மலர்களைப்பயிர் செய்யும் ஒருவரைப்பற்றிய சித்திரம் ஆன்மிகமான அனுபவம். ஒரு பெரிய குரு அவர் என்று தோன்றியது.

உங்கள் தளம் இன்று ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இலக்கியம் என்னும் தலைப்புக்குக் கீழே எத்தனை எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தொடர்ச்சியாக அறிமுகம்செய்யப்படுகிறார்கள் என்று பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. ஒருவகையில் இந்திய இலக்கியம் என்ற ஒன்றைப்பற்றி தமிழில் பேசுபவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். பேசிப்பேசி ஒரு பெரிய மனச்சித்திரத்தையே உருவாக்கிவிட்டிருக்கிறீர்கள்

நன்றி

பாஸ்கரன் தட்சிணாமூர்த்தி

***

இருவகை எழுத்து

ஆரோக்கியநிகேதனம்

வன லீலை

உமாகாளி

புதியநாவல் (உரை)

ஆரோக்கியநிகேதனம்

நேற்றைய புதுவெள்ளம்

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

கடிதங்கள்

விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

செவ்வியலும் இந்திய இலக்கியமும்

 ***

 

முந்தைய கட்டுரைநுண்சொல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிலநேரங்களில் சிலமனிதர்கள் – ஒரு கழுவாய்