ஏழாம் உலகின் இருள்

1

ஜெ

 

முதல் முறை படிக்க வேண்டுமென்ற வேட்கையில் வாசித்ததினால் இந்நாவல் தொட்டுக் காட்டிய வலியையோ குரூரத்தையோ கீழ்மையையோ நான் முற்றாகக்கவனித்திருக்கவில்லை. அதனால்,மீண்டும் நூலகம் சென்று எடுத்து வந்து ஒரு வாரத்தில் வாசித்து முடித்தேன்.

முதலில் என்னைக் கவர்ந்தது அந்த வட்டார மொழி.அதன் ஓசை நயம்.
சில நாள்களுக்கு விளையாட்டாக பேசினாலும்,திட்டினாலும் அம்மொழியின் சிலசொற்கள் நாவில் ஊறும்.(சவிட்டிப் போடுவம் பாத்துக்க)இம்மாதிரி.

அடுத்து அதன் சித்தரிப்பு.நிஜ உலகிற்கு நிகரான அதன் புனைவு.நடுங்க வைப்பது.குறைபட்ட  உடல்கள் கொண்ட மனிதர்கள்,சிறிய ஆத்மாக்கள்.விலங்குகளைப்போல.வளர்ப்புப் பிராணிகளைப் போல.
அவர்களால் பிறர் உதவியின்றி வாழ்வது கடினமில்லையா.அதனால்,
அவற்றை நல்ல ஆத்மாக்கள் காப்பாற்ற வேண்டும் என்பது பண்டாரத்தின் தரப்பு.அவர்களை விற்ப்பதும் கூட தவறு கிடையாது.அது அவர்கள் வாழ முருகன் கொடுத்த வழி.இப்படியான நியாங்களால் சமன் செய்ய முயன்றாலும் கூடஅந்தக் குற்றஉணர்வு ஒரு கணதில்,பெருநியதியின் ஒளிரும் ஒற்றைக் கண்போலத் தெரிந்து முதுகை சில்லிட வைக்கிறது.குடைக்குள் மறைந்து கொள்ளச்செய்துவிடுகிறது.
என்னதான் அவர்களை வணிகப்பொருள்களாக நினைத்தாலும் நெஞ்சின் ஏதோவொருமூலையில் சிறு கனிவேனும் இல்லாமலில்லை.
உணவு தீர்ந்துவிட்டது என்கிறபோது சிறு வருத்தமாக வெளிப்படுமதை
பிறகு,வசவுகளால் சமன் செய்துகொள்கிறார்.

குடியும்,பெண்ணும் விரும்பும் குடும்பக் கவலையும்,அன்பும்,பரிவும்
முருகன் மீதான பக்தியும் கொண்ட இன்னொரு முகம்.
நள்ளிரவில் கிளம்பிச் சென்று வளையல் வாங்கி வருவதும்,நினைத்து நினைத்துவிம்மி அழுது போக மறுப்பதாக நடித்து பின்,சென்று மரத்தின் கீழ்காத்திருந்து பெருமூச்சுடன் திம்புவதும்,உளமுடைந்து உடலளவில் திடமாகநின்று பின்,சென்றுவிட்டாள் என்ற கணத்தில் முற்றாக உடைந்து அழுது ஓடுவதுபோன்ற இடங்களில் பண்டாரம்,அசல் தந்தை.தனது செயல்களுக்கான நியாயத் தரப்பும்,வாழ்பனுபவமும் கொண்ட போத்தி.
ஏக்கியம்மை,பெருமாள்,கொச்சன்வாயில் நஞ்சு கொண்ட சிலர்.குறிப்பாக உண்ணம்மை. முதலியவர்களுடன்பின்னப்பட்ட நாவலின் ஏழாம் உலகம் மாங்காட்டுச்சாமி,ராமப்பன்,குய்யன்,முத்தம்மை,எருக்கு,தொரப்பன்,அகமது குட்டிமுதலியவர்களைக் கொண்டது.அவர்களின் வலி,துக்கம்,ஏக்கங்களுடன் சிறு சிறு இன்பங்களும் கொண்டது.

புறக்கணிப்புகளாலும் உடல் குறைபாடுகளாலும் கிடைத்த வாழ்வு.
பசியும்,கிண்டலும்,வசவுகளுமாகநகர்ந்து செல்கிறது.இருப்பு என்ற ஒன்றிற்காக.பேச்சும் பெருமூச்சுகளுமாக ராமப்பனும்,கேலியும் கிண்டலுமாககுய்யனும்,துக்கமும் தாய்மைமாக முத்தம்மையும்,சில காட்சிகளில் மறைந்ததொரப்பனுமாக நகர்ந்து மாங்காண்டிச் சாமியின் பாடலுடன் குய்யனின் சிரிப்புகலந்து கலங்க வைத்து நிறைவடந்த ஏழாம் உலகம் தொட்டுக் காட்டிய இன்னொருஉலகு மேற்கண்டவர்களைச் சுரண்டி சுயநலத்திற்காக மட்டும் வாழும்கீழ்மையானவர்களால் ஆனது.குறிப்பாக கொச்சனைப் போன்றோர்.
*
 

அச்சிறிய ஆத்மாக்கள் உடலளவில் மட்டுமே நம்மை விட வேறு மாதிரி.
அவர்களின் தனிமை,துக்கம்,வலி முதலியவற்றைப் புரிந்து கொள்ளாமல் கூட பலர்இருக்கலாம்.நம்மால் குறைந்தபட்சம் முடிந்தது பெருமூச்சுடன் கவனித்துச் செல்வது மட்டுமே.

 

சக்திவேல் லோகநாதன்

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82
அடுத்த கட்டுரைநடைதிறப்பு