ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்

index

 

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன்.

தங்களின் குறளினிது உரைகளை கேட்டுவருகிறேன் என்பதால் அங்கிருந்தே தொடங்குகிறேன். ‘வான்சிறப்பு’ இயல் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து வருவதற்கு பல அவசியங்கள் இருக்கலாம். பல வகையில் இந்த அத்தியாவசியங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இன்றே இதன் அற்புதத்தை உணர்த்தேன், மழை! மழை!! மழை!!!

பல முறை தண்ணீர் இறைத்தாலும் செடிகள் உயிரை பிடித்துக்கொண்டு ஒரு மழைக்காகத்தான் ஏங்கும் போலும். ஆம் இதைத்தான் உணர்ந்தேன் அந்த செழிப்பை பார்த்தபிறகு, குடியரசு தின வாரத்தில் ஊரில் ஒரு நாள் நல்ல மழை. செடிகளிடம் அந்த புத்துணர்ச்சி நம்மோடு உணர்வோடு உறவாடுகிறது, அந்த பளபளக்கும் பழுப்பு மற்றும் பச்சை மழைக்கு பிறகே. மனதிற்கு இதமாகயிருந்தது, ஆறுதலாகவுமிருந்தது. சொற்ப்பமானவைகள் தவிர கன்றுகள் பிழைத்துக்கொண்டது என்று பார்க்கமுடிகிறது, இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை, ஒருபோதும் வஞ்சிப்பதில்லை!

இந்த இரண்டு மாதங்களில் வீட்டில் இயற்கை சார்ந்த மாற்றங்கள், படிப்பு அவசியம் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது எங்கள் அனைவரையும் படிக்க வைத்த குடும்ப, சராசரி இந்திய நடுத்தர குடும்ப, சேறு என்றால் அழுக்கு என்ற வீட்டில் இந்த இயற்கை சார்ந்த மாற்றம். மகிழ்ச்சியாய். 17 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் மேம்பார்க்கும் போது கிணற்றடி குளியல் தண்ணீர் கொல்லைக்கு போவதனால் அங்கு அதிகம் அடசலாகிறது என்று அவற்றை விதியில் சாக்கடையில் மாற்றிவிட்டோம், இன்று விட்டில் பொழங்கும் அனைத்து தண்ணீரையும் மீண்டும் கொல்லைக்கே போகும்படி அமைத்திருக்கிறோம். கொல்லையில் இன்று சூண்டை, ரோஜா, நார்த்தை, எலுமிச்சை, மா, பலா, வேப்பம், வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா, மற்றும் முகப்பில் புதீனா, வெங்காயத்தார், மிளகாய், உருளை, மல்லி, கற்பூரவள்ளி. இதில் உருளை செடி பழுத்தவிட அதை அறுவடை செய்தோம், குட்டி உருளைகள் 5 கிடைத்தது, அப்படியொரு மகிழ்ச்சி அன்றே சப்பாத்தி கிழங்கு சமையல்! ;)

இது போன்ற மகிழ்ச்சிகளில் தான் கள சோதனைகளை சமாளித்துவருகிறொம். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரதானம் அதில் சில காளை நின்று ஆட்டம் காட்டியது, இங்க நமக்கு சோதனைகள் ஆட்டம் காட்டுது! ;) ஆழ்தூளை கிணறு முடியம் தருவாயில் பொங்கலுக்காக ஊருக்கு போய்ட்டு வந்து தொடருகிறோம் என்று சொல்லிச்சென்று பொங்கலுக்கு பின் ஒரு வாரம் கடந்து வந்து பணி தொடங்கி, ‘அண்ணே, 230 அடியில் பாறையாயிருக்கு கொஞ்சம் சொணங்குது எப்படியும் முடிச்சுடுவோம் என்று சொல்ல..’ தந்தை ஊரில் சிவனேனிருக்கும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து அவரை கிளப்பிவிட்டுட்டார், ’’என்ன பன்னுறதுனு தெரியாம எப்படா வேலை முடிப்பேங்கய்’’ என்று அவரும் எங்களோடு சுற்றிகிட்டுயிருக்கார் ;) பாறை கறைந்தபாடில்லை. கை போர் ஆகாது இயந்திரம் தான் வேண்டும் என்று முடிவாக 230 மேல் எப்படி சாத்தியங்கள் என்று விசாரிக்க போக, பல கருத்துக்கள் வர நாங்கள் குழம்ப, பிள்ளையார் ’’என்ன பன்னபோறாயங்கய்’’ என்ற பீதில் இருக்கார். போர்கார்ர் உள்ளுர்கார்ர் என்பதால் எப்படியும் வேலைய முடிச்சுடுறேனு முயற்சி பண்ணுறார் ஆனா அவரிடம் பெரிய வண்டி இல்லை ஆகையால் அடுத்தவரை நம்பியிருக்கார் இப்ப நாங்க, அவர், அவர் என்னொருவரை நம்பி என்று இப்படி இழுத்துக்கொண்டிருக்கிறது. குழம்பிய நாங்கள் பரவால்லை இத்தோடு முடித்துக்குவோம் பைப்பை இறக்குவோம் என்றாலும் அவர் இன்னும் இரண்டு நாள் என்று போய்க்கொண்டேயிருக்கிறது….

