ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்

130917-dog-elephant1

 

அன்பு ஜெ,

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை

உங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள்  உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை

ஆனால் ஐயன்மீர்,

கிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் பற்றியோ ,பண நோட்டு சமயத்தில் கண்ட மீடியா கொண்ட அதீதம்  பற்றியோ சொல்லும் போது உங்களின் மேல் சொன்ன உலகின் தாக்கத்தால் அதே போன்ற முழு விரிவு கொண்ட கட்டுரை போல எதிர்பார்ப்பு எழுவது இயல்பு என்று எனக்கு படுகிறது. நீங்கள் சொல்லலாம் – அவை தகவல் சார்பு இன்றியோ, தர்க்கம் இன்றியோ இருக்கக் கூடும் என்று. மிக ஆழமான தளத்தில் நின்று கொள்ளும் ஒருவன் ஏன் அவ்வாறு வெறும் வரிகளை எழுத வேண்டும்? பேசிக் கொண்டு செல்லும் கருத்துக்களை எழுத்தில் எழுதும் போது அவை “ஜெயமோகன்” வரிசையில் ஒட்டுவதில்லை. நுண்கருவை கொண்ட இந்த எழுத்தாளன் மேலும் யாரும் பார்க்காத பார்வையை வைப்பது தான் அதற்குப் பொருத்தம் என்பது என் பார்வை.

உதாரணம்,

 

ஏன் குப்பை மலைகள் வளர்கின்றன? பெருகி போன  வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிறது. குப்பை நுகர்வின் கழிவு ??? ….1 ரூபாய் ஷாம்பு முதல், துவைக்கும் ரின் ஏரியல் பவுடர் பாக்கெட்  போன்ற sachet வகைகள் கண்ணுக்கு படாத குப்பை வகைகள்.  துணி பைகளை துவைத்து வைத்து கொண்டு கடைக்கு போகும் போது எடுத்து கொண்டு சென்ற ஆட்கள் இன்னும் உண்டா என தெரியவில்லை, ஒவ்வொரு முறை வாங்கும் கருப்பு அல்லது வெள்ளை பிளாஸ்டிக் பைகள் அடுத்த வகை பங்களிப்பு.  தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட் முதல்ஒவ்வொரு மளிகை பொருளும் கொண்ட packing வகைகள் எப்படியும் குப்பை ஆகி தான் வீட்டை விட்டு வெளி வரும். திருவிழாவில் , கல்யாணத்தில், எந்த விதமான நிகழ்வுகளிலும் குப்பை ஒரு ஒதுக்க இயலா வைரஸ். எந்த கம்பெனிகாரனும் சோர்வதில்லை இப்படி தயாரித்து தள்ளுவதில். இந்த சிறிய கிராமங்களின் குப்பையை எங்கு கொண்டு சென்று எப்படி மாற்றுவது என்று எந்த முன்சிபாலிட்டி அல்லது அரசும் தூக்கம் கேட்டு சோர்வதில்லை…. கொண்டு சென்று எங்காவது கொட்ட தான் நமது மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிந்தது. எதையும் மாற்ற தான் முடியுமே தவிர அழித்தல் மிக அரிது. போலியோ போன்ற நோய்களை கட்டுகள் கொண்ட வந்த அரசின் இயக்கம் போல இந்த குப்பை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை செய்ய அரசின் உந்துதல் மிக அவசியம். ( மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம்  )

 

“நான்” என்ன செய்யக் கூடும்? கூச்சம் பாராமல் கடைகளுக்கு use & throw போல அன்றி, நிரந்தர சணல் போன்ற பைகளை கொண்டு செல்லலாம். கண்ணாடி பாட்டில்களை உபயோகிக்கலாம். அவசியம் இன்றி எதையும் வாங்காமல் இருக்கலாம். பிளாஸ்டிக் வாளி போன்றவைகளை விட்டு அலுமினியம் போன்ற பக்கெட் புழங்கலாம். செய்ய முடியுமா?

