அறிவியல் -கடிதம்

unnamed

 

அன்பின் ஜெ,

ரூபெல்லா தடுப்பூசி பற்றிய கடிதத்துக்கான பதிலில், இரண்டு முக்கியமான வாக்கியங்களை எழுதியிருந்தீர்கள்:

1.தமிழ்ச் சமூகம் அடிப்படை அறிவியலையே அறியாதது. அறிவியல் மனநிலை என்பது இங்கே அறிவியல் கல்வி கற்றவர்களிடம் கூட இல்லை

2.இன்னமும் நாட்டுமருத்துவம் போலிமருத்துவம் இங்கே ஓங்கியிருக்கிறது.

நான் மருத்துவத்துறை சார்ந்தவன் இல்லை. அதனால், இது பற்றிக் கொஞ்சம் விக்கியில்தான் தேடினேன்.

கீழ்க்கண்ட ஒரு விக்கி பக்கம் கிடைத்தது.

https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_vaccination_coverage

Indian states ranking by vaccination coverage – Wikipedia

en.wikipedia.org

This is a list of the States of India ranked in order of percentage of children between 12–23 months of age who received all recommended vaccines.

சீக்கிம் மணிப்பூருக்கு அடுத்த படியாக  86.7% தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முதல் பெரும் மாநிலம் தமிழ் நாடுதான்.  கேரளம் 79.7%  குஜராத் 55%, ஆந்திரம் 49.6%, உத்திரப்பிரதேசம் 29.9% என மாநிலங்களின் திறன் பட்டியலிடப்பட்டுளது. .

உங்களது இரண்டாவது வாக்கியத்தை இப்பிண்ணணியில் வைத்துப் பார்த்தால், குஜராத்தை / ஆந்திரத்தை என்ன சொல்வது?

http://rchiips.org/NFHS/pdf/NFHS4/TN_FactSheet.pdf

State Fact Sheet Tamil Nadu – rchiips.org

rchiips.org

1 . Introduction . The National Family Health Survey 201516 (NFHS- -4), the fourth in the NFHS series, provides information on population, health and nutrition for …

தமிழகத்தின் புள்ளி விவரங்களை வைத்து, மருத்துவர் ஒருவர், தமிழகம் முண்ணனியில் உள்ள மாநிலம் என்றேதான் சொல்கிறார்.

இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் ஒரு புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் ஒன்று உண்டு:

”கடவுளை நாங்கள் நம்புகிறோம். மற்றவர்கள் தயவு செய்து புள்ளி விவரங்கள் தாருங்கள்”

இந்த ரூபெல்லா விஷயத்தில், சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு டாக்டர் இது பற்றிய விவாதஙக்ளை எழுப்பினார். அதனால், பெரும் சலசலப்புகள் எழுந்தன.  என்னைப் போன்ற சிலரும் அவர் சொல்வதன் காரணம் என்ன எனப் புரிந்து கொள்ள முயன்றோம் – கேள்விகளுக்கு, அருண் என்னும் குழந்தை மருத்துவர் பொறுமையாகப் பதில் சொன்னார்.

ஆனால், பொது வெளியில், இதுபற்றி கேள்விகள் கேட்பதே மடத்தனம் என கருத்துக்கள் உலவுகின்றன.

அவர்கள் அனைவருக்கும், டாக்டர் ஹெக்டேயின் இந்த விடியோவைக் காணிக்கையாக்குகிறேன். பேச்சு நீரிழிவில் துவங்கினாலும், மருத்துவத் துறையின் வருங்காலப் போக்கையும் பேசுகிறார். முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன்.

அவரின் பேச்சு கூட மருந்து நிறுவனங்களின் சதியைப் பற்றிப் பேசுகிறது. சதியெனில், ரூம் போட்டு உலகை அழிக்க யாரும் திட்டமிடுவதில்லை. அந்தத் தொழிலைச் செய்ய அவர்கள் பெரும் மார்க்கெட்டிங் ப்ளாண் போடுகிறார்கள். அவர்களின் தொழில் மக்களுக்குப் பலனளிககாது எனத் தெரிந்த பின்னும் செய்கிறார்கள் என்பது நிஜம். அது சதியல்ல – பேராசை. கொட்டும் வரை பணம் கொட்டட்டுமே என்பதுதான்.

 

பாலசுப்ரமணியம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
அடுத்த கட்டுரைவிசா, உலகம் யாவையும்…