இது ஒரு பக்கமிருக்க, வங்கி வேலை அதவிட பிரமாதம் ஏன்னு கேட்குறிங்களா அந்த புது வங்கி மேளாலர் எங்களிடம் அனைத்தையும் சரி பார்த்து கடன் பெற்றிடலாம்னு உறுதி கூற, அனைத்து வேலைகளும் நிறைவேறியது, கணக்கு தொடங்கினோம், சட்ட ஆலோசனை, வங்கி வேளான் அதிகாரி வந்து இடத்தை பார்வையிட்டு ஓப்புதல்.. இதுக்கு அப்பறம் தான் அற்புதம், பிராந்திய அலுவலகம் சென்ற மேளாலரை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்களாம்! ;) போட்டது போட்டபடியேயிருக்க அடுத்த மேளாலர் இன்னும் பொறுப்பு எடுத்துக்கலையாம் எங்களால் வந்த சோதனையோ என்னவோ அந்த வங்கி கிளைக்கு!! இதெல்லாம் அந்த பிள்ளையாருக்கு தெரிந்தால் இன்னும் பீதியடைக்கூடும் என்று இதற்கு என்று தனி தேங்காய் இல்லை, ஆனால் அந்த ஒற்றை தேங்காயோடு சேர்த்திவிடலாம் என்ற எண்ணமுண்டு ;)

மற்றொருபுறம், மின்சார வேலைகள், கிராம நிர்வாக அலுவலர் பொறியியல் படித்த இளைஞர் அவருக்கும் வேளான் ஆர்வமுண்டாம், அவரே அழைத்து கிணறுக்கு சேவை வாங்கி பிறகு ஆழ்துளை கிணற்றுக்கு மாற்றுவது சிரமம் ஆகையால் ஆழ்துளை கிணற்று வேலைகளை முடித்துவிட்டு ஒரே வேலையாக பார்க்க அறிவுறித்தினார். இதையே மின்சாரம் படிவம் அளித்த முகவரும் ஆமோதித்தார். ஆகையால் அந்த வேலை நிக்குது. முகவர் மற்றேமொரு தகவல் கொடுத்தார் படிவத்தை அலுவலத்தில் சமர்பிக்கும் முன் ஒரு முறை கேட்டுக்கொண்டு பின் கொடுக்கலாம் என்று. என்ன விசயம் என்றதும், அடுத்த ஊரில் உள்ள தோட்டத்திற்கு இணைப்பு வாங்கியதாவும் பாரம் தாங்கவில்லையாம், நாம் வாங்கும் இணைப்பும் இதே பகுதில் அமைந்தால்  டிரான்ஸ்பாரம் உபயம் நாம்தான்!

இருப்பது இருக்க, குட்டி உருளை கிடைத்த மகிழ்ச்சியில் வீடு இருக்கிறது, ஆகையால் பிள்ளையாரும் என்றே நம்புகிறேன் ;)

விரைவில் தாங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மற்றுமொரு மகிழ்ச்சியுடன்,

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

***

இயற்கைவேளாண்மை கடிதங்கள்

இயற்கைவேளாண்மை கடிதம் நாராயணன் மெய்யப்பன்

கன்றுகள் காடாகவேண்டும் நாராயணன் மெய்யப்பன்

கடைநிலைப் பொருளியல் நாராயணன் மெய்யப்பன்

அறம்செய விரும்பு நாராயணன் மெய்யப்பன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
அடுத்த கட்டுரைமலர்ப்புரி அவிழ்தல்