இந்த வகையான எளிய பார்வை கொண்டாவது இந்த நுண் கருவி கொண்டவன் எழுதுவது அவசியம் என்று தோன்றுகிறது. பயணம் போகும் போது குப்பைகளைத் தாண்டித்தான் போக முடியும் தவிர ஒரு பயணத்தை இந்த குப்பைகளை அள்ளுவதற்கு என்று ஒரு “செயல்” படுத்துதல் என்று  உதாரணம் காட்டியது போல செய்ய முடிந்தால் அந்த நுண் கருவி கொண்டவர்களுக்கு ராயல் சல்யூட் உண்டு.

2) சென்னைக்கு நான்கு மணி நேரம் மிச்சம் பிடித்து வேகமாக செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆம்னி பஸ் தான் வேண்டும்.   இன்னமும் விரைவு என்றால் கார்.. கட்டணம்  சற்று குறைந்த அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாருக்கும் அது முக்கியம் அல்லாமல் இருக்கலாம். உருட்டி கொண்டு செல்லும் பேருந்தில் பயணம் அமைவது ஒரு மோச அனுபவம் மட்டுமே. எந்த தனியார் துறைகளிலும் இருக்கும் இந்த மேம்பாடு அவர்களின் survival மற்றும்  விற்கும் உத்தி.

மதுரை பேருந்து நிலையத்தில் நின்றால் அதிபட்சம் ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் 20,30 நிமிடம் ஒரு முறை 100-250 கி.மி தூரம் உள்ள ஊர்களுக்கு பேருந்துகள் செல்வது பற்றியும்  நுண் பார்வை பரவ வேண்டும்…. இத்தனைக்கும் பிற மாநிலத்தவர்கள் இயக்கும்  பல ரகம் பார்த்தவர் என்ற முறையிலாவது தயவு செய்து… 22000+  பேருந்துகள் அரசின் உறிஞ்சி ஊழல் தாண்டி, மாணவர்களின் இலவச பாஸ் தாண்டி, நஷ்டப்பட்டு கிராமங்களை சுற்றி கொண்டு இருக்கும் டவுன் பஸ்களை தாண்டி, 55-60 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தீபாவளி, பொங்கல் போனஸ் கொடுத்து , அவர்கள் ஆற்றிய தனி பெரும் சேவைகளுக்கு PF கொடுத்து …. இருக்கும் பணத்தில் புது வண்டி வாங்கி ஓட்டுவதில் உள்ள இடர்கள் மற்றும் சாத்தியம் பற்றியும் இந்த நுண் உணர்வு கொண்ட நவீன இலக்கியவாதி எழுதலாம் .. 4 ,5 வருடங்களில் IAS அல்லது சுத்த கைகள் கொண்ட நிர்வாக தலைமை அமைந்தால் எளிதாக மாற்ற முடியும் என்பது நிதர்சனம் எனும்போது இதை “கருத்து” என்று சொல்லுவதில் புலம்புவதில் என்ன result?

3)நான் தினசரிகளில் வந்த பொங்கல் பற்றியோ, தொலைக்காட்சி சேனல் கொண்ட வெறி கூச்சல் பற்றியோ மாற்று கருத்து சொல்லவில்லை. Demonetization கண்டிப்பாக டிஜிட்டல் பணத்தையும் அதனால் வரியையும் மாற்றி விட்டது என்பது உண்மை. என் நினைவு தெரிந்து வெறும் பணத்தால் மட்டுமே வியாபாரம் செய்த 30 வருட துணி கடை இன்று card swiping மெஷின் வைத்துஇருக்கிறார்கள். அதே போல ஒரு பெட்ரோல் பங்க் கூட…..

