காலடியோசை -கடிதங்கள்

ravi

 

அன்புள்ள ஜெ.,

காலடி ஓசையிலே வாசித்தேன்

சிறுவயதில் இந்தப்பாடல் ‘உன் காலடி ஓசையிலே ஒரு காவியம் நான் படைப்பேன்’ என்றே மனதில் நின்றிருந்தது..

கல்லூரிப் பருவத்தில் முதன்முதலாக ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை
நானறிவேன்’ என்று கவனித்துக்கேட்டபோது ஒருமுறை அதிர்ந்தது இதயம்..

கவிதை உணர்வு எனக்குக் குறைவுதான்.. ஆனால் சிலவரிகள் பொருளைத்தாண்டி
சட்டென்று ஏதோ ஒரு நரம்பைத் தீண்டிவிடுகின்றன.. என்னாலும் மறக்கமுடியாத
ஒருவரி இது..

நன்றி,
ரத்தன்

 

அன்பின் ஜெ

 

நானும் கலந்து ரசித்துத் தோயும் பாடல் ஓராயிரம் பார்வையிலே…

ரஃபியின் குரலிலும் அதை ரசிக்க வைத்ததற்கு நன்றி.

 

பாடல் சார்ந்த உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்…  அந்தப்பாடல் சார்ந்து ஒவ்வொருவருக்கும் எழும்  வெவ்வேறான அனுபவங்களை மீட்டெடுக்க வைத்திருக்கின்றன.

 

நன்றி அதற்கும் கூடத்தான்

சுசீலா

 

அன்புள்ளஜெ

 

ஓராயிரம் பார்வையிலே எனக்குப்பிடித்த பாடல். அது இந்தி நகல் என இப்போதுதான் தெரிந்தது. இந்தி இன்னும் சிறப்பாகவும் இருந்தது. அது கொஞ்சம் ஏமாற்றம்தான்

 

ஆனாலும் அற்புதமான பாடல். பிளாட்டானிக் லவ் மாதிரி பாடலை அழகாக ஆக்கும் அம்சமே கிடையாது இல்லையா?

 

ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ஜெ

 

காலடி ஓசையிலே வாசித்தேன். அம்மா மாதிரி நமக்கு மிக அணுக்கமானவர்களை இப்படி வெறும் தின்பண்ட ஞாபகமாக ஆக்கிக்கொள்கிறோம். ஆனால் அதை ஒன்றும் செய்யவும் முடியாது

 

மகேந்திரன்

 

அன்புள்ள மகேந்திரன்

 

அதில் என்ன தப்பு? மூளையெல்லாம் இல்லாமல் வெறும், வயிறாகவும் நாவாகவும் அறியும் உறவுகள் அல்லவா அவை?

 

ஜெ

காலடி ஓசையிலே

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82
அடுத்த கட்டுரைதேவதேவனும் நானும்