ஆனால் அந்த 3 4  மாதங்கள்  தொய்வு அல்லது படுத்து விட்ட தொழில்கள்  பற்றியும் எழுத்து  தொட வேண்டும் அல்லவா?

மாருதி போன்ற பெரிய கம்பெனி  முதல் FMCG கம்பெனி எனப்படும் அன்றாட பொருள் தயாரிக்கும் கம்பெனி வரை விற்பனை குறைந்தது என்பது உண்மை. முழு பணத்தில் நடத்தப்படும் சிறு குறு தயாரிப்பு சேவை நிறுவனங்கள் விழுந்து தவித்து மீண்டும் ‘கொஞ்சம்  பேங்க்’ மற்றும் ‘புது நோட்டுகள்’ என february முதல்  நடக்க ஆரம்பித்தனர். நானும் பெரும்பாலும் பணத்தில் புழங்குவதில்லை … ஆனால் 2  மாதங்கள் எத்தனை மக்கள் பேங்க் வாசலில காய்ந்தனர் என்பதையும்  பணம் எடுக்க பல முறை சென்று வந்தனர் என்பதை பார்த்தவன் என்ற முறையில் இந்த வதை தேவை இன்றி தரப்பட்டது என்பதை சொல்லுவதில் உண்மையும் உண்டு

இந்தியாவின் MGR  போல “கருப்பு பணத்தை ” வெளி கொண்டு வருவேன் என்ற சூளுரை தந்த மயக்கம் மற்றும் நல்லது நடந்தால் சரி தான் என்கிற மனம் தான் இந்த மக்களை பொறுக்க வைத்தது. ஆனால் வெளிய வந்த கருப்பு பணம் என்பது இந்த மாபெரும் விளையாட்டுக்கு கிடைத்த பதக்கம் அல்ல. 500,1000 பழைய நோட்டுகள் -மொத்த கை இருப்புகள் பேங்க் சென்று தூங்கி விட்டு இப்போது மீண்டும் வெளியே செல்ல துவங்கி விட்டது என்பது தான் உண்மை. உள்ளெ போட்டவன் போட்டு விட்டு தூங்க அல்ல ..புது நோட்டாக மாற்றி எடுக்கவே. இந்த டிஜிட்டல் மாற்றங்களையும் அதை கொண்டு வருவதற்கு இந்த  மாபெரும் விளையாட்டுக்கு  வேலையை விட்டு பணத்தை மாற்ற/ புது நோட்டுகள் எடுக்க நடந்த பல கோடி சாதாரண மக்களின் சிறிய வலி பற்றியும் வீணாக்கிய மணித்துளிகள் நாட்கள் பற்றியும் எழுதவில்லை அல்லவா? ஊடகங்கள் விபசாரம் செய்ய ஆரம்பித்தது  ஒன்றும் புதிது அல்லவே ?

இந்த நுண் துப்பாக்கி கொண்டவர்களிடம், கேட்பது போன்ற சராசரி கேள்விகளுக்கு சொல்வது போன்ற கருத்துக்கள் ஒரு தீவிர இலக்கியவானின் தளத்தில் வருவது ஒரு தடுக்கென்ற சரிவு போல எனக்கு தோன்றுகிறது

எழுத்தாளன் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எழுத  வேண்டும்…. முடிந்தால்  கூரிய, பல தரப்பட்ட பார்வையில், ஜல்லிக்கட்டு போல ஒரு அலை எழுப்புமாறு கட்டுரைகளாக வர வைக்கும் படியாக எழுதுலாமே –  எழுத மாட்டேன் என் தளம் வேறு என்பது உங்கள் தரப்பு என்றாலும் கூட … சமூக விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் செயல் / செயல்படுத்தல்களை புதிய வழிகளைக் காண்பிக்கும்படியாக இருப்பது ஒன்றும் தவறு இல்லையே.??

அன்புடன்

லிங்கராஜ்

 

முந்தைய கட்டுரைகாடு– ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : மா.அரங்கநாதன்